டாப்பு அடிக்கலாம் - 10
Filed under டாப்பு , by Prabhu on 5/16/2010 12:35:00 PM
14
ராவணன் தமிழிலும் வெளியாகிவிட்டது. பொதுவாக ரஹ்மான் ஆல்பம் வெளியானால் எந்நேரமும் அதே பாடலே கணிணியில் ஓடிக் கொண்டிருக்கும். இந்த தடவை அப்படியில்லை. ராவணன் படம் கோபத் காண்டே என்ற நக்சல் தலைவன் சம்பந்தமான கதை என்று விகடனில் சொல்லுகிறார்கள். மணிரத்னம் இதை மறுக்கிறார் என்றும் சொல்கிறார்கள். அப்ப கண்டிப்பா இது நக்சலோட கதைதான். ஏற்கனவே இப்படித்தான் இருவர், குரு போன்ற படங்களுக்கு நிஜ கதை இல்லை என்றார். His refusal is as good as acceptance.
------------------------------------------------------------------------------------
பாணா காத்தாடி பட பாடல்கள் பரவாயில்லை. கேட்கலாம். வழக்கம் போல மூக்கில் பாட ஒரு பாட்டு வைத்திருக்கிறார் யுவன்சங்கர்ராஜா.
------------------------------------------------------------------------------------
வர வர நிலைமை பாடாதியாகிக் கொண்டிருக்கிறது. கடைசியாக சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் போது தொடங்கியது பிறகு அங்கிருந்து ,மதுரை திரும்பும் போதும் அதன் பிறகு மதுரையிலும் தொடர்கிறது. எங்கே திரும்பினாலும் நடக்கிறது. பைக்கில் செல்லும் போது முன் செல்லும் வண்டியின் பில்லியனில் ஒரு அழகான பெண். ஓவர் டேக் செய்கையில் பார்த்தால் அந்த ஓட்டுநரின் முன்னே பெட்ரோல் டாங்கில் 5 வயசு குழந்தை. இப்படி தான் எங்கே பார்த்தாலும். கல்யாணம் ஆனவர்களுக்கும் ஆகாத பெண்களுக்கும் இடையில் ஒரு சேலை, பத்து கிலோ எடை என்ற வித்தியாசத்தைக் கடைபிடிக்கும் தமிழ் கலாசாரம் எங்கே போனது? என்ன கொடுமை சரவணன் இது?!
------------------------------------------------------------------------------------
பிளஸ்2 ரிசல்ட் வெளி வந்திருச்சாம். யாருக்கு வேணும்? நான் எழுதிய வருடங்களுக்கு முன்னயோ பின்னயோ 10ம், 12 வகுப்பு அரசுத் தேர்வுகளைப் பற்றி யோசித்ததே இல்லை. எனக்கு இந்த பரிட்சை, அதுக்கு படிப்பு போன்ற விஷயங்கள் பிடிக்கவே இல்லை. மொக்கையா இருக்கு. நம்ம எஜுகேஷன் சிஸ்டமே ஒருவகையில் பெண்கள் ஆதரவாக தான் இருக்கு. இதை யாரோ சைக்காலஜிஸ்டே சொல்லியிருக்கிறார். இந்த மாதிரி தியரைஸ்ட் படிப்பு பசங்க மூளைக்கு வேலைக்கு ஆகாதாம். அப்புறம், எல்லா வருடமும் பெண்களே சாதிக்கிறார்கள் என்பது தில்லாலங்கடி வேலைதானே?
------------------------------------------------------------------------------------
இந்த நடிகர்கள் இளவரசு வையும், ‘மகாநதி’ சங்கரையும் தடை செய்ய வேண்டும். அவர்கள் ஒவ்வொரு படத்திலும் வந்து ஹீரோக்களுக்கு கொடுக்கும் பில்டப் தாங்க முடியவில்லை. அவர் இவரு அவரு, கிழிச்சிருவார், தைச்சிருவாரு என கொல்றாய்ங்கப்பா! அதுவும் கடைசி சில படங்களில் மகா மொக்கை! யாருய்யா அது, சுறா ந்க்கிறது? நான் விஜய பத்தி தப்பா பேசாத ஒரே பதிவர் என கார்க்கி கிட்ட சொல்லிருக்கேன். அதைக் காப்பாத்துறேன். ஒரே ஆள எல்லாரும் அடிககிறது வீரமில்ல. வாங்க, வேற யாரையாவது குத்தலாம். :)
------------------------------------------------------------------------------------
இந்த தடவை லிட்டில் ஜான் வேணாம். வேற ஒன்று.
ஒரு வட இந்தியன் வழிப்பறி கேசில் மாடிக் கொண்டான். மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது. அந்த வட இந்தியனின் வக்கீல், ‘என் தரப்பு ஆசாமி தமிழ்நாட்டிற்கு வந்து ஒரு வாரம் தான் ஆகிறது. இந்த ஊரைப் பத்தி ஒன்னும் தெரியாது. தமிழே சில வார்த்தைகள் தான் பேசத் தெரியும். ஆதலால் இந்த அப்பாவியை விடுதலை செய்ய வேண்டுகிறேன்.’
நீதிபதி வட இந்தியனைப் பார்த்து, ‘உனக்கு தமிழ் எவ்வளவு தூரம் தெரியும்?’ என்றார்.
அதற்கு அவன் உடைந்த தமிழில், ‘மரியாதையா உன்னோட பர்ஸை என்கிட்ட கொடுத்துரு’ என்றான்.
