Showing posts with label மொக்ஸ். Show all posts
Showing posts with label மொக்ஸ். Show all posts

கழிப்பறை இலக்கியம்

Filed under , , , by Prabhu on 11/21/2010 07:58:00 AM

8

முந்தா நேத்து ‘உலக கழிப்பறை நாளாமே?” பதிவு எழுதவோ படிக்கவோ நேரமே கிடைக்கல.அதான் இது ஒரு பழைய ரிப்பீட்டு.முன்ன இதுக்கு ஒரு ரெண்டாம் பாகம் வச்சிருந்தேன். மறந்து போச்சு :(

இலக்கியம், கதை, கவிதை, உரைநடை, கல்வெட்டு, நாடகம், சினிமா, ப்ளாக் என பல வகையில நம்மல சுத்தி இருக்கு. இதுபோல இன்னும் பல வகையான இலக்கியங்கள், பல வகையான ஊடகங்களில் நம்மல சுத்தி இருக்கு. ஆனா இதுவரைக்கும் கவனம் பெறாத சில இலக்கியங்கள் இருக்கு. அதுல ஒண்ணுதான் கழிவறை இலக்கியம். அங்கே காணப்படும் கருத்துக்கள் ஒவ்வொன்றும், 'இவன் பின்னாளில் பெரிய ஆளாக வருவான்'(இதெல்லாம் எங்க உருப்படப் போகுது?), எனத் தோன்ற வைக்கும். சில உதாரணங்கள்,

"இளைஞர்களே, இந்தியாவின் எதிர்காலம் உங்கள் கையில்...."

"WIFE- wonderful Instrument For Enjoyment"

"மாணவர்களே, மேன்மேலும் தேர்ச்சி ஆகி காலேஜை விட்டுச் சென்றுவிட உங்களைப் போன்ற நன்றி கெட்டவன் இல்லை. நாங்கள் ரிப்பீட் வைத்துள்ளோம். மீண்டும் அடுத்த வருடமும் வந்து காலேஜை பத்திரமாக பாத்துக்குவோம்- இப்படிக்கு கல்லூரியின் செல்லப் பிள்ளைகள்"

"ஏண்டா இப்படி கிறுக்குறீங்க, அதுவும் பெண்களைப் பற்றி? உன் தங்கச்சின்னா இப்படி செய்வியா?", என பெண்களைப் பத்தி எழுதியத தட்டிக் கேட்க(எழுத), அதற்கு இன்னொருத்தன், "தைரியம் இருந்தா இத___ டிபார்ட்மெண்டுக்கு வந்து சொல்லிப் பாருடா, %&டு^^&*(#@%@!". இப்படியே பதிவுக்கு எதிர் பதிவு போடுற மாதிரி பேசிக்கிட்டே போவானுங்க!.

Urinal மேல் எழுதப்பட்டிருக்கும் வாசகம்.
"உங்கள் எதிர்காலம் இப்பொழுது உங்கள் கையில்(?!)(கையில அப்போ எதிர்காலம்(ஒருவேளை....) எதுவும் இருக்கறதா தெரியலயே?!)"


காலேஜ் டாய்லெட்ல ஒருத்தன் கவிதை எழுதிருந்தான் பாருங்க.... அட,அட அத கீழ கொடுத்திருக்கேன். அது என்ன, யாருடையதுன்னு யூகிச்சுப் பாருங்க.

"மண்காட்டி பொன்காட்டி மாயஇருள் காட்டி
செங்காட்டில் ஆடுகின்ற தேசிகனை போற்றாமல்
கண்காட்டும் வேசியர்தம் கண்வலையில் சிக்கிமிக
அங்காடி நாய் போல அலைந்தனையே நெஞ்சமே"


அது யாருன்னு தெரியுதா? பட்டினத்தார் பாட்டுங்க. என்ன இலக்கிய உணர்ச்சி! என்னே கருத்துச் செறிவு! இதுக்கு கீழ niceனு ஒரு கமெண்ட் வேற.எனக்கும் பிடிச்சாலும் அது என்ன pappuவோட ப்ளாக்கா, கமெண்ட் போட? கரெக்டா சொல்லனும்னா, சிவன விட்டுட்டு பெண், செல்வம் பின்னாடி நாய் மாதிரி சுத்துறியே, நாயேன்னு தன் மனசப் பாத்து கேட்டுகிறாரு.செலவத்தையோ, பொண்ணயோ தேடாம சிவனத் தேடுன்னு சொல்றாங்க. (இந்த வெண்ணைய அன்னைக்கு ப்ரியா பின்னாடி பாத்தேனே! டேய் கொய்யா...). ஒரு சரக்கு இருக்கு, அதையும் பாத்துருங்க.

"பெண்ணை நம்பிப் பிறக்கும் போதே தொப்புள் கொடிகள் அறுபடுமே, கேளடா... மானிடா... "

இது மாதிரியா போகுது அந்த கவிதை.இது நம்ம உலகநாயகனோடது. ஆளவந்தான்ல மொட்ட கமல் ஜெயில்குள்ள இருந்து சொல்லுவார்.

இன்னொரு கவிஞர் 'நான் கடவுள்'ன்ற புனைப் பெயர்ல எழுதினதயும் பாத்துருங்க! (இவனுங்கள எல்லாம் அகோரிய விட்டுத்தான் போட்டுத் தள்ளனும்)

"கண்ணென்றும் மூக்கென்றும் காதென்றும் - உன்
கண்ணெதிரே மாதென்று சொல்லிவரும் மாயைதன்னை
எமன்விட்ட தூது என்று எண்ணாமல் சுகம் என்று
நாடும் துர்புத்தியை ஏதென்று எடுத்துரைப்பேன்"

(கண்டிப்பா இது அவனோடது இல்ல, பட்டினத்தாராத்தான்ன் இருக்கனும்)
இதுவும் பொண்ணுங்களப் பாத்து ஏன் பயப்படுற மாதிரியே எழுதறானுங்க? ஹோமோசெக்ஷுவல்சோ, கேர்ள் பிரண்டு கிடைக்காதவனோ தான் இந்த மாதிரி கழிப்பறை இலக்கியத்தின் சிறந்த எழுத்தாளர்களா ஆவாங்களோ? ஆனா இந்த மாதிரி நாயிங்கதான் பொண்னுங்கள டீஸ் பண்ணுற மட்டமான வேலைகளில் ஈடுபடுவானுங்க!என்ன கருமமோ!


பேட்மேனுக்கு அவர் symbol எல்லாத்துலயும் போடுவாங்க. இதுல போடுவாளோ, போட்டுடாளே!

இதே போல ரயிலிலும் உண்டு. அங்கேயும் கழிப்பறையில் தனது கட்சிக் கொள்கையை பிரசங்கிப்பவனும், தேர்தல் அறிக்கையை பிரகடனப்படுத்துபவனும், ஆண்,பெண் குறிகளை அளவில்லாத ஆர்வத்துடன் ஆராய்ச்சி செய்பவனும், அதை அங்கே செதுக்க முற்படுபவனையும் நல்லாவே பாக்க முடியும். மனசுல மைக்கலேஞ்சலோனு நினைப்பு, செதுக்குறானாம். இவனுங்களுக்கெல்லாம் 'விக்ரம்' படத்தில கமல் சொன்ன மாதிரி(விக்ரம் படத்தில கமல் எப்டி வருவாருன்னு கேக்காம கவனிங்க!) ஒரு ட்ரீட்மெண்டை செய்ய வேண்டியதுதான். அது என்னன்னு சொல்லமுடியாது. ஏற்கனவே ஆபாசம்னு சொல்லிருவாங்கனு பயப்படுறேன், அதச் சொன்னா எல்லாரும் ஒதுக்கி வச்சிரப்போறாங்க. நா இப்போதாங்க வளரும் ப்ளாக்கர்.

அப்புறம் இன்னொரு வகை லூசுங்க இருக்கானுங்க. ரயிலில அவனுங்க காதலுக்கு சாசனத்தைப் பொறிச்சுக்கிட்டு இருப்பானுங்க. இந்த மன்மதன் அந்த ரதியோட பேர சாவியால செதுக்கி நடுவுல ஹார்ட் போட்டு உள்ள அம்பு உடுவானுங்க. இந்த மாதிரி கேசுகளில் பல கண்டிப்பாக ரிடர்ன் வரும்போது 'சரோஜா' பிரேம்ஜி மாதிரி வேற ஒருத்திய சுத்தி தேவதைகள சுத்த விட்டுட்டு இருப்பானுங்க. அவளுக்கு ஒரு கல்வெட்டு வரும்போது (திரும்பவுமாஆஆஆ!)(க்க்ர்ர்ர்ர்ர்....) .

பாத்தீங்களா, இந்த மாதிரி ஆசாமிகளுக்கெல்லாம் ஊரிலுள்ள எல்லா கழிப்பறைகளிலும் ஒரு சிலை வைத்து அங்கீகாரம் அளிக்க வேண்டும். கழிப்பறைகளுக்கு அவங்க பேர வச்சு, போர்டு பக்கத்தில அவங்க போட்டோ போட்டுட வேண்டியதான். அவங்களுக்காக சாகித்ய அகாதமில ஒரு புது பிரிவு துவங்க வேண்டிய கடமை நமக்கு இருக்கு.பின்ன, ஊர்ல எல்லா கலைஞர்களையும் மதிக்கிற நாம இவங்கள மட்டும் புறக்கணிச்சா காலம் நம்மை மன்னிக்காது. இதை நாம கவனிக்கலைனா இந்தக் கலை அழிந்துவிடக்கூடும். அதனால நலிவுற்றோர் சன்மானத்தொகைய பரிந்துரை செய்கிறேன்.


ஒரு கழிப்பறை இலக்கிய எழுத்தாளர்.
இதையெல்லாம் அனுமதிக்குது பாருங்க நம்ம நாடு ...... வாழ்க ஜனநாயகம்!!!!

இத இப்படியே விட்டரலாம்தான். ஆனா போதுமான சேம் ப்ளட் வரலயே. அதனால ஒரு ஜோக்(நீயெல்லாம் பதிவெழுதுறதே ஒரு ஜோக் தான்). ஒருத்தன் டாய்லெட்ல உக்காந்துருக்கான், வெஸ்டர்ன்ங்க. இப்பொ அவன் கஷ்டத்தை அவன் வாயாலயே கேப்போம் (அவன் அங்க முக்குறதையா?). நான் உக்காந்திருந்த போது பக்கத்து ஸ்டாலிலிருந்து குரல், "எப்படி இருக்கீங்க?". பொதுவா டாய்லட்ல வந்து நட்புறவு உரையாடல் ஆரம்பிக்கிறவன் இல்ல. ஆனாலும், நல்லாதான் இருக்கேன்னு சொல்லி சமாளிச்சேன்.
"எங்க போறீங்க?'
(டாய்லெட்லருந்து விண்வெளிக்கா போகபோறேன்.என்னமாவது சொல்லனுமே.)
"உங்கள மாதிரிதாங்க, சென்னைக்கு)"
"அங்க என்ன பண்ணலாம்னு இருக்கீங்க? நான் வேணா உங்களோட வரவா?"
(அவனா நீயு? be careful, என்னைய சொன்னேன்)
"இல்லீங்க. இன்னைக்கு எனக்கு வேற ஒருத்தர் வரேன்னு சொல்லிட்டாரு. அதனால் உங்களோட வர சான்ஸ் இல்ல."
உடனே அவன் பதறின குரலில், "இங்க பாரு, உன் கிட்ட பேசுறதுக்கெல்லாம் இங்க ஒரு நாதேரி பதில் சொல்லி கொல்லுறான். அவன் என்ன 'கேட்டகரி'ன்னு வேற தெரியல."

இதுக்கும் ப்ளட் வரலைனா கீழ இருக்குறதுதான் உங்களுக்கு ப்ளட் வர ஒரே வழி!


பல் பிடுங்கி கூட்டம்

Filed under , , by Prabhu on 6/18/2010 06:29:00 AM

8

’பல் போனா சொல் போச்சு’ இல்ல? பொண்டாட்டி வந்தாலும் போச்சுன்னு சில பேர் வாதிடலாம். ஆனால், நான் உடல்கூறு ரீதியா பேசுறேன், Post trauma எல்லாம் நம்ம டிபார்ட்மெண்ட் இல்ல. பல்லு போனா சொல்லோட போச்சுன்னா பரவாயில்ல, பல ருசியான உணவுகளையும் எடுத்துட்டு போயிடும். அப்புறம் முறுக்கை மிக்ஸியில் அடித்து சக்கரை கலந்து ஸ்பூனில் சப்பி சாப்பிட வேண்டியதான். எனக்கு 'பல்’வேறு உபாதைகள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் இதுவரை பல்வலி என்ற ஒன்றை மட்டும் அனுபவித்ததில்லை.

பலகாலமாக என் ஆஸ்தான பல் டாக்டர், ‘பிரபு, எப்ப வந்து பண்ணிக்கிற?’ எனக் கேட்டுக்கிட்டே இருந்தாரு.
”டாக்டர், இது என்ன கல்யாணமா?” என கேட்டேன்.
“ஒரு வகையில அப்படித்தான். பயப்படுறியே?”
”பண்ணனும்னு ஆச்சு. பண்ணிருவோம்”
”என்னைக்கு வர்ற?”
“திங்கள்?”
“டன்.” “டாக்டர், வலிக்குமோ?”
சிரிச்சுகிட்டே, “கட்டெறும்ப விட கம்மியா தான் வலிக்கும்.”
மையமாய் ஆட்டிவிட்டு வந்தேன்.

அடுத்த நாள் 5 மணி குறிச்சிட்டாங்க. வந்தப்போ அவர் ஜன்னலைத் தாண்டிதான் வரவேற்பு அறைக்கு போகனும். அவர் ஆனந்த விகடன் படிச்சுகிட்டு இருந்தார். அவருக்கென்ன, பல்லு என்னது. ஒருத்தனும் இல்லை என்றாலும் கொஞ்சம் சீனுக்காகவோ என்னவோ உட்கார வைத்திருந்தார். கொஞ்சம் வார்ம் அப் எக்ஸர்சைஸ் செய்து கல்லில் கத்தியைத் தீட்டி, இடுக்கியை விரித்து விரித்து மடக்கி லெதர் ஜாக்கெட்டின் ஜிப்பை கழுத்து வரை இழுத்து விடுவது எல்லாம் என் மனக் கண்ணில் ஓடியது. அதுவரை செம இண்டரஸ்டிங்கான 2007 குட்டி விகடன் ஒண்ணுல, ‘கற்றதும் பெற்றதும்’, ‘ஹாய் மதனெ’ல்லாம் படிச்சிட்டிருந்தேன். அவசர அவசரமாக ஒரு சுடிதார் அணிந்த பெண் உள்ளே ஓடினார். பிறகு என்னை உள்ளே அழைக்க, அங்கே போனால் அந்த சுடிதார் பெண் முகமுடி அணிந்து இருந்தார். திடீரென பார்த்ததும் ‘பக்’கென இருந்தது.
”என் செயின கழட்டி கொடுத்துடறேங்க”
“வாட்?” என்றார்.
“ஒண்ணுமில்ல டாக்டர்”
“பிரபு, நான் ஒரு கன்ஸல்டிங் டாக்டர் கூப்பிடிருந்தேன்ல, இவங்கதான், அது”
இத்தோட என்னை பேச்சில இருந்து கழட்டி விட்டுட்டாங்க.
"வாய நல்லா திற. ஆங்.. அப்படியே வச்சிரு”
“மகேஷ், முந்தா நாள் நல்ல மழை இல்ல?”
“ஆமா டாக்டர், நேத்தும் பெஞ்சிருந்தா கொஞ்சம் வெப்பம் குறைஞ்சிருக்கும்”
ஒரு திருகு ஊசியை அந்த முகமுடி ஒரு மிஷினில் மாட்டி, வாயினுள் விட்டு அந்த பல்லில் கடைய ஆரம்பித்தார். Bore போடும் முறைதான். சைடில் நர்ஸ் வைத்த் குழாய் தண்ணீரை வெளியேத்திக் கொண்டிருந்தது.

”மகேஷ் டாக்டர்,  மழை பெஞ்சப்போ ஒரு பேஷண்ட் விட்டுப்போச்சே?”
“இவருதான் அது”
“ஓ. அன்னிக்கு ஒரே ட்ராஃபிக் சார். ஒரு சின்ன மழை பெஞ்சதுக்கு பெரியார் பஸ் ஸ்டாண்டில பைக் சீட்டு வரை தண்ணி.”
“ஆமா, மழை நீர் வடிகாலே சரியில்ல”
”வாய மூடிறாத” என்றார் என்னைப் பார்த்து.
வாயில் இருந்து நுனி வளைத்த சிரிஞ்ச் எடுத்து பல்லிலிட்ட துளையில் என்ன பீச்சினார். கொஞ்சம் பெரிய திருகு ஊசியை மாட்டினார். பிறகு விட்ட இடத்தில் இருந்து நீண்ட நேரமாக உரையாடல் தொடர்ந்து கொண்டிருந்தது. இன்னொரு முறை ஊசி பீச்சல், இன்னும் பெரிய ஊசி போட்டு குடாய்தல் எனத் தொடர்ந்தது. பேச்சும் தான். ’ஏன்யா,  ‘Pulp Fiction' மாதிரி பேசிட்டே இருக்கீங்க’. கடைசியில அளவு செக் செய்ய ஒரு விரல்கட்டை குச்சி நாலை வாயில் சொருகும் போதுதான், ‘அட, இவ்வளவு பெரிய ஓட்டை நாலு எப்ப போட்டாங்க’ன்னு இருந்தது. 
“நர்ஸ், அதை சுட வைங்க”
நர்ஸ் ஒரு சின்ன கம்பியை சூடு பண்ணினார், சுத்தம் செய்த இடத்தை ஸ்டெரிலைஸ் செய்ய.
“எதுக்கு ரெண்ட சூடு பண்ற?”
“நீங்க ரெண்டு கேப்பீங்க.”
“ஆங்?”
“நீங்க ரெண்டு கேப்பீங்க”
“நான் தான் டாக்டர்?”
“நான் தான மேடம் நர்ஸு?”
”ஏய், முதல்ல நீ படிச்சு முடிச்சுட்டயா?”
பக்கத்தில் இன்னொரு டாக்டர், “போன மாசம் தான்”
நான், ”டாக்டர், அப்ப போன மாசம் வரைக்கும் எனக்கு போலி நர்ஸா?” என்றேன்.
”ஏய், நீ வாய மூடாத!”
”போன மாசம் வரைக்கும் எனக்கே போலி நர்ஸ் தாம்பா!”, என்றார் மகேஷ்
”அப்படிதான், திரும்ப மூடக் கூடாது”, என்றது முகமுடி.
என் கலவரத்தைப் பார்த்த நர்ஸ், “சும்மா இருங்க டாக்டர். ஏற்கனவே நர்ஸ் தான். இது மேல் படிப்பு.”
மகேஷே வந்து ஓட்டையை அடைத்தார்.

”அவ்வளவுதான். வந்து சேர்ல உக்காரு”
“இவ்வளவுதானா?”
“ஏன் வருத்தமா இருக்கா? கடவாப் பல்லு ரெண்டு சும்மாத் தான் இருக்கு புடுங்கிருவோமா?”
“இல்ல டாக்டர்...”
“இருக்குன்னு சொல்றேன்ல”
“அய்யோ, நான் Root canal Treatmentன்னதும் ஒரு வகை சைனீஸ் டார்ச்சர் எதிர்பார்த்தேன்”
“இந்த காலத்துலயா? இன்னும் ஏதோ நாங்க பல்ல குரடு வச்சு புடுங்கறதாவே கற்பனை பண்ணிகிட்டு இருக்கீங்க.”
"டாக்டர், உங்களுக்கு என்ன கைமாறு செய்யப் போறேன்னு...”
 ”உங்கப்பா கோவிலுக்கு போகும் போது ஃபீஸ் வாங்கிக்குறேன். நீ போய்டு வா”

இதை எழுதி இரண்டு வாரத்துக்கும் மேலேயே ஆகிறது. இதே டைட்டில அப்ப வச்சு எழுதிருந்தா என்ன நினைச்சிருப்பீங்க? அப்ப ஏதோ சண்டையாமே? என்ன பிரச்சனைன்னே எனக்குத் தெரியாது. என்னவோ போங்க! இன்னும் நிறைய எழுத வேற வேற விஷயங்களை எழுத பிளான் இருந்தது. பட், அந்த விஷயங்கள் எல்லாம் பின்னால் போயிடுச்சு. இப்ப, நான் பெங்களூரில் காலேஜ் சேர்ந்துட்டேன். அதுக்கே நேரம் சரியாப் போகுது. பெங்களூர்வாசிகளே, ரோட்டில என்னய மாதிரியே யாரையாவது காதில் எம்பி3 பிளேயருடன் பாத்தீங்கன்னா, அது நான் தான். தைரியமா வந்து பேசலாம். ஆனால், சில விஷமிகளின் வயித்தெரிச்சல் காரணமாக நான் பெங்களூர்வாசிகளுக்கே தெரியாத பெங்களூரைத் தாண்டி ஒரு இடத்தில் இருக்கும் கேம்பஸில் தான் படிக்கிறேன் என்பதால் அடிக்கடி சிட்டி குள்ள வரமுடியப் போவதில்லை. காலேஜ் பேரைப் பற்றி கேக்காதீங்க. அப்பதான், அப்பப்ப rip செய்ய வசதியாக இருக்கும்.

கடைசில கருத்து சொல்லனுமே. அசிங்கமான படம் எடுத்தாக்கூட நம்ம ஊரில சொல்வாங்களே! தயவுசெய்து பல்லுல ஏதாவதுன்னு உடனே காட்டிடுங்க. பல் பிடுங்கறதோ, Root canal treatment ஓ ரொம்ப வலிக்கவே இல்லை. பல்ல ரெண்டு தரம் விளக்குறத விட முக்கியமான விஷயம், எந்த சமயத்திலயும் பல்லுல எந்த உணவுப் பொருளையும் தங்க விடாதீங்க. அதுதான் சிம்பிளான விஷயம். அப்புறம் தப்பித் தவறி பல்லில் குழி இருந்திட்டால், அடைச்சிடுங்க. அப்படியே, ஸ்கிரீன் மேல கங்கை அமரன் படம் போல ஒரு மஞ்சக் கலரில் கூப்பிய கை வந்து வணக்கம் சொல்லுறதா கற்பனை பண்ணிக்கோங்க.

சரக்குள்ள பதிவு (செம சரக்கு!)

Filed under , by Prabhu on 7/23/2009 07:33:00 AM

14

"சொல்லுங்க பப்பு, இப்போ எப்டி feel பண்றீங்க?"
"எனக்கு என்ன சொல்றதுன்னே தெர்ல. i feel excited. யுஷுவலா நான் அவார்ட் expect பண்ணி பதிவெழுறதில்ல. But if i got the award, எனக்கு சந்தோஷம் தான்."
இப்படியெல்லாம் தமிழக் கொல பண்ணி பேட்டி கொடுத்தாதான் நான் பெரிய பருப்புன்னு நம்புறானுங்க! என்ன செய்யுறது?

அதில்லாமலே நான் பெரிய பருப்பு தான். அதுக்கு என் வரலாறையும், என் பெயர் காரணத்தையும் எழுதனும். அதனால அந்த மேட்டர 50 வது பதிவுக்காக ஒதுக்கி வச்சிட்டேன். அப்புறம் என்னத்த எழுதுறதுக்காக இந்த பதிவ போட்டிருக்கன்னு நீங்க கேக்கலாம்.

அப்டி கேளு நைனா, நான் பாட்டுக்கு சும்மாக்காச்சு போகச்சொல்லா, நான் ஆதவன்ங்கிற பேர்ல குப்ப போடுற ஒரு பெர்ய மன்ஷன் ஏதோ அவார்ட் கொடுக்காராமே! என் பேரயும் அந்தாண்ட போட்டிருக்காராம். இன்னடா இது மெர்சலா கீதுன்னு போய் பாத்தா... அட, மெய்யாலுமே தான்! இன்னா விஷயம், காசு கீசு தர்வீங்களான்னு கேட்டு பாத்தா, அதெல்லாம் இல்ல, உனக்கு அவார்டே ஓவர்னு சொல்டாரு. சரிதான், இந்த வேர்ல்டுல சுளுவா கெடக்கிறது அட்வைசும், பதிவுலக அவார்டும்தான் போல.

அவராண்ட போய் கேட்டேன், அண்ணாத்த எனக்கிலாம் அவார்ட் கொடுக்கறயே எப்படின்னு? அதுக்கு அவரு, தம்பி உன் பதிவெல்லாம் படிச்சேன். செம தமாசுப்பா, நான் அப்படியே மெர்சலாய்டேன்னார். ஏம்பா, நம்மளா பாத்தா காமெடி பீஸாட்டமா இருக்கு? உளவுத் துறையெல்லாம் வச்சி விசாரிச்சாராம். நான் உளவுத் துறையளவெல்லாம் நான் வொர்த் இல்ல தல.

அப்பால நான் வாங்கசொல்ல அவார்ட் வாங்கின இளைய பல்லவன், ஆ!இதழ்கள் எல்லாத்துக்கும் வாழ்த்து சொல்லிக்கிறேன். அதில இளைய பல்லவன் படிச்சப்போ அவர் நான் படிச்ச கதையில இருந்து பேர் எடுத்து வச்சிருக்காருன்னு தெர்து. அதோட அவரே சரித்திர கதயெல்ல்ம் எழுதுறாராம். அங்கங்க எல்லாரும் சரித்தரக் கதை எழுதும்போது பப்பு, உன் கத மட்டும் ஏன் தரித்தரமா இருக்குன்னு கேட்டீங்கன்னா... பழமொழி சொன்னா அனுபவிக்கனும், ஆராயக் கூடாது.

இப்படிக்கா ஒரு சோக்கு சொல்லிட்டு அப்படிக்கா ஜகா வாங்கிக்குறேன்! எங்க எஸ்கேப்பு ஆவுற? நீ யாருக்கு கொடுக்குறன்னு சொல்லிட்டு போ. அய்யோ, அதெல்லாம் கேக்காதீங்க. நான் அவ்ளோ வொர்த் இல்ல. அப்புறம் இன்னொரு விஷயம்.
எல்லா புகழும் இறைவனுக்கே! அவார்ட் வாங்குறப்போ இப்படி சொல்லனுமாம். அப்ப தான் நம்மள பெரிய ஆளுன்னு சொல்வாங்க.


அது என்ன அவார்டுனே சசொல்ல மறந்துட்டேன் பாத்தீங்களா! அது 'Interesting Blog Award' (அ) சுவாரஸ்ய பதிவர் விருதாம். நல்ல சரக்கு இருக்குறவங்களுக்குதான் கொடுக்கனும், உனக்கேன்னு கேக்கலாம். அதான் இந்த பதிவோட சரக்க ஏத்த கீழ ஒரு சரக்கு சோக்கு. அதுவும் பாரின் சரக்கு!

எனக்கு இப்ப ஜோக் சொல்லியே ஆகணும்.

அமெரிக்கால ஒரு சிட்டி. அங்க ஒரு பார். டிடர்ஜண்ட் பாரான்னு கேக்குறவங்கள கஸாப் தம்பின்னு புடிச்சு குடுத்திருவோம். ஒரு குடிக்கிற பார். அங்க ஒரு பொண்ணு வர்றா. வந்த உடனே எவன்ட பேசலாம்னு பாக்குறா. அப்போ நம்ம ஆளு கண்ணுல படுறான்.
"நீ என்ன சரக்கு அடிக்கிற?"
"இதுக்கு பேரு மாய சரக்கு"
இவன பாத்தா சுண்ட கஞ்சி ரேஞ்சுக்கு இருக்கான். ஓவர் மப்புல இருக்கான் போல என அவன விட்டுட்டு பார்ல ஒரு ரவுண்டு வர்றா. எல்லாரும் முழு மப்புல இருக்கானுக, இல்ல ஆஃப் பாயில் போட்டுட்டு இருக்கானுக. இதுக்கு அவனே தேவலைன்னு வர்றா.
"ஆமா.... நீ மாய சரக்குன்னு சும்மாக்காச்சு தான சொன்ன?"
நம்மாளு, "இல்ல, நிஜம்தான்".
"நான் நம்ப மாட்டேன்"
இப்ப பாருங்கன்னு சொல்லிட்டு, ஒரு ரவுண்டு ஊத்திக்கிட்டு, ஒடிப் போயி ஜன்னலில குதிச்சிட்டான். அய்யோன்னு இவ எட்டிப் பாத்தா, அவன் பறந்துட்டே பில்டிங்க மூணு ரவுண்டு அடிச்சிட்டு வந்து உள்ள இறங்கினான். வாயப் பிளந்து ஆச்சரியப்பட்ட அவளுக்கு இன்னும் சந்தேகம் தீர்க்க இன்னொரு ரவுண்டு விட்டுக்கிட்டு நாலு ரவுண்டு அடிச்சான், அந்த பில்டிங்க. அந்த பொண்ணு எனக்கும் வேணும்னு சொல்ல, "யோவ் பார்டெண்டர், இதே சரக்க அந்த பொண்ணுக்கும் கொடுய்யா". அத குடிச்சிட்டு அந்த பொண்ணு நேரா போய் ஜன்னல் வழியா குதிச்ச........... சொய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ங்.... சப். கீழ இருக்குற அவ கார்ல போய் விழுந்து அவுட்.

இதப் பாத்த பார்டெண்டர், "யோவ், உன்னோட இதே வேலையா போச்சு. பக்கார்டி நாலு உள்ள போனா நீ பக்கா பாஸ்டர்டு டா, சூப்பர் மேன்".

நாட்குறிப்பில் ஒரு நாள்.......

Filed under , , by Prabhu on 6/23/2009 10:33:00 AM

10


“ச்சே.... வர வர தூக்கம் ரொம்பதான் அழுத்துது. தலவலிடா. அம்மாஆஆ... மணி என்ன?
“ஏழு மணியாச்சுடா.
“என்னம்மா, உன்ன அஞ்சு மணிக்கே எழுப்பிவிடச் சொன்னேன்ல? ஏழு மணி வரைக்கும் தூங்க விட்டிருக்க? (இன்னைக்கு பதிவ வேற பப்ளிஷ் பண்ணனுமே!)
“சனியனே, உன்ன அஞ்சு மணியில இருந்து எத்தன தடவ எழுப்புறது?
“ஓ, எழுப்பினயா? சரி விடும்மா. (ராத்திரி ப்ளாக் பக்கம் போறத நிறுத்தனும்)
பதிவ வெளியிட்டுட்டு, பழைய பதிவுக்கு வந்த கமெண்ட்டுகளுக்கு எதிர் மொக்கைகள போட்டுட்டு, நிமிர்ந்து பாத்தா மணி ஏழு. டிரஸ் எடுக்க ஓடினேன்.
“டேய், குளிடா!
“அம்மா, அதுக்கெல்லாம் நேரமில்லமா. காலேஜ்க்கு லேட் ஆயிடுச்சு.
“சாப்பிடலயா?
“ம்ம்ம்.... மூணு சப்பாத்தி எடுத்து வை.
“அதான பாத்தேன். லேட்டா போனாலும் கொட்டிக்காம போக மாட்டியே!
எடுத்து வச்சிருக்கேன். காலேஜ்க்கு ஆறு எடுத்து வச்சிருக்கேன்.
“ஃபிரண்ட்ஸ்க்கு ஒன்னு ரெண்டு சேத்து வை. நாய்ங்க கேக்காம டப்பாக்குள்ள கை விடுவானுக. “
“போய்டு வரேன்மா!
“நேரம் நல்லாதான் இருக்கு, போய்டுவா!
பைக்க எடுத்துக்கிட்டு விரட்டினா, மனசுக்குள்ள ஏ.ஆர்.ரஹ்மான் வந்து 1,2,3,4...என்றென்றும் புன்னகைனு பாட, பக்கத்தில ஒரு Lady Doak college பொண்ணு ஸ்கூட்டி போனா, ஸ்பீடோமீட்டர் தானாக அவ ஸ்கூட்டி ஸ்பீடுக்கு அட்ஜெஸ்ட் ஆகுது, என்ன செய்ய? இன்னைக்கும் லேட்தான்.

அங்க லேட்டா போய் பைக் ஸ்டாண்டில பைக்க போட்டுட்டு, ஹேர் ஸ்டைல சரி பார்த்துட்டு வேகமா க்ளாஸுக்கு ஓடினா, பாதி வழியில ஒருத்தன் ஆமை வேகத்தில போய்க்கிட்டிருப்பான். என்னடா இன்னைக்கும் லேட்டா, வாடா சீக்கிரம் போயிடுவோம்னு சொன்னா, லேட் ஆகிப் போச்சு இனிமே அவசரமாப் போனா டயத்துக்கு போனதா ஆகிடாது, லேட்டா போனா புதுசாத் தப்பாயிடாதுன்னு விசு மாதிரி குழப்பி மெதுவா கூட்டிட்டு போனா, அங்க சிரிச்சு சிரிச்சே கழுத்தறுக்குற white openஓட க்ளாஸ். யூ ஆஸ்க் மி வாட் இஸ் வொயிட் ஓபன். வொயிட் மீன்ஸ் வெள்ளை, அண்ட் ஓபன் மீன்ஸ் தொர, டோடலி இட்ஸ் வெள்ளைதுரை,எங்க Plant Biotech professor. Why late? குழந்தை எந்த நாடாயிருந்தாலும் முதல்ல ம்மா...ன்னு சொல்லுற மாதிரி ஸ்டூடண்ட்களுக்கான default பதில், “லேட்டாயிருச்சுன்னு சொன்னதும், மூஞ்சில்லாத துப்பாத குறையா, கேவலமாப் பார்த்துட்டு, Come inside”. உள்ள போனதும் (சுண்டு)சுந்தர பாத்து சிரிச்சுக்கிட்டே பக்கத்தில போய் உக்காந்தா, “மச்சான் மொக்க போடுறான் டா என அவன் கம்ப்ளைன் பண்றான். “விடுறா பாத்துக்கலாம்டாஆஆஆஆஆஅஹ்ஹ் என சொல்லி முடிக்கும் முன்னே கொட்டாவி வந்து விடுகிறது. அப்புறம் ஆபத்தில வந்த ஆபத்பாந்தவனாய் வைப்ரேட்டில் போட்ட மொபைலில் மெசேஜ் வந்து என் பேண்ட் பாக்கெட்டில் துடிக்க, திறந்து பாத்தா, ஒரு மொக்க! L? அப்புறம் அவன திட்டினேன். அவன் எதுக்குடா திட்டுனன்னு கேக்க, நான் பதிலுக்கு திட்டன்னு அந்த கேம் ரெண்டு பீரியட் தாங்குச்சு.

லன்ச் சாப்பிடற டயம் வந்த்தும் கேண்டீனுக்கு போய் அவன் கிட்ட சாப்பாடு வாங்காம, அவன் முன்னாடியே டிஃபன் பாக்ஸ திறந்திட்டு உக்கார்றது. அவன் பாத்தா ஒரு சிரிப்ப்ப் போட்டு, “அண்ணே, பிஸினஸ் எப்படி போகுதுன்னு கேட்டு கரெக்ட் பண்ணிக்குவோம். அங்க வேட்டையாடு விளையாடு க்ரூப்ஸ் வர்றதுக்குள்ள சாப்பிடறதுதான் முதல் வேலை. அதென்ன வேட்டையாடு விளையாடு க்ரூப்ஸ் எனக் கேட்டீங்கன்னா, as the name indicates, டிபன் பாக்ஸ் திறந்தா மானக் கண்ட சிங்கம் மாதிரி பாயுவானுங்க, அவனுங்க சாப்பிட்டுட்டு போனபின் அந்த டேபிள் சிங்கம் குதறின மான் மாதிரி இருக்கும், அன்னைக்கு அந்த மேஜையில எவனும் சாப்பிட முடியாது. அப்படி நாறடிப்பானுங்க.

உண்ட களைப்பு தீர ரெண்டு மணி நேரம் க்ளாஸில தூங்கினப் பிறகு, வெளிய டாப்பு. ஆனா, எங்க கேங்குக்கு ஒரு வித்தியாசமான ஒரு பழக்கம் உண்டு. க்ளாஸ் முடிந்தாலும், கட் அடிச்சாலும் வீட்டுக்கு போகிற வரை kaaleeகாலேஜ் விட்டு வெளியே போக மாட்டோம். அப்புறம் வழக்கம் போல ராஜாபார்லி பேக்கரி போய்டு உள்ள வரும் போது, “ஒரு ஊரில் அழகே உருவாய் ஒருத்தி இருந்தாளே....... எனப் பாடிட்டே வந்தா, பக்கத்திலிருந்த சுண்டு என்னப் பார்த்து சிரித்தான்., எதற்கு என நிமிர்ந்து பார்த்தா..........எதிரில அனு. குட்டியா, க்யூட்டா.......அழகான அனு.... ம்ம்ம்ம்.... அவளப் பாத்தா மூச்ச இழுத்து விடும் போது பல தடுப்புகளை சந்திக்குது. அந்த மூச்சுத் திணறல் அவஸ்தை இல்ல, இன்பம் தான் என நானும் சொன்னா அது monotonica இருக்காது? ரோலர் கோஸ்டர்ல விர்ர்ர்ர்னு போகும் போது ஒரு திகில் இருக்கும், அதே நேரத்தில் ஒரு போதையும், its intoxicating. இது கொஞ்சம் பின்நவீனத்துவ பாணியில இருக்குல்ல? வெரி குட்.(பதிவரானதோட சைட் எஃபெக்ட்!). அப்போதான் அவகிட்ட ஒரு வித்தியாசம் இருக்குறத கவனிச்சேன். அட, அவ முடி..... அதுக்குள்ள சுண்டு- “டேய், அவ ஹேர் ஸ்டைல் மாத்திட்டாடா. நல்லாதான் இருக்குஇதேதான் நானும் சொல்ல வந்தேன். அவ ஹேர் கொஞ்சம் கட் பண்ணி pony tail போட்டிருந்தா, சான்ஸே இல்ல... ஹைய்ய்ய்ய்யோ, தேவதையேதான்! “இப்படி சைட் அடிச்சே பொழப்பு ஓடுதே, என்னக்கிடா பேசப் போற?. “பேசுவோம் டா. “என்னக்கி........

வீட்டிலிருந்து “என்னடா காலேஜ் முடிஞ்சு இவ்ளோ நேரம் ஆச்சு, என ஃபோன் வர, வீட்டுக்கு கிளம்ப வேண்டியதாப் போச்சு. வந்த பிறகு கொஞ்ச நேரம் பதிவுலகத்த மேய்ஞ்சுகிட்டு இருந்தப்போ, ஜிங்குன்னு சவுண்டு கொடுத்திட்டு ஜிமெயிலில் எட்டிப் பார்த்தார், நம்ம கிஷோர்.
hi
hi
அப்புறம் ஆறாவது தடவையா நீங்க என்ன பண்றீங்கன்னு கேட்டு அவர காண்டாக்கினேன். இது பரவாயில்ல, ஒரே நாளில் ஒருத்தன பஸ்ல, க்ளாஸ்ரூம்ல, காரிடார்ல, டாய்லெட்லனு எல்லா இட்த்திலயும் பேரக் கேட்டு அவன் கடிக்க வந்த கதை அவருக்கு தெரியாது.

அப்புறம் அஜய் சிக்கினான், அவன்ட்ட mental masturbationஓட(ச்சீன்னு சொல்லாதீங்க......... அதப் பத்தி வேற ஒரு பதிவுல!) சைக்காலஜி பத்தி பேசும்போது, சரண்யா smsல வசமா மாட்டினா.
“சரண்யா, wat doing?
summa iruken.
i lov you, kuty
“டேய், ஆரம்பிச்சுட்டயா?
“நான் உன்ன காதலிக்க ஆரம்பிச்சு ஆறு மாசம் ஆச்சு.
“பப்பு, உனக்கு வேற யாரும் சிக்கலயா, என்கிட்ட ஆரம்பிசுட்ட.
“உன் ஒருத்திய பாத்தாதான் லவ்வெல்லாம் வருது
“டேய், உன் மொக்கய நிறுத்துடா
“அவன நிறுத்த சொல்லு நான் நிறுத்துறேன்.
“அய்யோ, நீ ஸ்டார்ட் பண்ணா நிறுத்த மாட்டியே
“நீ என்னய லவ் பண்றதா சொன்னா விட்டுடறேன்.
“டேய், போய் அனுகிட்ட மொக்க போடுடா, என்னய விடுடா!
“உன்னய அவ்ளோ ஈசியா விட முடியாதே
“திடீரென எதுக்குடா என்னய ஓட்ட ஆரம்பிச்சிட்ட? எப்ப இருந்து இப்படி?
“உன்ன பாத்திலிருந்தே இப்படிதான்.
“......
“ஹலோ
“....
ம்ஹூம்.... இன்னும் ரெண்டு நாளைக்கு மெசேஜ் ஓபென் பண்ணவே பயப்படுவா. சரி, அடுத்து யாரு? சுண்டு!
“டேய் சுண்டு, wat doing.....”
அப்படியே சாப்பிடுற நேரம் ஆயிட்டதால சூப்பர் சிங்கர்ல வர்ற ரேணுவ சைட் அடிச்சுக்கிட்டே சாப்பிட்டு முடிச்சா, நாளைக்கு இண்டர்னல்ஸ்னு மெசேஜ் வந்தது. நாளை என்பது கடவுளுக்கு, இன்று என்பது மனிதருக்குன்னு மொக்கத்துவம் சொல்லி அவன துரத்திவிட்டுட்டு, லேட்டாயிடுச்சு தூங்கடான்னு சொன்ன அம்மாவ சமாளிச்சிட்டு, கம்ப்யூட்டரில வந்து உக்காந்து வேர்ட் ப்ராச்சர திறந்து அடிக்க ஆரம்பிச்சேன், “நாட்குறிப்பில் ஒரு நாள்.......

கூகுளின் கூட்டு சதி

Filed under , , by Prabhu on 6/22/2009 06:29:00 AM

8

பதிவுலகத்துக்கு நான் வந்து இப்பொழுது கிட்டத்தட்ட 5 மாதங்கள் ஆயிருக்கும். இங்க வந்து நான் பெருசா சாதிச்சிட்டதா சொல்ல மாட்டேன். ஆனா, சில appreciable பதிவுகள வெளியிட்டிருக்கேன். கிஷோர், கேபிள் சங்கர், பொன்னியின் செல்வன், வினோத் கௌதம், வால் பையன், ஹாலிவுட் பாலா, 'எனது பயணங்கள்' பிரபு, 'my thoughts da machi' காயத்ரி, 'குப்பைத்தொட்டி' நான் ஆதவன் என பல நபர்கள சந்திச்சதும், அவங்கள்லாம் என்னோட பாலோயர்ஸா இருந்ததும் தான் எனது ஒரே achievement பதிவுலகத்தில. அதுக்கும் ஆப்பு வச்சிட்டாங்க. நான் வேற எங்க ஊரு அழகிரியப் பத்தி பதிவிட்டிருதேனா, அதனால தான் உன்னோட பளாக்க(Blog) ப்லாக்(block) பண்ணிட்டாங்க. அடுத்து அண்ணன் உங்க வீட்டுக்கு ஆட்டோ அனுப்புவாருன்னு வேற கெளப்பி விடுறானுங்க.

நான் இந்த பதிவுலகிற்கும், இந்த தமிழ் கூறும் நல்லுலகிற்கும் சேவை செய்து கொண்டிருப்பதைப் பார்த்த பொறுக்காத சில தமிழ் விரோத சக்திகள் தான் இதை செய்திருக்கனும். இது எனது வளர்ச்சியில் பொறாமை கொண்ட புல்லுருவிகள் தான் செய்திருக்கவேண்டும். இது எதிர் கட்சியினரின் திட்டமிட்ட சதி. இதற்கு ஆதாரங்கள் என்னிடம் இருக்கு. விரைவில அந்த சிடி ரிலீஸ் செய்யப்படும். இப்ப தான் தலைவர்களோட தில்லுமுல்லு எல்லாம் பிட்டு படம் மாதிரி சிடி ரிலீஸ் பண்ணி பரபரனு போகுதே. கலைஞர் கூட அவரு காமெடிக்கு சிடிதான் யூஸ் பண்றார். சிடிய பாத்து கண் கலங்குறாராம், இலங்கைதமிழர்களுக்கு. அட, இங்க எதுக்கு அரசியல்? வரவர மேட்டர விட்டு அடிக்கடி விலகி போயிட்டிருக்கேன். ப்ரொபசர் ஆகுறதுக்கான தகுதி எதுவும் வளருதோ?

சரி, மேட்டருக்கு வருவோம். ஒரு மாசத்துக்கு முன்னாடி ஒரு பதிவ போட்டுட்டு என் ப்ளாக்குக்கு போனா அங்க ஒரு மால்வேர் வார்னிங் வந்தது. அப்புறம் தெரியாத கோடிங்கெல்லாம் வச்சு மணிகணக்கா முட்டி, கூகுள கொஞ்சி மேடர கண்டு பிடிச்சா ntamilங்கிற social bookmarking siteதான் என்னோட பிரச்ச்னைக்கு காரணம். ntamilனு பேரு வச்சுக்கிட்டு என்னயவே போட்டுப் பாக்குறீங்களான்னு அத ரிமூவ் பண்ணிய பிறகும் கூகுள் என்னய போட்டுப் பாத்துட்டான்.

கடந்த ஒரு மாசமா பல நல்ல விஷயங்கள் தோன்றும் போதெல்லாம் ப்ளாக் இல்லாத வெறுமைய புரிஞ்சுக்க முடிந்தது. செமஸ்டர், கேரியர்னு வேற பல தடங்கல்கள். இதில சில சமயங்களில் வெறுப்பு ஏற்பட்டு பதிவுலக விட்டு வெளியேறிடலாம்னு கூட நினைச்சிருக்கேன். நான் போனா யாரும் மிஸ் பண்ண போறதில்லை. ஒரு மாதத்துக்கு முன்பு ரொம்ப ஆக்டிவிட்டியோட இருந்த நான், இந்த ஒரு மாத்ததில தடம் தெரியாமல் போய்விடவில்லையா? இதுதான் பதிவுலகம். Easy comes, easy goes. இப்பவும் பழைய அளவு ஆக்டிவிட்டியோட இருக்குறது முடியுமான்னு தெரியல. பார்க்கலாம்.

என்னுடைய பழைய ப்ளாக்கிலிருந்து பல பதிவுகள திரும்ப பதிவிட்டிருக்கேன். அந்த ப்ளாக் போனது கூட ஒரு indicationa இருக்கலாம். அத விட நல்ல பதிவுகள குடுக்க முயற்சி செய்வோம்.

கடைசில என்னையும் அரசியல்வாதி ஆக்கிட்டீங்களே! - என்ன கொடும சார்!

Filed under , by Prabhu on 6/20/2009 06:06:00 PM

1

நான் இன்னைக்கு காலேஜ் போறப்போ இன்னைக்கு தேர்தல் முடிவு வருதே, நம்மஓட்டு போட்டிருக்கோமே, என்னாகுதுன்னு பாக்கனுமே அப்படிங்கிறபரபரப்பெல்லாம் அடையல. எட்டு மணி காலேஜுக்கு ஏழரைக்கு எந்திருச்சு, எட்டுபத்துக்கு நிதானமா போய், க்ளாசுக்கு பக்கத்துல போனதும் ஒடுற மாதிரி சீன்குடுத்து, அங்க மூச்சிரைக்கறமாதிரி போய் நின்னுஎக்ஸ்க்யூஸ் மி சார்னுசொன்னா அந்த ஆளு நம்மல கேவலமா பார்க்க, அதையெல்லாம் கண்டுக்காமகண்ணுல இருக்கிற டெரர மறைச்சுக்கிட்டு மரியாதைய கொண்டு வரும் போது, “பக்கத்தில வந்த்தும் ஓடி வர்ற மாதிரி சீன் கொடுக்கறயா? ஏன் லேட்?”கேட்ககாரணம் தான் கேக்குறாருன்னு தெரிஞ்சும், “லேட் ஆயிருச்சு சார்என சொல்ல, “அது தெரியுது. காரணத்த கேட்டேன். சரி, உள்ள போய் தொலைஎன சொல்ல, ஒரு கேனச் சிரிப்பு சிரிச்சுக்கிட்டே நம்ம நண்பன் கிட்ட போய் உக்காந்தா 8.30க்குமெல்ல கண்ணு சொருகும் போது கை கைபேசியின் உதவியை நாடும் போதுதான்தேர்தல் முடிவு நினைவுக்கு வந்தது. வீட்டுல வெட்டியா இருக்கிற அஜய் கிட்டசப்ஸ்கிரிப்ஷன் போட்டு விட்டேன். 5 மணி வரைக்கு ஒரே after polling discussion தான்.

மொத்த்துல இந்த தேர்தல்ல காங்கிரஸுக்கு நல்ல ரெஸ்பான்ஸ். நான் இவ்ளோதூரம் எதிர்பார்க்கல. எதனாலன்னு தெரியல,ஆனா செமத்தியா ஜெயிச்சிருக்கு. பா...விட நல்ல மார்ஜின்ல செயிச்சிருக்கு. இதுல ஒரு நல்ல விஷயம்என்னவென்றால் பெரிய அளவிலான குதிரை பேரமும், என்னை மாதிரி முதல்முறை ஓட்டளித்த இளைய தலைமுறையினருக்கும் அரசியலிலநம்பிக்கையின்மை உண்டாகுறதும் தவிர்க்கப்படுகிறது. இந்த மக்களோட முடிவுபழைய ஆட்சி மேல இருந்த நம்பிக்கைய குறிக்குதா, இல்ல பா... மேல இருக்கவெறுப்பா, இல்ல குழப்பமான கூட்டணிகளின் பலனா என முடிவு செய்வதுஎனக்கு கடினமாகத்தான் இருக்கிறது. அவங்க தனியாவே 200 அடிச்சிட்டாங்க. இது போக கூட்டணியின் இதர கட்சிகள் சேர்த்தா 258 வருது. செம வலுவாஇருக்காங்க. பா...வோட தெசிய ஜனநாயக கூட்டணி 168 தான் தேறுது. கஷ்டம்தான்.

இந்த வலுவான கூட்டணிய விட்டு வெளிய வந்து தேவையில்லாம தனியாபோட்டியிட்டுட்டொமேன்னு லாலு வருத்தப்படுறாரு. அவருக்கு 5தான் வெற்றி. வெளிய வந்த்துதான் தப்புன்னு அவரோட நாலாவது அணி உருவாக்கினபஸ்வான், முலாயம் சிங் யாதவ் எல்லாரும் உணர்ந்திட்டாங்க. இதுல கொடுமஎன்ன்ன்னா இதுவரைக்கும் இந்தியாவுல் அதிகமான ஓட்டுவித்தியாசத்தில(5லட்சத்தி சொச்சம்) ஜெயிச்சவருங்கிற பெருமையகொண்டிருந்த பஸ்வானுக்கும் புட்டுக்கிச்சு. இப்ப திரும்ப தாய் கூட்டணிக்கேதிரும்பலாம் என முடிவு எடுக்கறதா தெரியுது. என்ன கொடும சார் இது!

ஆந்திராவுலயும் சொளையா 34 தொகுதிய அள்ளிருச்சு காங்கிரஸ். நம்மசீருவோட பிரஜா ராஜ்யம் ஒன்னு எடுத்திருக்காங்க. விஜயகாந்த் நிலைமைக்குஎவ்வளவோ தேவலை. சட்டசபை தேர்தல்ல அவரு திருப்பதில ஜெயிச்சாலும், தன்னோட சொந்த ஊரிலயும் போட்டி போட்டு அங்க தோத்துட்டாரு. சும்மாசொல்லக் கூடாது, சட்டசபை தேர்தல்ல 20 தொகுதி அவருக்கு வெற்றிகொடுத்திருக்காரு. இதுவும் விஜயகாந்த ஒப்பிடும் போது பெருசுதான். ஆனா, சீருஅங்க சூப்பர் ஸாருங்கோ! இங்க விஜயகாந்த்........?! என்ன கொடும் சார்!

வருண்காந்திய விட முடியுமா? அந்த பையனும் தேர்தல்ல நின்னு, பிரசாரத்திலவன்முறையத் தூண்டுற அளவுக்கு அதிகமா பேசி ஜெயிலுக்கும் போயிட்டுவந்துட்டாரு. ஆனாலும் அவர்தான் இப்போ இந்தியாவிலயே அதிக வோட்டுவித்தியாசத்தில வெற்றி அடைஞ்சிருக்கார். கிட்ட்தட்ட 2.5 லட்சம். அம்ம்மாடியோவ்..... நம்ம மாநிலத்துல ஜாதிப் பற்று மாதிரி வடமாநிலத்துல மதப்பற்று கொஞ்சம் அதிகமாத்தான் இருக்கு. மோடியவே ஜெயிக்க வச்சாங்களே. அதஇன்னொரு பதிவுல பேசுவோமே. என்ன கொடும சார்!

இதுக்கிடையில நம்ம மன்மோகன் சிங் ராகுல் காந்திய கேபினட்ல சேரனும்னுசொல்லி கேக்குறாரு. எனக்கு காங்., வந்தது கூட பிரச்சனையா தெரியல. ஆனா, இந்த மன்மோகன் சிங் தான் பிடிக்கவே இல்ல. பிரதமரானதுல இருந்து இவருசூச்சூ னாலுமே ஒரு அம்மா கிட்ட சொல்லிட்டுதான் போவாங்களாம்குழந்தைக்கு இருட்ட கண்டா பயம்). இதையும் யாரு சொல்லச்சொல்லிருப்பானுங்கன்னு நமக்கே தெரியும். அந்தப் பையனுக்கு மக்கள்மத்தியிலயும் கட்சியிலயும் வெயிட்டான மாஸ். அடுத்த தேர்தலுக்கு ஒருபிரதமரத் தயார்ப்ண்றாங்க. என்னதான் சொன்னாலும் இந்த தேர்தலுக்கு, SINGH IS KINNG.

கம்யூனிஸ்ட்ட விட்டுட்டோமே. அவங்க தங்களோட கோட்டைகளான கேரளா, மே.வங்கம் ஆகிய மாநிலங்களிலயே கவுத்துன பிறகு மற்ற ஊருகளிலசொல்லவா வேணும், டவுசர்தான். வர வர கம்யூனிஸ்டோட போக்கே சரியில்ல. அவங்க அரசாங்கத்துக்குள்ளயே இருந்துக்கிட்டு அவங்களுக்கே எதிர்ப்புதெரிவிக்குறாங்களாம். அஞ்சாவது வருஷம் வந்த்தும் ரோஷம் வந்து பதவி, கூட்டணி ரெண்டையும் விட்டு விலகுறாங்களாம். நல்ல கதையா இருக்கே. இதேமானங்கெட்ட வேலைய பார்த்த ராமதாஸுக்கும் பெரு ஆப்பு. ஒன்னு கூட தேறல.

தமிழக காங்., நிலைமை அந்தோ பரிதாபம்தான். பின்ன தேர்தல் நேரத்துல கூடஒண்ணும் பிரசாரம் பன்ணாம, ஒரு முயற்சியும் எடுக்காம இருந்த்துக்கு சிதம்பரம்முட்டிமோதி 3000சொச்சம் ஓட்டுல ஜெயிச்சதே பெருசு. அவரும் காசுகொடுத்தாராம். அதுக்கே இந்த நிலைமையா? இளங்கோவன், பாலு, மணிசங்கர்ஐயர் எல்லாத்துக்கும் சோலி முடிஞ்சிருச்சு. தி.மு..வும் இலங்கை பிரச்சனை தன்பக்கம் திரும்பக் கூடாதுன்னு காங்.,க்கு சரியா பிரசாரம் பண்ணல. பின்ன எப்படி? காங்கில ஒருத்தன் வேட்புமனு தாக்கல் செஞ்சா அவரு கட்சியிலயேஇன்னொருத்தன் அதிருப்தி காரணமா இன்னொரு வேட்பும்னு தாக்கல்செய்வான். இந்தக் கட்சி எப்படி முன்னேறப் போகுது.

திமுக 18 தொகுதில ஜெயிச்சிருக்கு. வெற்றிக்கு காரணம் ஹாஸ்பிடல்ல இருந்தஐயாவா இல்ல நோட்டுல இருக்குற ஐயாவான்னு ஒரு பட்டிமன்றம் நடத்தலாம். தான் ஒரு வலுவுள்ள எதிர்கட்சிதான்னு சொல்றவிதமா .திமுக 9 ஜெயிச்சிருச்சு. பரவாயில்ல. மதிமுக வைகோவிற்கே வெற்றி கிடைக்கலயே. அங்க பதிவானஓட்ட விட எண்ணிக்கையில வந்த ஓட்டுகள் அதிகமா இருக்குன்னு ஒருபிரச்சனைய கிளப்பிருக்காரு. என்ன்ன்னு பொறுத்திருந்து பார்போம்.

இங்க மதுரையில நான் சொன்னது நடந்திருச்சு பாத்தீங்களா? நான் சொன்னதுமாதிரியே அழகிரிக்குதான் வெற்றி, மாபெரும் வெற்றி. ஆனால், அவருசொன்னமாதிரி 3லட்சம் ஓட்டு வித்தியாசம் இல்லை. 1,43,945 ஓட்டுக்கள்வித்தியாசம். மொத்த ஓட்டுக்கள் மதுரை தொகுதியில 10லட்சம். அதுலபதிவானது 7லட்சத்து சொச்சம். ஆமாங்க, 75சதவித வாக்குப் பதிவாயிருக்கு. பின்ன, காந்தியே வீடு வீடா போயி வாக்கு கேட்டிருக்காரே, அழகிரிக்காக. அந்தபதிவான வாக்குகளில் 4லட்சத்து சொச்சம் அழகிரிக்கு. இப்ப சொல்லுங்க அவருசொன்ன அளவு வித்தியாசத்துல ஜெயிக்கறதுக்கு இடமில்ல, விஞ்ஞானப்படி. நாங்கதான் அப்பவே சொன்னமுல!

இதுலயும் ஒரு நல்ல மறுபக்கம் இருக்கத்தான் செய்யுது. இப்ப அமைச்சரானதாலகண்டிப்பா நல்லது செய்வாரு. பெரிய ஆளுங்க என்னைக்குமே தன்னோடதொகுதிய நல்ல வச்சுக்குவாங்க, அம்மாவோட ஆண்டிபட்டி, ஐயாவோடசேப்பாக்கம் இதற்கு உதாரணங்கள். அதனால ஊருக்கு ஏதாவது செய்வாங்க. பி.மோகன் நல்லவருன்னு ஊருக்குள்ள பேரு இருந்தாலும், அவருக்குபடிச்சவங்க வாக்குகள் விழுந்தாலும் அவரோட திட்டங்களுக்கு தடைகள் வரும். சிக்ஸுக்கு அப்புறம் செவன் டா, அண்ணனத் தாண்டி எவன் டா? அதனால்அஞ்சாநெஞ்சன் தவறாம தன் கடமைகளை செய்வாருன்னு நம்புறேன். இப்போமுதல் முறையா நேரடி அரசியல்ல இறக்குறதாலயும், அமைசாராகிறாதாலும்(ஆக்கிருவாங்க, பாருங்களேன்) கண்டிப்பா தன்னோடஇன்னபிற மர்ம நடவடிக்கைகள கொறச்சிருக்காரு. ரயில்வே அமைச்சர் லாலுஇதற்கு நல்ல உதாரணம். மதுரையோட தலையெழுத்தப் பார்போம்.

இனி இவங்க ஆட்டம் தாங்க முடியாது. அழகிரி பிறந்த நாள் எனதான் மதுரையிலபல பேருக்கு தெரியுதே தவிர, மற்றபடி அது காந்தி இறந்த நாள் (என்னபொருத்தம்!) என பல பேருக்கு மறந்திருச்சு. ஊரு முழுக்க தோரணம் கட்டி, ஒட்டிஒட்டியே கட்டக் கூடிய அளவுக்கு ஆயிரக்கணக்கான ஃப்ளக்ஸ் போர்டுகல வச்சு, ஊரு முழுக்க லைட்டு போட்டு, ஸ்பீக்கர் வச்சு அழகிரி புகழ் பாடல்கள் போட்டுஊரையே அசிங்கமாக்கி, கிராமத்து திருவிழா மாதிரி ஆக்குறத இனிமே தைரியமாபண்ணுவாங்க. எங்க காலெஜுக்கு பின்னாடிதான் ஓட்டு எண்ணிக்கை நடக்குறமருத்துவக் கல்லூரி. காலையில க்ளாஸ் நடக்கும் போதே வெடி வெடிச்சு தெரியவச்சுட்டாங்க. காலேஜ் முடிஞ்சு வரும் போது சிக்னல்ல வச்சு எல்லாருக்குசாக்லே குடுத்துருக்காங்க. என்னைய கேக்குறீங்களா? நான் வாங்கலீங்க... கொள்கையெல்லாம் இல்ல, எதிர்பக்கத்தில கொடுத்தாங்க, மிஸ் ஆகிடுச்சு. அதத்தாண்டி பாலத்துல இறங்குற இட்த்துல அந்தரத்துல டிராபிக் ஜாம். என்னடான்னுபாத்தா கீழக்கூட்டம். மெல்ல நழுவி வலதுப் பக்கம் திரும்பி வந்தேன். சுத்திஇருக்கறங்க எல்லாம் பைக்க உருட்டிட்டிருக்கானுங்க. உத்துப் பாத்தாஅவய்ங்கெல்லாம் கட்சிக்காரனுங்க. டிராபிக்க இட்து பக்கம் திருப்பிவிட்டிருந்துருக்காங்க. கட்சிக் கார்னுங்களுக்கு நடுவில கட்சிக்காரன் மாதிரிஇருந்த்து எனக்கு ஒரு மாதிரி இருந்த்து. எல்லாம் ரவுடி மாதிரி மாடுமாடாஇருந்தானுங்க ஐய்யோ சிக்கிட்டோமேன்னு நைசா நழுவி வந்துட்டேன்.

கடைசில என்னையும் அரசியல்வாதி ஆக்கிட்டீங்களே!

என்னிடம் ஓட்டு கேக்க வந்த அழகிரி - என்ன கொடும சார்

Filed under , , by Prabhu on 6/20/2009 06:05:00 PM

1

மதுரை தேர்தல் முடிவுன்னு சொன்னதுமே எல்லாத்துக்கும் அது என்னவா இருக்கப் போகுதுன்னு. இன்னைக்கு காலையில்தான் ஓட்டு போடப் போறேன். ஆனால், அதுக்குள்ள தேர்தல் முடிவு சொல்லக் கூடிய நிலைமை இருக்கு இங்க. மதுரையப் பொறுத்த வரைக்கும் தேர்தல் முடிவு என்பது வேட்புமனுத் தாக்கல் அன்றே எல்லாருக்கும் தெரிந்தது தான். இதை தனியே வேறு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இப்போ நான் பேச வந்த விஷயமும் அது அல்லவே.

மதுரையோட தேர்தல் நிலைமை மற்ற தொகுதிகளை ஒப்பிடும் போது சற்று வேறு்பட்டு இருக்கிறது. அதற்கு காரணம் நாம் அனைவரும் அறிந்த படி மதுரையின் முடிசூடா மன்னன், தமிழகத்து இளவரசன் மாண்புமிகு அஞ்சாநெஞ்சன் அண்ணன் அழகிரிதான்னு சொல்லவா வேணும். அட, பேருக்கே ஒரு பதிவு ஒதுக்கலாம் போலயே. என்னதான் மக்களுக்கு அழகிரியப் பத்தி ஒரு உயர்வான எண்ணம் இல்லைன்னாலும் இவர்தான் ஜெயிக்க வாய்ப்பிருக்கு.


அழகிரியோட அரசியல் வாழ்க்கை என்னைக்குமே நேர்முக அரசியலா இருந்ததில்ல. எப்பவுமே அவரு பிண்ணனி வேலைகள்தான். அதாவது தேர்தலில நிக்க மாட்டாரு. ஆனா கட்சி பணியில இருப்பாரு. சாமில வில்லன் பண்ணுவான் பாத்துருக்கீங்களா? அது மாதிரி. இந்த அஞ்சாநெஞ்சன், அண்ணன் போன்ற பட்டங்கள் எல்லாம் இப்ப ரெண்டு வருஷமாதான். இதுக்கு முன்னடியே அழகிரியோட அதிகாரம் மதிரையில இருந்திருந்தாலும் தா..கிருட்டிணன் கொலை வழக்குல சிக்கி கொஞ்சம் பெயரிழந்திருந்தாரு. ஆனா, இந்த தி.மு.க. ஆட்சி தொடங்கினதில இருந்து அழகிரியோட அதிகார மையமாவே ஆயிருச்சு. அண்ணே ஆ...ன்னு கொட்டாவி விட்டா அடிக்கிறதுக்கும், ச்சூ.......ன்னு சொன்னா சூச்சூ போறதுக்கும் ஆளுங்க வந்திட்டாங்க. மதுரையில சித்திரைத் திருவிழாதான் பெரிய திருவிழான்னு சொல்லுவோம். ஆனா, இத விட பெரிய திருவிழாவா கடந்த ரெண்டு வருஷமா அழகிரியோட பிறந்த நாள் நடக்குது. இந்த தடவ ஒரு படி மேல போய் ஐம்பத்தி எட்டாவது பிறந்த நாள ஐம்பத்தி எட்டு நாள் நடத்தியிருக்காங்க. ரெண்டு ஊரு முழுக்க லைட் போட்டுதிருவிழாவா கொண்டாடிருக்காங்க, இந்த கரண்ட் பஞ்சத்தில. இதுக்கு மட்டும் எங்க இருந்துதான் க்ரண்ட் கிடைக்குதோ? படத்தில வர்ற வில்லன் கணக்கா மதுரையில ராஜா மாதிரி , அந்தாளுக்கு ஏழரையா எம்.பி சீட்டு வந்து சேர்ந்துச்சு.

இதுவரைக்கும் அடுத்தவனுக்காக வேலை பார்த்தது வேற, இப்ப தனக்கே பிரச்சாரம்ங்கிறப்போ பல்வேறு பிரச்சனைகள். இந்த லட்சணத்தில அவரு சும்மா இல்லாம எங்க ஊருக்காரய்ங்கள போய் நம்பி மூணு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில ஜெயிக்கிறேன்னு சொல்லி சவால் விட்டிருக்காரு. சும்மா கிடந்த சங்க ஊதிக் கெடுத்த கதையா அவங்கதான் முதல்ல மதுரை சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு 1000மும், அப்புறம் திருமங்கலம் இடைத்தேர்தல்ல ஐயாயிரமும் குடுத்தானுங்க. அதனால இப்ப மக்கள் பணம் எதிர்பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. படிப்பறிவில்லாதவங்க காசு கொடுத்தா அவங்களுக்கே ஓட்டு போட்டுருவாங்க. எங்கள மாதிரி படிச்சவங்க காச வாங்கிட்டு பிடிச்சதுக்கு குத்திக்குவோம், முடிஞ்சவரைக்கும் காசு குடுத்தவனுக்கு குத்தாம பாத்துக்குவோம். எங்கள இன்னுமா நம்புறாய்ங்க. ஆனா, ஒரு அநியாயம் நடந்து போச்சு. நாட்டுல ஜனநாயகம் செத்துக்கிட்டிருக்கு. பின்ன? முதல் முறையா ஓட்டு போட வர்ற என்ன மாதிரி இளைஞர்களை உற்சாகப்படுத்தும் வகையா குடுக்க வேண்டிய சன்மானத்த கொடுக்கனுமா இல்லையா? எனக்கு மட்டும் வரவே இல்லைங்க. என்ன கொடும சார் இது?

இப்ப இந்த டீடெயில எதுக்கு சொல்றேன்னா, இதனால தான் இப்போ பிரச்சன. இதுல என்னன்னு கேட்டீங்கன்னா, இப்ப நாடாளுமன்றத் தொகுதிகள் பெருசு. அதனால எல்லாத்துக்கும் அளவாத்தான் கொடுக்க முடியும் எல்லாத்துக்கும் ஐநூறு ரூபாய் கவர்கள்தான். ஆனா மக்கள் என்ன நினைக்கிறாங்கன்னா, அவரு கொடுக்கறத இவனுங்கதான் ஆட்டய போடுறாங்கனுங்கன்னு. இத்தனைக்கு அந்த கவர் அவரோட நிர்வாகிகள்க கிட்ட இருந்து வர்றப்பவே சீல் பண்ணிதான் வருது. அப்படியும் ஆட்டய போட்டுற கூடாதுன்னு ஒரு நிர்வாகிய கவர் விநியோகத்தப்போ அனுப்பி வைக்கிறாங்களாம். இதுக்கப்புறமும் அங்க நிலவுற அதிருப்திய தடுக்க முடியல. என்ன செய்யவென்று புரியாமல் அவர்கள் சில இட்ங்களில் மறுவிநியோகம் வேற பண்ணிக்கிட்டிருக்காங்க. ஆனா ஆசை யார விட்டது? ஒருத்தரு அவருகிட்ட போய், "ஐயா, திருமங்கலத்தில இருக்குற என் உறவுக்காரங்கள் எல்லா குடிசையில இருந்து ஓட்டு வீட்டு மாறிட்டாங்க.நான் மட்டும் குடிசையில எப்படி இருக்க்கறது? வழி பண்ணுங்க", எனவே கேட்டிருக்கான். என்ன கொடும சார்?

அழகிரி நேத்துதான் எங்க வீட்டு பக்கம் வந்தாரு, ஓட்டு கேக்க. எங்க வீட்டுப்பக்கம்தான் அவர் வீடு. அதாவது, பெரியார் நிலையத்து வழியா வந்தீங்கன்னா, அடுத்து சுப்ரமணியபுரம், ஜெய்ஹிந்த்புரம்(இங்க நான்), ஜீவா நகர், டி.வி.எஸ. நகர்(இங்க அண்ணன்). அட, பாத்தீங்களா எவ்வளவு பக்கமுன்னு.
அதனாலதான் கடைசி நாளா இங்க வந்திருக்காரு. மத்தியான நேரம், கடும்ம வெயில். அளவான மக்கள் வீடு வாசல்ல இருந்தே பாக்குற அளவு கிட்ட வந்தாரு. ஒவ்வொரு முகமா நிதானமா பாத்து கை கூப்பி ஓட்டு கேட்டுக்கிட்டே போனாரு. ஆளு அக்கினி வெயில்ல நல்லா கருத்திட்டாரு. இவ்வளவு காலம் ஏ.சியிலயே இருந்திட்டு இப்ப வெளிய வந்தா? உங்களயெல்லாம் பாத்தா பாவமா இருக்கு. எங்கள நம்பி இவ்வளவு பெரிய மேட்டர கையில எடுத்திருக்கீங்க. நம்மள இன்னுமா நம்புறாய்ங்க! என்ன கொடும சார் இது!


ஆனா சும்மா சொல்லக் கூடாது இந்த கருணாநிதிய. பெரிய தில்லாலங்கடிதான். தன் கடைசி காலத்தில எல்லா பிள்ளைகளுக்கும் வாழ்க்கைக்கு வழி செஞ்சிட்டாரே. ஸ்டாலினுக்கு சட்டமன்றம், அழகிரிக்கு நாடாளுமன்றம், கனிமொழிக்கு ராஜ்ய சபான்னு ஏதோ இந்த தமிழ் நாடே தன்னோட சொத்து போலவும், தான் இந்தநாட்டின் ராஜா போலவும் பிரித்துக் கொடுத்து விட்டாரே, இந்த தமிழீனத் தலைவர். என்ன ஒரு வில்லத்தனம்!

அழகிரிக்கு வெற்றி பெரிசில்லைன்னாலும் அந்த மூணு லட்சம் ஓட்டு மேட்டர் ஒரு தன்மானப் பிரச்சனையாவும், ஓட்டுக்கு லஞ்சம் மேட்டர் அவர் பதவி ஆசைக்கே உலை வைக்கிற பிரச்சனையாவும் இருக்கு. பொறுத்திருந்து பார்ப்போம்.

ஹேய், இருந்தாக்கா அள்ளி கொடு, இல்லேன்னா சொல்லி கொடு

Filed under , by Prabhu on 6/17/2009 09:29:00 PM

1

என்ன தலைப்ப பாத்ததுமே புரிஞ்சிருக்குமே.... எதப் பத்தின்னு தெரிஞ்சிருக்கும். ஹேய் எவன்டா அது சிரிக்கிறது...மவனே டாராயிருவ... அண்ணன் எவ்ளோ நல்லவருன்னு தெரியுமா.... கொடை வள்ளல்கள் ஏழு இல்லடா...எட்டு....


ஒ.கே. கட்...
பப்பு, நீங்க எவ்ளோ பெரிய பிரபலம்! ஏன் திடீர்னு ரித்தீஷோட பிரசார ஷூட்டுக்கு வர்றீங்க?

அதுக்கு காரணம் அவரோட கொடைத்தன்மையும்(வெரி இம்பார்டண்ட்!), தமிழ்மக்கள் மேல் அவருக்கு இருக்குற அக்கறையும் தான்(அதெல்லாம் அப்புறம்தான்). அவரு செஞ்ச விஷயங்கலெல்லாம் கேட்டீங்கன்னா அசந்து போய்டுவீங்க! அவரு படம் போடுற அன்னைக்கு எவ்ளோ பிரியாணி கடைகள் பிழைக்குது தெரியுமா? வாழ்நாளில தியேட்டரே பாக்காத பிச்சைக்காரங்களுக்கு கூட தியேட்டர பாக்க வச்ச ஏழைகளின் பங்காளன். ரஜினியோட குசேலன் ரிலீஸ் பண்ணி நொடிச்சவனுங்க கூட இருக்காங்க, ஆனா எங்க அண்ணன நம்பிக் கெட்டவன் எவனும் கிடையாது.

உங்களுக்கு சொன்னாப் புரியாது, எங்க அண்ணன் கிட்ட வந்து ஏதாவது உதவி கேட்டு பாருங்க. என்ன உதவி? எதுனாலும். ஏரியா ஃபங்ஷனா ரூ.5000, கல்யாணமா ரூ.50000, அட இவ்ளோ என்னங்க, வளைகாப்புக்கு கூட ரூ15000 குடுக்குறாருங்க! அட இதுக்கெல்லாம் அவரு பிரதிபலன் எதிர்பார்க்கிறதில்ல. அவருக்கு கட் அவுட் வச்சா மட்டும் போதும். அட், அதையும் அவரே சொந்த செலவுலயே வச்சிருவாருங்க. எந்த அரசியல்வாதிங்க இதெல்லாம் பண்ணுவா? அட, நீங்க ஒரு பிச்சக்கார.......(அட, முடிக்க விடுங்கப்பா!)னுக்கு ஒரு ரூபா போடுறதுக்கு முன்னாடி அமெரிக்காவோட அணு ஆயுத ஒப்பந்தம் பண்ற மாதிரி ரியாக்ஷன் குடுப்பீங்க. ஆனா, எங்க அண்ணன் யோசிக்காம செய்வாரு.ஆனா ஃபோட்டோ எடுத்துக்குவாரு(வரலாறு மிக முக்கியம் அமைச்சரே!).
அவரு படத்துக்கு எல்லாத்துக்கும் டிக்கட். பில் கேட்ஸே படம் எடுத்தாலும், கொள்ளையா காசு வச்சி வித்துருவான். ஆனா, எங்க அண்ணனோ பணம் குறிக்கோளா இல்லாம, படத்துக்கு செலவு பண்றதோட நிக்காம எல்லாத்துக்கும் இலவசமா காட்டி, தமிழ் மக்களுக்கும் தியேட்டர் ஓனர்களூக்குமான செலவுகளையும் தாங்கிக்கிற சுமைதாங்கி!

முதல்முதல்ல இவர பத்தி எப்படி தெரிய வந்தது?
காலேஜ்ல கலாட்டவா ஆயி ஸ்ட்ரைக் ஆயிடுச்சு. அதனால நிறைய லீவு கிடைச்சது. அதனால என் நண்பர்கள் சிலர் ஊர் சுத்தனும்னு முடிவு பண்ணாங்க. கன்யாகுமரில இருந்து சென்னை வரை சைக்கிள்ல சுற்றுப் பயணம். கேட்டா உலக அமைதி வேண்டியாம். அடப் பாவி, உன்னாலதானடா காலேஜ்ல சண்டை ஆகி லீவு விட்டுருக்காங்க! இதோட முடிவுல அமைச்சர் ஸ்டாலின பாத்துட்டு வர்றதா ஒரு முடிவு. அந்த இடத்துல வந்தாரு நம்ம தலைவர் ரித்தீஸ். அப்போ அவரோட ஷூ லேஸ் எதிர் கட்சியினரின் திட்டமிட்ட சதியால அவுந்திருச்சு! கட்ட முடியாம கஷ்டப் பட்டிருக்காரு தலைவர். ஷூ லேஸ் கட்டத் தெரியாம இல்லீங்க. கடவுளே வந்து நின்னாலும் குனிஞ்சு நிக்க மாட்டாரு. நீங்க கட்டத் த்ரியாதுன்னு நினைச்சிட்டீங்களா?ச்சே....ச்சே.... அங்க காத்திருந்த என் நண்பன் ஹெல்ப் பண்ணிருக்கான். உடனே பாக்கெட்ல இருந்து 500ரூ எடுத்து கொடுத்தாரே எங்க தானைய தலைவர்! இப்போ சொல்லுங்க எங்க தலைய அடிச்சுக்க ஆளிருக்கா?

இவ்வளவு பண்ணினவருக்கு ஒரு அங்கீகாரம் வேணாமா? அதத்தான் சொல்ல வரேன். இப்போ அவருக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கிருக்காங்க. இப்பவும் எதுக்காக தேர்தல்ல நிக்குறாருன்னு நினைக்குறீங்க. மக்களுக்காகதான். எத்தன அரசியல்வாதிய பாத்துருக்கீங்க. எல்லாரும் காச அடிப்பாங்க. ஆனா, எங்க கலியக கர்ணன் தனக்கு மிஞ்சியது போக தானமும் பண்றார். அந்த நல்ல மனசு யாருக்கு வரும்?

"ஹேய், இருந்தாக்கா அள்ளி கொடு, இல்லேன்னா சொல்லி கொடு; நம்ம வழி நல்ல வழிடா!"

டிஸ்கி: எனக்கு ஒரு கவர அண்ணன் அனுப்புவாருன்னு நினைக்கிறேன்.

டிஸ்கி2: ஓட்டு போடாதவர்களுக்கு அண்ணன் சார்பில் ஆட்டோ அனுப்பி வைக்கப்படும்.

ஆத்தா....எனக்கு வேல கிடைச்சிருச்சு

Filed under , by Prabhu on 6/17/2009 09:26:00 PM

0

பிடுங்கறதுக்கு ஆணி இல்லன்னு நான் பதிவிட்டிருந்தேன் பாத்திருக்கீங்களா? அதுல ரிசஷனால வேல ஒருத்தனுக்கு இல்லங்கறதப் பத்தி சொல்லியிருந்தேன். அதுலயும் சும்மா இல்லாம அமிதாப், பாக்யராஜ் இவங்கள எல்லாம் இழுத்து பேசிருப்பேன். அப்போ இதெல்லாம் ஏன் இவன் இவ்ளோ அக்கறையா யாரும் யோசிச்சிருக்க மாட்டீங்க! எனக்கு புடிச்ச ஸ்டையிலில சொல்லனும்னா,

'உனக்கேன் அக்கறை? ஊரில் யாருக்கும் இல்லாத அக்கறை?"
"நானே பாதிக்கப் பட்டேன் நேரடியாக பாதிக்கப் பட்டேன்"
"சுய நலம் என்பீர்கள். ஆனால் இந்த சுயநலத்திலும் ஒரு பொது நலம் இருக்கத்தான் செய்கிறது"(அதானப் பார்த்தேன்)

இப்படி பேசிக்கிட்டே போகலாம். ஆனா, சொல்ல வந்த மேடர் என்னன்னு சொல்லனும்ல. எனக்கு வேல கிடைச்சத விட்டுட்டு வேற எதப் பத்தியோ பேசிக்கிட்டிருக்கேன். என்ன்ன்னனனது... உனக்கு வேல கிடைச்சதா? உனக்கெல்லாம் யாருடா வேல குடுத்தாருன்னல்லாம் கேட்டு, ஏற்கனவே ஏமாந்த அந்த சோணகிரிய மேற்கொண்டு நோகடிக்காதிங்க.பாவம்ல, என் படியளக்குற எசமான். ஒய் பர்னிங் ஸ்மெல்யா? ஏற்கனவே பல பேர் வயித்தெரிச்சல கிளப்பியாச்சு போல. இன்னும் கேளுங்க எனக்கும் எங்க அண்ணன் போல பெங்களூர்ல வேல கிடைச்சிருக்கு. இப்போ புரிஞ்சிருக்குமே! ஆமாங்க, ஐ.டி. ஜாப்தான். ஊருக்குள்ள பல பேருக்கு வேல இல்லாதப்போ உனக்கு எப்படி வேல கிடைச்சதுன்னு கேக்குறீங்களா? கேம்பஸ் இன்டர்வியு.அது பெரிய ஸ்டோரிங்க"காமெடி ச்டோரியா" ஆமாங்க, ஊரே சிரிக்கும். இங்க பாருங்க, என்ன கடுப்புனாலும் அடக்கிக்கோங்க, புகை ஜாஸ்தி ஆயிட்டு இருக்கு. யப்பா, பு(ப)கை தாங்கல, ஃபயர் இன்ஜினுக்கு போன் போடுங்கப்பா! அவங்க வர வரைக்கும் கீழ இருக்குற 'வேல' சோக்கெல்லாம் பாத்து ரசிங்க!





cartoon archive at funnytimes.com






எப்படிங்க சோக்கெல்லாம்? நல்லாருந்ததா? ஆமா, உங்கட்ட ஒண்ணு கேக்கணும்னு நெனச்சேன். நீங்க அம்புட்டு நல்லவரா? சொல்றதெல்லாம் நம்பிருக்கீங்க! ஏங்க இந்த ரிசஷன்ல ஒருத்தன் வேல கிடைச்சிருக்குன்னு சொன்னா நம்பிருவீங்களா? அதுவும் ஐ.டில கேம்பஸ் இண்டர்வியுவிலன்னு. ஹா.. ஹா... அய்யோ...அய்யோஒ....ஹோ...ஹோ...
(போதும்டா அடக்கு!)...எப்டிங்க இதெல்லாம்? ஏப்ரல் ஒண்ணும் அதுவும வந்து காமெடி பண்ணிட்டு இருக்கீங்க! மேனேஜ்மென்ட் படிச்சவனுக்கே வேல இல்லதப்ப, அண்டர் கிராஜுவேட்டுக்கு எவன் வேல குடுக்குறான்!

கேக்குறவன் கேனைப் பயனா இருந்தா எலி ஏரோப்ளேன் ஓட்டும்னு எங்க ஊர்ல சொல்லுவாங்க!

கழிப்பறை இலக்கியம்

Filed under , , by Prabhu on 6/17/2009 09:07:00 PM

2

இலக்கியம், கதை, கவிதை, உரைநடை, கல்வெட்டு, நாடகம், சினிமா, ப்ளாக் என பல வகையில நம்மல சுத்தி இருக்கு(நீயெல்லாம் இலக்கியத்தைப் பத்தி பேசுற? உன் லாங்க்வேஜ் மார்க்க சொல்லவா?). இதுபோல இன்னும் பல வகையான இலக்கியங்கள், பல வகையான ஊடகங்களில் நம்மல சுத்தி இருக்கு. ஆனா இதுவரைக்கும் கவனம் பெறாத சில இலக்கியங்கள் இருக்கு. அதுல ஒண்ணுதான் கழிவறை இலக்கியம். அங்கே காணப்படும் கருத்துக்கள் ஒவ்வொன்றும், 'இவன் பின்னாளில் பெரிய ஆளாக வருவான்'(இதெல்லாம் எங்க உருப்படப் போகுது?), எனத் தோன்ற வைக்கும். சில உதாரணங்கள்,

"இளைஞர்களே, இந்தியாவின் எதிர்காலம் உங்கள் கையில்.... (ஆமா, இவன் பெரிய விவேகானந்தர்... போடா....) "

"WIFE- wonderful Instrument For Enjoyment"

"மாணவர்களே, மேன்மேலும் தேர்ச்சி ஆகி காலேஜை விட்டுச் சென்றுவிட உங்களைப் போன்ற நன்றி கெட்டவன் இல்லை. நாங்கள் ரிப்பீட் வைத்துள்ளோம். மீண்டும் அடுத்த வருடமும் வந்து காலேஜை பத்திரமாக பாத்துக்குவோம்- இப்படிக்கு கல்லூரியின் செல்லப் பிள்ளைகள்"

"ஏண்டா இப்படி கிறுக்குறீங்க, அதுவும் பெண்களைப் பற்றி? உன் தங்கச்சின்னா இப்படி செய்வியா?", என பெண்களைப் பத்தி எழுதியத தட்டிக் கேட்க(எழுத), அதற்கு இன்னொருத்தன், "தைரியம் இருந்தா இத___ டிபார்ட்மெண்டுக்கு வந்து சொல்லிப் பாருடா, %&டு^^&*(#@%@!". இப்படியே பதிவுக்கு எதிர் பதிவு போடுற மாதிரி பேசிக்கிட்டே போவானுங்க!.

Urinal மேல் எழுதப்பட்டிருக்கும் வாசகம்.
"உங்கள் எதிர்காலம் இப்பொழுது உங்கள் கையில்(?!)(கையில அப்போ எதிர்காலம்(ஒருவேளை....) எதுவும் இருக்கறதா தெரியலயே?!)"


காலேஜ் டாய்லெட்ல ஒருத்தன் கவிதை எழுதிருந்தான் பாருங்க.... அட,அட அத கீழ கொடுத்திருக்கேன். அது என்ன, யாருடையதுன்னு யூகிச்சுப் பாருங்க.

"மண்காட்டி பொன்காட்டி மாயஇருள் காட்டி
செங்காட்டில் ஆடுகின்ற தேசிகனை போற்றாமல்
கண்காட்டும் வேசியர்தம் கண்வலையில் சிக்கிமிக
அங்காடி நாய் போல அலைந்தனையே நெஞ்சமே"


அது யாருன்னு தெரியுதா? பட்டினத்தார் பாட்டுங்க. என்ன இலக்கிய உணர்ச்சி! என்னே கருத்துச் செறிவு! இதுக்கு கீழ niceனு ஒரு கமெண்ட் வேற.எனக்கும் பிடிச்சாலும் அது என்ன pappuவோட ப்ளாக்கா, கமெண்ட் போட? கரெக்டா சொல்லனும்னா, சிவன விட்டுட்டு பெண், செல்வம் பின்னாடி நாய் மாதிரி சுத்துறியே, நாயேன்னு தன் மனசப் பாத்து கேட்டுகிறாரு.செலவத்தையோ, பொண்ணயோ தேடாம சிவனத் தேடுன்னு சொல்றாங்க. (இந்த வெண்ணைய அன்னைக்கு ப்ரியா பின்னாடி பாத்தேனே! டேய் கொய்யா...). ஒரு சரக்கு இருக்கு, அதையும் பாத்துருங்க.

"பெண்ணை நம்பிப் பிறக்கும் போதே தொப்புள் கொடிகள் அறுபடுமே, கேளடா... மானிடா... "

இது மாதிரியா போகுது அந்த கவிதை.இது நம்ம உலகநாயகனோடது. ஆளவந்தான்ல மொட்ட கமல் ஜெயில்குள்ள இருந்து சொல்லுவார்.

இன்னொரு கவிஞர் 'நான் கடவுள்'ன்ற புனைப் பெயர்ல எழுதினதயும் பாத்துருங்க! (இவனுங்கள எல்லாம் அகோரிய விட்டுத்தான் போட்டுத் தள்ளனும்)

"கண்ணென்றும் மூக்கென்றும் காதென்றும் - உன்
கண்ணெதிரே மாதென்று சொல்லிவரும் மாயைதன்னை
எமன்விட்ட தூது என்று எண்ணாமல் சுகம் என்று
நாடும் துர்புத்தியை ஏதென்று எடுத்துரைப்பேன்"

(கண்டிப்பா இது அவனோடது இல்ல, பட்டினத்தாராத்தான்ன் இருக்கனும்)
இதுவும் பொண்ணுங்களப் பாத்து ஏன் பயப்படுற மாதிரியே எழுதறானுங்க? ஹோமோசெக்ஷுவல்சோ, கேர்ள் பிரண்டு கிடைக்காதவனோ தான் இந்த மாதிரி கழிப்பறை இலக்கியத்தின் சிறந்த எழுத்தாளர்களா ஆவாங்களோ? ஆனா இந்த மாதிரி நாயிங்கதான் பொண்னுங்கள டீஸ் பண்ணுற மட்டமான வேலைகளில் ஈடுபடுவானுங்க!என்ன கருமமோ!


பேட்மேனுக்கு அவர் symbol எல்லாத்துலயும் போடுவாங்க. இதுல போடுவாளோ, போட்டுடாளே!

இதே போல ரயிலிலும் உண்டு. அங்கேயும் கழிப்பறையில் தனது கட்சிக் கொள்கையை பிரசங்கிப்பவனும், தேர்தல் அறிக்கையை பிரகடனப்படுத்துபவனும், ஆண்,பெண் குறிகளை அளவில்லாத ஆர்வத்துடன் ஆராய்ச்சி செய்பவனும், அதை அங்கே செதுக்க முற்படுபவனையும் நல்லாவே பாக்க முடியும். மனசுல மைக்கலேஞ்சலோனு நினைப்பு, செதுக்குறானாம். இவனுங்களுக்கெல்லாம் 'விக்ரம்' படத்தில கமல் சொன்ன மாதிரி(விக்ரம் படத்தில கமல் எப்டி வருவாருன்னு கேக்காம கவனிங்க!) ஒரு ட்ரீட்மெண்டை செய்ய வேண்டியதுதான். அது என்னன்னு சொல்லமுடியாது. ஏற்கனவே ஆபாசம்னு சொல்லிருவாங்கனு பயப்படுறேன், அதச் சொன்னா எல்லாரும் ஒதுக்கி வச்சிரப்போறாங்க. நா இப்போதாங்க வளரும் ப்ளாக்கர்.

அப்புறம் இன்னொரு வகை லூசுங்க இருக்கானுங்க. ரயிலில அவனுங்க காதலுக்கு சாசனத்தைப் பொறிச்சுக்கிட்டு இருப்பானுங்க. இந்த மன்மதன் அந்த ரதியோட பேர சாவியால செதுக்கி நடுவுல ஹார்ட் போட்டு உள்ள அம்பு உடுவானுங்க. இந்த மாதிரி கேசுகளில் பல கண்டிப்பாக ரிடர்ன் வரும்போது 'சரோஜா' பிரேம்ஜி மாதிரி வேற ஒருத்திய சுத்தி தேவதைகள சுத்த விட்டுட்டு இருப்பானுங்க. அவளுக்கு ஒரு கல்வெட்டு வரும்போது (திரும்பவுமாஆஆஆ!)(க்க்ர்ர்ர்ர்ர்....) .

பாத்தீங்களா, இந்த மாதிரி ஆசாமிகளுக்கெல்லாம் ஊரிலுள்ள எல்லா கழிப்பறைகளிலும் ஒரு சிலை வைத்து அங்கீகாரம் அளிக்க வேண்டும். கழிப்பறைகளுக்கு அவங்க பேர வச்சு, போர்டு பக்கத்தில அவங்க போட்டோ போட்டுட வேண்டியதான். அவங்களுக்காக சாகித்ய அகாதமில ஒரு புது பிரிவு துவங்க வேண்டிய கடமை நமக்கு இருக்கு.பின்ன, ஊர்ல எல்லா கலைஞர்களையும் மதிக்கிற நாம இவங்கள மட்டும் புறக்கணிச்சா காலம் நம்மை மன்னிக்காது. இதை நாம கவனிக்கலைனா இந்தக் கலை அழிந்துவிடக்கூடும். அதனால நலிவுற்றோர் சன்மானத்தொகைய பரிந்துரை செய்கிறேன்.


ஒரு கழிப்பறை இலக்கிய எழுத்தாளர்.
இதையெல்லாம் அனுமதிக்குது பாருங்க நம்ம நாடு ...... வாழ்க ஜனநாயகம்!!!!

இத இப்படியே விட்டரலாம்தான். ஆனா போதுமான சேம் ப்ளட் வரலயே. அதனால ஒரு ஜோக்(நீயெல்லாம் பதிவெழுதுறதே ஒரு ஜோக் தான்). ஒருத்தன் டாய்லெட்ல உக்காந்துருக்கான், வெஸ்டர்ன்ங்க. இப்பொ அவன் கஷ்டத்தை அவன் வாயாலயே கேப்போம் (அவன் அங்க முக்குறதையா?). நான் உக்காந்திருந்த போது பக்கத்து ஸ்டாலிலிருந்து குரல், "எப்படி இருக்கீங்க?". பொதுவா டாய்லட்ல வந்து நட்புறவு உரையாடல் ஆரம்பிக்கிறவன் இல்ல. ஆனாலும், நல்லாதான் இருக்கேன்னு சொல்லி சமாளிச்சேன்.
"எங்க போறீங்க?'
(டாய்லெட்லருந்து விண்வெளிக்கா போகபோறேன்.என்னமாவது சொல்லனுமே.)
"உங்கள மாதிரிதாங்க, சென்னைக்கு)"
"அங்க என்ன பண்ணலாம்னு இருக்கீங்க? நான் வேணா உங்களோட வரவா?"
(அவனா நீயு? be careful, என்னைய சொன்னேன்)
"இல்லீங்க. இன்னைக்கு எனக்கு வேற ஒருத்தர் வரேன்னு சொல்லிட்டாரு. அதனால் உங்களோட வர சான்ஸ் இல்ல."
உடனே அவன் பதறின குரலில், "இங்க பாரு, உன் கிட்ட பேசுறதுக்கெல்லாம் இங்க ஒரு நாதேரி பதில் சொல்லி கொல்லுறான். அவன் என்ன 'கேட்டகரி'ன்னு வேற தெரியல."

இதுக்கும் ப்ளட் வரலைனா கீழ இருக்குறதுதான் உங்களுக்கு ப்ளட் வர ஒரே வழி!

மொக்கை (அ) பின் நவீனத்துவம்

Filed under , , , by Prabhu on 6/02/2009 10:14:00 PM

0

இதுக்கு முந்தின பதிவ பாத்துட்டு என்னடா சுத்த தமிழ்ல எழுதி கொல்றானேனு நினைக்கத் தேவையில்லை. அதெல்லாம் முதல் பதிவு, அதுவும் தமிழ் பற்றின பதிவுனு அப்படி எழுதினேன். இப்போ கொஞ்சம் கேஷுவலா பேசிக்கலாம். பதிவர் பரிசில்காரன் ஒரு பதிவு சில நாட்கள் முன்பு எழுதி இருந்தார், 'பின்நவீனத்துவ பித்தனானேன்.' என்ற தலைப்பில். அது வரை அப்படினா என்னவொ ஏதோனு இருந்தேன். "எதுக்கும் அடங்காத, இப்படித்தான் இருக்கும்னு சொல்லமுடியாத எழுத்துதான் பின்நவீனத்துவம்"-அப்படினு சொல்லிருந்தாரு. வடிவேலு சொன்ன மாதிரி ஒரு கட்டுக்கடங்காத காட்டெருமையா எழுதனுமோனு நினைத்த போது
"நீங்க வழக்கமா ஹீரோ என்ன செய்யணும்னு நெனைக்கறீங்களோ அதை அவன் செய்ய மாட்டான். அப்போ அது பின்நவீனத்துவப் படமாகுது" னு சொன்னப்ப தான் பல விஷயங்கள் தோணுச்சு.

முதல் விஷயம், இப்படி சீரியசா பேசும் போது திடீர்னு ஒருத்தன் எதிர்பாராதத சொல்லும் போது அது பின்நவீனத்துவமோ என்னவோ, என் அறிவுக்கு எட்டின வரை அது சுத்தமான, கலப்படம் இல்லாத அக்மார்க் மொக்கைனு சொல்வேன். உதாரண்த்திற்கு, "டேய் மச்சான், உன் கிட்ட ஒன்னு சொல்லணும்டா சொன்னான். சொல்றா மாப்ளனு சொன்னேன். காத குடுடா, ரகசியம்னு சொன்னான்" (காத குடுத்துட்டு நீ என்ன பண்ணுவனு எனக்கே மொக்க போடகூடாது). நானும் கேனைப் பய மாதிரி காத தீட்டிகிட்டு உக்காந்தா "நாட்டாமை தம்பி பசுபதி டீச்சர வச்சிருக்காந்டோஓஓஓஒய்ய்ய்" எனப் பெருசா கூவுறான். எனக்கு வெறி ஏறிக்கிட்டு இருந்த போதே பக்கத்தில இருக்கிறவன் அவன் கன்னத்தில பளீர்னு ஒண்ணு விட்டான், "ஏண்டா மொன்ன நாயே, முன்னாடி பாடம் நடத்துறேன்னு அவன் போடுற மொக்கை போதாதுனு நீ வேறயா?". இவனோட முழுமுதல் கொள்கை அடுத்தவன வெறுப்பேத்தி, கொலைவெறியனா ஆக்குறது. இத சொல்லிட்டு இந்த காதில இருந்து அந்த காது வரை 'ஈஈஈ'னு சிரிப்பு வேற.இது ஒரு வகை மொக்கை.

அட, இது பரவாயில்ல, இன்னொரு டைப் இருக்கு. முதல் டைப் ஆள அடிச்சு ஆறுதல் அடைஞ்சிடலாம். இரண்டாவது ஆசாமி மெல்லவும் முடியாம, முழுங்கவும் முடியாம, போன வார அல்வா மாதிரி சவ,சவன்னு சாவடிப்பானுக. சென்னை போனப்போ, தியேட்டர் கவுண்டரில் நின்னுகிட்டு ஆந்திர சாப்பாட்டோட காரத்தை பத்தி கஸினோட பேசிட்டிருந்தேன் (அப்ப ஆந்திர பொண்ண சைட் கூட அடிச்சதில்ல, என் நேரம் பேசித்தொலஞ்சிடேன்.) அப்போ பக்கதில இருந்த ஒரு "ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிகாம்ணி" பிடிச்சுகிட்டாரு. "ஆந்திரா புட் பாதிங்கனா...." அப்படி ஆரம்பிச்சவந்தான்.. .. "ம்ஹூம்....இவன் நிறுத்த மாட்டான். டேய், கவுண்டர திறங்கடானு" என் கஸின் கத்துறான். "பொறுங்க தம்பி திறப்பாங்க, நிதானமா இருக்கனும்" இது அந்த சிகாமணி. "டேய், மப்பில மொக்க போடுறவனெல்லாம் என்ன நிதானமா இருக்க சொல்றான்னா, அதுக்கு நீயும் உன் ஆந்திர சாப்பாடும் தாண்டா காரணம்னு" இந்தப்பக்கம் இவன் முறைக்கிறான். அந்த மொக்கயோ, நீ பொழப்புக்கு மொக்க, நா பொற்ந்ததிலிருந்தே மொக்கன்ற ரேஞ்சுக்கு போய்டிருக்கான். கடவுளோட அருளால கவுண்டர் திறந்து டிக்கட் வாங்கிட்டு உள்ள ஒடினா, அந்த இருட்லயும் எங்கள கண்டுபிடிச்சு, 'தம்பி இதோ வரேன்னு' சொன்னவனுக்கு கடுக்காய் குடுத்து எஸ்கேப் ஆவுறதுக்குல்ல, யம்மா....... அதுக்கப்புறம் இடைவேளை வரை என்னிடம் பேசவே இல்லை, என்னோட கஸின்.

இவ்வாறு மொக்கை மாணவ(காமெடி) மொக்கை, ஆசிரிய(சீரியஸ்) மொக்கை என இரு கூறுகளாக வகைப்படுத்த்ப்படுகிறது.


அந்தப் படம் என்னனு சொல்லலையே, ரன்.