கடைசில என்னையும் அரசியல்வாதி ஆக்கிட்டீங்களே! - என்ன கொடும சார்!

Filed under , by Prabhu on 6/20/2009 06:06:00 PM

1

நான் இன்னைக்கு காலேஜ் போறப்போ இன்னைக்கு தேர்தல் முடிவு வருதே, நம்மஓட்டு போட்டிருக்கோமே, என்னாகுதுன்னு பாக்கனுமே அப்படிங்கிறபரபரப்பெல்லாம் அடையல. எட்டு மணி காலேஜுக்கு ஏழரைக்கு எந்திருச்சு, எட்டுபத்துக்கு நிதானமா போய், க்ளாசுக்கு பக்கத்துல போனதும் ஒடுற மாதிரி சீன்குடுத்து, அங்க மூச்சிரைக்கறமாதிரி போய் நின்னுஎக்ஸ்க்யூஸ் மி சார்னுசொன்னா அந்த ஆளு நம்மல கேவலமா பார்க்க, அதையெல்லாம் கண்டுக்காமகண்ணுல இருக்கிற டெரர மறைச்சுக்கிட்டு மரியாதைய கொண்டு வரும் போது, “பக்கத்தில வந்த்தும் ஓடி வர்ற மாதிரி சீன் கொடுக்கறயா? ஏன் லேட்?”கேட்ககாரணம் தான் கேக்குறாருன்னு தெரிஞ்சும், “லேட் ஆயிருச்சு சார்என சொல்ல, “அது தெரியுது. காரணத்த கேட்டேன். சரி, உள்ள போய் தொலைஎன சொல்ல, ஒரு கேனச் சிரிப்பு சிரிச்சுக்கிட்டே நம்ம நண்பன் கிட்ட போய் உக்காந்தா 8.30க்குமெல்ல கண்ணு சொருகும் போது கை கைபேசியின் உதவியை நாடும் போதுதான்தேர்தல் முடிவு நினைவுக்கு வந்தது. வீட்டுல வெட்டியா இருக்கிற அஜய் கிட்டசப்ஸ்கிரிப்ஷன் போட்டு விட்டேன். 5 மணி வரைக்கு ஒரே after polling discussion தான்.

மொத்த்துல இந்த தேர்தல்ல காங்கிரஸுக்கு நல்ல ரெஸ்பான்ஸ். நான் இவ்ளோதூரம் எதிர்பார்க்கல. எதனாலன்னு தெரியல,ஆனா செமத்தியா ஜெயிச்சிருக்கு. பா...விட நல்ல மார்ஜின்ல செயிச்சிருக்கு. இதுல ஒரு நல்ல விஷயம்என்னவென்றால் பெரிய அளவிலான குதிரை பேரமும், என்னை மாதிரி முதல்முறை ஓட்டளித்த இளைய தலைமுறையினருக்கும் அரசியலிலநம்பிக்கையின்மை உண்டாகுறதும் தவிர்க்கப்படுகிறது. இந்த மக்களோட முடிவுபழைய ஆட்சி மேல இருந்த நம்பிக்கைய குறிக்குதா, இல்ல பா... மேல இருக்கவெறுப்பா, இல்ல குழப்பமான கூட்டணிகளின் பலனா என முடிவு செய்வதுஎனக்கு கடினமாகத்தான் இருக்கிறது. அவங்க தனியாவே 200 அடிச்சிட்டாங்க. இது போக கூட்டணியின் இதர கட்சிகள் சேர்த்தா 258 வருது. செம வலுவாஇருக்காங்க. பா...வோட தெசிய ஜனநாயக கூட்டணி 168 தான் தேறுது. கஷ்டம்தான்.

இந்த வலுவான கூட்டணிய விட்டு வெளிய வந்து தேவையில்லாம தனியாபோட்டியிட்டுட்டொமேன்னு லாலு வருத்தப்படுறாரு. அவருக்கு 5தான் வெற்றி. வெளிய வந்த்துதான் தப்புன்னு அவரோட நாலாவது அணி உருவாக்கினபஸ்வான், முலாயம் சிங் யாதவ் எல்லாரும் உணர்ந்திட்டாங்க. இதுல கொடுமஎன்ன்ன்னா இதுவரைக்கும் இந்தியாவுல் அதிகமான ஓட்டுவித்தியாசத்தில(5லட்சத்தி சொச்சம்) ஜெயிச்சவருங்கிற பெருமையகொண்டிருந்த பஸ்வானுக்கும் புட்டுக்கிச்சு. இப்ப திரும்ப தாய் கூட்டணிக்கேதிரும்பலாம் என முடிவு எடுக்கறதா தெரியுது. என்ன கொடும சார் இது!

ஆந்திராவுலயும் சொளையா 34 தொகுதிய அள்ளிருச்சு காங்கிரஸ். நம்மசீருவோட பிரஜா ராஜ்யம் ஒன்னு எடுத்திருக்காங்க. விஜயகாந்த் நிலைமைக்குஎவ்வளவோ தேவலை. சட்டசபை தேர்தல்ல அவரு திருப்பதில ஜெயிச்சாலும், தன்னோட சொந்த ஊரிலயும் போட்டி போட்டு அங்க தோத்துட்டாரு. சும்மாசொல்லக் கூடாது, சட்டசபை தேர்தல்ல 20 தொகுதி அவருக்கு வெற்றிகொடுத்திருக்காரு. இதுவும் விஜயகாந்த ஒப்பிடும் போது பெருசுதான். ஆனா, சீருஅங்க சூப்பர் ஸாருங்கோ! இங்க விஜயகாந்த்........?! என்ன கொடும் சார்!

வருண்காந்திய விட முடியுமா? அந்த பையனும் தேர்தல்ல நின்னு, பிரசாரத்திலவன்முறையத் தூண்டுற அளவுக்கு அதிகமா பேசி ஜெயிலுக்கும் போயிட்டுவந்துட்டாரு. ஆனாலும் அவர்தான் இப்போ இந்தியாவிலயே அதிக வோட்டுவித்தியாசத்தில வெற்றி அடைஞ்சிருக்கார். கிட்ட்தட்ட 2.5 லட்சம். அம்ம்மாடியோவ்..... நம்ம மாநிலத்துல ஜாதிப் பற்று மாதிரி வடமாநிலத்துல மதப்பற்று கொஞ்சம் அதிகமாத்தான் இருக்கு. மோடியவே ஜெயிக்க வச்சாங்களே. அதஇன்னொரு பதிவுல பேசுவோமே. என்ன கொடும சார்!

இதுக்கிடையில நம்ம மன்மோகன் சிங் ராகுல் காந்திய கேபினட்ல சேரனும்னுசொல்லி கேக்குறாரு. எனக்கு காங்., வந்தது கூட பிரச்சனையா தெரியல. ஆனா, இந்த மன்மோகன் சிங் தான் பிடிக்கவே இல்ல. பிரதமரானதுல இருந்து இவருசூச்சூ னாலுமே ஒரு அம்மா கிட்ட சொல்லிட்டுதான் போவாங்களாம்குழந்தைக்கு இருட்ட கண்டா பயம்). இதையும் யாரு சொல்லச்சொல்லிருப்பானுங்கன்னு நமக்கே தெரியும். அந்தப் பையனுக்கு மக்கள்மத்தியிலயும் கட்சியிலயும் வெயிட்டான மாஸ். அடுத்த தேர்தலுக்கு ஒருபிரதமரத் தயார்ப்ண்றாங்க. என்னதான் சொன்னாலும் இந்த தேர்தலுக்கு, SINGH IS KINNG.

கம்யூனிஸ்ட்ட விட்டுட்டோமே. அவங்க தங்களோட கோட்டைகளான கேரளா, மே.வங்கம் ஆகிய மாநிலங்களிலயே கவுத்துன பிறகு மற்ற ஊருகளிலசொல்லவா வேணும், டவுசர்தான். வர வர கம்யூனிஸ்டோட போக்கே சரியில்ல. அவங்க அரசாங்கத்துக்குள்ளயே இருந்துக்கிட்டு அவங்களுக்கே எதிர்ப்புதெரிவிக்குறாங்களாம். அஞ்சாவது வருஷம் வந்த்தும் ரோஷம் வந்து பதவி, கூட்டணி ரெண்டையும் விட்டு விலகுறாங்களாம். நல்ல கதையா இருக்கே. இதேமானங்கெட்ட வேலைய பார்த்த ராமதாஸுக்கும் பெரு ஆப்பு. ஒன்னு கூட தேறல.

தமிழக காங்., நிலைமை அந்தோ பரிதாபம்தான். பின்ன தேர்தல் நேரத்துல கூடஒண்ணும் பிரசாரம் பன்ணாம, ஒரு முயற்சியும் எடுக்காம இருந்த்துக்கு சிதம்பரம்முட்டிமோதி 3000சொச்சம் ஓட்டுல ஜெயிச்சதே பெருசு. அவரும் காசுகொடுத்தாராம். அதுக்கே இந்த நிலைமையா? இளங்கோவன், பாலு, மணிசங்கர்ஐயர் எல்லாத்துக்கும் சோலி முடிஞ்சிருச்சு. தி.மு..வும் இலங்கை பிரச்சனை தன்பக்கம் திரும்பக் கூடாதுன்னு காங்.,க்கு சரியா பிரசாரம் பண்ணல. பின்ன எப்படி? காங்கில ஒருத்தன் வேட்புமனு தாக்கல் செஞ்சா அவரு கட்சியிலயேஇன்னொருத்தன் அதிருப்தி காரணமா இன்னொரு வேட்பும்னு தாக்கல்செய்வான். இந்தக் கட்சி எப்படி முன்னேறப் போகுது.

திமுக 18 தொகுதில ஜெயிச்சிருக்கு. வெற்றிக்கு காரணம் ஹாஸ்பிடல்ல இருந்தஐயாவா இல்ல நோட்டுல இருக்குற ஐயாவான்னு ஒரு பட்டிமன்றம் நடத்தலாம். தான் ஒரு வலுவுள்ள எதிர்கட்சிதான்னு சொல்றவிதமா .திமுக 9 ஜெயிச்சிருச்சு. பரவாயில்ல. மதிமுக வைகோவிற்கே வெற்றி கிடைக்கலயே. அங்க பதிவானஓட்ட விட எண்ணிக்கையில வந்த ஓட்டுகள் அதிகமா இருக்குன்னு ஒருபிரச்சனைய கிளப்பிருக்காரு. என்ன்ன்னு பொறுத்திருந்து பார்போம்.

இங்க மதுரையில நான் சொன்னது நடந்திருச்சு பாத்தீங்களா? நான் சொன்னதுமாதிரியே அழகிரிக்குதான் வெற்றி, மாபெரும் வெற்றி. ஆனால், அவருசொன்னமாதிரி 3லட்சம் ஓட்டு வித்தியாசம் இல்லை. 1,43,945 ஓட்டுக்கள்வித்தியாசம். மொத்த ஓட்டுக்கள் மதுரை தொகுதியில 10லட்சம். அதுலபதிவானது 7லட்சத்து சொச்சம். ஆமாங்க, 75சதவித வாக்குப் பதிவாயிருக்கு. பின்ன, காந்தியே வீடு வீடா போயி வாக்கு கேட்டிருக்காரே, அழகிரிக்காக. அந்தபதிவான வாக்குகளில் 4லட்சத்து சொச்சம் அழகிரிக்கு. இப்ப சொல்லுங்க அவருசொன்ன அளவு வித்தியாசத்துல ஜெயிக்கறதுக்கு இடமில்ல, விஞ்ஞானப்படி. நாங்கதான் அப்பவே சொன்னமுல!

இதுலயும் ஒரு நல்ல மறுபக்கம் இருக்கத்தான் செய்யுது. இப்ப அமைச்சரானதாலகண்டிப்பா நல்லது செய்வாரு. பெரிய ஆளுங்க என்னைக்குமே தன்னோடதொகுதிய நல்ல வச்சுக்குவாங்க, அம்மாவோட ஆண்டிபட்டி, ஐயாவோடசேப்பாக்கம் இதற்கு உதாரணங்கள். அதனால ஊருக்கு ஏதாவது செய்வாங்க. பி.மோகன் நல்லவருன்னு ஊருக்குள்ள பேரு இருந்தாலும், அவருக்குபடிச்சவங்க வாக்குகள் விழுந்தாலும் அவரோட திட்டங்களுக்கு தடைகள் வரும். சிக்ஸுக்கு அப்புறம் செவன் டா, அண்ணனத் தாண்டி எவன் டா? அதனால்அஞ்சாநெஞ்சன் தவறாம தன் கடமைகளை செய்வாருன்னு நம்புறேன். இப்போமுதல் முறையா நேரடி அரசியல்ல இறக்குறதாலயும், அமைசாராகிறாதாலும்(ஆக்கிருவாங்க, பாருங்களேன்) கண்டிப்பா தன்னோடஇன்னபிற மர்ம நடவடிக்கைகள கொறச்சிருக்காரு. ரயில்வே அமைச்சர் லாலுஇதற்கு நல்ல உதாரணம். மதுரையோட தலையெழுத்தப் பார்போம்.

இனி இவங்க ஆட்டம் தாங்க முடியாது. அழகிரி பிறந்த நாள் எனதான் மதுரையிலபல பேருக்கு தெரியுதே தவிர, மற்றபடி அது காந்தி இறந்த நாள் (என்னபொருத்தம்!) என பல பேருக்கு மறந்திருச்சு. ஊரு முழுக்க தோரணம் கட்டி, ஒட்டிஒட்டியே கட்டக் கூடிய அளவுக்கு ஆயிரக்கணக்கான ஃப்ளக்ஸ் போர்டுகல வச்சு, ஊரு முழுக்க லைட்டு போட்டு, ஸ்பீக்கர் வச்சு அழகிரி புகழ் பாடல்கள் போட்டுஊரையே அசிங்கமாக்கி, கிராமத்து திருவிழா மாதிரி ஆக்குறத இனிமே தைரியமாபண்ணுவாங்க. எங்க காலெஜுக்கு பின்னாடிதான் ஓட்டு எண்ணிக்கை நடக்குறமருத்துவக் கல்லூரி. காலையில க்ளாஸ் நடக்கும் போதே வெடி வெடிச்சு தெரியவச்சுட்டாங்க. காலேஜ் முடிஞ்சு வரும் போது சிக்னல்ல வச்சு எல்லாருக்குசாக்லே குடுத்துருக்காங்க. என்னைய கேக்குறீங்களா? நான் வாங்கலீங்க... கொள்கையெல்லாம் இல்ல, எதிர்பக்கத்தில கொடுத்தாங்க, மிஸ் ஆகிடுச்சு. அதத்தாண்டி பாலத்துல இறங்குற இட்த்துல அந்தரத்துல டிராபிக் ஜாம். என்னடான்னுபாத்தா கீழக்கூட்டம். மெல்ல நழுவி வலதுப் பக்கம் திரும்பி வந்தேன். சுத்திஇருக்கறங்க எல்லாம் பைக்க உருட்டிட்டிருக்கானுங்க. உத்துப் பாத்தாஅவய்ங்கெல்லாம் கட்சிக்காரனுங்க. டிராபிக்க இட்து பக்கம் திருப்பிவிட்டிருந்துருக்காங்க. கட்சிக் கார்னுங்களுக்கு நடுவில கட்சிக்காரன் மாதிரிஇருந்த்து எனக்கு ஒரு மாதிரி இருந்த்து. எல்லாம் ரவுடி மாதிரி மாடுமாடாஇருந்தானுங்க ஐய்யோ சிக்கிட்டோமேன்னு நைசா நழுவி வந்துட்டேன்.

கடைசில என்னையும் அரசியல்வாதி ஆக்கிட்டீங்களே!

Comments Posted (1)

romba pesurada

Post a Comment

இவ்வளவு தூரம் வந்துட்டீங்க... பதிவப் பத்தி ஏதாவது சொல்லிட்டு போங்க! அட்லீஸ்ட் திட்டீட்டாவது போங்க. அப்புறம் எங்க வாக்களிப்பு பொத்தான் இருக்குன்னு தேடி அழுத்திட்டு போங்க. 18 வயசு ஆகலையா? ப்ளாக்கருக்குள்ளயே வரமுடியாதே! மரியாதையா ஓட்டு போடுங்க!