Showing posts with label நகைசுவை. Show all posts
Showing posts with label நகைசுவை. Show all posts

ஹாரி பாட்டரும் மாயாபஜாரும்

Filed under , , , by Prabhu on 12/06/2009 12:33:00 AM

24




ஒரு தடவ சென்னை வந்திருந்தாங்க J.KRowling. அப்போ அவங்களுக்கு ஒரு கதை எழுதுற ஐடியா வந்திருந்ததே தவிர பேரு கூட முடிவு செய்யல. பொழுது போகாமல் ஹோட்டல் டிவி ரிமோட்டுக்கு உடல் நோவோ என்னவோ அந்த அமுக்கு அமுக்கி விட்டு கொண்டியிருந்தார்.  அந்த யோசனையுடன் சும்மா சானல் விட்டு சானல் ரிமோட் குரங்கு தாவும் பொழுது ஒரு காட்சி கவர்ந்துவிட்டது அவரை. அதன் கிராஃபிக்ஸால் பிரமித்து போன அவர் அதைத் தழுவி ஒரு கதை எழுதுனாங்க. அதில் அந்தப் படத்தில் இருந்து ஒரு சில காட்சிகளை சுட்டு  வச்சுகிட்டாங்க. கண்ணாடி ஒன்று Harry Potter ல்  'The Mirror of Erised' (desire பின்னாலிருந்து erised)  என்று ஒரு முக்கியமான, சுவாரஸ்யமான விஷயமாக கதையில் (முதல் பாகம்) காட்டப்பட்டிருக்கும். நாம் ஆசைபட்டதைக் காட்டும். இந்த கண்ணாடியை 60 வருடங்களுக்கு முன்னால் நம்ம ஊரு படத்தில் காட்டியிருக்கிறார்கள்.



‘மாயா பஜார்’ என்ற படமொன்று 1957ல் கருப்பு வெள்ளையில் வந்தது. தெலுங்கர்கள் எடுத்த இந்த படம் தமிழில் ரீமேக் செய்யப் பட்டு அடுத்த மாதம் தமிழ் நாட்டில் வெளிவந்து சக்கை போடு போட்டது வரலாறு.  அதுவே ஆங்கிலத்தில் ‘ஹாரி பாட்டராக’ உரு பெற்றிருக்கிறது. அந்தப் படத்தில் இந்த கண்ணாடி போன்ற ஒரு விஷயத்தை பயன்படுத்தியிருப்பார்கள்.

அப்புறம் அந்த கடோத்கஜன் சாப்பிடும் காட்சியெல்லாம் நாம் மறக்க கூடிய விஷயமா? எல்லாம் அந்த காலத்திலே அதிகப்படியான கிராஃபிக்ஸ் காட்சிகள், State of the art என்று சொல்வார்களே, அது போல. அந்த கண்ணாடி மேடர சுட்டது போதாதுன்னு ரங்காராவ் ‘கல்யாண சமையல் சாதம்’ சாப்பிடும் முறைய காப்பி அடிச்சு அவங்க மொழிக்கு மாற்றும் போது அடையாளம் தெரியாமல் இருக்க லத்தின் மொழியில் 'Wingardium Leviosa', 'Liberocorpus' எனக் கூறி பொருட்களைப் பறக்கவிட்ட போது லவட்டினது நம்ம கோவணத்த தான் என்பது கூட தெரியாமல் வாயில் ஈ முட்டை போட இடம் கொடுத்து உட்கார்ந்துகிட்டு கை தட்டிகிட்டு இருக்கோம்.

(தெலுங்குப் பதிப்பே கிடைத்தது. தமிழில் கிடைக்கவில்லை. கிடைத்தால் சொல்லுங்க. எனக்கு பிடித்த பாட்டு. ஃபுல் மீல்ஸ் எஃபக்ட்.)


நம்ம கதையில் கிருஷ்ணர்தான் எல்லாமே தெரிந்தவர். என்னவெல்லாம் நடக்கும்னு  தெரிஞ்சுகிட்டு அதற்கேற்றாற் போல மற்றவர்களை இயங்க வைப்பார். ஒரு சில சமயங்களில் ஏன் இப்படி பண்றாருன்னு கூட இருக்கவங்களே வெறுத்தாலும் நம்பிக்கைக்குரியவர். கிருஷ்ணருக்கு இன்னொரு பேரு தாமோதர்னு தெரிஞ்சா ’Albus Dumbledore’ பத்தி உங்களுக்கு விளக்கத் தேவையில்லை.

கம்ஸன் பொதுவா நல்லவன்தான். ஆனால் தங்கையோட மகனால சாவு என அசரீரியால் தெரிந்த பிறகு அதை தடுக்கிற முயற்சியில் கெட்டவனாகிப் போய் அவர் கையால் சாகிறான். மூடிகிட்டு அவன் பாட்டுக்கு இருந்திருந்தா எந்தப் பிரச்சனையும் வந்திருக்காது. அரைகுறையாக கேட்ட தீர்க்கதரிசனத்த வச்சு தனக்கு சாவு ஹாரி கையால எனக் குருட்டுத்தனமாக முடிவு செஞ்சு செத்தத படிச்சவங்க மறந்திருக்க முடியாது. இப்படியெல்லாம் இங்கிருந்து கொண்டு போன சரக்கை மறைக்க அவங்க கலாச்சாரத்த கொண்டு மழுங்கடிச்சது மட்டுமில்லாமல் இந்திய கதாபாத்திரங்கள் இரண்டை கேவலமாகப் படைத்திருக்கிறார்.

இதற்கு மேலும் என்னால் பல விஷயங்கள் கூற இயலும். ஆனால் அதையெல்லாம் தக்க ஆதாரங்களுடன்  விரைவில் சுப்பிரமணிய சுவாமியை சந்திக்க உள்ளேன்.





பின்குறிப்பு - அடுத்து நமது குழந்தைகள் படமான ‘கந்தசாமி’யை உல்டா செய்து அவர்கள் ஊர் குழந்தைகளுக்கு ஏற்றாற் போல வெளியிட்டு நம்மையும் ஏமாற்றிட உள்ளதாக நாம் அறிகிறோம். இது போன்ற காரியங்களை இதற்கு மேலும் நடக்காமல் தடுக்க தாக்கரே, ஆர்.எஸ்.எஸ்., வி.ஹெச்.பி., ராமதாஸ் போன்ற நம் கலாச்சாரத்தை கழிவறையில் சுருட்டி வைத்து காப்பாற்றும் (பயன்படுத்தும்) காவலர்களை அழைக்கிறேன். இது மேற்கத்திய ஏகாதிபத்தியத்திற்கு எதிரான அறைகூவல்!

நகைச்சுவை (அட, மெய்யாலுமே தான்)

Filed under , by Prabhu on 6/02/2009 10:16:00 PM

0

நகைச்சுவை சொல்றதா சொல்லி போன இடுகையில மொக்கய பத்தி மொக்கய போட்டுடதா நினைக்கலாம். ஆனா என்ன செய்றது, i got carried away (எங்க தூக்கிட்டு போனாங்கன்னு மொக்க மொழிபெயர்ப்பு கூடாது). NO, இனிமேல் இந்த இடுகையில மொக்கன்ற வார்த்தை வரக்கூடாது. ச்ச்ச.... இப்போ வந்துருச்சு, இனிமேல..... வரா....துனு சொல்ல வந்தேன். மேற்கொண்டு மொ...(பார்றா!) இது சரிப்படாது, ஒன்றிரண்டு நகைச்சுவை சொல்லிட்டு போயிடறேன்.

புகழ்பெற்ற துப்பறியும் ஓநாய் (உலகத்தில நிறைய சிங்கம் இருந்தா நல்லாவா இருக்கும்) ஷெர்லாக் ஹோம்ஸ் பற்றி கேள்வி பட்டிருப்பீங்க. அவருடைய அஸிஸ்டண்ட், டாக்டர் வாட்ஸன். இவர் சொல்ற மாதிரிதான் (narration) கதை எப்பொழுதும் நம் முன் விரியும். இப்போ அவர் வாயிலயே கேட்போமே........

ஒருநாள் நானும் ஷெர்லாக்கும் மொட்டை மாடில தூங்கிட்டிருந்த போது யாரோ என்னை உலுக்கியது போன்ற உணர்வு, விழித்தேன். ஷெர்லாக் தான்!
"என்ன இந்த வேளையில் ஷெர்லாக்?"
"வாட்ஸன், மேலே பாருங்க. என்ன தெரியுது உங்களுக்கு?"
"இரவாயிடுச்சுன்னு தெரியுது. போய் படுங்க. வர வர உங்க ஆராய்ச்சிக்கு அளவில்லாம போய்ட்டு இருக்கு"
"இல்லை, கோவப்படாதீங்க. இதுல விஷயமிருக்கு. நல்லா பாத்து சொல்லுங்க"
நான் நன்றாக பார்த்துவிட்டு, " இந்த நட்சத்திரத்தையெல்லாம் பார்க்கும் போது இறைவனின் படைப்பு அழகானதுன்னு தெரியுது"
"இன்னும் நல்லா பாரு"
"நிலவ பார்க்கும் போது மணி மூணாகுதுன்னு தெரியுது"
"வேற?"
"வேற....ம்.... ஒன்னும் தெரியலையே"
"முட்டாளே! நம்ம கூரைய எவனோ தூக்கிட்டு போய்ட்டான். அது எப்படா உன் கண்ணுக்கு தெரியும்?"
இது பிரிட்டன் நாட்டு நகைச்சுவை.

அடுத்தது ஆஸ்திரேலியா.....
ரெண்டு பேர் கோல்ப் விளையாடிட்டு இருந்தாங்க. பேசி சிரிச்சிக்கிட்டு விளையாடிட்டே இருந்ததுல அரை நாள் ஒடிடுச்சு. அப்போ அந்தப் பக்கமா ஒரு இறுதி ஊர்வலம். உடனே அதிலொருவன் தொப்பியை கழற்றி கண்கள் மூடி மரியாதை செய்தான். இதை கண்ட மற்றவன் ஊர்வலம் போனபின் தொப்பியை மாட்டிக்கொண்டிருந்தவனிடம், "நீ இவ்ளோ தூரம் ஒரு இறுதி ஊர்வலத்துக்கு மரியாதை குடுக்கறத பார்க்கும் போது பெருமையா இருக்கு". அதுக்கு அவன், "இதுல என்ன இருக்கு. முப்பது வருஷமா என்னோடகுடும்பம் நடத்துனவளுக்கு இது கூட செய்யலேனா எப்படி?" னு சொன்னானாம்.

இதெல்லாம் தூக்கி சாப்டுடும் நம்ம ஊர் ஜோக்.
வெங்கடேஷ்,அஜய் இருவருமே இளம் இஸ்ரோ விஞ்ஞானிகள். ரெண்டு பேரும் தண்ணி அடிக்கணும்னு முடிவு பண்ணிட்டானுக. இஸ்ரோல இருந்து பப் ரொம்ப தூரம். போகவும் நேரமில்ல. உடனே விமான எரிபொருள் வொயிட் பெட்ரோல அடிச்சிரலாம்னு முடிவும் பண்ணிட்டாங்க. அடிச்ச போதையில தட்டுத் தடுமாறி அவனவன் ரூம்க்கு போய் மட்டை ஆயிட்டானுக. காலையில வெங்கடேஷுக்கு போன், எதிர்முனையில அஜய். "டேய் அஜய், இந்நேரத்துல என்னடா போன்?"
"சும்மா தான், நீ காலையில போறதெல்லாம் போயாச்சா?"
"இல்லடா, இனிமேதான்."
எதிரில் பதறிய குரலில் அவன், "போயிடாதடா, நான் இப்போ அமெரிக்காவில இருந்து பேசுறேன்.?

நகைச்சுவை (கண்டிப்பாக மொக்கை அல்ல)

Filed under , by Prabhu on 6/02/2009 10:15:00 PM

0

போன ப்ளாகில மொக்கய பத்தி பார்த்தோம். இப்போ நகைச்சுவை கொஞ்சம் பார்ப்போம். அதுக்கு முன்னாடி மொக்கயோட மூலம்(உங்க பிண்ணனில வர்றது இல்லீங்க!.. வார்த்தையோட origin) என்னன்னு தோண்டி பாத்துருவோம். மொக்கன்ற வார்த்தை சில பல காலத்துக்கு முன்னாடி எங்கள் வீடுகளில் வழங்கி வந்த அர்தத்தைக் கேட்டா ஆச்சரியப்படுவீங்க. இங்க தெக்க அதுக்கு (அளவில) பெரிசுன்னுதான் அர்த்தம், ஒரு காலத்தில. அதுவும் ஒரு சில சமூகங்களில் அது ரொம்ப சகஜமா புழங்கி வந்த வார்த்தை. இப்போ என்னடானா திடீர்னு அதோட அர்த்தமே மாறிடுச்சு.

இதுக்கெல்லாம் காரணம், சென்னை தமி'ல'ர்களே காரணம் என கூறிக் கொள்கிறேன். தமிழைக் கொலை செய்வது அவர்கள் பொழுதுபோக்கோ என்னவோ (கேபிள் சங்கர், பரிசில்க்காரன் போன்றோர் படிக்க நேர்ந்தால் இச்சிறுவனை பொறுத்துக் கொள்வார்களாக) ஆனால் நான் சொல்வது உண்மையென தெரிய நீங்க சென்னைவாசியா இருக்கும்பட்சத்தில் கொஞசம் மதுரைக்கு வந்து பாத்துட்டு போங்க. அடுத்தவனுக்கு மரியாதை கொடுக்கும் சில விகுதிகளை உங்கள் அகராதி தொலைத்து விட்டதை உணரமுடியும் (இது சாம்பிள்தான் பாஸ்). பஸ்சில் சீட்டு கிழிப்பவர்(கண்டக்டர்) கூட எல்லாத்தையும் பாத்து கேக்க 'டிக்கட் எடுத்தீங்களா', 'டிக்கட் எடுத்தாச்சா'னு கேட்ப்பாரே தவிர ஒருவனைக் கேக்கும்போது கூட டிக்கட் எடுத்தியானு சென்னைக்காரங்க மாதிரி ஏக வசனத்தில கேக்கறதில்ல. சென்னைல கடைக்கு வந்தவன் கிழவனா இருந்தாலும் ஏக வசனமே தொடர்கிறது. சவுத்தில இருந்து போய் சென்னைவாசியான யாருக்காவது இதேபோல தோணிருக்கா?

வந்துடான்டா தமிழை காப்பாத்த என நீங்க பொலம்புறது புரியுது. நான் அந்த மாதிரியும் இல்ல என்பதை எனது முந்தைய ப்ளாக்('தலைப்பு'- அட, தலைப்பே 'தலைப்பு'தாங்க) விளக்க இயலும். நான் பிறமொழிச் சொற்க்களையே ஏற்றுக் கொள்வது பற்றி சொல்லிருந்தேன்.ரெண்டு பதிவையும் சேர்த்து பார்த்தா, தேவையான மாற்றங்களை ஏற்றும், தேவையில்லா மாற்றங்களைத் தவிர்த்தும் வந்தா தமிழ் ஈஸியா முன்னேறும். பயப்படவேத் தேவையில்ல.

மொக்கயப் பத்தி சொல்லி முடிச்சிர்றேன் (அடங்கமாட்டயா?). இதுமாதிரி சமீபத்தில தான் (ஒரு சில வருஷங்கள்) மொக்கயோட அர்த்தம் மாறிடுச்சு. டைட்டானிக் மொக்க (பெரிய) படம்னு சொன்னா, ' ஆமா, மூணு மணி நேரம், பதினாலு நிமிஷம்'னு சொல்வானுக. இப்போ அதையே சொன்னா அந்த படத்த மொக்கனுசொல்றயானு அடிக்க வர்ரானுங்க(உண்மையில அந்த படத்தில ஜாக் சாகலைனா அது காதல் காவியம் ஆகாம, அட்வென்சர் படம் ஆயிருக்கும்!). என்ன கொடுமை, சரவணன்!!!!!

நகைச்சுவைனு சொல்ட்டு கடைசி வரை மொக்கய போட்டுட்டு போறயேடா ன்னு கேக்குறது புரியுது. அடுத்த ப்ளாக்கில கண்டிப்பாக எழுதுறேன். ஒரு சின்ன காம்ப்பன்சேஷன் (தமிழ்ல என்ன?.....ஈடு?).


"நீ எப்படி இந்த மாதிரியெல்லாம் அறுவை ஜோக் சொல்ற?" எனக் கேட்டதுக்கு அவன், "டெய்லி ஒரு பிளேடு சாப்டு, நீ கூட சொல்லாம்" னு சொன்னானாம்.


இதை மொக்கனு சொல்வீங்க. பத்து வருஷத்துக்கு முன்னாடி இது கடி ஜோக். ... ஒண்ணு தாங்க இன்னொன்ணா மாறுது!!!!!

இந்த மாதிரி ஜோக்கில் சுஜாதாவின் வசந்த்த மிஞ்ச ஆள் கிடயாது. கடைசி வரை மனுசன் அந்த மெக்சிக்கோ சலவைக்காரி ஜோக் சொல்லாம போயிட்டாரு.

மொக்கை (அ) பின் நவீனத்துவம்

Filed under , , , by Prabhu on 6/02/2009 10:14:00 PM

0

இதுக்கு முந்தின பதிவ பாத்துட்டு என்னடா சுத்த தமிழ்ல எழுதி கொல்றானேனு நினைக்கத் தேவையில்லை. அதெல்லாம் முதல் பதிவு, அதுவும் தமிழ் பற்றின பதிவுனு அப்படி எழுதினேன். இப்போ கொஞ்சம் கேஷுவலா பேசிக்கலாம். பதிவர் பரிசில்காரன் ஒரு பதிவு சில நாட்கள் முன்பு எழுதி இருந்தார், 'பின்நவீனத்துவ பித்தனானேன்.' என்ற தலைப்பில். அது வரை அப்படினா என்னவொ ஏதோனு இருந்தேன். "எதுக்கும் அடங்காத, இப்படித்தான் இருக்கும்னு சொல்லமுடியாத எழுத்துதான் பின்நவீனத்துவம்"-அப்படினு சொல்லிருந்தாரு. வடிவேலு சொன்ன மாதிரி ஒரு கட்டுக்கடங்காத காட்டெருமையா எழுதனுமோனு நினைத்த போது
"நீங்க வழக்கமா ஹீரோ என்ன செய்யணும்னு நெனைக்கறீங்களோ அதை அவன் செய்ய மாட்டான். அப்போ அது பின்நவீனத்துவப் படமாகுது" னு சொன்னப்ப தான் பல விஷயங்கள் தோணுச்சு.

முதல் விஷயம், இப்படி சீரியசா பேசும் போது திடீர்னு ஒருத்தன் எதிர்பாராதத சொல்லும் போது அது பின்நவீனத்துவமோ என்னவோ, என் அறிவுக்கு எட்டின வரை அது சுத்தமான, கலப்படம் இல்லாத அக்மார்க் மொக்கைனு சொல்வேன். உதாரண்த்திற்கு, "டேய் மச்சான், உன் கிட்ட ஒன்னு சொல்லணும்டா சொன்னான். சொல்றா மாப்ளனு சொன்னேன். காத குடுடா, ரகசியம்னு சொன்னான்" (காத குடுத்துட்டு நீ என்ன பண்ணுவனு எனக்கே மொக்க போடகூடாது). நானும் கேனைப் பய மாதிரி காத தீட்டிகிட்டு உக்காந்தா "நாட்டாமை தம்பி பசுபதி டீச்சர வச்சிருக்காந்டோஓஓஓஒய்ய்ய்" எனப் பெருசா கூவுறான். எனக்கு வெறி ஏறிக்கிட்டு இருந்த போதே பக்கத்தில இருக்கிறவன் அவன் கன்னத்தில பளீர்னு ஒண்ணு விட்டான், "ஏண்டா மொன்ன நாயே, முன்னாடி பாடம் நடத்துறேன்னு அவன் போடுற மொக்கை போதாதுனு நீ வேறயா?". இவனோட முழுமுதல் கொள்கை அடுத்தவன வெறுப்பேத்தி, கொலைவெறியனா ஆக்குறது. இத சொல்லிட்டு இந்த காதில இருந்து அந்த காது வரை 'ஈஈஈ'னு சிரிப்பு வேற.இது ஒரு வகை மொக்கை.

அட, இது பரவாயில்ல, இன்னொரு டைப் இருக்கு. முதல் டைப் ஆள அடிச்சு ஆறுதல் அடைஞ்சிடலாம். இரண்டாவது ஆசாமி மெல்லவும் முடியாம, முழுங்கவும் முடியாம, போன வார அல்வா மாதிரி சவ,சவன்னு சாவடிப்பானுக. சென்னை போனப்போ, தியேட்டர் கவுண்டரில் நின்னுகிட்டு ஆந்திர சாப்பாட்டோட காரத்தை பத்தி கஸினோட பேசிட்டிருந்தேன் (அப்ப ஆந்திர பொண்ண சைட் கூட அடிச்சதில்ல, என் நேரம் பேசித்தொலஞ்சிடேன்.) அப்போ பக்கதில இருந்த ஒரு "ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிகாம்ணி" பிடிச்சுகிட்டாரு. "ஆந்திரா புட் பாதிங்கனா...." அப்படி ஆரம்பிச்சவந்தான்.. .. "ம்ஹூம்....இவன் நிறுத்த மாட்டான். டேய், கவுண்டர திறங்கடானு" என் கஸின் கத்துறான். "பொறுங்க தம்பி திறப்பாங்க, நிதானமா இருக்கனும்" இது அந்த சிகாமணி. "டேய், மப்பில மொக்க போடுறவனெல்லாம் என்ன நிதானமா இருக்க சொல்றான்னா, அதுக்கு நீயும் உன் ஆந்திர சாப்பாடும் தாண்டா காரணம்னு" இந்தப்பக்கம் இவன் முறைக்கிறான். அந்த மொக்கயோ, நீ பொழப்புக்கு மொக்க, நா பொற்ந்ததிலிருந்தே மொக்கன்ற ரேஞ்சுக்கு போய்டிருக்கான். கடவுளோட அருளால கவுண்டர் திறந்து டிக்கட் வாங்கிட்டு உள்ள ஒடினா, அந்த இருட்லயும் எங்கள கண்டுபிடிச்சு, 'தம்பி இதோ வரேன்னு' சொன்னவனுக்கு கடுக்காய் குடுத்து எஸ்கேப் ஆவுறதுக்குல்ல, யம்மா....... அதுக்கப்புறம் இடைவேளை வரை என்னிடம் பேசவே இல்லை, என்னோட கஸின்.

இவ்வாறு மொக்கை மாணவ(காமெடி) மொக்கை, ஆசிரிய(சீரியஸ்) மொக்கை என இரு கூறுகளாக வகைப்படுத்த்ப்படுகிறது.


அந்தப் படம் என்னனு சொல்லலையே, ரன்.