Showing posts with label அடிபட்டது. Show all posts
Showing posts with label அடிபட்டது. Show all posts

பல் பிடுங்கி கூட்டம்

Filed under , , by Prabhu on 6/18/2010 06:29:00 AM

8

’பல் போனா சொல் போச்சு’ இல்ல? பொண்டாட்டி வந்தாலும் போச்சுன்னு சில பேர் வாதிடலாம். ஆனால், நான் உடல்கூறு ரீதியா பேசுறேன், Post trauma எல்லாம் நம்ம டிபார்ட்மெண்ட் இல்ல. பல்லு போனா சொல்லோட போச்சுன்னா பரவாயில்ல, பல ருசியான உணவுகளையும் எடுத்துட்டு போயிடும். அப்புறம் முறுக்கை மிக்ஸியில் அடித்து சக்கரை கலந்து ஸ்பூனில் சப்பி சாப்பிட வேண்டியதான். எனக்கு 'பல்’வேறு உபாதைகள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் இதுவரை பல்வலி என்ற ஒன்றை மட்டும் அனுபவித்ததில்லை.

பலகாலமாக என் ஆஸ்தான பல் டாக்டர், ‘பிரபு, எப்ப வந்து பண்ணிக்கிற?’ எனக் கேட்டுக்கிட்டே இருந்தாரு.
”டாக்டர், இது என்ன கல்யாணமா?” என கேட்டேன்.
“ஒரு வகையில அப்படித்தான். பயப்படுறியே?”
”பண்ணனும்னு ஆச்சு. பண்ணிருவோம்”
”என்னைக்கு வர்ற?”
“திங்கள்?”
“டன்.” “டாக்டர், வலிக்குமோ?”
சிரிச்சுகிட்டே, “கட்டெறும்ப விட கம்மியா தான் வலிக்கும்.”
மையமாய் ஆட்டிவிட்டு வந்தேன்.

அடுத்த நாள் 5 மணி குறிச்சிட்டாங்க. வந்தப்போ அவர் ஜன்னலைத் தாண்டிதான் வரவேற்பு அறைக்கு போகனும். அவர் ஆனந்த விகடன் படிச்சுகிட்டு இருந்தார். அவருக்கென்ன, பல்லு என்னது. ஒருத்தனும் இல்லை என்றாலும் கொஞ்சம் சீனுக்காகவோ என்னவோ உட்கார வைத்திருந்தார். கொஞ்சம் வார்ம் அப் எக்ஸர்சைஸ் செய்து கல்லில் கத்தியைத் தீட்டி, இடுக்கியை விரித்து விரித்து மடக்கி லெதர் ஜாக்கெட்டின் ஜிப்பை கழுத்து வரை இழுத்து விடுவது எல்லாம் என் மனக் கண்ணில் ஓடியது. அதுவரை செம இண்டரஸ்டிங்கான 2007 குட்டி விகடன் ஒண்ணுல, ‘கற்றதும் பெற்றதும்’, ‘ஹாய் மதனெ’ல்லாம் படிச்சிட்டிருந்தேன். அவசர அவசரமாக ஒரு சுடிதார் அணிந்த பெண் உள்ளே ஓடினார். பிறகு என்னை உள்ளே அழைக்க, அங்கே போனால் அந்த சுடிதார் பெண் முகமுடி அணிந்து இருந்தார். திடீரென பார்த்ததும் ‘பக்’கென இருந்தது.
”என் செயின கழட்டி கொடுத்துடறேங்க”
“வாட்?” என்றார்.
“ஒண்ணுமில்ல டாக்டர்”
“பிரபு, நான் ஒரு கன்ஸல்டிங் டாக்டர் கூப்பிடிருந்தேன்ல, இவங்கதான், அது”
இத்தோட என்னை பேச்சில இருந்து கழட்டி விட்டுட்டாங்க.
"வாய நல்லா திற. ஆங்.. அப்படியே வச்சிரு”
“மகேஷ், முந்தா நாள் நல்ல மழை இல்ல?”
“ஆமா டாக்டர், நேத்தும் பெஞ்சிருந்தா கொஞ்சம் வெப்பம் குறைஞ்சிருக்கும்”
ஒரு திருகு ஊசியை அந்த முகமுடி ஒரு மிஷினில் மாட்டி, வாயினுள் விட்டு அந்த பல்லில் கடைய ஆரம்பித்தார். Bore போடும் முறைதான். சைடில் நர்ஸ் வைத்த் குழாய் தண்ணீரை வெளியேத்திக் கொண்டிருந்தது.

”மகேஷ் டாக்டர்,  மழை பெஞ்சப்போ ஒரு பேஷண்ட் விட்டுப்போச்சே?”
“இவருதான் அது”
“ஓ. அன்னிக்கு ஒரே ட்ராஃபிக் சார். ஒரு சின்ன மழை பெஞ்சதுக்கு பெரியார் பஸ் ஸ்டாண்டில பைக் சீட்டு வரை தண்ணி.”
“ஆமா, மழை நீர் வடிகாலே சரியில்ல”
”வாய மூடிறாத” என்றார் என்னைப் பார்த்து.
வாயில் இருந்து நுனி வளைத்த சிரிஞ்ச் எடுத்து பல்லிலிட்ட துளையில் என்ன பீச்சினார். கொஞ்சம் பெரிய திருகு ஊசியை மாட்டினார். பிறகு விட்ட இடத்தில் இருந்து நீண்ட நேரமாக உரையாடல் தொடர்ந்து கொண்டிருந்தது. இன்னொரு முறை ஊசி பீச்சல், இன்னும் பெரிய ஊசி போட்டு குடாய்தல் எனத் தொடர்ந்தது. பேச்சும் தான். ’ஏன்யா,  ‘Pulp Fiction' மாதிரி பேசிட்டே இருக்கீங்க’. கடைசியில அளவு செக் செய்ய ஒரு விரல்கட்டை குச்சி நாலை வாயில் சொருகும் போதுதான், ‘அட, இவ்வளவு பெரிய ஓட்டை நாலு எப்ப போட்டாங்க’ன்னு இருந்தது. 
“நர்ஸ், அதை சுட வைங்க”
நர்ஸ் ஒரு சின்ன கம்பியை சூடு பண்ணினார், சுத்தம் செய்த இடத்தை ஸ்டெரிலைஸ் செய்ய.
“எதுக்கு ரெண்ட சூடு பண்ற?”
“நீங்க ரெண்டு கேப்பீங்க.”
“ஆங்?”
“நீங்க ரெண்டு கேப்பீங்க”
“நான் தான் டாக்டர்?”
“நான் தான மேடம் நர்ஸு?”
”ஏய், முதல்ல நீ படிச்சு முடிச்சுட்டயா?”
பக்கத்தில் இன்னொரு டாக்டர், “போன மாசம் தான்”
நான், ”டாக்டர், அப்ப போன மாசம் வரைக்கும் எனக்கு போலி நர்ஸா?” என்றேன்.
”ஏய், நீ வாய மூடாத!”
”போன மாசம் வரைக்கும் எனக்கே போலி நர்ஸ் தாம்பா!”, என்றார் மகேஷ்
”அப்படிதான், திரும்ப மூடக் கூடாது”, என்றது முகமுடி.
என் கலவரத்தைப் பார்த்த நர்ஸ், “சும்மா இருங்க டாக்டர். ஏற்கனவே நர்ஸ் தான். இது மேல் படிப்பு.”
மகேஷே வந்து ஓட்டையை அடைத்தார்.

”அவ்வளவுதான். வந்து சேர்ல உக்காரு”
“இவ்வளவுதானா?”
“ஏன் வருத்தமா இருக்கா? கடவாப் பல்லு ரெண்டு சும்மாத் தான் இருக்கு புடுங்கிருவோமா?”
“இல்ல டாக்டர்...”
“இருக்குன்னு சொல்றேன்ல”
“அய்யோ, நான் Root canal Treatmentன்னதும் ஒரு வகை சைனீஸ் டார்ச்சர் எதிர்பார்த்தேன்”
“இந்த காலத்துலயா? இன்னும் ஏதோ நாங்க பல்ல குரடு வச்சு புடுங்கறதாவே கற்பனை பண்ணிகிட்டு இருக்கீங்க.”
"டாக்டர், உங்களுக்கு என்ன கைமாறு செய்யப் போறேன்னு...”
 ”உங்கப்பா கோவிலுக்கு போகும் போது ஃபீஸ் வாங்கிக்குறேன். நீ போய்டு வா”

இதை எழுதி இரண்டு வாரத்துக்கும் மேலேயே ஆகிறது. இதே டைட்டில அப்ப வச்சு எழுதிருந்தா என்ன நினைச்சிருப்பீங்க? அப்ப ஏதோ சண்டையாமே? என்ன பிரச்சனைன்னே எனக்குத் தெரியாது. என்னவோ போங்க! இன்னும் நிறைய எழுத வேற வேற விஷயங்களை எழுத பிளான் இருந்தது. பட், அந்த விஷயங்கள் எல்லாம் பின்னால் போயிடுச்சு. இப்ப, நான் பெங்களூரில் காலேஜ் சேர்ந்துட்டேன். அதுக்கே நேரம் சரியாப் போகுது. பெங்களூர்வாசிகளே, ரோட்டில என்னய மாதிரியே யாரையாவது காதில் எம்பி3 பிளேயருடன் பாத்தீங்கன்னா, அது நான் தான். தைரியமா வந்து பேசலாம். ஆனால், சில விஷமிகளின் வயித்தெரிச்சல் காரணமாக நான் பெங்களூர்வாசிகளுக்கே தெரியாத பெங்களூரைத் தாண்டி ஒரு இடத்தில் இருக்கும் கேம்பஸில் தான் படிக்கிறேன் என்பதால் அடிக்கடி சிட்டி குள்ள வரமுடியப் போவதில்லை. காலேஜ் பேரைப் பற்றி கேக்காதீங்க. அப்பதான், அப்பப்ப rip செய்ய வசதியாக இருக்கும்.

கடைசில கருத்து சொல்லனுமே. அசிங்கமான படம் எடுத்தாக்கூட நம்ம ஊரில சொல்வாங்களே! தயவுசெய்து பல்லுல ஏதாவதுன்னு உடனே காட்டிடுங்க. பல் பிடுங்கறதோ, Root canal treatment ஓ ரொம்ப வலிக்கவே இல்லை. பல்ல ரெண்டு தரம் விளக்குறத விட முக்கியமான விஷயம், எந்த சமயத்திலயும் பல்லுல எந்த உணவுப் பொருளையும் தங்க விடாதீங்க. அதுதான் சிம்பிளான விஷயம். அப்புறம் தப்பித் தவறி பல்லில் குழி இருந்திட்டால், அடைச்சிடுங்க. அப்படியே, ஸ்கிரீன் மேல கங்கை அமரன் படம் போல ஒரு மஞ்சக் கலரில் கூப்பிய கை வந்து வணக்கம் சொல்லுறதா கற்பனை பண்ணிக்கோங்க.

பதின்மம்

Filed under , , by Prabhu on 2/24/2010 11:22:00 AM

17

பதின்ம வயதுகள் - டீன் ஏஜ்.

சொல்லும்போதே பெருமூச்சு தான் வருகிறது. அந்தப் பருவம் முடிந்து ஒன்பதாவது மாதம். எனக்கென்னவோ டீன் - ஏஜ் முடிந்ததும் ஒரு மாதிரி உடைந்துவிட்டேன். சின்னப் பையன் என்ற சாக்கில் அனுபவித்த சலுகைகள் கிடையாது. ஏன் என்னை நானே இன்னும் வயசு இருக்கு, என்ன அவசரம் என்று சமாதானப்படுத்திக் கொள்ள முடியாது. என்ன தான் என் அப்பா நான் செய்யும் விஷயங்களுக்கு, ‘சின்னப்பையன் தானே’ என்றாலும், உலகம் அவ்வாறு பார்க்கப் போவதில்லை. ம்ஹூம்.

டீன் - ஏஜின் அருமை புரியாதவர்கள் பல. இழந்தபிறகு வருத்தப்படுவர். நான் நிகழும் போதே அதன் அருமை புரிந்து கொண்டேன். ஆனால் சரியாக பயன்படுத்தவில்லை. நான் தெரிந்தே இழந்துவிட்ட சில விஷயங்கள் பல. இன்னும்  50-100 புத்தகங்கள் உபயோகமானவையாக படித்திருக்க வேண்டும் அந்த வயதிற்குள். இன்னும் அதிக அளவில் பலவிதமான இசை தொகுப்புகளைக் கேட்டிருக்க வேண்டும். விளையாண்டிருக்க வேண்டும். எட்டாம் வகுப்பில் அறைகுறையாக பயின்ற டேபிள் டென்னிஸைத் தொடர்ந்திருக்க வேண்டும். நன்றாக அடுத்தவரிடம் பேசும் கலையை கற்றிருக்க வேண்டும். இது போல இன்னும் பல எனக்கு வேண்டியிருக்க, நான் மட்டும் வருடங்களுக்கு வேண்டாதவனாகிப் போய் விட்டேன். அவை என்னை விட்டு உருண்டோடி விட்டன.

அட, இழந்ததை ஏன் பேசிக் கொண்டிருக்க வேண்டும். நான் பெற்றதும் பலவே. அனுபவித்த தருணங்களின் அருமையும் இனிப்பவையே. 

பதிமூன்றாம் வயதில் தவளையின் இனப்பெருக்க உத்தியைப் படித்த பொழுது ‘சைக்கிள் பம்ப்’ போன்ற அதன் முறையை கிண்டல் செய்து சிரித்தது நினைவில் இன்னும் இருப்பது என் ’அபார’ ஞாபக சக்திக்கு ஆச்சரியம்தான். 
முதன்முதலாக ஆங்கில புத்தகங்கள் படிக்க ஆரம்பித்து, Nancy Drew, Hardy Boys என ஓடிக் கொண்டிருந்த வருடம்.

ஒன்பதாம் வகுப்பில் எதேச்சையாக சொல்லிய வார்த்தையில் இருந்து ‘ப்ரீத்தி’ என்ற பெயரை வைத்து என்னை நண்பர்கள் ஓட்டியதும், நிஜமாலுமே அப்படி ஒருத்தி வேறொரு வகுப்பில் இருந்ததும் நினைவில் இருக்கிறது. அதன் பிறகு அந்த பெண் எந்த ஆசிரியரையாவது காண எங்கள் வகுப்பிற்கு வந்தால் என் பெயரைக் கூவி நாராசமாக்குவார்கள். என்னவோ, கடைசி வரை அந்தப் பெண்ணுக்கு நான் ஒருவன் இருந்ததே தெரியாது. நான் கவலைப்பட்டதில்லை. நான் அப்ப எல்லாம் சைட் அடிச்சதில்லைங்கிறது உண்மைன்னாலும் நம்பவா போறீங்க?

ஒன்பதாம் வகுப்பு சரித்திர வகுப்பின் போது கூரையில் இரண்டு அணில்களின் சில்மிஷம் கண்டு சிரித்து மாட்டிய பொழுது, எழுந்து பேந்த பேந்த முழித்தோம். அப்பொழுது என்னுடன் திவாகர் என்று ஒரு நண்பன் உண்டு. எங்கள் தீம் சாங் ஊமை விழிகளில் வரும் ஒப்பனிங் பாடலான ‘ராத்திரி நேரத்து பூஜையில்’ தான். இது இப்படியானதுக்கு ஒரு பெரும் காரணமொன்றுமில்லை. அந்தப் படத்தின் முன்பாதி கதை நான் அதுவரை பார்த்ததே இல்லாத காரணத்தால் அதைக் கூறுகையில் அந்த பாட்டுக்கு ’நங்கன நங்கன’ ஒரு வித்தியாசமான பிண்ணனி இசை கொடுத்துக் கொண்டே பாடுவான். அதனாலே பலமுறை வகுப்பில் அந்த சத்தத்தைக் குடுத்து சிரித்து மாட்டியிருக்கிறோம்.


பத்தாம் வகுப்பில் கவலையின்றி இருந்தது மார்க்கில் பளிச்சிட, அந்த மதிப்பெண்களை நான் கேரளா சுற்றுலாவை சுசீந்திரத்தில் துவக்கும் சமயத்தில் தொலைபேசியில் கேட்டுக் கொண்டேன். பிறகு சுற்றுலா முடிந்து வந்து நிதானமாக பள்ளி தேட முற்பட்டேன். கால தாமதம் காரணமாக பெரிய பள்ளிகளில் கிடைக்காத போதும் வருத்தப் படவில்லை. காலத்துடன் வந்திருந்தாலும் என் மதிப்பென்களுக்கு கிடைத்திருக்கப் போவதில்லை.

எனக்கு எட்டாம் முதல் பத்தாம் வகுப்பு வரை வகுப்பில், ‘பருப்பு’ என்பது பட்டப் பெயர். அப்பவே நான் பெரிய பருப்பு எனத் தெரிந்திருக்கிறது என்று பொய் சொல்லாமல் சொல்ல வேண்டுமென்றால், என் பெயரை வேகமாக சொன்னால் ‘பருப்பு’ என திரிகிறது என்று புது இலக்கண விதியை கண்டுபிடிக்க என் பெயர் பயன்பட்டிருக்கிறது. இதற்கு மேலும் அசிங்கமான பெயர்களை நான் இன்னும் யாருடன் பகிர்ந்ததில்லை. போவதில்லை.

பதினோராம் வகுப்பில் புதிதாக சேர்ந்த பள்ளியில் அப்போழுதே பிரசவித்திருந்த எலியைக் காணும் அரிய சந்தர்ப்பம். ரோமம் ஏதும் இன்றி அம்மா தேங்காய் கொழுக்கட்டை செய்யும் போது மீந்து போன மாவை குட்டியாக பிடித்து வைத்து வேக வைக்கும் கொழுக்கட்டையை போன்று இருந்தna மூன்று குட்டிகளும் . சிறிது ரத்தத்துடன் பிறந்து கிடந்த அவற்றில் ஒன்று இறந்தது, எப்படி என இப்பொழுது நினைவில் இல்லை.

பன்னிரண்டாம் வகுப்பில் முடிந்த பொழுது என் வீட்டிலேயே, அப்பொழுதுதான் தயாநிதி மாறன் அறிமுகப் படுத்திய அகலவரிசை(Broadband)யில் பார்த்து, குறைந்த மதிப்பெண்கள் தான்(76% - ரொம்ப மட்டமில்லை) என்று பார்த்ததும் காரணமின்றி எனக்கு சிரிப்பு. தொலைபேசியில் அதை என் அப்பாவிடம் கூற, அவரும் அதே போல சிரிக்க, நானும் சேர்ந்து சிரித்த விந்தையான தருணம் யாருக்கும் அமைந்திராது.

இதன் பிறகு என் வாழ்க்கையில் நான் எடுத்த முக்கிய, நல்ல முடிவு, அமெரிக்கன் கல்லூரியில் சேர்ந்தது. உயிரியலுக்கு விண்ணப்பம் போட்டு கிடைத்த பிறகு இயற்பியலுக்கும் விண்ணப்பம் போட்டு இயற்பியலில் சேர்ந்தேன். பிறகு 10 நாளுக்கு பிறகு உயிர்தொழில்நுட்பவியலின் ஆர்வம் காரணமாக உயிரியலுக்குத் தாவினேன். அது மட்டுமல்ல இயற்பியல் படித்தால் நமக்கு வெவ்வேறு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எம்.பி.ஏ தவிர பிற வாய்ப்புகள் எதுவும் இருந்து திசை மாறவிடக் கூடாது என்றும் உயிரியல் படித்தால் எம்.பி.ஏ படிக்க முடியாதா என்றும் தெனாவட்டுடன் உயிரியல் எடுத்தேன். அதன் பிறகு என்னைப் பார்தது இந்தியாவிற்கு ஒரு ஆறு, ஏழு விஞ்ஞானிகள்(அ) இழப்பாகிவிட்டது.

கல்லூரி வாழ்க்கையில் அனுபவித்தற்கே தனிப் பதிவு போடலாம். ஷான்சி க்ளப்(இப்பொழுது இல்லை), கல் பெஞ்சுகள் [இதற்கும் அதே கதி :( ] , மரத்தடி வட்ட சுவர், காண்டின், டி.பி.எம் நூலகம், நிறைய மரங்கள், மாணவர்-ஆசிரியர் நட்புறவில் ஒரு வித்தியாசமான துறை என அனுபவித்தது ஏராளம், தாராளம். நான் கல்லூரியில் சேர்ந்த பொழுது ஹாரி பாட்டரில் வரும் பள்ளி போல் புரியாத பாதைகளாக காடு போல இருக்கும். இதை சிறிது அழித்த கோபம் இன்னும் எங்களுக்கு அபரிமிதமாக உண்டு. இப்பொழுது இந்தக் கல்லூரியில், என் துறையில் தலைவராக இருந்தவரை இவ்வளவு சாதாரணமாக, பேசி, கிண்டல் செய்து சிரிக்கும் அளவுக்கு ப்ளாக்கர் ஆக்கியிருக்கிறது. அவர் தருமி(link).

அதன் பிறகு கல்லூரியில் ஸ்ட்ரைக் நடந்து அதிலும் நாங்கள் கவலைப் படாமல், கடலையும் கூத்துமாக நன்றாக பொழுது கடத்தினோம். வருடத்திற்கு ஒரு பெண்ணாக கடமையாக சைட் அடித்தோம். நாங்கள் எல்லோரும் ஏக பத்தினி விரதனோட முன்னோடிகள். ஒரு பெண்ணை குறித்துக் கொண்டு அவளை மட்டுமே சைட் அடிப்போம். கடைசி வரைக்கும் அவளிடம் சரியாக பேசவில்லை என்ற வருத்தத்தைத் தவிர ஹார்மோன் விளையாட்டுகள் ஒரு ஓட்ட வித்தியாசத்தில் நகக்கடிப்பு வெற்றியடையும் இந்திய கிரிக்கெட் போல சுவாரஸ்யமாகவே இருந்தது. 

இவ்வளவையும் சொல்லிவிட்டு அஜய்(link) பற்றி சொல்லவில்லை என்றால் சாமி கண்ணைக் குத்தாவிட்டாலும் அவன் குமட்டில் குத்துவான் என்பதால் சொல்லிவிடுகிறேன். மேற்கூறிய அனைத்து சமயங்களிலும் என் உற்ற தோழன். என் குடும்பத்திலொருவன் போல என்றெல்லாம் ஓவராக சொன்னால் அவனுக்கு அரிப்பு ஏற்படுமென்ற காரணத்தால் மேற்கொண்டு விளக்கம் வேண்டியதில்லை.

மூன்றாம் ஆண்டின் இறுதியில் அஜயால் ப்ளாக்கர் எனக்கு அறிமுகமாகிய ஒரே வாரத்தில் எழுத நுழைந்து விட, அந்த ப்ளாக்கை சரியாக எனது பிறந்த நாளுக்கு சில நாட்கள் முன்பு ப்ளாக்கர் பிடுங்கிவிட்டது. எனது டீன் - ஏஜ் முடிந்தது, ப்ளாக்கரின் மூடு விழாவுடன் தான். அது நடந்து இப்பொழுது ஒன்பது மாதமாகி இதை கிஷோரின்(link) அழைப்பிற்கிணங்கி எழுதிக் கொண்டிருக்கிறேன். பொதுவாக எனக்கு தொடர் பதிவுகளில் நம்பிக்கை இல்லை. இதை கிஷோருக்காகவே எழுதுகிறேன். அப்புறம், சூர்யாவுக்கு(link) ஒரு தொடர் பதிவு கடன்பட்டிருப்பதை மறக்கவில்லை என்பதை கூறிக் கொள்கிறேன். யாராவது இதற்கு முன்னர் என்னை தொடர் பதிவிற்கு கூப்பிட்டு நான் எழுதவில்லை என்றால் மன்னிக்கவும், ஒருவேளை அந்த தலைப்பில் நான் வறண்ட கருத்துக்களுடையவனாக இருந்திருக்கலாம்

ஐயா, யாரு இந்த மாதிரி தொடர் பதிவுகளைத் தொவக்குபவர்?நான் யாரையும் அழைக்கவில்லை. ஒரு அளவுக்கு மேல் இதே மாதிரி சரக்கை எல்லாரிடமும் படித்தால் சலிப்பு தட்டிவிடாது?

நேற்றைய நினைவுகள்....

Filed under , by Prabhu on 10/22/2009 11:33:00 AM

16

நேற்றும் வழக்கம் போல படித்துக் கொண்டிருந்தேன், வேறு வழியில்லாத காரணத்தால். நான்  படிக்க பயன்படுத்தும் மேஜை ஜன்னலின் அடியில் இருக்கும். காலையில் வெயிலும், இரவில் காற்றும்(இருந்தால்...) வர வசதியாக அந்த அமைப்பு எனக் கூறினாலும் எனது வித்தியாசமான பழக்கத்திற்காக அப்படி அமைத்திருந்தேன் என் அறையை. படிக்கும் போது சோர்வடைந்தால் கால்களை மேஜைக்கடியில் நன்றாக நீட்டி, நாற்காலியில் உடம்பை சரித்துக் கொண்டு, கழுத்தை நாற்காலி முதுகின் விளிம்பில் முட்டு கொடுத்து மோட்டு வளையை பார்த்துக் கொண்டிருப்பேன். அஜய் அப்ப செல்லில் அழைத்து என்ன செய்து கொண்டிருக்கிறாய் எனக் கேட்டால், விட்டத்த(விட்டத இல்ல) பாத்துட்டிருக்கேன்னு சொல்வேன். அவனுக்கு புரியும். அப்படிஓய்வாக உட்கார்ந்து நம் எண்ணங்கள் எங்கெங்கல்லாம் ஓடுதுன்னு பார்கிற சுகம் இருக்கே....ஹும்.... வார்த்தை இல்லை. கொஞ்ச நேரத்தில மூளை ரிசார்ஜ் ஆகி நேரமானதை உணர்த்தும் போது நிமிர்ந்து உட்கார்ந்து படிக்க ஆரம்பிப்பேன்.

நேற்றும் அவ்வாறே ஓய்வெடுத்துக் கொண்டு இருக்கையில் நான் சன்னலிற்கு சிறிது மேலே பார்வையை செலுத்திக் கொண்டிருந்தாலும், பார்வையின் எல்லைக்குள் இருந்தாலும், அது என் பார்வை குவியிலின் வெளியே (Out of focus) இருந்திருக்க வேண்டும். சிறிது நேரம் கழித்து தான் கண்ணில் தட்டுபட்டது. கறுப்பாக நார் போன்ற இரண்டு நீட்டிக் கொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் என் முகத்தின் அடியில் நம்பியார் போல் சிவப்பு விளக்கு எரியாத குறைதான். நான் சொன்னதில் இருந்து அது கரப்பான் பூச்சி எனக் கண்டுபிடித்திருந்தால் நீங்கள் 'யார் மனசுல யாரு' நடத்த போகலாம். என்ன காரணம் எனத் தெரியவில்லை. ஆனால் எங்க வீட்டுல கரப்பானை 'மிளகா பூச்சி'னு கூட சொல்லுவாங்க. பார்க்க மிளகாய் போல இருப்பதால் இருக்கலாம்.

அதை அடிக்க விளக்குமாறை எடுக்க கிளம்பிய பொழுது மதன் கூறியது நினைவுக்கு வந்தது, கரப்பான் பூச்சி தான் பயப்படும் உயிராகவும், அதுவும் பறக்கும் வகை என்றால் துண்டை தூக்கிக் கொண்டு கத்தி சுற்ற வைத்து விடும் என கூறியி்ருக்கிறார். விளக்குமாறை எடுத்து அடிக்குமுன் எந்த கோணத்தில் அடிக்கலாம் என கோணம் பார்த்த பொழுது கூட அந்த பூச்சி அசையவில்லை. என்ன நெஞ்சழுத்தம்! அடித்து துவம்சம் செய்து வெளியே தூக்கி எறிய முடிவு செய்தேன்.

அடித்த பொழுது சனியன் எப்படியோ தப்பியது மட்டுமல்லாமல் பறந்து வேற காட்டியது. அது சரி, அணு குண்டு போட்டாலும் தப்பி பிழைத்து மீசையை முறுக்கிவிட்டுக் கொள்ளும் இனமாச்சே! கணிணி மேஜைக்கடியில் இருக்கமென சென்றால் யுபிஎஸ் அடியிலிருந்து வெளியேறி வித்தை காட்டி விட்டு தப்பித்தது. ஒரு வழியாக அதை ஒரு முட்டு சந்தில் மடக்கி அடித்துவிட்டு அதை அவ்விடமிருந்து அகற்றும் பொழுது ஜங்கென்று குதித்து ஓடியது. கொலை வெறியோடு மேலும் மூணு போட்டதில் ஒரு கால் பிய்ந்து விழுந்தது. அப்படியும் ஆட்டம் குறைய வில்லை. அது ஒரு உண்மையான survivalist. தலையை எடுத்தாலும் முண்டமாக 13 நாள் வாழும். இதற்கு மேலும் 20 அடி தேவைப் பட்டது அதன் கதையை முடிக்க. கடந்த 25 கோடி வருஷமா கொஞ்சம் கூட மாறாமல் இருக்கும் ஒரே உயிரினம் கரப்பான் தானாம். ஒரு முழுமையான உயிரினமாக இருக்கும் போல. பரிமாண வளர்ச்சி தேவைப்படவில்லையே! அடித்து கொன்று வெளியே தூக்கி எரியும் போது ஏனோ சம்பந்தம் இல்லாமல் 'உன்னைப் போல் ஒருவன்' நினைவுக்கு வந்தது :).


பிறகு அஜய் வர, 'முருகா மன்னச்சிடு செய்யப் போற இந்தக் கொலைக்கு', என கூறிவிட்டு சிக்கன் க்ரில் சாப்பிட கிளம்பினேன்.  நேற்று சஷ்டி.

18 வயசுல ப்ண்ண வேண்டியத 10 வயசுக்குள்ளயே முடிச்சவனுங்க..

Filed under , by Prabhu on 6/20/2009 06:07:00 PM

2




முதன்முதல்ல ஸ்கூல் போக அழுதது இன்னமும் நினைவிருக்கு. அழுக அழுக சமாதானப் படுத்தி எங்க அம்மா என்னய ஆயா கையில விட்டிருவாங்க. வீடு கொஞ்சம் கிட்டங்கிறதால அப்படி ஆயா கூட்டிட்டு போயிருவாங்க. என்னதான் அழுதாலும் க்ளாசுக்கு போய் அழுததில்ல. அங்க போய் ஏ,பி,சி,டி எழுதிட்டு, 'மிஸ் இங்க பாருங்க'(வயசான மிஸ்ஸுங்க, எனக்கும் 4 வயசுதான்), அப்புறம் அந்த பக்க ஸ்லேட்டு நிரம்பினதும் தண்ணி தொட்டு அழிக்கிறதும், ஒண்ணுக்கு போக மிஸ் கிட்ட ஆள்காட்டி விரல மடக்கி 'மிஸ், ஒன் பாத்துரூம்னு' கேக்குறதும், அதுக்கு ஆயாவுடைய தயவ நம்பி நிக்கிறதும் இப்ப நினைச்சு பாத்தா ஏதோ படத்துல நடந்த மாதிரியா நினைவில இருக்கு.

அப்புறம் ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் படிக்கும்போது வீடு கொஞ்சம் தள்ளிப் போச்சு; ரிக்ஷா அமர்த்தினாங்க. அந்த ஆளோட முகத்த பாத்தது அடி வயித்துல ஒரு கவ்வ்வ்...... உடனே அழ ஆரம்பிச்சிட்டேன்........அவ்வ்வ்வ்வ்வ்....நான் போகல, அந்த ஆள பாத்தா பயமாயிருக்கு. அம்மா, நீ சோறு ஊட்டும்போது சொல்ற பூச்சாண்டி மாதிரி இருக்கான்மா. விட்டிரும்மா, நீ போய் விடும்மா. கதற கதற அள்ளி போட்டு அனுப்பி விட்டாங்க. அது ப்ரைமரி ஸ்கூல், அஞ்சாப்பு தான் சீனியர். அங்க அஞ்சு படிக்கிற ஒரு அஞ்சுவும், அதுக்கு ஒரு நாலாப்பு குரங்கு அஸிஸ்டண்ட். ரெண்டு சீட் உண்டு; நார்மல் குஷன், சின்ன கட்டை சீட். குஷன்ல சீனியர், கட்டைல நான் (கட்டையில போறவன்னு சொல்லிடாதீங்கோ). சும்மா இருந்தவள இந்த நாலு கிளப்பிவிட (பயபுள்ள கோர்த்து விடுது பாரு). அஞ்சு என்னய ரேக் பண்ண ஆரம்பிச்சிருச்சு.

மொத கேள்வி சுற்று
உன் பேரு என்ன?
பிரபு... பிரபு குமார் (இண்டியன் ஜேம்ஸ் பாண்ட் மாதிரிதான் பேரு சொல்வேன்)
என்ன படிக்கிற?
ஃபர்ஸ்ட் ஸ்டாண்ட்
வயசு?
ஆறு (ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்டு வயசுன்னு தெரியாதவளெல்லாம் அஞ்சாப்பு படிச்சு என்ன பண்ண போறாளோ?)
சத்தமா பேசுடா?.
ம்ம்.....(மவளே சிக்குவேல)
நாங்க செய்றதெல்லாம் வெளிய சொல்லுவயா?
ம்ஹூம்.... (என்ன செய்வாய்ங்க... ஒரு வேள ரே...ரே.....ரே.... ரேக் பண்ணுவாங்களோன்னு சொன்னேன். கொஞ்சம் கேப் விட்டா புத்தி போறதப் பாரு.)

அப்புறம் அடுத்து தீவிர அடுத்தக் கட்ட நடவடிக்கை.
'சப்'
ம்ம்....
'சப்'....
ம்ம்/...
'சப்'
ம்ம்....
முத்தம் குடுக்குறான்னு நினைச்சா, அத ஆசிட் ஊத்தி அழிச்சிருங்க. அறை விட்டாங்க அவ. அப்ப கூட அழலயே நான். சின்ன வயசிலயே வீரம் இஸ் சீக்ரட் ஆஃப் மை எனெர்ஜி.

அப்புறம் கிள்ளினா. செம வலிப்பா. இப்ப நினைச்சா கூட வலிக்குது. சனியனுக்கு என்ன போட்டு வளத்தாங்களோ, மாடு மாதிரி வேற இருந்துச்சு. அப்புறம் தொடையில கிள்ளினா. ஏனோ அழ மாட்டேன்னு பிடிவாதம்.
வலிக்குதா? (அடிப்பாவி, ஏதோ கொஞ்சுற மாதிரி கேக்குறயே)
ம்ஹூம்....
இன்னும் அழுத்தி"இப்ப?"
முழிச்சேன் (லைட்டா....)
விரல்களிடையே சதைய வச்சு நசுக்க ஆரம்பிச்சா....அவ்வ்வ்வ்......
"இப்ப?"
வலிக்கலையே...
அடுத்து அந்த நாலு உள்ள வந்து "அக்கா நானு?"(டேய், இது என்ன ரோலர் கோஸ்டரா, சான்ஸ் கேக்க")
அந்தப் பக்கி இத்துனூண்டா இருந்துட்டு என்ன டார்ச்சர் பண்ணுது.
அப்பயும் நானொத்துக்களையே!
"இப்ப?"
இல்லக்கா.....(வேணாம் விட்டுரு, அப்புறம் அழுதுருவேன்)

கண்ல நீர் முட்டிட்டு வருது. இப்படியே தொடர்ந்தும் நான் ஒத்துக்கல. எப்படி எனக்கு அவ்ளோ தைரியம்னு தெரியல. இது பல நாள் தொடர்ந்தது. அப்படியும் நான் வலிக்குதுன்னு சொல்லாத்தால கேம் போரடிச்சு விட்டுட்டாளுக ரெண்டு பேரும்.

For a few, they get 'it' up just when somebody is screaming



இப்படியே மெல்ல மெல்ல எனது போராட்டங்கள் குறைந்து நெரிசல் மிகுந்த சாலையில் எனது பயணங்கள் ஆர்ப்பரிக்கும் அலைகடலின் நடுவே விவேகானந்தரின் தியான மண்டபம் போல ஆனது. எதுவும் கேட்கப் படுவதில்லை. எதுவும் கூறப்படுவதில்லை.

அப்படியே 2 வருஷம் ஓடிருச்சு. நான் இப்ப மூணாம் வகுப்பு. திரும்ப அதே மாதிரியான குரல். குஷன் சீட்டுல இருக்கற ஆள் ஜூனியர ஆள ரேக். ஏன் நடக்குது இந்த மாதிரி. இவ்ளோ நாளாச்சு. நீ சீனியர் ஆயிட்ட, இன்னமுமா பயப்படுற நீங்க கேப்பீங்க...

இஹ....ஹா.....ஹா(சூப்பர் ஸ்டார் மாதிரி)

இப்ப குஷன் சீட்டுல நான்.

டிஸ்கி:- என்னவோ இப்ப ரேக்கிங் பண்ணிட்டாங்கன்னு பஞ்சாயத்து பண்றாய்ங்க. நாங்களாம் பிரைமரி ஸ்கூல்லயே ரேக் ஆகி, நாலு பேத்த ரேக் பண்ணவனுங்க. பி கேர் ஃபுல்(நான் என்னய சொன்னேன்.). ஆனா ஒரு விஷயம் என்ன காலேஜ்ல கூட ரேக் பண்ணல, ஆனா ஸ்கூல்ல பண்ணிருக்கானுக.

பின்குறிப்பு- பி.எஸ்.ஜில படிக்கிற பையன ரேக் பண்ணிட்டாங்களாம். ஆனா, ரெடினாவுல ஒன்பது ஓட்டை விழற அளவு என்ன ரேக் பண்ணானுங்கன்னு புரியல. காதுல வேற குறைபாடு வந்திருச்சாம். இதுக்கப்புறம் நடவடிக்கையில ஈடுபடாம, காலேஜ் பேர் கெடக் கூடாதுன்னு சமரசம் பேச ட்ரை பண்ணிருக்காங்க பிரின்ஸ்பால். அந்தப் பையனின் அப்பா போலீஸ்ல போட்டு விட்டாரு. ரேக்கிங் பண்றது ஒரு நட்புறவுக்காக. அத தாக்கவும், கேலி பண்றதுக்கு மட்டும் பயன்படுத்தக் கூடாது.

பின் பின்குறிப்பு - இது ரொம்ப லேட் ரியாக்ஷன்னு சொல்லாதீங்க. ஏற்கனவே நான் இத பப்ளிஷ் பண்ணின ப்ளாக் சீனானது உங்களுக்கு தெரியும்.

எதுக்குடா இந்த மானங்கெட்ட பொழப்பு!

Filed under , , by Prabhu on 6/16/2009 09:02:00 AM

3

காதல்......ம்ம்ம்ம்....அது ஒரு தனி ஃபீல் தான் (இவனும் ஆரம்பிச்சுட்டானா, டேய் நல்லாதானடா இருந்தீங்க?). ஆனா அது என்னன்னு தான் புரியல.(டேய், ஏற்கனவே மண்ட காஞ்சு போய்தான் இங்க வர்றோம். இங்க நீயுமா?). சரி இப்படி சொல்லலாம், காதல்னா ஒரு அரை நிமிஷம் என்னன்னு யோசிங்க? இப்போ சொல்லுங்க, அப்படின்னா என்ன? ஒண்ணும் தோணலயா? இததாங்க சொன்னேன். இதுக்கு விளக்கம் கொடுக்க முடியாது.(முடியல....)


நானும் பல பெண்களை லவ் பண்ணி பாத்துட்டேன். என்ன ஆச்சுன்னு கேக்குறீங்களா? லவ் பண்ணவள பாத்துக்கிடே இருந்தா நம்ம கண்ணு முன்னாடியே இன்னொருத்தன் அவள லவ் பண்ண ஆரம்பிச்சதுதான் நடந்தது. ஆனா நம்ம லவ் பண்றத விட அவனவன் லவ் பண்ற கதைய கேட்டுப் பாருங்க, ரொம்ப சுவாரசியமா இருக்கும். அவனவன் படுற கஷ்டத்தைக் கேட்டா காமெடியா இருக்கும்.(இந்த ரணகளத்திலயும் உனக்கு கிளுகிளுப்பு கேக்குது?)


சில பேரு பிறக்கும் போது கடவுள் அரைக் கிலோ மச்சத்த பார்சல் பண்ணி கூடவே வச்சு அனுப்புவாரு போல!(கிலோக் கணக்கில இருந்தா அது கேன்சர்டா!). எங்க போனாலும் அவனுங்கள பொண்ணுங்க துரத்துறாங்க. நம்ம ஒரு பொண்ண சைட்டே அடிச்சாலும் திரும்ப ஒரு லுக்க கூட விட மாட்டேங்றாங்க. மேலூர்ல இருந்து எங்க காலேஜ் வந்து படிக்கிற ஒருத்தன் முதல் வருஷமே எங்க மதுரை சிட்டில(நாங்களும் சிட்டிதான்பா! படத்துலதான் ஏதோ கிராம்ம் மாதிரி காட்டி கிண்டல் பண்றாய்ங்க!). ஒரு ஸ்கூல் பொண்ண காலையும் மாலையும் பின்தொடருவத ஒரு வேண்டுதலாவே பண்ணிக்கிடிருந்தான், அவ மதிக்கல. அவன் படிக்காம நாசமாப் போறத பாத்து ஒருத்தன்ஏண்டா இப்படின்னு மொக்கய போட்டு அவன திருத்தி வழிக்கு கொண்டுவந்தா, இப்போ அவ வந்து இவன லவ் பண்றேங்கறா!(இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான் பாஸ்!). இப்போ அவன் அவள ஏத்துக்கல; நான் படிக்கனும்னு சொல்லிட்டான்(டேய், நான் உன்ன காலேஜ்லயே பாத்த்தில்லயே!)


இதுக்கு அடுத்த வருஷம் கடைசியில இவன் ஒருத்தியப் பத்தி பேசிட்டிருக்கறதப் பார்த்து, “ரமணி, நீ இன்னும் அவள விடலயா?” எனக் கேட்ட்துக்கு, பக்கத்திலிருந்தவன்இது வேற ஒருத்திடா. அவங்க ஊர்க்காரி.” எனக் கூறிவிட்டு, “அவன் கிடக்குறான், நீ சொல்லுடா மாப்ளஎனக் கதையில் மூழ்கினான். என்ன்ன்னு கேட்டா அது எசகுபிசகான அவன் காதல் லீலைகள். ஏண்டா இப்படி அலையுறீங்கன்னு கேட்டுக்கிட்டே நானும் அவன் பக்கத்துல உக்காந்தேன் (ஹி.. ஹிக்க்ர்ர்ர்ர்த்தூஅப்படி துப்பிட்டு மேல படிங்க).


மூணாவது வருஷம் திரும்ப லேட்டா வர ஆரம்பிச்சான். ஏண்டானு கேட்டப்போ மொத்தக் கதையையும் சொன்னான். அந்த பொண்ணு இன்னொருத்தன் பொண்டாட்டியாம்(க்க்ர்ர்ர்ர்….). 18 வயசுலயே அவள கட்டிக்கிட்டு துபாய்க்கு போய்ட்டான் புருஷன்காரன். அந்த கேப்பில தான் இவனோட லவ்வு! ஒருநாள் அவளுக்கு ஃபோன் போட, அவ மாமனார் அத எடுக்க, இவன் ஜலதோஷமா, இப்படி இருக்கு குரலுண்டிருக்கான். அப்புறம் எல்லாத்துக்கும் தெரிஞ்சு போய் அவன அவங்கப்பா கொஞ்ச நாள் மாமா வீட்டில இருடான்னு அனுப்பி வைச்சுட்டார்..

, அதான் லேட்டா?”

அதனால இல்லடா

பின்ன?”

இல்ல, இப்ப நான் நத்தத்திலிருந்து பஸ்ல வரேன்….”, இழுக்கிறான், இது சரியில்லயே?

அதத்தான் சொன்னியே

அதுல வரும்போது தினமும் அர்ச்சனான்னு ஒரு பொண்ணும் வருது

நான் ஒருமாதிரி பாக்குறதப் பார்த்த அவன், “ சும்மா பேசிட்டிருப்போம்டா. பஸ்ல போர் அடிக்கும்ல

சரிஎன நான் அவன் பேச வாய்ப்பு கொடுத்தேன்.

அவ இத எழுதிக்குடுத்தாடா. இத என்ன்ன்னு படிச்சு சொல்லுடா?”

அது ஹிந்தியில் எழுதிருந்துச்சு, அதான் என்கிட்ட வந்திருக்கு. அதப் பாத்துட்டு நான் அவன கேவலமா பாத்ததும் அவனுக்கு புரிஞ்சிருச்சு. ஆர்வமாக் கேட்டான், “என்னடா போட்டிருக்கு?”

ஆங்…. அவளுக்கு எய்ட்ஸாம், மறுவாழ்வு குடுக்குறியான்னு கேட்டிருக்கா

டேய், விளையாடாதடா. என்ன போட்டிருக்கு

ஆமா, நீ சானியா மிர்சா, உன்னோட டென்னிஸ் விளையாடுறோம். போடாஆஅ…… வேற என்ன இழவ எழுதி இருக்கப் போறா? உன்னை காதல் செய்கிறேன்றத எழுதி காதலுக்கு பதிலா மட்டும் டாஷ் போட்டிருக்கா, ஃபில் பண்ணி அனுப்புங்க, அக்கா இதயத்த பொட்டலத்துல தந்தாலும் தந்திருவாங்க”(வயித்தெரிச்சல கிளப்புறானுங்க, சார்)

மாப்ள், நீயே பதில் எழுதிருடா

இந்த பொழப்புக்கு….”

கோவிச்சுக்காதடா!”

சரி, பழகின பாவத்துக்கு!”

தாங்கஸ்டா! இதோட அவள பத்தி முழுசா எழுதிக் கொடுத்திருக்காடாஅது பார்க்க அந்நியன்ல அம்பி எழுதுன மாதிரியே இருந்துச்சு.

டேய், இவ உன்ன லவ் பண்றாளா? , இல்ல உன்கிட்ட வேலை கேக்குறாளா? அவ ஸ்கூல் பொண்ணுதானான்னு பாத்துக்கோடா. ஜெராக்ஸ் கடையில வேலை பாக்குறவளா இருக்கப் போகுது!”

மச்சான், தங்கச்சியப் பத்தி தப்பா பேசாத

இப்போதான் லவ் லெட்டர் எழுதுன. தங்கச்சின்ற?”

உனக்கு சொன்னேன் டா

அடி செருப்பால! ஏண்டா மொன்ன நாயே, உன் சவுரியத்துக்கு என்னய உருட்டுறியா? ஓடி போயிரு

கோவிச்சுக்காத மாப்ள”, எனக் கட்டிப் பிடித்து கூல் டிரிங்க் வாங்கிக் குடுத்து கூலாக்கிவிட்டு போனான்.


கொஞ்ச நாள் கழித்து வேலண்டைனுக்கு சிறிது நாட்கள் முன்பு,

மச்சான், வேலண்டைன் டே வருதுடா

அதுக்கு நான் என்ன பண்றது. நான் என்ன லவ்வா பண்ணுறேன்”(அத வேற ஞாபகப் படுத்தி கடுப்பேத்துறானுங்க சார்)

அதுக்கு இல்லடா

வேற் என்ன ம்#%$&%#”

வேலண்டைன் வருதுல. உன் தங்கச்சிக்கு என்ன வாங்கிக் கொடுக்ற

டேய், தங்கச்சிக்கு வேலண்டைன்ல எதுவும் வாங்கிக் கொடுக்க்க் கூடாது. வாங்கிக் கொடுத்தா அது தங்கச்சியா இருக்காது. என்ன சொல்ற, வாங்கிக் கொடுக்கவா?”

உன்கிட்ட கேக்குறதுக்கு நான் கந்து வட்டிக்கு கடன் வாங்கி செலவு பண்ணிறலாம்”.

அதுக்கப்புறம் ஒரு நாள் அவனுக்கும் அவளுக்கும் சண்டைனு வந்தான்.

என்னடா ஆச்சுஎனக் கேட்டேன்.

அவ பண்ணுனது பிடிக்கலடா

என்ன பண்ணுனா

அவ தங்கச்சிக்கு பிறந்தநாள்னு சொல்லவே இல்ல

தங்கச்சிக்குதான, அதனால என்ன? அதுக்கு என்ன சொல்லு

எனக்கு கோவம் வந்திருச்சு. அவளப் பார்த்துஎனக்கு உன்ன பாத்த்தும் புடிச்சிருச்சு, உன் தங்கச்சிய ரொம்பப் பிடிச்சு போச்சு. அவ பிறந்த நாளை எப்படி சொல்லாம விட்டன்னு சொல்லிட்டு சண்டைய போட்டுட்டு வந்திட்டேண்டா. திரும்ப எப்படி பேசுறதுன்னு தெரியலன்னு சொன்னான்.


நான்மௌனம் பேசியதேசூர்யாவ மனசில வச்சுக்கிட்டு,”நிறுத்துடா விளக்கெண்ணெய். நல்லாத் தானடா இருந்தீங்க. அப்புறம் எங்கிருந்துடா வந்துச்சு இந்த கரும்ம். காலைல கொண்டுபோய் விடுறதும், சாயந்திரம் கூப்பிட போறதும், சண்டை போடுறதும், அதுக்காக நீங்க சேருற வரைக்கும் பக்கத்தில இருக்கறவன பிடிச்சு மொக்க போடுறதும், எதுக்குடா இந்த மானங்கெட்ட பொழப்பு”, என கிழிச்சுட்டேன்.


பின்ன, என்ன பாத்தா மைக் மாதிரியா இருக்கு? போறவன் வர்றவன் எல்லாம் மொக்க போடுறான். ஆனா ஒண்ணு (ஆனா ஒண்ணுதான், ஆவன்னாதான் ரெண்டுன்னு சொல்றவங்களுக்கு கேர்ள் பிரண்டே கிடைக்காமல் போக! கல்யாணமாயிடுச்சேன்னு கொக்கரிக்கரவங்களுக்கு புதுசா கிடைச்சு அது பொண்டாட்டிக்கும் தெரிஞ்சிரும்). கைகால் உடைஞ்சவன்டயும் காதல் பண்றவன்டயும் சிக்கவே கூடாது. சிக்கினா சவ சவன்னு அதப் பத்தியே பேசி சாவடிச்சுருவானுங்க.