நாட்குறிப்பில் ஒரு நாள்.......
Filed under அனுபவம் , மொக்ஸ் , by Prabhu on 6/23/2009 10:33:00 AM
10
பதிவுலகத்துக்கு நான் வந்து இப்பொழுது கிட்டத்தட்ட 5 மாதங்கள் ஆயிருக்கும். இங்க வந்து நான் பெருசா சாதிச்சிட்டதா சொல்ல மாட்டேன். ஆனா, சில appreciable பதிவுகள வெளியிட்டிருக்கேன். கிஷோர், கேபிள் சங்கர், பொன்னியின் செல்வன், வினோத் கௌதம், வால் பையன், ஹாலிவுட் பாலா, 'எனது பயணங்கள்' பிரபு, 'my thoughts da machi' காயத்ரி, 'குப்பைத்தொட்டி' நான் ஆதவன் என பல நபர்கள சந்திச்சதும், அவங்கள்லாம் என்னோட பாலோயர்ஸா இருந்ததும் தான் எனது ஒரே achievement பதிவுலகத்தில. அதுக்கும் ஆப்பு வச்சிட்டாங்க. நான் வேற எங்க ஊரு அழகிரியப் பத்தி பதிவிட்டிருதேனா, அதனால தான் உன்னோட பளாக்க(Blog) ப்லாக்(block) பண்ணிட்டாங்க. அடுத்து அண்ணன் உங்க வீட்டுக்கு ஆட்டோ அனுப்புவாருன்னு வேற கெளப்பி விடுறானுங்க.
நான் இந்த பதிவுலகிற்கும், இந்த தமிழ் கூறும் நல்லுலகிற்கும் சேவை செய்து கொண்டிருப்பதைப் பார்த்த பொறுக்காத சில தமிழ் விரோத சக்திகள் தான் இதை செய்திருக்கனும். இது எனது வளர்ச்சியில் பொறாமை கொண்ட புல்லுருவிகள் தான் செய்திருக்கவேண்டும். இது எதிர் கட்சியினரின் திட்டமிட்ட சதி. இதற்கு ஆதாரங்கள் என்னிடம் இருக்கு. விரைவில அந்த சிடி ரிலீஸ் செய்யப்படும். இப்ப தான் தலைவர்களோட தில்லுமுல்லு எல்லாம் பிட்டு படம் மாதிரி சிடி ரிலீஸ் பண்ணி பரபரனு போகுதே. கலைஞர் கூட அவரு காமெடிக்கு சிடிதான் யூஸ் பண்றார். சிடிய பாத்து கண் கலங்குறாராம், இலங்கைதமிழர்களுக்கு. அட, இங்க எதுக்கு அரசியல்? வரவர மேட்டர விட்டு அடிக்கடி விலகி போயிட்டிருக்கேன். ப்ரொபசர் ஆகுறதுக்கான தகுதி எதுவும் வளருதோ?
சரி, மேட்டருக்கு வருவோம். ஒரு மாசத்துக்கு முன்னாடி ஒரு பதிவ போட்டுட்டு என் ப்ளாக்குக்கு போனா அங்க ஒரு மால்வேர் வார்னிங் வந்தது. அப்புறம் தெரியாத கோடிங்கெல்லாம் வச்சு மணிகணக்கா முட்டி, கூகுள கொஞ்சி மேடர கண்டு பிடிச்சா ntamilங்கிற social bookmarking siteதான் என்னோட பிரச்ச்னைக்கு காரணம். ntamilனு பேரு வச்சுக்கிட்டு என்னயவே போட்டுப் பாக்குறீங்களான்னு அத ரிமூவ் பண்ணிய பிறகும் கூகுள் என்னய போட்டுப் பாத்துட்டான்.
கடந்த ஒரு மாசமா பல நல்ல விஷயங்கள் தோன்றும் போதெல்லாம் ப்ளாக் இல்லாத வெறுமைய புரிஞ்சுக்க முடிந்தது. செமஸ்டர், கேரியர்னு வேற பல தடங்கல்கள். இதில சில சமயங்களில் வெறுப்பு ஏற்பட்டு பதிவுலக விட்டு வெளியேறிடலாம்னு கூட நினைச்சிருக்கேன். நான் போனா யாரும் மிஸ் பண்ண போறதில்லை. ஒரு மாதத்துக்கு முன்பு ரொம்ப ஆக்டிவிட்டியோட இருந்த நான், இந்த ஒரு மாத்ததில தடம் தெரியாமல் போய்விடவில்லையா? இதுதான் பதிவுலகம். Easy comes, easy goes. இப்பவும் பழைய அளவு ஆக்டிவிட்டியோட இருக்குறது முடியுமான்னு தெரியல. பார்க்கலாம்.
என்னுடைய பழைய ப்ளாக்கிலிருந்து பல பதிவுகள திரும்ப பதிவிட்டிருக்கேன். அந்த ப்ளாக் போனது கூட ஒரு indicationa இருக்கலாம். அத விட நல்ல பதிவுகள குடுக்க முயற்சி செய்வோம்.
முதன்முதல்ல ஸ்கூல் போக அழுதது இன்னமும் நினைவிருக்கு. அழுக அழுக சமாதானப் படுத்தி எங்க அம்மா என்னய ஆயா கையில விட்டிருவாங்க. வீடு கொஞ்சம் கிட்டங்கிறதால அப்படி ஆயா கூட்டிட்டு போயிருவாங்க. என்னதான் அழுதாலும் க்ளாசுக்கு போய் அழுததில்ல. அங்க போய் ஏ,பி,சி,டி எழுதிட்டு, 'மிஸ் இங்க பாருங்க'(வயசான மிஸ்ஸுங்க, எனக்கும் 4 வயசுதான்), அப்புறம் அந்த பக்க ஸ்லேட்டு நிரம்பினதும் தண்ணி தொட்டு அழிக்கிறதும், ஒண்ணுக்கு போக மிஸ் கிட்ட ஆள்காட்டி விரல மடக்கி 'மிஸ், ஒன் பாத்துரூம்னு' கேக்குறதும், அதுக்கு ஆயாவுடைய தயவ நம்பி நிக்கிறதும் இப்ப நினைச்சு பாத்தா ஏதோ படத்துல நடந்த மாதிரியா நினைவில இருக்கு.
அப்புறம் ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் படிக்கும்போது வீடு கொஞ்சம் தள்ளிப் போச்சு; ரிக்ஷா அமர்த்தினாங்க. அந்த ஆளோட முகத்த பாத்தது அடி வயித்துல ஒரு கவ்வ்வ்...... உடனே அழ ஆரம்பிச்சிட்டேன்........அவ்வ்வ்வ்வ்வ்....நான் போகல, அந்த ஆள பாத்தா பயமாயிருக்கு. அம்மா, நீ சோறு ஊட்டும்போது சொல்ற பூச்சாண்டி மாதிரி இருக்கான்மா. விட்டிரும்மா, நீ போய் விடும்மா. கதற கதற அள்ளி போட்டு அனுப்பி விட்டாங்க. அது ப்ரைமரி ஸ்கூல், அஞ்சாப்பு தான் சீனியர். அங்க அஞ்சு படிக்கிற ஒரு அஞ்சுவும், அதுக்கு ஒரு நாலாப்பு குரங்கு அஸிஸ்டண்ட். ரெண்டு சீட் உண்டு; நார்மல் குஷன், சின்ன கட்டை சீட். குஷன்ல சீனியர், கட்டைல நான் (கட்டையில போறவன்னு சொல்லிடாதீங்கோ). சும்மா இருந்தவள இந்த நாலு கிளப்பிவிட (பயபுள்ள கோர்த்து விடுது பாரு). அஞ்சு என்னய ரேக் பண்ண ஆரம்பிச்சிருச்சு.
மொத கேள்வி சுற்று
உன் பேரு என்ன?
பிரபு... பிரபு குமார் (இண்டியன் ஜேம்ஸ் பாண்ட் மாதிரிதான் பேரு சொல்வேன்)
என்ன படிக்கிற?
ஃபர்ஸ்ட் ஸ்டாண்ட்
வயசு?
ஆறு (ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்டு வயசுன்னு தெரியாதவளெல்லாம் அஞ்சாப்பு படிச்சு என்ன பண்ண போறாளோ?)
சத்தமா பேசுடா?.
ம்ம்.....(மவளே சிக்குவேல)
நாங்க செய்றதெல்லாம் வெளிய சொல்லுவயா?
ம்ஹூம்.... (என்ன செய்வாய்ங்க... ஒரு வேள ரே...ரே.....ரே.... ரேக் பண்ணுவாங்களோன்னு சொன்னேன். கொஞ்சம் கேப் விட்டா புத்தி போறதப் பாரு.)
அப்புறம் அடுத்து தீவிர அடுத்தக் கட்ட நடவடிக்கை.
'சப்'
ம்ம்....
'சப்'....
ம்ம்/...
'சப்'
ம்ம்....
முத்தம் குடுக்குறான்னு நினைச்சா, அத ஆசிட் ஊத்தி அழிச்சிருங்க. அறை விட்டாங்க அவ. அப்ப கூட அழலயே நான். சின்ன வயசிலயே வீரம் இஸ் சீக்ரட் ஆஃப் மை எனெர்ஜி.
அப்புறம் கிள்ளினா. செம வலிப்பா. இப்ப நினைச்சா கூட வலிக்குது. சனியனுக்கு என்ன போட்டு வளத்தாங்களோ, மாடு மாதிரி வேற இருந்துச்சு. அப்புறம் தொடையில கிள்ளினா. ஏனோ அழ மாட்டேன்னு பிடிவாதம்.
வலிக்குதா? (அடிப்பாவி, ஏதோ கொஞ்சுற மாதிரி கேக்குறயே)
ம்ஹூம்....
இன்னும் அழுத்தி"இப்ப?"
முழிச்சேன் (லைட்டா....)
விரல்களிடையே சதைய வச்சு நசுக்க ஆரம்பிச்சா....அவ்வ்வ்வ்......
"இப்ப?"
வலிக்கலையே...
அடுத்து அந்த நாலு உள்ள வந்து "அக்கா நானு?"(டேய், இது என்ன ரோலர் கோஸ்டரா, சான்ஸ் கேக்க")
அந்தப் பக்கி இத்துனூண்டா இருந்துட்டு என்ன டார்ச்சர் பண்ணுது.
அப்பயும் நானொத்துக்களையே!
"இப்ப?"
இல்லக்கா.....(வேணாம் விட்டுரு, அப்புறம் அழுதுருவேன்)
கண்ல நீர் முட்டிட்டு வருது. இப்படியே தொடர்ந்தும் நான் ஒத்துக்கல. எப்படி எனக்கு அவ்ளோ தைரியம்னு தெரியல. இது பல நாள் தொடர்ந்தது. அப்படியும் நான் வலிக்குதுன்னு சொல்லாத்தால கேம் போரடிச்சு விட்டுட்டாளுக ரெண்டு பேரும்.
For a few, they get 'it' up just when somebody is screaming
நான் இன்னைக்கு காலேஜ் போறப்போ இன்னைக்கு தேர்தல் முடிவு வருதே, நம்மஓட்டு போட்டிருக்கோமே, என்னாகுதுன்னு பாக்கனுமே அப்படிங்கிறபரபரப்பெல்லாம் அடையல. எட்டு மணி காலேஜுக்கு ஏழரைக்கு எந்திருச்சு, எட்டுபத்துக்கு நிதானமா போய், க்ளாசுக்கு பக்கத்துல போனதும் ஒடுற மாதிரி சீன்குடுத்து, அங்க மூச்சிரைக்கறமாதிரி போய் நின்னு “எக்ஸ்க்யூஸ் மி சார்” னுசொன்னா அந்த ஆளு நம்மல கேவலமா பார்க்க, அதையெல்லாம் கண்டுக்காமகண்ணுல இருக்கிற டெரர மறைச்சுக்கிட்டு மரியாதைய கொண்டு வரும் போது, “பக்கத்தில வந்த்தும் ஓடி வர்ற மாதிரி சீன் கொடுக்கறயா? ஏன் லேட்?”கேட்ககாரணம் தான் கேக்குறாருன்னு தெரிஞ்சும், “லேட் ஆயிருச்சு சார்” என சொல்ல, “அது தெரியுது. காரணத்த கேட்டேன். சரி, உள்ள போய் தொலை” என சொல்ல, ஒரு கேனச் சிரிப்பு சிரிச்சுக்கிட்டே நம்ம நண்பன் கிட்ட போய் உக்காந்தா 8.30க்குமெல்ல கண்ணு சொருகும் போது கை கைபேசியின் உதவியை நாடும் போதுதான்தேர்தல் முடிவு நினைவுக்கு வந்தது. வீட்டுல வெட்டியா இருக்கிற அஜய் கிட்டசப்ஸ்கிரிப்ஷன் போட்டு விட்டேன். 5 மணி வரைக்கு ஒரே after polling discussion தான்.
மொத்த்துல இந்த தேர்தல்ல காங்கிரஸுக்கு நல்ல ரெஸ்பான்ஸ். நான் இவ்ளோதூரம் எதிர்பார்க்கல. எதனாலன்னு தெரியல,ஆனா செமத்தியா ஜெயிச்சிருக்கு. பா.ஜ.க.விட நல்ல மார்ஜின்ல செயிச்சிருக்கு. இதுல ஒரு நல்ல விஷயம்என்னவென்றால் பெரிய அளவிலான குதிரை பேரமும், என்னை மாதிரி முதல்முறை ஓட்டளித்த இளைய தலைமுறையினருக்கும் அரசியலிலநம்பிக்கையின்மை உண்டாகுறதும் தவிர்க்கப்படுகிறது. இந்த மக்களோட முடிவுபழைய ஆட்சி மேல இருந்த நம்பிக்கைய குறிக்குதா, இல்ல பா.ஜ.க. மேல இருக்கவெறுப்பா, இல்ல குழப்பமான கூட்டணிகளின் பலனா என முடிவு செய்வதுஎனக்கு கடினமாகத்தான் இருக்கிறது. அவங்க தனியாவே 200 அடிச்சிட்டாங்க. இது போக கூட்டணியின் இதர கட்சிகள் சேர்த்தா 258 வருது. செம வலுவாஇருக்காங்க. பா.ஜ.க.வோட தெசிய ஜனநாயக கூட்டணி 168 தான் தேறுது. கஷ்டம்தான்.
இந்த வலுவான கூட்டணிய விட்டு வெளிய வந்து தேவையில்லாம தனியாபோட்டியிட்டுட்டொமேன்னு லாலு வருத்தப்படுறாரு. அவருக்கு 5தான் வெற்றி. வெளிய வந்த்துதான் தப்புன்னு அவரோட நாலாவது அணி உருவாக்கினபஸ்வான், முலாயம் சிங் யாதவ் எல்லாரும் உணர்ந்திட்டாங்க. இதுல கொடுமஎன்ன்ன்னா இதுவரைக்கும் இந்தியாவுல் அதிகமான ஓட்டுவித்தியாசத்தில(5லட்சத்தி சொச்சம்) ஜெயிச்சவருங்கிற பெருமையகொண்டிருந்த பஸ்வானுக்கும் புட்டுக்கிச்சு. இப்ப திரும்ப தாய் கூட்டணிக்கேதிரும்பலாம் என முடிவு எடுக்கறதா தெரியுது. என்ன கொடும சார் இது!
ஆந்திராவுலயும் சொளையா 34 தொகுதிய அள்ளிருச்சு காங்கிரஸ். நம்மசீருவோட பிரஜா ராஜ்யம் ஒன்னு எடுத்திருக்காங்க. விஜயகாந்த் நிலைமைக்குஎவ்வளவோ தேவலை. சட்டசபை தேர்தல்ல அவரு திருப்பதில ஜெயிச்சாலும், தன்னோட சொந்த ஊரிலயும் போட்டி போட்டு அங்க தோத்துட்டாரு. சும்மாசொல்லக் கூடாது, சட்டசபை தேர்தல்ல 20 தொகுதி அவருக்கு வெற்றிகொடுத்திருக்காரு. இதுவும் விஜயகாந்த ஒப்பிடும் போது பெருசுதான். ஆனா, சீருஅங்க சூப்பர் ஸாருங்கோ! இங்க விஜயகாந்த்........?! என்ன கொடும் சார்!
வருண்காந்திய விட முடியுமா? அந்த பையனும் தேர்தல்ல நின்னு, பிரசாரத்திலவன்முறையத் தூண்டுற அளவுக்கு அதிகமா பேசி ஜெயிலுக்கும் போயிட்டுவந்துட்டாரு. ஆனாலும் அவர்தான் இப்போ இந்தியாவிலயே அதிக வோட்டுவித்தியாசத்தில வெற்றி அடைஞ்சிருக்கார். கிட்ட்தட்ட 2.5 லட்சம். அம்ம்மாடியோவ்..... நம்ம மாநிலத்துல ஜாதிப் பற்று மாதிரி வடமாநிலத்துல மதப்பற்று கொஞ்சம் அதிகமாத்தான் இருக்கு. மோடியவே ஜெயிக்க வச்சாங்களே. அதஇன்னொரு பதிவுல பேசுவோமே. என்ன கொடும சார்!
இதுக்கிடையில நம்ம மன்மோகன் சிங் ராகுல் காந்திய கேபினட்ல சேரனும்னுசொல்லி கேக்குறாரு. எனக்கு காங்., வந்தது கூட பிரச்சனையா தெரியல. ஆனா, இந்த மன்மோகன் சிங் தான் பிடிக்கவே இல்ல. பிரதமரானதுல இருந்து இவருசூச்சூ னாலுமே ஒரு அம்மா கிட்ட சொல்லிட்டுதான் போவாங்களாம்குழந்தைக்கு இருட்ட கண்டா பயம்). இதையும் யாரு சொல்லச்சொல்லிருப்பானுங்கன்னு நமக்கே தெரியும். அந்தப் பையனுக்கு மக்கள்மத்தியிலயும் கட்சியிலயும் வெயிட்டான மாஸ். அடுத்த தேர்தலுக்கு ஒருபிரதமரத் தயார்ப்ண்றாங்க. என்னதான் சொன்னாலும் இந்த தேர்தலுக்கு, SINGH IS KINNG.
கம்யூனிஸ்ட்ட விட்டுட்டோமே. அவங்க தங்களோட கோட்டைகளான கேரளா, மே.வங்கம் ஆகிய மாநிலங்களிலயே கவுத்துன பிறகு மற்ற ஊருகளிலசொல்லவா வேணும், டவுசர்தான். வர வர கம்யூனிஸ்டோட போக்கே சரியில்ல. அவங்க அரசாங்கத்துக்குள்ளயே இருந்துக்கிட்டு அவங்களுக்கே எதிர்ப்புதெரிவிக்குறாங்களாம். அஞ்சாவது வருஷம் வந்த்தும் ரோஷம் வந்து பதவி, கூட்டணி ரெண்டையும் விட்டு விலகுறாங்களாம். நல்ல கதையா இருக்கே. இதேமானங்கெட்ட வேலைய பார்த்த ராமதாஸுக்கும் பெரு ஆப்பு. ஒன்னு கூட தேறல.
தமிழக காங்., நிலைமை அந்தோ பரிதாபம்தான். பின்ன தேர்தல் நேரத்துல கூடஒண்ணும் பிரசாரம் பன்ணாம, ஒரு முயற்சியும் எடுக்காம இருந்த்துக்கு சிதம்பரம்முட்டிமோதி 3000சொச்சம் ஓட்டுல ஜெயிச்சதே பெருசு. அவரும் காசுகொடுத்தாராம். அதுக்கே இந்த நிலைமையா? இளங்கோவன், பாலு, மணிசங்கர்ஐயர் எல்லாத்துக்கும் சோலி முடிஞ்சிருச்சு. தி.மு.க.வும் இலங்கை பிரச்சனை தன்பக்கம் திரும்பக் கூடாதுன்னு காங்.,க்கு சரியா பிரசாரம் பண்ணல. பின்ன எப்படி? காங்கில ஒருத்தன் வேட்புமனு தாக்கல் செஞ்சா அவரு கட்சியிலயேஇன்னொருத்தன் அதிருப்தி காரணமா இன்னொரு வேட்பும்னு தாக்கல்செய்வான். இந்தக் கட்சி எப்படி முன்னேறப் போகுது.
திமுக 18 தொகுதில ஜெயிச்சிருக்கு. வெற்றிக்கு காரணம் ஹாஸ்பிடல்ல இருந்தஐயாவா இல்ல நோட்டுல இருக்குற ஐயாவான்னு ஒரு பட்டிமன்றம் நடத்தலாம். தான் ஒரு வலுவுள்ள எதிர்கட்சிதான்னு சொல்றவிதமா அ.திமுக 9 ஜெயிச்சிருச்சு. பரவாயில்ல. மதிமுக வைகோவிற்கே வெற்றி கிடைக்கலயே. அங்க பதிவானஓட்ட விட எண்ணிக்கையில வந்த ஓட்டுகள் அதிகமா இருக்குன்னு ஒருபிரச்சனைய கிளப்பிருக்காரு. என்ன்ன்னு பொறுத்திருந்து பார்போம்.
இங்க மதுரையில நான் சொன்னது நடந்திருச்சு பாத்தீங்களா? நான் சொன்னதுமாதிரியே அழகிரிக்குதான் வெற்றி, மாபெரும் வெற்றி. ஆனால், அவருசொன்னமாதிரி 3லட்சம் ஓட்டு வித்தியாசம் இல்லை. 1,43,945 ஓட்டுக்கள்வித்தியாசம். மொத்த ஓட்டுக்கள் மதுரை தொகுதியில 10லட்சம். அதுலபதிவானது 7லட்சத்து சொச்சம். ஆமாங்க, 75சதவித வாக்குப் பதிவாயிருக்கு. பின்ன, காந்தியே வீடு வீடா போயி வாக்கு கேட்டிருக்காரே, அழகிரிக்காக. அந்தபதிவான வாக்குகளில் 4லட்சத்து சொச்சம் அழகிரிக்கு. இப்ப சொல்லுங்க அவருசொன்ன அளவு வித்தியாசத்துல ஜெயிக்கறதுக்கு இடமில்ல, விஞ்ஞானப்படி. நாங்கதான் அப்பவே சொன்னமுல!
இதுலயும் ஒரு நல்ல மறுபக்கம் இருக்கத்தான் செய்யுது. இப்ப அமைச்சரானதாலகண்டிப்பா நல்லது செய்வாரு. பெரிய ஆளுங்க என்னைக்குமே தன்னோடதொகுதிய நல்ல வச்சுக்குவாங்க, அம்மாவோட ஆண்டிபட்டி, ஐயாவோடசேப்பாக்கம் இதற்கு உதாரணங்கள். அதனால ஊருக்கு ஏதாவது செய்வாங்க. பி.மோகன் நல்லவருன்னு ஊருக்குள்ள பேரு இருந்தாலும், அவருக்குபடிச்சவங்க வாக்குகள் விழுந்தாலும் அவரோட திட்டங்களுக்கு தடைகள் வரும். சிக்ஸுக்கு அப்புறம் செவன் டா, அண்ணனத் தாண்டி எவன் டா? அதனால்அஞ்சாநெஞ்சன் தவறாம தன் கடமைகளை செய்வாருன்னு நம்புறேன். இப்போமுதல் முறையா நேரடி அரசியல்ல இறக்குறதாலயும், அமைசாராகிறாதாலும்(ஆக்கிருவாங்க, பாருங்களேன்) கண்டிப்பா தன்னோடஇன்னபிற மர்ம நடவடிக்கைகள கொறச்சிருக்காரு. ரயில்வே அமைச்சர் லாலுஇதற்கு நல்ல உதாரணம். மதுரையோட தலையெழுத்தப் பார்போம்.
இனி இவங்க ஆட்டம் தாங்க முடியாது. அழகிரி பிறந்த நாள் எனதான் மதுரையிலபல பேருக்கு தெரியுதே தவிர, மற்றபடி அது காந்தி இறந்த நாள் (என்னபொருத்தம்!) என பல பேருக்கு மறந்திருச்சு. ஊரு முழுக்க தோரணம் கட்டி, ஒட்டிஒட்டியே கட்டக் கூடிய அளவுக்கு ஆயிரக்கணக்கான ஃப்ளக்ஸ் போர்டுகல வச்சு, ஊரு முழுக்க லைட்டு போட்டு, ஸ்பீக்கர் வச்சு அழகிரி புகழ் பாடல்கள் போட்டுஊரையே அசிங்கமாக்கி, கிராமத்து திருவிழா மாதிரி ஆக்குறத இனிமே தைரியமாபண்ணுவாங்க. எங்க காலெஜுக்கு பின்னாடிதான் ஓட்டு எண்ணிக்கை நடக்குறமருத்துவக் கல்லூரி. காலையில க்ளாஸ் நடக்கும் போதே வெடி வெடிச்சு தெரியவச்சுட்டாங்க. காலேஜ் முடிஞ்சு வரும் போது சிக்னல்ல வச்சு எல்லாருக்குசாக்லே குடுத்துருக்காங்க. என்னைய கேக்குறீங்களா? நான் வாங்கலீங்க... கொள்கையெல்லாம் இல்ல, எதிர்பக்கத்தில கொடுத்தாங்க, மிஸ் ஆகிடுச்சு. அதத்தாண்டி பாலத்துல இறங்குற இட்த்துல அந்தரத்துல டிராபிக் ஜாம். என்னடான்னுபாத்தா கீழக்கூட்டம். மெல்ல நழுவி வலதுப் பக்கம் திரும்பி வந்தேன். சுத்திஇருக்கறங்க எல்லாம் பைக்க உருட்டிட்டிருக்கானுங்க. உத்துப் பாத்தாஅவய்ங்கெல்லாம் கட்சிக்காரனுங்க. டிராபிக்க இட்து பக்கம் திருப்பிவிட்டிருந்துருக்காங்க. கட்சிக் கார்னுங்களுக்கு நடுவில கட்சிக்காரன் மாதிரிஇருந்த்து எனக்கு ஒரு மாதிரி இருந்த்து. எல்லாம் ரவுடி மாதிரி மாடுமாடாஇருந்தானுங்க ஐய்யோ சிக்கிட்டோமேன்னு நைசா நழுவி வந்துட்டேன்.
கடைசில என்னையும் அரசியல்வாதி ஆக்கிட்டீங்களே!
படம் திடீரென புருவம் சுழிய வைக்கும் இரு புக்கிகளின் கொலையுடன் ஆரம்பிக்கிறது. காலியான ஏர்போர்ட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் ஒருவனிடம் கதை சொல்லிக் கொண்டே அவன் கதையை முடிக்கிறார், Good Kat (Bruce wllies). Kansas city shuffle என்கிறான். ஒரு காலத்தில ஒரு குதிரை ரேஸ் நடக்கும் போது ஒரு குதிரைக்கு மருந்து குடுத்து ஜெயிக்க வைக்கிற விஷயம், அந்த டாக்டர் வழியாக, ஒரு விலைமாது, ஒரு பணக்காரன், அவன் நண்பன், ஒரு பார் வெய்டர் என கேயாஸ் தியரி மாதிரியாக MaX கைக்கு வந்து சேருகிறது. அவன் அதில் பெட் கட்ட, மருந்துக்கு திட்டம் போட்ட கும்பல் அது லீக்கானது தெரிஞ்சதும் அது சம்பந்தப்பட்ட எல்லாத்தையும் கொன்னுடறாங்க குடும்பத்தோட. இதுதான் Kansas city shuffle ஆ என தூங்குமூஞ்சி கேட்ட பொழுது, இல்லை அது ஆரம்பம்தான், உன்ன கொல்லுறதுதான் Kansas city shuffle ன்னு சொல்லிக்கிட்டே அவன் கழுத்த கோழி மாதிரி திருகிடறான். ஒரு பிணம் இல்லாமல் Kansas city shuffle நடக்காதுன்னு சொல்லிக்கிட்டே அவன எடுத்திட்டு போறான்.
இதுக்கப்புறம் ஹீரோவோட அறிமுகம் Slevin kelevra (Josh Harnett ). பேசிப் பேசியே மூக்குல குத்து வாங்கிற கேரக்டர்ல நல்லா நடிச்சிருக்கார். அவரோட பாத்திரப் படைப்பே எந்நேரமும் பேசுறதுதான். அவன் ஃபிரண்டு வீட்டில தங்கியிருக்கும்போது அவன் ஃபிரண்டு நிக் என நினைத்து இவனத் தூக்கிட்டு போயிடறாங்க துண்டோட. அங்க The Boss (Morgan Freeman) என் கடன திருப்பிக் கொடுக்கறயா இல்ல அதுக்கு பதிலா என் மகனக் கொன்ன Rabbi(Ben Kingsley) யோட பையன போட்டுத் தள்ளினா விட்டுடறேன் என சொல்லுகிறான்.
இப்ப வில்லன்களோடபேக்ரவுண்ட். ரெண்டு எதிரெதிர் வானுயரக் கட்ட்டங்கள்ல கடைசி மாடி பெண்ட் ஹவுஸ்ல மூணு இன்ச் குண்டு துளைக்கா கண்ணாடியின் பின்னாடி கடந்த 20 வருடமா வாழ்க்கை நடத்திட்டு வர்ற எதிரிங்கதான், The Boss ம், Rabbi ம். ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் பயந்து அந்த ஒரு மாடிலயே இருபது வருஷமா வாழ்ந்திட்டு வர்றாங்க. இந்த சமயத்துலதான் பாஸோட மகன் செத்துப் போக, ராபியோட மகன கொல்லுறதுக்காக Good katஅ கூப்பிடுறார் பாஸ். இவனோட டீல் வச்சுக்கிற அதே நேரத்தில அதே நேரத்தில ராபிக்கிட்ட பாஸ கொல்லுறேன்னு ஒரு டீல் வச்சுக்கிறான் அவன்.
இப்ப ரெண்டு பேருக்கிட்டயும் ஹீரோவ மாட்டி விடறான் Good Kat, ஸ்லெவின் ஃப்ரண்டு Nick Fisherஒட பேர வச்சு. ஒரு பக்கம் பாஸ் ராபியோட ஹோமோ செக்ஷுவல் மகன, அவன் வீக்னஸ வச்சே முடிக்க சொல்ல, மறுபக்கம் என்னோட 33,000 டாலர கொண்டுவான்னு ராபி படுத்த ஸ்லெவின் நடுவில சிக்கி சீப்ப்டுறான்.
எதிர்வீட்டு லொட லொட பொண்ணா கதாநாயகி (Lucy Liu – சார்லீஸ் ஏஞ்சல்ஸ்ல பாத்திருப்பீங்களே!). இவன் ஏன் இந்த வட்ட்த்துக்குள்ள சிக்கினான் என துப்பறியறேன்னு லொட லொடத்துக்கிட்டேஏஏஏஏஏ... இருக்காங்க. இடையில Good kat அ படமெடுத்திடறாங்க, ஒரு சந்தேகத்தில. ஆனா, அது யாருன்னு ரெண்டு பேருக்கும் புரியல. இதற்கிடையில் ஒரு போலிஸ் அதிகாரி Marty இவன துரத்த ஆரம்பிச்சிடறான்.
கடைசியா, ராபியோட பையன் The fairy கிட்ட பழகி, ஹோமோ செக்ஷுவல் மாதிரி காட்டி, அவன் வீட்டுல வச்சுப் போட்ரலாம்னு ப்ளான் போட, அங்கயே வச்சு ஸெல்வின போட்டுட்டு கூட்டுத் தற்கொலையா ஆக்கிடலாம்னு Good kat திட்டம் போட, ராபியோட பையன இவன் கொன்னானா, குட் கேட் கிட்ட இருந்து ஸெல்வின் தப்பிச்சானா, ராபி கிட்ட ஒத்துகிட்ட மாதிரி பாஸ காலி பண்ணினா குட் கேட், போலீஸ்கிட்ட இருந்து ஸெல்வின் எப்படி தப்பிப்பான், குட் கேட்ட ஃபோட்டோ எடுத்த லிண்ட்சே பிழைச்சாளா, kansas city shuffle னா என்ன, அந்த முதல் கொலைகள் ஏன் நடந்தன, கடைசியில இதுக்கெல்லாம் அர்த்தம் என்ன, இந்தப் படத்தின் பெயருக்கு அர்த்தம் என்ன என விளக்குவதுதான் கதை.
படம் கடைசி 40 நிமிஷம் முழுக்க கிட்ட்தட்ட க்ளைமாக்ஸ் தான். The Fairyய கொன்ன பிறகு கதையோட போக்கே தடாலடியா மாறிடுது, படத்துல கதாநாயகி சில சமயங்களில் அதிகமாக பேசுவது போலத் தெரியலாம். வில்லன்கள் இருவரும் அருமை. பள்ளிக் கூடப் பையனைப் போல படிய வாரிய தலையுடன் புரூஸ் வில்லிஸ் இளமையாகத் தெரிகிறார். ஹீரோ தனது வேலையை திறமையாகத்தான் செய்திருக்கிறார்.
படத்தின் எடிட்டிங் இந்த மாதிரியான படங்களுக்கு ஏற்றவாறு நல்லா க்ரிஸ்பாதான் இருக்கு. படத்தில எடிட்டிங்ல அங்க அங்க பிசிறு விட்டு பின்னாடி காட்சிகளை கோர்த்து பார்க்கும் வகையில பண்ணிருக்காங்க. கடைசில என்ன தான் நடக்குது இங்கனு சீட் நுனிக்கு தள்ளிடுவாங்க.
ஆமா.... இந்தக் கதைய எங்கயோ படிச்ச மாதிரி இருக்கேன்னு யோசிச்சா, நம்ம கேபிள் சங்கர் ‘லாடம்’ங்கிற படத்துக்கு எழுதினது மாதிரியே இருக்கலாம்னு ஞாபகப்படுத்துகிறேன். வித விதமா சுடுறாய்ங்க!
--------------------------------------------------------------------------------------------------
சில வசனங்கள், இந்தப் படத்திலிருந்து
ஸ்லெவின் லிண்ட்சேவிடம், “ கெட்ட்து நடந்தா எப்பவும் மூணு மூணாவே நடக்கும்”
தனது காதலி இன்னொருத்தியிடம் செக்ஸ் வச்சுக்கிட்டிருக்கறத பாத்தப்போ அவ இது ஆக்ஸிடண்ட்னு சொல்லுவா.அதுக்கு. “அது எப்படி? அவன் தடுக்கி நீ விழுந்திட்டயா?”
லிண்ட்சே திடீரென வந்தப்ப அவன் துண்டில்லாம பாத்திருவா. போன பிறகு திரும்பவும் திடீரென எட்டிப் பார்த்து, “இன்னொரு ஷோ கிடைக்குமான்னு பார்த்தேன்?”
லிண்ட்சே - “ஒரு கப் சக்கரை (சக்கரை சுரேஷ் இல்லீங்க!)வாங்கிட்டு போகலாம்னு வந்தேன்”
ஸ்லெவின் – “கப் எங்கே?”
லிண்ட்சே - “கப் இருந்தா நான் சக்கரை மட்டும்தான வாங்க வந்திருப்பேன். நான் ஒரு கப் சக்கரை வாங்க வந்திருக்கேன்”
இவன் மூக்க உடைச்ச பிறகும் வாய் குறையாம பேசிட்டிருப்பான். அப்ப Morgan Freeman- “I’ll bet it was that mouth that got you that nose “
The Boss ஸ்லிம்மோட பிணத்தை வச்சு கேள்வி கேட்டுட்டு ஸெல்வினப் பார்த்து, “அவன யாரோ சுட்ட்துல இருந்து அவன் செவிடாயிட்டான்”.
--------------------------------------------------------------------------------------------------
Lucky Number Slevin – Luckily Good
மதுரை தேர்தல் முடிவுன்னு சொன்னதுமே எல்லாத்துக்கும் அது என்னவா இருக்கப் போகுதுன்னு. இன்னைக்கு காலையில்தான் ஓட்டு போடப் போறேன். ஆனால், அதுக்குள்ள தேர்தல் முடிவு சொல்லக் கூடிய நிலைமை இருக்கு இங்க. மதுரையப் பொறுத்த வரைக்கும் தேர்தல் முடிவு என்பது வேட்புமனுத் தாக்கல் அன்றே எல்லாருக்கும் தெரிந்தது தான். இதை தனியே வேறு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இப்போ நான் பேச வந்த விஷயமும் அது அல்லவே.
மதுரையோட தேர்தல் நிலைமை மற்ற தொகுதிகளை ஒப்பிடும் போது சற்று வேறு்பட்டு இருக்கிறது. அதற்கு காரணம் நாம் அனைவரும் அறிந்த படி மதுரையின் முடிசூடா மன்னன், தமிழகத்து இளவரசன் மாண்புமிகு அஞ்சாநெஞ்சன் அண்ணன் அழகிரிதான்னு சொல்லவா வேணும். அட, பேருக்கே ஒரு பதிவு ஒதுக்கலாம் போலயே. என்னதான் மக்களுக்கு அழகிரியப் பத்தி ஒரு உயர்வான எண்ணம் இல்லைன்னாலும் இவர்தான் ஜெயிக்க வாய்ப்பிருக்கு.
அழகிரியோட அரசியல் வாழ்க்கை என்னைக்குமே நேர்முக அரசியலா இருந்ததில்ல. எப்பவுமே அவரு பிண்ணனி வேலைகள்தான். அதாவது தேர்தலில நிக்க மாட்டாரு. ஆனா கட்சி பணியில இருப்பாரு. சாமில வில்லன் பண்ணுவான் பாத்துருக்கீங்களா? அது மாதிரி. இந்த அஞ்சாநெஞ்சன், அண்ணன் போன்ற பட்டங்கள் எல்லாம் இப்ப ரெண்டு வருஷமாதான். இதுக்கு முன்னடியே அழகிரியோட அதிகாரம் மதிரையில இருந்திருந்தாலும் தா..கிருட்டிணன் கொலை வழக்குல சிக்கி கொஞ்சம் பெயரிழந்திருந்தாரு. ஆனா, இந்த தி.மு.க. ஆட்சி தொடங்கினதில இருந்து அழகிரியோட அதிகார மையமாவே ஆயிருச்சு. அண்ணே ஆ...ன்னு கொட்டாவி விட்டா அடிக்கிறதுக்கும், ச்சூ.......ன்னு சொன்னா சூச்சூ போறதுக்கும் ஆளுங்க வந்திட்டாங்க. மதுரையில சித்திரைத் திருவிழாதான் பெரிய திருவிழான்னு சொல்லுவோம். ஆனா, இத விட பெரிய திருவிழாவா கடந்த ரெண்டு வருஷமா அழகிரியோட பிறந்த நாள் நடக்குது. இந்த தடவ ஒரு படி மேல போய் ஐம்பத்தி எட்டாவது பிறந்த நாள ஐம்பத்தி எட்டு நாள் நடத்தியிருக்காங்க. ரெண்டு ஊரு முழுக்க லைட் போட்டுதிருவிழாவா கொண்டாடிருக்காங்க, இந்த கரண்ட் பஞ்சத்தில. இதுக்கு மட்டும் எங்க இருந்துதான் க்ரண்ட் கிடைக்குதோ? படத்தில வர்ற வில்லன் கணக்கா மதுரையில ராஜா மாதிரி , அந்தாளுக்கு ஏழரையா எம்.பி சீட்டு வந்து சேர்ந்துச்சு.
இதுவரைக்கும் அடுத்தவனுக்காக வேலை பார்த்தது வேற, இப்ப தனக்கே பிரச்சாரம்ங்கிறப்போ பல்வேறு பிரச்சனைகள். இந்த லட்சணத்தில அவரு சும்மா இல்லாம எங்க ஊருக்காரய்ங்கள போய் நம்பி மூணு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில ஜெயிக்கிறேன்னு சொல்லி சவால் விட்டிருக்காரு. சும்மா கிடந்த சங்க ஊதிக் கெடுத்த கதையா அவங்கதான் முதல்ல மதுரை சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு 1000மும், அப்புறம் திருமங்கலம் இடைத்தேர்தல்ல ஐயாயிரமும் குடுத்தானுங்க. அதனால இப்ப மக்கள் பணம் எதிர்பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. படிப்பறிவில்லாதவங்க காசு கொடுத்தா அவங்களுக்கே ஓட்டு போட்டுருவாங்க. எங்கள மாதிரி படிச்சவங்க காச வாங்கிட்டு பிடிச்சதுக்கு குத்திக்குவோம், முடிஞ்சவரைக்கும் காசு குடுத்தவனுக்கு குத்தாம பாத்துக்குவோம். எங்கள இன்னுமா நம்புறாய்ங்க. ஆனா, ஒரு அநியாயம் நடந்து போச்சு. நாட்டுல ஜனநாயகம் செத்துக்கிட்டிருக்கு. பின்ன? முதல் முறையா ஓட்டு போட வர்ற என்ன மாதிரி இளைஞர்களை உற்சாகப்படுத்தும் வகையா குடுக்க வேண்டிய சன்மானத்த கொடுக்கனுமா இல்லையா? எனக்கு மட்டும் வரவே இல்லைங்க. என்ன கொடும சார் இது?
இப்ப இந்த டீடெயில எதுக்கு சொல்றேன்னா, இதனால தான் இப்போ பிரச்சன. இதுல என்னன்னு கேட்டீங்கன்னா, இப்ப நாடாளுமன்றத் தொகுதிகள் பெருசு. அதனால எல்லாத்துக்கும் அளவாத்தான் கொடுக்க முடியும் எல்லாத்துக்கும் ஐநூறு ரூபாய் கவர்கள்தான். ஆனா மக்கள் என்ன நினைக்கிறாங்கன்னா, அவரு கொடுக்கறத இவனுங்கதான் ஆட்டய போடுறாங்கனுங்கன்னு. இத்தனைக்கு அந்த கவர் அவரோட நிர்வாகிகள்க கிட்ட இருந்து வர்றப்பவே சீல் பண்ணிதான் வருது. அப்படியும் ஆட்டய போட்டுற கூடாதுன்னு ஒரு நிர்வாகிய கவர் விநியோகத்தப்போ அனுப்பி வைக்கிறாங்களாம். இதுக்கப்புறமும் அங்க நிலவுற அதிருப்திய தடுக்க முடியல. என்ன செய்யவென்று புரியாமல் அவர்கள் சில இட்ங்களில் மறுவிநியோகம் வேற பண்ணிக்கிட்டிருக்காங்க. ஆனா ஆசை யார விட்டது? ஒருத்தரு அவருகிட்ட போய், "ஐயா, திருமங்கலத்தில இருக்குற என் உறவுக்காரங்கள் எல்லா குடிசையில இருந்து ஓட்டு வீட்டு மாறிட்டாங்க.நான் மட்டும் குடிசையில எப்படி இருக்க்கறது? வழி பண்ணுங்க", எனவே கேட்டிருக்கான். என்ன கொடும சார்?
அழகிரி நேத்துதான் எங்க வீட்டு பக்கம் வந்தாரு, ஓட்டு கேக்க. எங்க வீட்டுப்பக்கம்தான் அவர் வீடு. அதாவது, பெரியார் நிலையத்து வழியா வந்தீங்கன்னா, அடுத்து சுப்ரமணியபுரம், ஜெய்ஹிந்த்புரம்(இங்க நான்), ஜீவா நகர், டி.வி.எஸ. நகர்(இங்க அண்ணன்). அட, பாத்தீங்களா எவ்வளவு பக்கமுன்னு.
அதனாலதான் கடைசி நாளா இங்க வந்திருக்காரு. மத்தியான நேரம், கடும்ம வெயில். அளவான மக்கள் வீடு வாசல்ல இருந்தே பாக்குற அளவு கிட்ட வந்தாரு. ஒவ்வொரு முகமா நிதானமா பாத்து கை கூப்பி ஓட்டு கேட்டுக்கிட்டே போனாரு. ஆளு அக்கினி வெயில்ல நல்லா கருத்திட்டாரு. இவ்வளவு காலம் ஏ.சியிலயே இருந்திட்டு இப்ப வெளிய வந்தா? உங்களயெல்லாம் பாத்தா பாவமா இருக்கு. எங்கள நம்பி இவ்வளவு பெரிய மேட்டர கையில எடுத்திருக்கீங்க. நம்மள இன்னுமா நம்புறாய்ங்க! என்ன கொடும சார் இது!
ஆனா சும்மா சொல்லக் கூடாது இந்த கருணாநிதிய. பெரிய தில்லாலங்கடிதான். தன் கடைசி காலத்தில எல்லா பிள்ளைகளுக்கும் வாழ்க்கைக்கு வழி செஞ்சிட்டாரே. ஸ்டாலினுக்கு சட்டமன்றம், அழகிரிக்கு நாடாளுமன்றம், கனிமொழிக்கு ராஜ்ய சபான்னு ஏதோ இந்த தமிழ் நாடே தன்னோட சொத்து போலவும், தான் இந்தநாட்டின் ராஜா போலவும் பிரித்துக் கொடுத்து விட்டாரே, இந்த தமிழீனத் தலைவர். என்ன ஒரு வில்லத்தனம்!
அழகிரிக்கு வெற்றி பெரிசில்லைன்னாலும் அந்த மூணு லட்சம் ஓட்டு மேட்டர் ஒரு தன்மானப் பிரச்சனையாவும், ஓட்டுக்கு லஞ்சம் மேட்டர் அவர் பதவி ஆசைக்கே உலை வைக்கிற பிரச்சனையாவும் இருக்கு. பொறுத்திருந்து பார்ப்போம்.
அது ஒரு ஞாயிற்றுக் கிழமை மாலை. சென்ட்ரல் ரயில் நிலையம் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. அங்க்கிருப்பவர்களை வைத்து நாம் எந்த மாநிலத்தில் இருக்கிறோம் என்று முடிவு செய்துவிட இயலாது. அந்த கூட்டத்தில் சோலங்கிகளும், ராவ்களும், ஜெயின்களும், செட்டிகளும், ஷெட்டிகளுமாக ஒரு குழப்பமான மொழிகளின் கலவைகளாக இருந்தது. சென்னை சென்ட்ரலில் எப்பொழுதுமே இப்படித்தான், பேபல்(Babel) கட்டக் கூடிய பாபிலோனியகள் பல மொழிகளின் கூச்சல்களாக இருக்கிறது. அதுவும் மும்பை ரயில் வரும் நேரமானால் சொல்லவே தேவையில்லை.
இந்தியா வெளியுறவு கொள்கை பொதுவா எப்படி இருந்துச்சுன்னு தெரியுமா? இங்க எல்லாரும் என்ன விட பெரிய ஆட்கள்(வயசுல) தான். அதானால உங்களுக்கே தெரிஞ்சிருக்கும் என்னன்னு.அதாவது இந்தியா மத்த நாடோட எப்படி பழகுறாங்க, யாரோட வாய்க்கா தகறாரு, எவன் வாங்க பழகலாம்னு சொல்றான், அவன கூப்பிட்டு கிடா வெட்டலாமானெல்லாம் முடிவெடுக்குறது நம்ம வெளியுறவுக் கொள்கைகள்தான்.
என்ன தலைப்ப பாத்ததுமே புரிஞ்சிருக்குமே.... எதப் பத்தின்னு தெரிஞ்சிருக்கும். ஹேய் எவன்டா அது சிரிக்கிறது...மவனே டாராயிருவ... அண்ணன் எவ்ளோ நல்லவருன்னு தெரியுமா.... கொடை வள்ளல்கள் ஏழு இல்லடா...எட்டு....
ஒ.கே. கட்...
பப்பு, நீங்க எவ்ளோ பெரிய பிரபலம்! ஏன் திடீர்னு ரித்தீஷோட பிரசார ஷூட்டுக்கு வர்றீங்க?
அதுக்கு காரணம் அவரோட கொடைத்தன்மையும்(வெரி இம்பார்டண்ட்!), தமிழ்மக்கள் மேல் அவருக்கு இருக்குற அக்கறையும் தான்(அதெல்லாம் அப்புறம்தான்). அவரு செஞ்ச விஷயங்கலெல்லாம் கேட்டீங்கன்னா அசந்து போய்டுவீங்க! அவரு படம் போடுற அன்னைக்கு எவ்ளோ பிரியாணி கடைகள் பிழைக்குது தெரியுமா? வாழ்நாளில தியேட்டரே பாக்காத பிச்சைக்காரங்களுக்கு கூட தியேட்டர பாக்க வச்ச ஏழைகளின் பங்காளன். ரஜினியோட குசேலன் ரிலீஸ் பண்ணி நொடிச்சவனுங்க கூட இருக்காங்க, ஆனா எங்க அண்ணன நம்பிக் கெட்டவன் எவனும் கிடையாது.
உங்களுக்கு சொன்னாப் புரியாது, எங்க அண்ணன் கிட்ட வந்து ஏதாவது உதவி கேட்டு பாருங்க. என்ன உதவி? எதுனாலும். ஏரியா ஃபங்ஷனா ரூ.5000, கல்யாணமா ரூ.50000, அட இவ்ளோ என்னங்க, வளைகாப்புக்கு கூட ரூ15000 குடுக்குறாருங்க! அட இதுக்கெல்லாம் அவரு பிரதிபலன் எதிர்பார்க்கிறதில்ல. அவருக்கு கட் அவுட் வச்சா மட்டும் போதும். அட், அதையும் அவரே சொந்த செலவுலயே வச்சிருவாருங்க. எந்த அரசியல்வாதிங்க இதெல்லாம் பண்ணுவா? அட, நீங்க ஒரு பிச்சக்கார.......(அட, முடிக்க விடுங்கப்பா!)னுக்கு ஒரு ரூபா போடுறதுக்கு முன்னாடி அமெரிக்காவோட அணு ஆயுத ஒப்பந்தம் பண்ற மாதிரி ரியாக்ஷன் குடுப்பீங்க. ஆனா, எங்க அண்ணன் யோசிக்காம செய்வாரு.ஆனா ஃபோட்டோ எடுத்துக்குவாரு(வரலாறு மிக முக்கியம் அமைச்சரே!).
அவரு படத்துக்கு எல்லாத்துக்கும் டிக்கட். பில் கேட்ஸே படம் எடுத்தாலும், கொள்ளையா காசு வச்சி வித்துருவான். ஆனா, எங்க அண்ணனோ பணம் குறிக்கோளா இல்லாம, படத்துக்கு செலவு பண்றதோட நிக்காம எல்லாத்துக்கும் இலவசமா காட்டி, தமிழ் மக்களுக்கும் தியேட்டர் ஓனர்களூக்குமான செலவுகளையும் தாங்கிக்கிற சுமைதாங்கி!
முதல்முதல்ல இவர பத்தி எப்படி தெரிய வந்தது?
காலேஜ்ல கலாட்டவா ஆயி ஸ்ட்ரைக் ஆயிடுச்சு. அதனால நிறைய லீவு கிடைச்சது. அதனால என் நண்பர்கள் சிலர் ஊர் சுத்தனும்னு முடிவு பண்ணாங்க. கன்யாகுமரில இருந்து சென்னை வரை சைக்கிள்ல சுற்றுப் பயணம். கேட்டா உலக அமைதி வேண்டியாம். அடப் பாவி, உன்னாலதானடா காலேஜ்ல சண்டை ஆகி லீவு விட்டுருக்காங்க! இதோட முடிவுல அமைச்சர் ஸ்டாலின பாத்துட்டு வர்றதா ஒரு முடிவு. அந்த இடத்துல வந்தாரு நம்ம தலைவர் ரித்தீஸ். அப்போ அவரோட ஷூ லேஸ் எதிர் கட்சியினரின் திட்டமிட்ட சதியால அவுந்திருச்சு! கட்ட முடியாம கஷ்டப் பட்டிருக்காரு தலைவர். ஷூ லேஸ் கட்டத் தெரியாம இல்லீங்க. கடவுளே வந்து நின்னாலும் குனிஞ்சு நிக்க மாட்டாரு. நீங்க கட்டத் த்ரியாதுன்னு நினைச்சிட்டீங்களா?ச்சே....ச்சே.... அங்க காத்திருந்த என் நண்பன் ஹெல்ப் பண்ணிருக்கான். உடனே பாக்கெட்ல இருந்து 500ரூ எடுத்து கொடுத்தாரே எங்க தானைய தலைவர்! இப்போ சொல்லுங்க எங்க தலைய அடிச்சுக்க ஆளிருக்கா?
இவ்வளவு பண்ணினவருக்கு ஒரு அங்கீகாரம் வேணாமா? அதத்தான் சொல்ல வரேன். இப்போ அவருக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கிருக்காங்க. இப்பவும் எதுக்காக தேர்தல்ல நிக்குறாருன்னு நினைக்குறீங்க. மக்களுக்காகதான். எத்தன அரசியல்வாதிய பாத்துருக்கீங்க. எல்லாரும் காச அடிப்பாங்க. ஆனா, எங்க கலியக கர்ணன் தனக்கு மிஞ்சியது போக தானமும் பண்றார். அந்த நல்ல மனசு யாருக்கு வரும்?
"ஹேய், இருந்தாக்கா அள்ளி கொடு, இல்லேன்னா சொல்லி கொடு; நம்ம வழி நல்ல வழிடா!"
டிஸ்கி: எனக்கு ஒரு கவர அண்ணன் அனுப்புவாருன்னு நினைக்கிறேன்.
டிஸ்கி2: ஓட்டு போடாதவர்களுக்கு அண்ணன் சார்பில் ஆட்டோ அனுப்பி வைக்கப்படும்.
பிடுங்கறதுக்கு ஆணி இல்லன்னு நான் பதிவிட்டிருந்தேன் பாத்திருக்கீங்களா? அதுல ரிசஷனால வேல ஒருத்தனுக்கு இல்லங்கறதப் பத்தி சொல்லியிருந்தேன். அதுலயும் சும்மா இல்லாம அமிதாப், பாக்யராஜ் இவங்கள எல்லாம் இழுத்து பேசிருப்பேன். அப்போ இதெல்லாம் ஏன் இவன் இவ்ளோ அக்கறையா யாரும் யோசிச்சிருக்க மாட்டீங்க! எனக்கு புடிச்ச ஸ்டையிலில சொல்லனும்னா,
இந்தப் பதிவுக்கும் நமீதாவுக்கும் என்ன சம்பந்தம்? கடைசில! ஏய்...ஏய்...ஏய் மிஸ்டர், கடைசிக்கு போகாம முதல இருந்து படிச்சிட்டு போங்க!
நான் பார்த்த முதல் படம் என்ன என யோசிக்கும் போது என்னவென ஞாபகம் வர மாட்டேங்குது. ஹாலிவுட்னு பாத்தா Jurassic parkஆ இருக்கலாம்னு தோணுது. அப்போ மாப்பிள்ளை விநாயகர்ல பாத்தேன். ரொம்ப காலமா ஆங்கில மற்றும் ஹிந்தி படங்கள மட்டுமே போட்டுட்டு வந்ததால தியேட்டர் நல்லா இருக்கும். இப்போ தமிழ் போட்ட பிறகு அங்க தியேட்டர் சரியில்ல. அதுவும் ஏகனுக்கு பிறகு அந்த தியேட்டர் இருக்கும் நிலைமை பரிதாபத்திற்குரியது( 50 ரூ. டிக்கட் சீட்ல உக்காந்தா தரை டிக்கட் மாதிரி இருக்கு). ஒரு தியேட்டரோட நிலைமைய வச்சே என்ன படம் ஓடிருக்கு, எப்படி ஓடிருக்கு என எல்லாத்தையும் சொல்ல முடியும்.
படத்துக்கு முதல் காட்சி போற ஆள் இல்ல நான். மதுரையில் இருக்கிற எல்லா மாணவர்கள் போலயும் நானும் 9th ல இருந்தே நல்லா படத்துக்குப் போவேன், மாசம் ஒண்ணாவது. இப்போ அப்படி இல்ல. நல்லா இருக்குன்னு தெரிஞ்சா தான். சும்மா படம் பாக்குறது என் பழக்கம் இல்ல. பாத்த படத்த சில நாட்களாவது அசை போட்டுட்டிருக்கறது என் வழக்கம் . (மைண்ட்ல நமீதாவ திரும்பத் திரும்ப நிச்சலுடையோட குளத்தில் குதிக்க ....க்கதிகு....குதிக்க....க்கதிகு... குதிக்கவிட்டு வேடிக்கை பாத்துருக்க!) இப்போ கேமரா, திரைக்கதை, இயக்கம் போன்ற சில விஷயங்களையும் கவனிக்க தொடங்கிருக்கேன். எப்பவுமே தியேட்டர் சூழ்நிலையும் நல்லா கவனிப்பேன்.
எந்த எந்த தியேட்டர் எப்படி இருக்குதுன்னு கவனிக்கறது ஒரு காலத்துல என் ஹாபி. தியேட்டரெல்லாம் எவ்ளோ ரிஸ்க் எடுத்து ஓட்டுறாங்கனு புரிஞ்சங்களுக்கு தியேட்டர்ல கூட ரசிக்க விஷயங்கள் இருக்கு.
என் சின்ன வயசுல போன தியேட்ர்கள் நினைவிருக்கு.
தங்க ரீகல்- நான் இங்க பாத்த படம், Who am I? நான் பாத்த முதல் ஜாக்கி சான் படம். ஜாக்கி ஃபேன். ஆனா அடுத்து அந்த தியேட்டர்ல படம் பாக்கப் போல. போக முடியல, போயிருந்தாலும் வீட்டுக்கு எவனாவது போட்டு விட்டிருந்தா செருப்படிதான்! ஏன்னா ரொம்ப 'நல்ல' படங்கள் போடுற தியேட்டராயிடுச்சு. அவங்க என்ன பண்ணுவாங்க. நஷ்டமில்லாம ஓடக் கூடிய படம் இதுதான. ஆனா அப்பயும் அவங்க தரம் குறையலயே. எப்பவும் இங்கிலீஷ், ஹிந்தி பிட்டு படம்தான் போடுவாங்க. ஸ்கூல் படிக்கும் போதெல்லாம் எவனயாவது ஓட்டணும்னா, அவன் ஏன் நேத்து வரலன்னு கேக்கும் போது ""தங்க ரீகல் கிட்ட சுத்திட்டிருந்தான், சார்"னு கூட்டத்தில இருந்து கத்துவோம். இப்போ தியேட்டர் திரும்ப "வாரணம் ஆயிரம்", "sms"னு நல்லா ஏசியோட டெவலப் ஆயிட்டாலும் அந்த பேரக் கேக்கும் போது இருக்குற கிளுகிளுப்பு போகல. ஒரு காலத்தில எட்வர்ட் டவுன் ஹால்னு(எல்லா டவுன்லயும் கட்டுவாங்க) சொல்லப் படுற பிரிட்டிஷ் காலத்து கட்டிடத்தின் ஒரு பகுதி தான் அது.
சிந்தாமணி - இதுவும் ஒரு அறுபது வருச வரலாறு கொண்ட தியேட்டர் தான். கீழ, பால்கனின்னு வகைப்பாடு கொண்ட பழைய தியேட்டர். இங்க ஒரு வித்தியாசமான அமைப்பு என்னன்னா, பால்கனி கொஞ்சம் கீழ் வரிசைக்கு நேராகவும் நீண்டிருக்கும். அதைத் தாங்க சில தூண்கள் இருக்கும். இங்கதான் பிரச்சனையே. கடைசி நாலு வரிசையில் இருக்கறவனுக்கு சென்சார் கட் பண்ணாம்லே அங்க அங்க விட்டுத்தான் தெரியும். ஹீரோயின் நமீதா மாதிரி இருந்தா பரவாயில்ல! தூண் மறைக்கிற உருவமா அது! அப்படி இப்படின்னு பாத்துரலாம். ஆனா படம் கட் ஆவுமே. என் ஃபிரண்ட் சூர்யா முகத்தயே பாக்காம 'உன்னை நினைத்து' பாத்துட்டு வந்தான். ஆனா அவங்க DTS அடிச்சிக்க முடியாது. இப்போ இந்த தியேட்டர ஒரு ஜவுளி கடைக்கு வித்து மூடியாச்சு.
நியூ சினிமா - இந்த தியேட்டர் நான் சின்ன வயசுல இருந்தப்ப ஒரே ஒரு ரஜினி படம் போனது. அதுவும் பழைய படம். அதையும் புதுப் படம்னு நினைச்சு என் அண்ணனை படுத்தி போனேன். அது பழைய படம்னு பல வருஷங்களுக்கு பின்னாடிதான் தெரியும். அந்த படத்துக்கெல்லாம் போனத அவன் எப்படி தன் காலேஜ் பிரண்டு கிட்டலாம் மறைச்சானோ! இந்த தியேட்டரும் மூடப்பட்டது. நான் அதுக்குப் பக்கத்தில இருக்கற ஒரு இடத்துல ஹிந்தி படிச்சப்போ பாத்தேன் முழுக் காடாய் மாறிடுச்சு. இதே மாதிரி சிட்டி சினிமான்னு ஒண்ணு இருந்துச்சு. அதுவும் இப்போ கார் பார்க்கா ஆயிடுச்சு. இதுமாதிரி பல தியேட்டர்கள் மூடியாச்சு
மாப்பிள்ளை விநாயகர், ப்ரியா காம்ளக்ஸ்னு staantard தியேட்டர்களுக்கும் ஒரு லிஸ்டேயிருக்கு. என்னதான் சொன்னாலும் இன்னும் மதுரை தியேட்டர்களில ஒரு ஸ்டாண்டர்ட் வரல. இப்போ வந்திருக்கிற Relianceன் Big cinemas, புதுப்பிக்கப்பட்ட தங்கரீகல் எல்லாம்தான் தரம் உயர்தலுக்கான வித்து...............அப்படின்னு நினைச்சா இதெல்லாம் காண்பிச்சு விலை உயர்ந்தல்தான் ஹிட்டு(ரைமிங்... ஹி...ஹி..). இப்படி ரேட் கூடுறது, தரம் போன்ற பிரச்சனைகளுக்கு நடுவில தியேட்டர்கள் மூடுறது வேற நிறைய நடந்திருச்சு.
தமிழ்நாட்டுல ஒரு படத்தோட நிலைமைய முடிவு செய்யுறதே மதுரை நிலைமைய வச்சுதான். மதுரையில ஒரு படம் ஓடலைன, அது எங்கயும் உருப்படியா ஒடாது(தல ரித்தீஸ்க்கு மாட்டும் விதி விலக்கு 'நாயகன் சென்னையில 120 நாளுக்கு மேல ஓட்டுனீயளாமே?), இல்லன்னா ஆட்டைக்கே சேத்துக்கப் படாது.(அது எப்படி நாங்க நல்லா இல்லன்னு சொன்ன பிறகு நீ ஓட்டுறது. மதுரையில இருக்குற டெரர்லாம் தெரியும்ல!).
மதுரை சிட்டில(திரும்பவும் சொல்றேன், மதுரை சிட்டிதான். படத்த நம்பாதீங்க!) மற்றும் அதோட சுற்றுப் புறத்துல இருக்குற தியேட்டர்களும் சேத்து ஒரு காலத்துல 700 கிட்டத் தொட்டுச்சு. இப்போ எல்லாம் ஒழியுது. தமிழ்நாட்டுல தியேட்டரா இருக்கு? தியேட்டர்ல தரம் உயர்த்தனும்.
தியேட்டர்ல படம் பாக்குறதையே ஒரு அனுபவமா ஆக்கிட்டா எல்லாரும் வருவாங்க. ஒரு வகையில தியேட்டர்ல பாத்தா தான் நல்லா இருக்கு, டிவிடி இந்த அளவுக்கு நல்லா இருக்காதுங்கற அளவுக்கு தியேட்டர் வரணும்... முதல்ல அந்த அளவுக்கு படம் எடுக்கனும். இங்க டிவிடில பாக்குறதே தண்டம்னு சொல்ற மாதிரில இருக்கு! வில்லு மாதிரி வந்தா என்னங்க பண்றது, அதெல்லாம் டாப் டென் மூவிஸ்ல காட்டுற ஒரு சீனக் கூட பாக்க முடியல!
அது சரி இதுக்கு எதுக்கு நமீதாவுடைய பொய் விளம்பரம்? இதோ இப்படி கேள்வி கேக்கனும்னுதான். நமீதான்னா என்ன ஆர்வமா படிக்கறீங்க, அதுக்குதான். சும்மா ஒரு சோதனை முயற்சி!(அதுக்காக ஓட்டுல கை வச்சிராதீங்க, கடவுளே!) ஆனா ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும்னா, நமீதாவ நம்பியே சில நடிகர்களுக்கும், பல தியேட்டர்களுக்கும் பிழைப்பு நடந்து கொண்டிருக்கிறது. நல்லா யோசிச்சு சொல்லுங்க, இந்த மாதிரி எத்தன படம் இப்பொழுதைக்குள்ள நமீதாவ நம்பி ஓடிருக்கு!
இலக்கியம், கதை, கவிதை, உரைநடை, கல்வெட்டு, நாடகம், சினிமா, ப்ளாக் என பல வகையில நம்மல சுத்தி இருக்கு(நீயெல்லாம் இலக்கியத்தைப் பத்தி பேசுற? உன் லாங்க்வேஜ் மார்க்க சொல்லவா?). இதுபோல இன்னும் பல வகையான இலக்கியங்கள், பல வகையான ஊடகங்களில் நம்மல சுத்தி இருக்கு. ஆனா இதுவரைக்கும் கவனம் பெறாத சில இலக்கியங்கள் இருக்கு. அதுல ஒண்ணுதான் கழிவறை இலக்கியம். அங்கே காணப்படும் கருத்துக்கள் ஒவ்வொன்றும், 'இவன் பின்னாளில் பெரிய ஆளாக வருவான்'(இதெல்லாம் எங்க உருப்படப் போகுது?), எனத் தோன்ற வைக்கும். சில உதாரணங்கள்,
"இளைஞர்களே, இந்தியாவின் எதிர்காலம் உங்கள் கையில்.... (ஆமா, இவன் பெரிய விவேகானந்தர்... போடா....) "
"WIFE- wonderful Instrument For Enjoyment"
"மாணவர்களே, மேன்மேலும் தேர்ச்சி ஆகி காலேஜை விட்டுச் சென்றுவிட உங்களைப் போன்ற நன்றி கெட்டவன் இல்லை. நாங்கள் ரிப்பீட் வைத்துள்ளோம். மீண்டும் அடுத்த வருடமும் வந்து காலேஜை பத்திரமாக பாத்துக்குவோம்- இப்படிக்கு கல்லூரியின் செல்லப் பிள்ளைகள்"
"ஏண்டா இப்படி கிறுக்குறீங்க, அதுவும் பெண்களைப் பற்றி? உன் தங்கச்சின்னா இப்படி செய்வியா?", என பெண்களைப் பத்தி எழுதியத தட்டிக் கேட்க(எழுத), அதற்கு இன்னொருத்தன், "தைரியம் இருந்தா இத___ டிபார்ட்மெண்டுக்கு வந்து சொல்லிப் பாருடா, %&டு^^&*(#@%@!". இப்படியே பதிவுக்கு எதிர் பதிவு போடுற மாதிரி பேசிக்கிட்டே போவானுங்க!.
Urinal மேல் எழுதப்பட்டிருக்கும் வாசகம்.
"உங்கள் எதிர்காலம் இப்பொழுது உங்கள் கையில்(?!)(கையில அப்போ எதிர்காலம்(ஒருவேளை....) எதுவும் இருக்கறதா தெரியலயே?!)"
காலேஜ் டாய்லெட்ல ஒருத்தன் கவிதை எழுதிருந்தான் பாருங்க.... அட,அட அத கீழ கொடுத்திருக்கேன். அது என்ன, யாருடையதுன்னு யூகிச்சுப் பாருங்க.
"மண்காட்டி பொன்காட்டி மாயஇருள் காட்டி
செங்காட்டில் ஆடுகின்ற தேசிகனை போற்றாமல்
கண்காட்டும் வேசியர்தம் கண்வலையில் சிக்கிமிக
அங்காடி நாய் போல அலைந்தனையே நெஞ்சமே"
அது யாருன்னு தெரியுதா? பட்டினத்தார் பாட்டுங்க. என்ன இலக்கிய உணர்ச்சி! என்னே கருத்துச் செறிவு! இதுக்கு கீழ niceனு ஒரு கமெண்ட் வேற.எனக்கும் பிடிச்சாலும் அது என்ன pappuவோட ப்ளாக்கா, கமெண்ட் போட? கரெக்டா சொல்லனும்னா, சிவன விட்டுட்டு பெண், செல்வம் பின்னாடி நாய் மாதிரி சுத்துறியே, நாயேன்னு தன் மனசப் பாத்து கேட்டுகிறாரு.செலவத்தையோ, பொண்ணயோ தேடாம சிவனத் தேடுன்னு சொல்றாங்க. (இந்த வெண்ணைய அன்னைக்கு ப்ரியா பின்னாடி பாத்தேனே! டேய் கொய்யா...). ஒரு சரக்கு இருக்கு, அதையும் பாத்துருங்க.
"பெண்ணை நம்பிப் பிறக்கும் போதே தொப்புள் கொடிகள் அறுபடுமே, கேளடா... மானிடா... "
இது மாதிரியா போகுது அந்த கவிதை.இது நம்ம உலகநாயகனோடது. ஆளவந்தான்ல மொட்ட கமல் ஜெயில்குள்ள இருந்து சொல்லுவார்.
இன்னொரு கவிஞர் 'நான் கடவுள்'ன்ற புனைப் பெயர்ல எழுதினதயும் பாத்துருங்க! (இவனுங்கள எல்லாம் அகோரிய விட்டுத்தான் போட்டுத் தள்ளனும்)
"கண்ணென்றும் மூக்கென்றும் காதென்றும் - உன்
கண்ணெதிரே மாதென்று சொல்லிவரும் மாயைதன்னை
எமன்விட்ட தூது என்று எண்ணாமல் சுகம் என்று
நாடும் துர்புத்தியை ஏதென்று எடுத்துரைப்பேன்"
(கண்டிப்பா இது அவனோடது இல்ல, பட்டினத்தாராத்தான்ன் இருக்கனும்)
இதுவும் பொண்ணுங்களப் பாத்து ஏன் பயப்படுற மாதிரியே எழுதறானுங்க? ஹோமோசெக்ஷுவல்சோ, கேர்ள் பிரண்டு கிடைக்காதவனோ தான் இந்த மாதிரி கழிப்பறை இலக்கியத்தின் சிறந்த எழுத்தாளர்களா ஆவாங்களோ? ஆனா இந்த மாதிரி நாயிங்கதான் பொண்னுங்கள டீஸ் பண்ணுற மட்டமான வேலைகளில் ஈடுபடுவானுங்க!என்ன கருமமோ!
பேட்மேனுக்கு அவர் symbol எல்லாத்துலயும் போடுவாங்க. இதுல போடுவாளோ, போட்டுடாளே!
இதே போல ரயிலிலும் உண்டு. அங்கேயும் கழிப்பறையில் தனது கட்சிக் கொள்கையை பிரசங்கிப்பவனும், தேர்தல் அறிக்கையை பிரகடனப்படுத்துபவனும், ஆண்,பெண் குறிகளை அளவில்லாத ஆர்வத்துடன் ஆராய்ச்சி செய்பவனும், அதை அங்கே செதுக்க முற்படுபவனையும் நல்லாவே பாக்க முடியும். மனசுல மைக்கலேஞ்சலோனு நினைப்பு, செதுக்குறானாம். இவனுங்களுக்கெல்லாம் 'விக்ரம்' படத்தில கமல் சொன்ன மாதிரி(விக்ரம் படத்தில கமல் எப்டி வருவாருன்னு கேக்காம கவனிங்க!) ஒரு ட்ரீட்மெண்டை செய்ய வேண்டியதுதான். அது என்னன்னு சொல்லமுடியாது. ஏற்கனவே ஆபாசம்னு சொல்லிருவாங்கனு பயப்படுறேன், அதச் சொன்னா எல்லாரும் ஒதுக்கி வச்சிரப்போறாங்க. நா இப்போதாங்க வளரும் ப்ளாக்கர்.
அப்புறம் இன்னொரு வகை லூசுங்க இருக்கானுங்க. ரயிலில அவனுங்க காதலுக்கு சாசனத்தைப் பொறிச்சுக்கிட்டு இருப்பானுங்க. இந்த மன்மதன் அந்த ரதியோட பேர சாவியால செதுக்கி நடுவுல ஹார்ட் போட்டு உள்ள அம்பு உடுவானுங்க. இந்த மாதிரி கேசுகளில் பல கண்டிப்பாக ரிடர்ன் வரும்போது 'சரோஜா' பிரேம்ஜி மாதிரி வேற ஒருத்திய சுத்தி தேவதைகள சுத்த விட்டுட்டு இருப்பானுங்க. அவளுக்கு ஒரு கல்வெட்டு வரும்போது (திரும்பவுமாஆஆஆ!)(க்க்ர்ர்ர்ர்ர்....) .
பாத்தீங்களா, இந்த மாதிரி ஆசாமிகளுக்கெல்லாம் ஊரிலுள்ள எல்லா கழிப்பறைகளிலும் ஒரு சிலை வைத்து அங்கீகாரம் அளிக்க வேண்டும். கழிப்பறைகளுக்கு அவங்க பேர வச்சு, போர்டு பக்கத்தில அவங்க போட்டோ போட்டுட வேண்டியதான். அவங்களுக்காக சாகித்ய அகாதமில ஒரு புது பிரிவு துவங்க வேண்டிய கடமை நமக்கு இருக்கு.பின்ன, ஊர்ல எல்லா கலைஞர்களையும் மதிக்கிற நாம இவங்கள மட்டும் புறக்கணிச்சா காலம் நம்மை மன்னிக்காது. இதை நாம கவனிக்கலைனா இந்தக் கலை அழிந்துவிடக்கூடும். அதனால நலிவுற்றோர் சன்மானத்தொகைய பரிந்துரை செய்கிறேன்.
ஒரு கழிப்பறை இலக்கிய எழுத்தாளர்.
இதையெல்லாம் அனுமதிக்குது பாருங்க நம்ம நாடு ...... வாழ்க ஜனநாயகம்!!!!
இத இப்படியே விட்டரலாம்தான். ஆனா போதுமான சேம் ப்ளட் வரலயே. அதனால ஒரு ஜோக்(நீயெல்லாம் பதிவெழுதுறதே ஒரு ஜோக் தான்). ஒருத்தன் டாய்லெட்ல உக்காந்துருக்கான், வெஸ்டர்ன்ங்க. இப்பொ அவன் கஷ்டத்தை அவன் வாயாலயே கேப்போம் (அவன் அங்க முக்குறதையா?). நான் உக்காந்திருந்த போது பக்கத்து ஸ்டாலிலிருந்து குரல், "எப்படி இருக்கீங்க?". பொதுவா டாய்லட்ல வந்து நட்புறவு உரையாடல் ஆரம்பிக்கிறவன் இல்ல. ஆனாலும், நல்லாதான் இருக்கேன்னு சொல்லி சமாளிச்சேன்.
"எங்க போறீங்க?'
(டாய்லெட்லருந்து விண்வெளிக்கா போகபோறேன்.என்னமாவது சொல்லனுமே.)
"உங்கள மாதிரிதாங்க, சென்னைக்கு)"
"அங்க என்ன பண்ணலாம்னு இருக்கீங்க? நான் வேணா உங்களோட வரவா?"
(அவனா நீயு? be careful, என்னைய சொன்னேன்)
"இல்லீங்க. இன்னைக்கு எனக்கு வேற ஒருத்தர் வரேன்னு சொல்லிட்டாரு. அதனால் உங்களோட வர சான்ஸ் இல்ல."
உடனே அவன் பதறின குரலில், "இங்க பாரு, உன் கிட்ட பேசுறதுக்கெல்லாம் இங்க ஒரு நாதேரி பதில் சொல்லி கொல்லுறான். அவன் என்ன 'கேட்டகரி'ன்னு வேற தெரியல."
இதுக்கும் ப்ளட் வரலைனா கீழ இருக்குறதுதான் உங்களுக்கு ப்ளட் வர ஒரே வழி!