ஹூம்.... புது வருடம்

Filed under , by Prabhu on 1/05/2011 06:15:00 PM

3

புது வருஷக் கொண்டாட்டம்ங்கிறதே ஒரு மொக்கையான விஷயமா படுது. ஆங், நான் RSSதனமா எதுவும் சொல்லல.புது வருடம்னா என்ன பெருசா நடந்திடப் போகுது. என்ன 2010ல் கடைசியில் இருக்கும் முட்டைக்கு பதிலா 1. இதுல போதாக்குறைக்கு வயசு வேறக் கூடித் தொலைஞ்சிரும். புது வருஷத்தை பொறுத்த வரை கிக்கான விஷயமே பல நாள் கழித்து நினைவிற்கு வரும், அந்த ‘சகலகலாவல்லவன்’ படப் பாடல் தான். இன்னும் அதற்கு ஒரு ரீப்ளேஸ்மெண்ட் இல்லை, பார்த்தீங்களா?

அடுத்த மொக்கை இடத்தில் இருப்பது, புது வருட பிரமாணங்கள். அது என்ன இன்னைக்கு மட்டும் புது முடிவுகள், மாற்றாங்கள். மாறணும் என முடிவு பண்ணிட்டா ஒண்ணாந் தேதி வரையுமா காத்திருக்கிறது. இது சுத்த பேத்தலா இருக்கே! ஒண்ணாந் தேதி வரை வெயிட் பண்ணி தொடங்கற ஆசாமிகள் தொடருவதாய் தெரியவில்லை.

இப்படி ஒரு நெகடிவ் நோட்டிலா நான் இந்த வருடத்தை ஸ்டார்ட் செய்ய வேண்டும்? எனக்கு செண்டிமெண்டுகள் அற்றுப் போய்கொண்டிருகின்றன. இதோ இந்த வருடத்தில் பார்த்த முதல் படம் 'Paranormal Activity'. பின் ‘விருத்தகிரி’ பார்க்கவிருக்கிறேன். வருட ஆரம்பத்திலேயே இரண்டு horror படத்தோட ஆரம்பிச்சிருக்கிறேன்.

ம்ஹூம்... சரியில்லை. இப்படியெல்லாம் வருடத்தின் முதல் பதிவுலேயே உருப்படாத விஷயமா எழுத நான் ஒன்றும் ராகு காலம் பார்த்து தொடங்குவதில்லை. வருட ஆரம்பம் ஒண்ணும்  எல்லாம் ஒரு தினசரி வாழ்க்கைதான். இப்படியே மெல்ல பின்னால் திரும்பி பார்த்தால் தெருக் கோடியில் தெரியும் நாய் போல சிறிதாக நினைவிலிருக்கிறது போன வருட தொடக்கம்.

போன இந்த சமயத்தை ஒட்டியே ட்விட்டர், ஃபேஸ் புக்கை கட்டி அழ ஆரம்பித்தேன். பின் ஆறு மாதம் போனதே தெரியவில்லை. அந்த சமயம் போன வருடத்தின் உருப்படியான விஷயம்  Christ Universityல் எம்பிஏ சேர்ந்தது தான். அதன் பின்? அவ்வளவுதான்!

ஒரு மாதிரியாக போகுதில்ல? MBA MBA. After two months MBA stops being fun.  இன்னும் சில மாதங்களில் முகத்தில் சுருக்கங்கள் விழுந்துவிடும் போல. இப்படியெல்லாம் சொல்வதால் ரொம்ப கஷ்டப் படுவதாக் நினைக்க வேண்டாம். கொஞ்சம் வேலை ஜாஸ்தி. லூஸ்ல விடலாம்.  இதற்கு மேல் எழுதினால் சொந்த கதை சோக கதை எல்லாம் கொட்டிவிட நேரிடும் அபாயம் இருப்பதால் இப்படியே முடித்து விடுகிறேன். இந்தப் பதிவும் ஏன் எழுதின எனக் கேட்டால், இனிமேல் தொடர்ந்து எழுதவும், இன்னும் கொஞ்சம் எழுத்தை  சுவாரஸ்யமானதாக்கவும் முயற்சிக்க இருப்பதை நமக்காகவவாவது நம்பிக்கை ஏற்பட Tangibleஆன ஒரு செயல் வேண்டாமா, மலை உச்சியில் இருந்து விழும் நாயகனுக்கு கையில் ஏதோ வேர் சிக்குவதைப் போலான ஒரு சடங்குதான். Symbolic.