சமீபத்தில் ( 16.11.09) செய்தி கேட்டுக் கொணடிருந்தேன். இந்திய மீனவர்களை இலங்கை வீரர்கள் தாக்கிய சம்பவம் பற்றி கூறிக் கொண்டிருந்தார்கள். வழக்கமா அவனுங்க பண்ணுற அநியாயம் தான என கேட்டா ஒரு விந்தையான விஷயம் சிக்கியது. அவர்களை அடித்ததவர்களில் சீனர்களும் இருந்திருக்கிறார்கள். சீனக்காரர்களுக்கு இங்கு என்ன வேலை என்று நீங்கள் கேட்கலாம். அதுதான் புரியவில்லை. ஏற்கனவே இலங்கையில் ரேடார் வைக்க முயற்சிகள் நடந்தன. இதைப் பற்றியெல்லாம் ஏற்கனவே
இங்கு பேசியிருக்கிறேன். இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் விமானங்கள் கொடுத்ததுடன் பயிற்சியும் கொடுத்துள்ளது. மியான்மரில் விமானதளம் வைத்துள்ளது. 1982லபாக்.,கிற்கு ந்யூக் கொடுத்ததா கேள்வி. என்ன பண்ணுறாய்ங்கன்னு தெரியல. விரைவில் உலக போலீஸ்-2 ஆகலாம். ஏன்னா நம்மளப் பற்றி பல வகையில புலம்ப ஆரம்பிச்சிருக்காங்க (அமெரிக்கா பிடிக்காதவங்களப் பத்தி புலம்புற மாதிரி).
---------------------------------------------------------------------------------------------------------------
விஜய் 'மதுர', அஜித் 'ரெட்', விஷால் 'திமிரு' என பல தேறாத படங்கள் மதுரையை மையமாக வைத்து எடுத்த போது கூட நான் கவலைப் படவில்லை. ஆனால் இப்போ 'மதுரை சம்பவம்' என ஒரு படம் வந்தது பாருங்க, அதுமாதிரி ஒரு அவமானம் கிடையவே கிடையாது இந்த ஊருக்கு. கொஞ்ச நாள் முன்ன வரை அப்பப்ப விளம்பரம் வேற டிவியில் போட்டு கொன்னுட்டாங்க. எல்லாருக்கும் ஒரு படம் பிடிக்க வில்லை என்றால் வெறுப்பு வரலாம். ஏன் கோபம் கூட வரலாம். உ.ம்.சன் திரைப்படங்கள். ஆனால் இந்த படத்தின் டிரைலர் பார்க்கும் போதெல்லாம் ஒரு மாதிரி கூசுது, அவமானம் எனக் கூட சொல்லலாம். எனக்குதான் என நினைத்தால் எனக்கு தெரிஞ்சு நண்பர்கள் பற்பல மக்கள் இதைத்தான் சொல்றாங்க. எங்கம்மாவுக்கே எரிச்சலா இருக்கு. இந்த அவமானம் தேவையா? அதுவும் அந்த ஹீரோ பேசுற தமிழ் இருக்கே... யப்பா.... மதுரைத் தமிழாம். இந்த ஒத்த வார்த்தைக்கே தூக்கு போட்டுக்கலாம் போல. ஹாலில் தனியாக டிவி பார்க்கும் பொழுது இந்த டிரைலர் போட்டால் ஒரு முறை சுற்றிப் பார்த்துக் கொள்வேன், யாரும் நம்மள பாக்கலையே!
மதுரை சிட்டி. நான் சிட்டி யூத். எங்க ஊரில யாரும் தாவணியில் கல்லூரிக்கு போவதில்லை(கார்த்திக் நோட் பண்ணிக்கோ!). எல்லோரும் ஜீன்ஸ் அணிகிறோம். காஃபி ஷாப் போகிறோம். பீஸா, பர்கர் போன்ற உடலுக்கு ஒவ்வாதவைகளை உள்ளே தள்ளுகிறோம். அதனால நாங்களும் சிட்டிதான்! இனிமே எவனாவது வந்து தாவணி, பட்டிகாடு, அரிவாள், ரவுடி, கிராமத்து காதல் கதைனு வந்தீங்க..... நடக்குறதே வேற.
--------------------------------------------------------------------------------------------------------------
அப்பா நல்லெண்ணெய் பாக்கெட்டை வெட்டி ஊற்ற வேண்டிய வேலை இருந்தது. நான் பாக்கெட்டை பிடித்துக் கொள்ள அப்ப வெட்ட தயாரானார். நான் சரியாக பிடிக்கவில்லை என நினைக்கிறேன். "ஏய், வெட்டுறதுக்கு எசவாப் பிடிடா", என்றார். பொதுவாக பயன்படுத்தும் வார்த்தை என்றாலும் அந்த 'எசவா' என்ற வார்த்தை பொறி தட்டியது. நல்ல தமிழில் 'இசைதல்' எனற வினைச்சொல் இருக்கிறது. ஆமோதித்தல், வளைந்து கொடுத்தல் போன்ற சமயங்களில் பயன்படுத்துவோம். 'இசைவாக' என்பதைத்தான் நாம் கொச்சையாகப் பயன்படுத்துகிறோம் என நினைக்கிறேன். இந்த வார்த்தைப் பிரயோகம் எல்லோர் வட்டார மொழியிலும் இருக்கிறதா? இங்க கொஞ்சம் தனித்துவமா இருக்குமோ என்ற நினைப்பில் எழுதினேன்.
இப்ப சொன்னேன் பாத்தீங்களா? இது மதுரைத் தமிழ். நல்ல தமிழ்.
---------------------------------------------------------------------------------------------------------------
லிட்டில் ஜான்
நம்ம ஜானுக்கு ஒரு குட்டி சைக்கிள் வாங்கனும் என ரொம்ப நாள் ஆசை. அம்மாகிட்ட கேட்டான். அதற்கு அவன் அம்மா, ஜீசஸிற்கு கடிதம் எழுது, அவர் நிறைவேற்றி வைப்பார் என சொல்கிறாள். அவனும் எழுத அமர்கிறான். "அன்புள்ள ஏசுவே, நான் ரொம்ப நல்ல பையனா இருந்துகிட்டிருக்கேன். எனக்கு ஒரு சைக்கிள் வேணும். இப்படிக்கு ஜான்" என எழுதுகிறான். பிறகு யோசனையுடன் அதைக் கிழித்துவிட்டு, "அன்புள்ள ஏசுவிற்கு, நான் சில சமயங்களில் நல்ல பையனாக இருந்திருக்கிறேன். எனக்கு ஒரு சைக்கிள் வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு ஜான்", என எழுதி அதையும் கிழித்துவிட்டு புதிதாக எழுதத் தொடங்கினான். "அன்புள்ள ஏசுவே, நான் நல்ல பையனாக இருக்க வேண்டும் என முடிவு எடுத்துள்ளேன். எனக்கு நீங்கள் ஒரு குட்டி சைக்கிள் தர வேணும். இப்படிக்கு ஜான்", என எழுதினான். இதுவும் பிடிக்காம கிழித்துவிட்டு வெளியே சென்றான். செல்லும் வழியில் ஒரு வீட்டு வாசலில் மாதா சிலையை பார்த்ததும் அதை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு விடுவிடுவென ஓடி வந்தவன், அதை படுக்கையின் அடியில் வைத்து விட்டு கடிதம் எழுதினான். "அன்புள்ள ஏசுவிற்கு, நீங்க உங்க அம்மாவ மறுபடி பார்க்கனும்னு நினைச்சீங்கன்னா மரியாதையா எனக்கு ஒரு சைக்கிள் அனுப்பி வைங்க. இப்படிக்கு ஜான்".
---------------------------------------------------------------------------------------------------------------
நம்ம ஊருகாரன் அமெரிக்காவுல இருக்கான். அவன் ஒரு ஓரினச் சேர்க்கையாளன். ஒருநாள் சோகமாக 'Gay பாரில் மார்டினி(ஸ்ட்ராங். டயர்டா/சோகமா இருந்தா அடிப்பாங்க போல) ஆர்டர் செய்கிறான். ரெண்டு, மூணு ரவுண்டு கப் கப்புனு அடிக்கிறத பாத்த பார்மேன், "என்னப்பா ஏதாவது கஷடமா?" எனக் கேட்டான். அதற்கு அவன், "எங்க அண்ணனும் 'gay'யாம். எனக்கு இன்னைக்கு தெரிஞ்சப்போ எவ்வளவு அதிர்ச்சி தெரியுமா?" என்றான். பார்டெண்டர், இந்தாப்பா இன்னொன்னு போட்டுக்கோ எனக் கொடுக்கிறான். அடுத்த நாள் அவன் வருகிறான். மீண்டும் தாறுமாறாக தண்ணி அடிக்கிறான். என்னவென்று கேட்டதற்கு, "என்னோட ரெண்டாவது அண்ணனும் gayயாம் இன்னைக்கு தெரிஞ்சது. இவ்வளவு காலமாக இந்த உண்மை எனக்கு தெரியவே தெரியாது" என்றான். பரிதாபப்பட்ட பார்டெண்டர் இன்னும் கொஞ்சம் ஊத்திக் கொடுத்தான். மறு நாளும் அவன் வந்தான். இன்னைக்கு என்ன என்று பார்டெண்டர் கேட்டதற்கு, "என் தம்பியும்..." எனக் கூறக் கடுப்பான பார்டெண்டர், "ஏன்யா, உங்க குடும்பத்துல யாருமே பொம்பளைய லவ் பண்றவங்களே இல்லயா?" எனக் கேட்க அவன் அப்பாவியாய், "ஏன் இல்ல? என் தங்கச்சி இருக்காளே".
--------------------------------------------------------------------------------------------------------------
கவிதையெல்லாம் எழுதுவாங்க எல்லாரும். நான் ஒண்ணு இங்கிலிபீசுல எழுதினேன். பிரமாதமான வார்த்தைகள் எல்லாம். இல்லை; உரைநடை வார்த்தைகள் போன்று எளிமையாக எழுதினேன். ஆனால் ஒரு வலுவான மையக் கரு வைத்திருந்தேன். ஆனா அதெல்லாம் பப்ளிஷ் பண்ண முடியாது. சப்பயா நாலு டயலாக் சொல்லிட்டு கடைசி வரியில ஒரு இங்கிலீசு கெட்ட வார்த்தையோட முடிச்சிருக்கேன். யாராவது அதையும் மீறி ஆப்பு வேணும்கிறவங்க எ-கடிதம் மூலம் என்ன தொடர்புங்கோ!