Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

என்னிடம் ஓட்டு கேக்க வந்த அழகிரி - என்ன கொடும சார்

Filed under , , by Prabhu on 6/20/2009 06:05:00 PM

1

மதுரை தேர்தல் முடிவுன்னு சொன்னதுமே எல்லாத்துக்கும் அது என்னவா இருக்கப் போகுதுன்னு. இன்னைக்கு காலையில்தான் ஓட்டு போடப் போறேன். ஆனால், அதுக்குள்ள தேர்தல் முடிவு சொல்லக் கூடிய நிலைமை இருக்கு இங்க. மதுரையப் பொறுத்த வரைக்கும் தேர்தல் முடிவு என்பது வேட்புமனுத் தாக்கல் அன்றே எல்லாருக்கும் தெரிந்தது தான். இதை தனியே வேறு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இப்போ நான் பேச வந்த விஷயமும் அது அல்லவே.

மதுரையோட தேர்தல் நிலைமை மற்ற தொகுதிகளை ஒப்பிடும் போது சற்று வேறு்பட்டு இருக்கிறது. அதற்கு காரணம் நாம் அனைவரும் அறிந்த படி மதுரையின் முடிசூடா மன்னன், தமிழகத்து இளவரசன் மாண்புமிகு அஞ்சாநெஞ்சன் அண்ணன் அழகிரிதான்னு சொல்லவா வேணும். அட, பேருக்கே ஒரு பதிவு ஒதுக்கலாம் போலயே. என்னதான் மக்களுக்கு அழகிரியப் பத்தி ஒரு உயர்வான எண்ணம் இல்லைன்னாலும் இவர்தான் ஜெயிக்க வாய்ப்பிருக்கு.


அழகிரியோட அரசியல் வாழ்க்கை என்னைக்குமே நேர்முக அரசியலா இருந்ததில்ல. எப்பவுமே அவரு பிண்ணனி வேலைகள்தான். அதாவது தேர்தலில நிக்க மாட்டாரு. ஆனா கட்சி பணியில இருப்பாரு. சாமில வில்லன் பண்ணுவான் பாத்துருக்கீங்களா? அது மாதிரி. இந்த அஞ்சாநெஞ்சன், அண்ணன் போன்ற பட்டங்கள் எல்லாம் இப்ப ரெண்டு வருஷமாதான். இதுக்கு முன்னடியே அழகிரியோட அதிகாரம் மதிரையில இருந்திருந்தாலும் தா..கிருட்டிணன் கொலை வழக்குல சிக்கி கொஞ்சம் பெயரிழந்திருந்தாரு. ஆனா, இந்த தி.மு.க. ஆட்சி தொடங்கினதில இருந்து அழகிரியோட அதிகார மையமாவே ஆயிருச்சு. அண்ணே ஆ...ன்னு கொட்டாவி விட்டா அடிக்கிறதுக்கும், ச்சூ.......ன்னு சொன்னா சூச்சூ போறதுக்கும் ஆளுங்க வந்திட்டாங்க. மதுரையில சித்திரைத் திருவிழாதான் பெரிய திருவிழான்னு சொல்லுவோம். ஆனா, இத விட பெரிய திருவிழாவா கடந்த ரெண்டு வருஷமா அழகிரியோட பிறந்த நாள் நடக்குது. இந்த தடவ ஒரு படி மேல போய் ஐம்பத்தி எட்டாவது பிறந்த நாள ஐம்பத்தி எட்டு நாள் நடத்தியிருக்காங்க. ரெண்டு ஊரு முழுக்க லைட் போட்டுதிருவிழாவா கொண்டாடிருக்காங்க, இந்த கரண்ட் பஞ்சத்தில. இதுக்கு மட்டும் எங்க இருந்துதான் க்ரண்ட் கிடைக்குதோ? படத்தில வர்ற வில்லன் கணக்கா மதுரையில ராஜா மாதிரி , அந்தாளுக்கு ஏழரையா எம்.பி சீட்டு வந்து சேர்ந்துச்சு.

இதுவரைக்கும் அடுத்தவனுக்காக வேலை பார்த்தது வேற, இப்ப தனக்கே பிரச்சாரம்ங்கிறப்போ பல்வேறு பிரச்சனைகள். இந்த லட்சணத்தில அவரு சும்மா இல்லாம எங்க ஊருக்காரய்ங்கள போய் நம்பி மூணு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில ஜெயிக்கிறேன்னு சொல்லி சவால் விட்டிருக்காரு. சும்மா கிடந்த சங்க ஊதிக் கெடுத்த கதையா அவங்கதான் முதல்ல மதுரை சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு 1000மும், அப்புறம் திருமங்கலம் இடைத்தேர்தல்ல ஐயாயிரமும் குடுத்தானுங்க. அதனால இப்ப மக்கள் பணம் எதிர்பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. படிப்பறிவில்லாதவங்க காசு கொடுத்தா அவங்களுக்கே ஓட்டு போட்டுருவாங்க. எங்கள மாதிரி படிச்சவங்க காச வாங்கிட்டு பிடிச்சதுக்கு குத்திக்குவோம், முடிஞ்சவரைக்கும் காசு குடுத்தவனுக்கு குத்தாம பாத்துக்குவோம். எங்கள இன்னுமா நம்புறாய்ங்க. ஆனா, ஒரு அநியாயம் நடந்து போச்சு. நாட்டுல ஜனநாயகம் செத்துக்கிட்டிருக்கு. பின்ன? முதல் முறையா ஓட்டு போட வர்ற என்ன மாதிரி இளைஞர்களை உற்சாகப்படுத்தும் வகையா குடுக்க வேண்டிய சன்மானத்த கொடுக்கனுமா இல்லையா? எனக்கு மட்டும் வரவே இல்லைங்க. என்ன கொடும சார் இது?

இப்ப இந்த டீடெயில எதுக்கு சொல்றேன்னா, இதனால தான் இப்போ பிரச்சன. இதுல என்னன்னு கேட்டீங்கன்னா, இப்ப நாடாளுமன்றத் தொகுதிகள் பெருசு. அதனால எல்லாத்துக்கும் அளவாத்தான் கொடுக்க முடியும் எல்லாத்துக்கும் ஐநூறு ரூபாய் கவர்கள்தான். ஆனா மக்கள் என்ன நினைக்கிறாங்கன்னா, அவரு கொடுக்கறத இவனுங்கதான் ஆட்டய போடுறாங்கனுங்கன்னு. இத்தனைக்கு அந்த கவர் அவரோட நிர்வாகிகள்க கிட்ட இருந்து வர்றப்பவே சீல் பண்ணிதான் வருது. அப்படியும் ஆட்டய போட்டுற கூடாதுன்னு ஒரு நிர்வாகிய கவர் விநியோகத்தப்போ அனுப்பி வைக்கிறாங்களாம். இதுக்கப்புறமும் அங்க நிலவுற அதிருப்திய தடுக்க முடியல. என்ன செய்யவென்று புரியாமல் அவர்கள் சில இட்ங்களில் மறுவிநியோகம் வேற பண்ணிக்கிட்டிருக்காங்க. ஆனா ஆசை யார விட்டது? ஒருத்தரு அவருகிட்ட போய், "ஐயா, திருமங்கலத்தில இருக்குற என் உறவுக்காரங்கள் எல்லா குடிசையில இருந்து ஓட்டு வீட்டு மாறிட்டாங்க.நான் மட்டும் குடிசையில எப்படி இருக்க்கறது? வழி பண்ணுங்க", எனவே கேட்டிருக்கான். என்ன கொடும சார்?

அழகிரி நேத்துதான் எங்க வீட்டு பக்கம் வந்தாரு, ஓட்டு கேக்க. எங்க வீட்டுப்பக்கம்தான் அவர் வீடு. அதாவது, பெரியார் நிலையத்து வழியா வந்தீங்கன்னா, அடுத்து சுப்ரமணியபுரம், ஜெய்ஹிந்த்புரம்(இங்க நான்), ஜீவா நகர், டி.வி.எஸ. நகர்(இங்க அண்ணன்). அட, பாத்தீங்களா எவ்வளவு பக்கமுன்னு.
அதனாலதான் கடைசி நாளா இங்க வந்திருக்காரு. மத்தியான நேரம், கடும்ம வெயில். அளவான மக்கள் வீடு வாசல்ல இருந்தே பாக்குற அளவு கிட்ட வந்தாரு. ஒவ்வொரு முகமா நிதானமா பாத்து கை கூப்பி ஓட்டு கேட்டுக்கிட்டே போனாரு. ஆளு அக்கினி வெயில்ல நல்லா கருத்திட்டாரு. இவ்வளவு காலம் ஏ.சியிலயே இருந்திட்டு இப்ப வெளிய வந்தா? உங்களயெல்லாம் பாத்தா பாவமா இருக்கு. எங்கள நம்பி இவ்வளவு பெரிய மேட்டர கையில எடுத்திருக்கீங்க. நம்மள இன்னுமா நம்புறாய்ங்க! என்ன கொடும சார் இது!


ஆனா சும்மா சொல்லக் கூடாது இந்த கருணாநிதிய. பெரிய தில்லாலங்கடிதான். தன் கடைசி காலத்தில எல்லா பிள்ளைகளுக்கும் வாழ்க்கைக்கு வழி செஞ்சிட்டாரே. ஸ்டாலினுக்கு சட்டமன்றம், அழகிரிக்கு நாடாளுமன்றம், கனிமொழிக்கு ராஜ்ய சபான்னு ஏதோ இந்த தமிழ் நாடே தன்னோட சொத்து போலவும், தான் இந்தநாட்டின் ராஜா போலவும் பிரித்துக் கொடுத்து விட்டாரே, இந்த தமிழீனத் தலைவர். என்ன ஒரு வில்லத்தனம்!

அழகிரிக்கு வெற்றி பெரிசில்லைன்னாலும் அந்த மூணு லட்சம் ஓட்டு மேட்டர் ஒரு தன்மானப் பிரச்சனையாவும், ஓட்டுக்கு லஞ்சம் மேட்டர் அவர் பதவி ஆசைக்கே உலை வைக்கிற பிரச்சனையாவும் இருக்கு. பொறுத்திருந்து பார்ப்போம்.

இலங்கை பிரச்சனை...வேறு பார்வையில...

Filed under , by Prabhu on 6/20/2009 06:02:00 PM

0

இந்தியா வெளியுறவு கொள்கை பொதுவா எப்படி இருந்துச்சுன்னு தெரியுமா? இங்க எல்லாரும் என்ன விட பெரிய ஆட்கள்(வயசுல) தான். அதானால உங்களுக்கே தெரிஞ்சிருக்கும் என்னன்னு.அதாவது இந்தியா மத்த நாடோட எப்படி பழகுறாங்க, யாரோட வாய்க்கா தகறாரு, எவன் வாங்க பழகலாம்னு சொல்றான், அவன கூப்பிட்டு கிடா வெட்டலாமானெல்லாம் முடிவெடுக்குறது நம்ம வெளியுறவுக் கொள்கைகள்தான்.


சரி இது வரைக்கும் எந்த மாதிரியான கொள்கை நம்மளோடதா இருந்தது. நேரு பத்தி சொல்லும் போது சின்ன வயசு சிவிக்ஸ்ல சொல்லிருப்பாங்களே! அதான். எவன் வம்புதும்புக்கும் போக கூடாது. எல்லாருக்கும் ஒரே மரியாத குடுக்கணும். ரெண்டு பேத்துக்கு சண்டன்னு வந்தா கூட போய் குத்துடா, வெட்டுடான்னு சவுண்ட கொடுக்காம கூட்டத்துல நின்னு விசில் அடிக்கிறத விட்டுட்டு, அடுத்தவனுக்கு நாட்டாம பண்ணாம, நான் யாரு பக்கமும் இல்ல, ஆனா தம்பி நீ செய்யுறது கொஞ்சம் கூட நல்லா இல்ல அப்படின்னு தப்பு பண்றவன்ட சொல்றதுதான் நம்ம வெளியுறவு கொள்கை.

புரியுதோன்னோ? இந்திய வெளியுறவுக் கொள்கையோட அச்சாரமே இந்தியாவோட இறையாண்மைய பாதிக்க கூடாதுங்குறதுதான்.ஆமா, டிவில கூட பாத்திருப்பீங்க இறையாண்மைனு அடிக்கடி சொல்வாங்க. அது என்ன ஆண்மைன்னு கேட்டீங்கன்னா, உங்கள கனவுல காந்தி குச்சியோட துரத்துவாரு. இறையாண்மைனா இந்தியாவுக்குன்னு ஒரு இது இருக்கும்ல. இதுன்னா எதுனு கேக்காதீங்க. இதுன்னா இதுதான், இது! ஒரு கெத்துன்னு வச்சுக்கலாமா? லாம்னு நினைக்கிறேன். அது டேமேஜ் ஆகிற கூடாதுங்கிறதுதான் நம்ம கொள்கை(இத இப்படியே மெயிண்டெயின் பண்ணிக்கடா சூனா.பானா... இப்படியே மெயிண்டெயின் பண்ணிக்கோ?). Non-alignment, disarmament என பல நல்ல பாலிசிகள கொண்டது Lic இல்லைங்க, இந்தியாவின் வெளியுறவு பாலிசி.

இப்ப ஒரு கேள்வி வரும், இதெல்லாம் இப்ப ஏன் பேசுறீங்கோன்னு கேக்குறீங்களா. இலங்கை பிரச்சனைதான். எல்லாருமே அந்த பிரச்சனய சாக்கடைய நோண்டுற மாதிரி நோண்டிக்கிட்டிருக்காங்க நீயுமா? என்னங்க செய்யுறது, இவனுங்க தொல்லைதாங்க முடியல, அதான். அவங்க தமிழனுங்கதான், அதனால நாம அவங்களுக்காக் குரல் கொடுத்தே ஆகணும். ஆனா அது என்னவோ நம்ம நாட்டு பிரச்சனை மாதிரியும் நம்ம கைல தான் முடிவு இருக்கிற மாதிரியும் பேசுறது, அதக் காண்பிச்சு ஓட்டு கேக்க முயற்சி பண்ணும்போதும் கடுப்பா வருது. உன் பிரச்சனையவே தீர்க்க முடியல உன்னால, நீ அடுத்த நாட்டுல இருக்குற பிரச்சனைய தீர்க்க போறயா? உன்னால பக்கத்து மாநிலத்துல இருந்து தண்ணி வாங்க முடியல, பக்கத்து நாட்டுல இருந்து நீதி வாங்கப் போறயா, பலே!

ஏதோ அது நம்ம தேசிய பிரச்சனை மாதிரி அவங்க மத்தியில ஆட்சிக்கு வந்தா எல்லா தீந்திரும்னு சொல்லி ஓட்டு கேக்குறாங்க. இவ்ளோ நாளா என்ன புடுங்கினானுங்க? இனியும் என்ன செஞ்சிர போறாங்க? இங்கயும் பதிவுலகத்தில சில பேரு இந்த தமிழீனத் தலைவர் என்னவோ வேரோட புடுங்கிட்டதா சொல்லிக்கிடிருக்காங்க. எனக்கு அப்படி ஒண்ணும் தெரியல.அதுவும் அவங்க ரத்தம் கொதிக்க கொதிக்க உருப்படியில்லாம பேசுறதுக்கு, டீயாவது கொதிச்சா குடிக்கலாம். கேட்டால் தமிழனாம், தமிழ் ரத்தம் ஓடுதாம் அவன் உடம்புல. எங்களுக்கு என்ன இங்கிலீஷ் ரத்தமா ஓடுது? எல்லாம் சிகப்பு கலர்தான். ஜாதி அரசியல பண்றவனெல்லாம் தமிழ் இனத்தப் பத்தி பேசுறான். இங்க இருக்கிற தமிழன முதல்ல முன்னேத்துற வழிய காணம். கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாதவன், வானம் எறி வைகுந்தம் போறானாம்.

இதுல இந்த வைகோ வேற பிரபாகரன் இறந்ததா செய்தி வந்தா, ரத்த ஆறு ஓடுமாம். என்ன ஒரு provocative பேச்சு. ஏன் இது. எந்த உத்தமனுக்காக இந்த போராட்டம்? தமிழர்களோட ஒரே பிரதிநிதி விடுதலை புலிகள்தான்னு சொல்றதுக்காக, தன்னை தவிர மற்ற நான்கைந்து தமிழர்க்கான அரசியல் கட்சிகளையும் அதன் தலைவர்களையும் அழிச்ச அந்த புண்ணிய ஆத்மாவுக்காகவா? ராம்தாஸ் ஜாதி அரசியல் பண்ணும் போது வராத தமிழர் நலன் தேர்தல் வரும் போது கண் முன்னாடி ஆடுது. மற்ற கட்சிகளும் சும்மா சொல்றதுக்கு இல்ல. அவங்களும் சினாரியோ புரிஞ்சிக்கிட்டு நல்லா தட்டுறாங்க..சங்...சங்...னு...

இந்த உலகத்துல எத்தனையோ போர்கள் நடக்குது,அதையும் இத மாதிரிதான பாக்கனும். பக்கத்துல ஒரே எல்லைய பகிர்ந்துக்குற மியான்மர்ல மிலிட்டரி ஆட்சி. அமைதிக்கான நோபல் வாங்கின சூ கி, வீடுக் காவல்ல இருக்காங்க வருஷக் கணக்கா. அதுக்கு யாராவது குரல் கொடுத்தமா? அதுல ஓட்டு இல்லையே, அப்புறம் எப்படி குரல் கொடுப்பானுங்க? இந்தியாவோட இறையாண்மைய கெடுக்குற மாதிரி இவனுங்க பேசுவானுங்க, நாம் வேடிக்கை பாக்கனும்? ஆயுதம் ஏந்துவாராம் வைகோ. இந்த நாட்டுல இருந்துக்கிட்டு என்ன சொன்னாலும் அது இந்த நாட்டத்தான் பிரதிபலிக்கும்ங்கிற நிலைமைல இப்படி பேசுனா?

அப்ப இலங்கை தமிழர்கள விட்டுற சொல்றயான்னா, அப்படி இல்லை. ஆனா, உங்க பார்வைய மாத்திக்குங்க. இந்த அரசிய வாதிங்க சொல்ற வழியில யோசிக்காதிங்க. நீங்களா யோசிங்க. ரொம்ப அரசிய்ல தேவையில்ல, லாஜிக்கலா சிந்திச்சாலே போதும்.

இப்படியெல்லாம் பேசும்போது நான் இலங்கை பிரச்சனைல ஆதரவு தரலன்னு நினைச்சிராதிங்க. நான் வேறு பார்வையில சில விஷயங்கள பேச விரும்புறேன், அவ்வளவே!

ஏதாவது செய்யனுங்க!

Filed under , , by Prabhu on 6/05/2009 08:43:00 AM

0

டிவில பாத்தா எந்நேரமும் தேர்தல் செய்திதான். எப்ப பாரு, ஐந்து கட்ட வாக்குப் பதிவு, துணை ராணுவ உதவி, அது இதுனு ஒரே சீனுப்பா? இந்த டயத்துல எல்லா மாநில தேர்தல் ஆணையரும் மூஞ்சிய டிவில காண்பிச்சுப்பாங்க! அட, எல்லா வருஷமும் இந்தியாவுல எங்கயாவது தேர்தல் நடந்துட்டேதான் இருக்கு, ஆனாலும் ஒவ்வொரு தேர்தல் நடக்கும் போதும் ஏதாவது குளறுபடிதான். உலகத்திலயே ரெண்டாவது பெரிய அரசியலமைப்பாம் (ம்ஹும்..இதுக்கு குறைச்சலில்ல.. போட்டிருக்கறது கோவணமா இருந்தாலும் ஓட்டை இல்லாம இருக்கணும்). ஏனோ தேவையில்லாத்துல எல்லாம் இந்தியா முண்டிகிட்டு போயி முதலாவதாவோ ரெண்டாவதாவோ வந்து, ஐ! நாந்தான் பர்ஸ்ட்னு சொல்லி பெருமைபட்டுக்குது. உ.ம். அரசியலமைப்பு, லஞ்சம், எய்ட்ஸ்.

இப்போ என்னடா சொல்லவரன்னு நீங்க கேக்கலாம். இது இவ்ளோ பெருசா வச்சுகிட்டு என்ன சாதிச்சுட்டோம். ஒண்ணும் இல்ல. அதுல இருக்றதுல என்னத்தை பாலோ பண்றாங்க! ஒண்ணுமே இல்ல! இதுல தைரியமா அந்த அரசியலமைப்பு வச்சுகிட்டு இந்தியா, இறையாண்மை அப்படின்னு அரசியல் பண்ண சொன்ன செய்வானுக(அப்படின்னா என்னன்னு கேட்டா முழிப்பான் அவன்). வேணும்னே ஒண்ணும் இல்லாத பிரச்சனய பெருசாக்குவாங்க. காவிரி தண்ணி பிரச்சனையிலயே அரசியல்தான் தண்ணி விடலைனு சொல்வேன். அட, தண்ணிய விடற வரைக்கும் தான போராட்டம் பண்ற மாதிரி சீன் குடுக்கலாம். அது தங்க முட்ட போடுற வாத்து, ரெண்டு மாநில அரசியல்வாதியுமே அறுக்க மாட்டானுக. அது கன்னித் தீவு மாதிரி, சிந்துபாத்(தமிழ் அரசியல்வாதிக) எப்பவுமே மந்திரவாதி(கர்நாடக அரசியல்வாதிக) அனுப்ற கஷ்டத்தில இருந்து லைலாவ(காவிரி, அது பாவம் அது பாட்டுக்கு போறது, அத வச்சு நம்ம மண்டைய உடைக்கிறாங்க) காப்பாதிட்டே இருப்பான். இவனுக ரவுசு தெரிஞ்சா காவிரியே கண்ணீர் விடுங்க!(ச்ச்சீ... கொசுவர்த்தி சுருளை அணைச்சுட்டு பேசு, எதுக்கு இந்த ப்ளாஷ் பேக்? அப்படிங்கறிங்களா?)

இப்படிப்பட்ட பிரச்சனைக்கெல்லாம் தீர்வு கொடுக்காத சட்டமோ, அரசியலமைப்போ, அதப் பத்தி பெருமைப்பட என்ன இருக்கு? நமக்கு அடிப்படை உரிமைகள்ன்ற விஷயமே கிடைக்கல, பின்ன இந்தியன் வேற எந்த உரிமைக்கு போராடுவான். அந்த மாதிரி உரிமைகள மீறும் போது அரசு பாதுகாப்பு. அரசே அத பண்ணா? அப்படி நடந்து கோர்ட்டில 'கப்பம்' கட்டின அரசுதான் தமிழக அரசு.நடந்தது இப்போ இல்ல, பல காலம் ஆச்சு.(அது என்னடா மீறல் சொல்லிட்டு பேசு,எதுக்குடா சஸ்பென்ஸ்னு கேப்பீங்க!). அது என்னன்னா, விருதுநகர்ல கல்லூரி மாணவர்கள போராட்டத்தப்போ புடிச்ச போலீஸ் கணவான்கள்(?!) அவங்கள சட்டையில்லாம குத்த வச்சு போட்டோ எடுத்து பத்திரிக்கைல பப்ளிஷ் பண்ணிட்டாங்க. அதுக்கு கோர்ட்டில கட்டுன கப்பம் கட்டின பிறகு நிறுத்திருக்கணும் (நல்ல மாட்டுக்கு ஒரு சூடு!). ஆனா நடக்கிறது என்னன்னு உங்களுக்கே என்னன்னு தெரிஞ்சிருக்கும்னு நினைகிறேன். இப்போ என்ன சொல்றீங்க? (நாங்க உன்னைய கேட்டா,நீ எங்கள கேக்குறயானு கேக்குறது என் காதில விழுது)

இப்போ தேர்தல்க்கு என்ன காமெடி பண்றாங்கனு தெரியல! தேர்தல் நடக்கும் போது IPLனு நிறைய நாட்டுக்காரங்க வந்தா பாதுக்காப்புக்கு கஷ்டம்னு இப்போ சிதம்பரம்(உள்துறை அமைச்சராம்!) BCCI கிட்ட கேக்குறாரு. வாஸ்தவம் தான். ஆனா இந்த அறிவுப்புயல்(Brain stormங்க!) இதுக்கு முன்னாடி அவருக்கு ஏன் தோணாம போச்சு! எல்லாம் பண்ண பிறகு. இப்போ BCCI முணுமுணுக்கிறான். இப்படி கோர்ட் பேச்ச கேக்காத அரசு, அரசு பேச்ச கேக்காத அரசு நிறுவனம்னு இந்தியாவே களேபரமா இருக்கு. இதுல குடியரசு தினம் மட்டும் 'கோலாஅஅஅஅகலமா' நடக்குது, வருஷாவருஷம். ஆற்காடு இருள்சாமி வேற கோர்ட்ட எதிர்த்து தப்பா பேசுறாரு. இப்படி இவங்களே பேசுனா படிக்காதவன் எப்படி மதிப்பான் கோர்ட்ட! தலைமை நீதிபதி "எங்க பேச்ச கேக்கலன்னா நாங்க எதுக்கு? பேசாம நீதித்துறைய கலச்சிருங்க"ன்னு சொல்ற அளவுக்கு ரப்ச்சற கொடுத்துருக்கானுங்க!

இந்த நாட்டில எதை எதிர்பார்த்து தேர்தல் நடத்தி ஓட்டு போட்டுறது. பேசாம ஒருத்தரு உச்ச நீதிமன்றத்தில கேசு போட்ட மாதிரி, ஓட்டு போட விருப்பமில்லன்னு ஒரு அமுக்கி(பட்டனுங்கோ!) வைக்கணும். அப்புறம் அதையே நிறைய பேர் அமுக்கினா, அந்த தேர்தல் செல்லாது. வேட்பாளர மாத்தி தேர்தல் நடத்தனும். அதுவரைக்கும் ஜனாதிபதிதான் அங்க. அப்பத்தான் நல்ல வேட்ப்பாளர உருப்படியா தேர்ந்தெடுக்க ஒரு வழியிருக்கும். நாம எல்லாத்துக்கும் ஒரு தகுதி எதிர்பார்க்கிறோம். ஆனா ஒரு அரசியல்வாதிய தேர்ந்தெடுக்க ஒரு தகுதி வரைமுறையே இல்ல. கேட்டா அது அடிப்படை உரிமைகளை மீறுவதா ஆயிடும்னு சொல்வாங்க. ஆமா, கொடுக்க வேண்டிய வாழத் தேவையான உரிமைகள பறிச்சுக்கிட்டு, கண்ட கிரிமினலுக்கும் உரிமைய கொடுத்து நாட்ட காப்பாத்துறாய்ங்களாம். போங்கடா, நீங்களும் உங்க ஜனநாயகமும்.

இப்படி எல்லாத்தையும் மீறி இங்க சந்தோசமா வாழ்ந்துக்கிட்டிருக்கோம் பாத்தீங்களா? அதாங்க இந்தியன், அதுக்கு பெருமைப்படுறதா இல்ல வருத்தப்படுறதானு தெரியல.
எங்க கல்லூரில படிச்சவரு எடுத்த ஒரு படத்தில சொன்ன மாதிரி,


"ஏதாவது செய்யனுங்க!"

என்ன கருமமோ?

Filed under , by Prabhu on 6/02/2009 10:17:00 PM

3

நேத்துக் காலையில கிளாசுல இருக்கிறப்போ திடீரென ஒரு sms வந்துச்சு. திறந்து பார்த்தப்போ எனக்கு ஒண்ணும் புரியல. திரும்ப படிச்சப்போ புரிஞ்சது ஆனா சந்தேகம். பாகிஸ்தான் போன இலங்கை வீரர்கள தாக்கிட்டாங்கனு போட்டிருந்துச்சு. எனக்கு அவங்க பாகிஸ்தான் போனதே தெரியாது.கிரிக்கெட்டுக்கும் எனக்குமான உறவ பன்னிரண்டாப்போட முறிச்சுக்கிட்டேன். நான் பாத்தாலே தோத்து போறாங்க, பாக்கலேனா உலக சாதனை! அட்லீஸ்ட் வெற்றியாவது உண்டு. என்ன இது சின்னப் புள்ளத்தனமா இருக்கு! போங்கடா நீங்களும் உங்க விளையாட்டும், ஒரு நாள் வேஸ்ட் பண்றாய்ங்க! அப்படினு விட்டுட்டேன் (ச்சீச்சீ... இந்த பழம் புளிக்கும்). அந்த smsல சந்தேகம் ஏன்னு கேக்கலாம். காரண்ம் அத அனுப்பினவன். அவன் சும்மாவே C.M.செத்துடாரு, மூணு நாளு லீவுனு அனுப்புவான்(அட, இத விடுங்க, நாகேஷ் என்ன பண்ணுவாரு, அவருக்கெல்லாம் 6 மாசம் முந்தியே இரங்கல் செய்தி அனுப்பினவன்). அவனையா நம்புறதுனு நினைச்சா நிஜமாவே நடந்திருக்கு. என்ன கருமமோ?

இது வந்ததும் எனக்கு என்ன தோணுச்சுனா, நம்ம நாட்டுக்காரன்னா கூட பரவாயில்ல, முன் விரோதம்னு நினைச்சுக்கலாம். பாவம் இலங்கைக்காரங்க, அதுவும் விளையாடுரவங்கள போய்...ச்ச்ச்ச்ச...(உங்களுக்கு ஒரு வெண்கல கிண்ணம் கூட கிடயாது). யாருங்க அடிச்சுருப்பா? அதுவும் எஸ்கேப் ஆயிட்டாங்களாமே? இத்தனைக்கும் அங்க நிறைய தீவிரவாத இயக்கங்களுக்கு ISI உதவி இருக்குனு சொல்வாங்க. அவங்களுக்கே கடுக்காய் குடுத்துட்டாங்க போல! இப்போ உணர்ச்சிவசப்படுவாரு பாருங்க ராஜ்பக்க்ஷே... அவங்களோட உதவில இலங்கைல ரேடார் வைகனும்னு நினைச்சப்ப அங்க தீவிரவாதம் இல்லயா?அந்த ரேடார் வச்சா நம்மளோட பங்களூருல இருக்கற விமான கட்டுமான தளத்த பாக்கலாமாம். என்ன கருமமோ?

எப்போ பாத்தாலும் பாகிஸ்தானுக்கு இடம் கொடுப்பேன், சீனாக்கு இடம் குடுப்பேன்னு நம்மல மிரட்டுறதே இவனுங்களுக்கும் பொழப்பாப் போச்சு.. இங்கிட்டு பாகிஸ்தானோட ரேடார் ப்ளான், அங்கிட்டு சீனாப் படைகிட்ட இருந்து பயிற்சி, விமானம் அப்படினு இந்தியாவ மிரட்டுறது. அப்பதான தமிழனுங்கள காப்பத்தறதுக்கு யோசிப்பானுங்க இந்தியாக்காரனுங்க. ஏன்னா உன் அவனுங்க இந்த ரெண்டு நாட்டுக்காரங்களையும் உள்ள விடுறது, இந்தியாக்காரனுக்கு கூடாரத்துக்குள்ள ஒட்டகத்தை விடுறமாதிரி. அதான் இந்தியா திருடனுக்கு தேள் கொட்டுன மாதிரி பொத்திக்கிட்டு இருக்கு. ந்ம்ம பாதுகாப்பா, அங்க இருக்கும் தமிழர்கள காப்பாத்துறதானு வந்தா நம்ம பாதுகாப்புதானு முடிவு எடுத்திட்டு அத சொல்லவும் முடியாம முழுங்கவும் முடியாம கஷ்டப்படுது அரசாங்கம். அவங்களயும் தப்பு சொல்ல முடியாது.உண்மையில பிண்ண்னியில என்ன நடக்குதுனு நமக்கு தெரியிறதில்ல. என்ன கருமமோ?

இந்த தமிழ் ஈழம் மேட்டரும் எனக்கு புரியலங்க. நான் சின்னப் பையன்(நிஜமாவே!), அதனால என்னய மன்னிச்சிருங்க. எனக்கு நம்ம தமிழர்கள் கஷ்டப் படுறாங்கனு புரியுது. அவங்கள காப்பாத்தனும்னு புரியுது. அவங்க உரிமைகள் கிடைக்கனும்னு புரியுது. அவங்க அதுக்காக போராடனும்னு புரியுது. ஆனா இந்த தனி நாடு கேக்குறது சரியானு புரியலைங்க.
ஏன்னா, காஷ்மீர் தனி நாடு கேக்கும் போது நாம குடுக்கறதில்லயே. முக்கியமான விஷயம் என்னன்னா, காஷ்மீர் நம்ம நாடல சேர்ந்தது லேட்டாதான். பாகிஸ்தான் அட்டாக் பண்ணுவாங்கிற பயத்தில லால் பகதூர் சாஸ்திரிய கூப்பிட்டு கையெழுத்து போட்டு இந்தாங்க நாடு, என்ன பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோ, நாட்ட நல்லா பாத்துக்கோங்கனு அந்த ராஜா(சுல்தானோ?.. என்ன கருமமோ?) நம்மகிட்ட குடுத்துட்டு எஸ்கேப் அயிட்டாரு. அன்னைல இருந்து இந்தியா தான் காஷ்மீர தன் தலையில(மேப்ப பாருங்க!) வச்சு காப்பாத்திட்டு இருக்கு(வருஷம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் ராணுவ செலவுல!என்ன கருமமோ...). இப்ப சொல்லுங்க, இந்த ரெண்டு நிலைமையும் ஒண்ணுதான? அப்புறம் ஏன் இந்த 'உண்மை' தமிழர்கள் வேற வேற தீர்ப்புகள் வச்சிருக்காங்க. வித்தியாசம் இருந்தா விளக்கம் குடுங்க. இல்ல, இதுக்கு அரசியல் காரணம் இருக்குங்கறாங்க. சும்மா ஸ்டண்ட் பண்றாய்ங்களாம். என்ன கருமமோ?

இதெல்லாம் இங்க எழுதலாம், சந்தேகம் கேக்கலாம்ல. ஒண்ணும் பஞ்சாயத்து வராதே. நமக்கு இதெல்லாம் பழ்க்கம் இல்லீங்க. சாதாரண பையன் பிரச்சன வந்த உடனே பெரிய பைட் மாஸ்டர் ஆகுறதுக்கு நாம என்ன விஜயா? இந்த ராம் சேனா பத்தி ஒரு forum எழுதுனவர் மேல கேஸ் போட்டாங்களாம். இதுக்கெல்லாமா கேசு போடுவாய்ங்க! என்ன கருமமோ?