Showing posts with label டாப்பு. Show all posts
Showing posts with label டாப்பு. Show all posts

டாப்பு அடிக்கலாம் - 10

Filed under , by Prabhu on 5/16/2010 12:35:00 PM

14

ராவணன் தமிழிலும் வெளியாகிவிட்டது. பொதுவாக ரஹ்மான் ஆல்பம் வெளியானால் எந்நேரமும் அதே பாடலே கணிணியில் ஓடிக் கொண்டிருக்கும். இந்த தடவை அப்படியில்லை. ராவணன் படம் கோபத் காண்டே என்ற நக்சல் தலைவன் சம்பந்தமான கதை என்று விகடனில் சொல்லுகிறார்கள். மணிரத்னம் இதை மறுக்கிறார் என்றும் சொல்கிறார்கள். அப்ப கண்டிப்பா இது நக்சலோட கதைதான். ஏற்கனவே இப்படித்தான் இருவர், குரு போன்ற படங்களுக்கு நிஜ கதை இல்லை என்றார். His refusal is as good as acceptance.
------------------------------------------------------------------------------------

பாணா காத்தாடி பட பாடல்கள் பரவாயில்லை. கேட்கலாம். வழக்கம் போல மூக்கில் பாட ஒரு பாட்டு வைத்திருக்கிறார் யுவன்சங்கர்ராஜா.

------------------------------------------------------------------------------------

வர வர நிலைமை பாடாதியாகிக் கொண்டிருக்கிறது. கடைசியாக சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் போது தொடங்கியது பிறகு அங்கிருந்து ,மதுரை திரும்பும் போதும் அதன் பிறகு மதுரையிலும் தொடர்கிறது. எங்கே திரும்பினாலும் நடக்கிறது. பைக்கில் செல்லும் போது முன் செல்லும் வண்டியின் பில்லியனில் ஒரு அழகான பெண். ஓவர் டேக் செய்கையில் பார்த்தால் அந்த ஓட்டுநரின் முன்னே பெட்ரோல் டாங்கில் 5 வயசு குழந்தை. இப்படி தான் எங்கே பார்த்தாலும். கல்யாணம் ஆனவர்களுக்கும் ஆகாத பெண்களுக்கும் இடையில் ஒரு சேலை, பத்து கிலோ எடை என்ற வித்தியாசத்தைக் கடைபிடிக்கும் தமிழ் கலாசாரம் எங்கே போனது? என்ன கொடுமை சரவணன் இது?!

------------------------------------------------------------------------------------

பிளஸ்2 ரிசல்ட் வெளி வந்திருச்சாம். யாருக்கு வேணும்? நான் எழுதிய வருடங்களுக்கு முன்னயோ பின்னயோ 10ம், 12 வகுப்பு அரசுத் தேர்வுகளைப் பற்றி யோசித்ததே இல்லை. எனக்கு இந்த பரிட்சை, அதுக்கு படிப்பு போன்ற விஷயங்கள் பிடிக்கவே இல்லை. மொக்கையா இருக்கு. நம்ம எஜுகேஷன் சிஸ்டமே ஒருவகையில் பெண்கள் ஆதரவாக தான் இருக்கு. இதை யாரோ சைக்காலஜிஸ்டே சொல்லியிருக்கிறார். இந்த மாதிரி தியரைஸ்ட் படிப்பு பசங்க மூளைக்கு வேலைக்கு ஆகாதாம். அப்புறம், எல்லா வருடமும் பெண்களே சாதிக்கிறார்கள் என்பது தில்லாலங்கடி வேலைதானே?

------------------------------------------------------------------------------------

இந்த நடிகர்கள் இளவரசு வையும், ‘மகாநதி’ சங்கரையும் தடை செய்ய வேண்டும். அவர்கள் ஒவ்வொரு படத்திலும் வந்து ஹீரோக்களுக்கு கொடுக்கும் பில்டப் தாங்க முடியவில்லை. அவர் இவரு அவரு, கிழிச்சிருவார், தைச்சிருவாரு என கொல்றாய்ங்கப்பா! அதுவும் கடைசி சில படங்களில் மகா மொக்கை! யாருய்யா அது, சுறா ந்க்கிறது? நான் விஜய பத்தி தப்பா பேசாத ஒரே பதிவர் என கார்க்கி கிட்ட சொல்லிருக்கேன். அதைக் காப்பாத்துறேன். ஒரே ஆள எல்லாரும் அடிககிறது வீரமில்ல. வாங்க, வேற யாரையாவது குத்தலாம். :)

------------------------------------------------------------------------------------

இந்த தடவை லிட்டில் ஜான் வேணாம். வேற ஒன்று.

ஒரு வட இந்தியன் வழிப்பறி கேசில் மாடிக் கொண்டான். மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது. அந்த வட இந்தியனின் வக்கீல், ‘என் தரப்பு ஆசாமி தமிழ்நாட்டிற்கு வந்து ஒரு வாரம் தான் ஆகிறது. இந்த ஊரைப் பத்தி ஒன்னும் தெரியாது. தமிழே சில வார்த்தைகள் தான் பேசத் தெரியும். ஆதலால் இந்த அப்பாவியை விடுதலை செய்ய வேண்டுகிறேன்.’

நீதிபதி வட இந்தியனைப் பார்த்து, ‘உனக்கு தமிழ் எவ்வளவு தூரம் தெரியும்?’ என்றார்.

அதற்கு அவன் உடைந்த தமிழில், ‘மரியாதையா உன்னோட பர்ஸை என்கிட்ட கொடுத்துரு’ என்றான்.

டாப்பு அடிக்கலாம் - 9

Filed under , , by Prabhu on 5/01/2010 02:22:00 PM

6

ரொம்ப காலமாக எதுவும் எழுதவில்லை. அதிகம் ப்ளாக் பக்கம் வரவில்லை. எதுவும் எழுத படிக்க விருப்பமில்லை. ஒரே வறட்சி! என்னுடைய இலவச இண்டெர்நெட் அளவை தாண்டிவிட்டது கூட காரணமாக இருக்கலாம். என்னவோ, இணைய சண்டைகளில் இருந்து ஒரு பத்து நாட்களுக்கு விடுதலை :).

-------------------------------------------------------------------------------------------------------------------
முதல் நாள் சுறா ரிலீஸ். மறுநாள் அஜித் பிறந்தநாள். என் நண்பர்களில் இரண்டு பேருக்கும் ரசிகர்கள் உண்டு. இரண்டு நாளும் மெசேஜ் அனுப்பி சாவடித்துவிட்டானுங்க. ரெண்டு நடிகர்களுமே ஆளுக்கு அவங்க அவங்க பங்குக்கு மொக்க படமா எடுத்து விடுறாங்க. இந்த லட்சணத்தில் யாரு படம் நல்லாருக்கு , எது மோசம் என இரண்டு குழுவும் அடிச்சிக்கிறது. கஷ்டம்!

-----------------------------------------------------------------------------------------------------------------
பொழுது போகாமல் படம் வரைய கற்றுக் கொள்ள முயற்சி செய்கிறேன். போர்ட்ரைட் அளவு இல்லைன்னாலும்  caricature  அளவுக்காவது கற்றுவிட ஆசை இருக்குறது. அமீபா வரையத் தெரியாதவனுக்கு அது மாஸ்டர்பீஸ். இதை சொல்லித் தரும் pdf அல்லது வெப்சைட் யாருக்கேனும் தெரிந்தால் சொல்லுங்கள்.

------------------------------------------------------------------------------------------------------------------
Guy de Maupassant எழுதிய சிறுகதைகளின் தொக்குப்பு ஒன்று படிக்கிறேன். 19ம் நூற்றாண்டின் இறுதியில் பாரிஸில் வாழ்ந்த இருந்த மனிதர். அப்பொழுதே அங்கு நம் நாட்டைக் கம்பேர் செய்யும் பொழுது கொஞ்சம் ‘free society' ஆகத் தான் இருந்திருக்கிறது. மனுஷன் சாகும் போது கிறுக்கு பிடிச்சு போயிருச்சாம். அதே சமயத்தில் வாழ்ந்த பல வித்தியாச எழுத்தாளர் ஆசாமிகள் இப்படித்தான் கிறுக்கு பிடித்து, கையில் அஞ்சு பைசா இல்லாமல் இறந்திருக்கிறார்கள். 

O'Henry யின் சிறுகதை தொகுப்பு தயாராக இருக்கிறது. அவர் நம் ப்ளாக்கர் சிறுகதைகளின் தந்தை. கேஷுவலாக கொண்டு போய் டொக்குத்தனமாக முடிக்க கூச்சப்படாதவராக தெரிகிறார். இவரும் வெற்றியான இலக்கிய வாழ்விற்குப் பிறகும் அஞ்சு பைசா இல்லாமல் இறந்திருக்கிறார். சிறுகதை எழுதும் போது நினைவில் வைத்துக்கோங்க!

-----------------------------------------------------------------------------------------------------------------
’ராவண்’ பாடல்கள் வெளியாகிவிட்டது. நல்ல ஆல்பம். அதைப் பற்றி எழுதியதை நாளை வெளியிடுகிறேன். ஸ்டில்கள் பரபரப்பைக் கிளப்புகிறது. ‘பீரா பீரா’ பாடல் பட்டையை கிளப்புகிறது. அதை தமிழில் ரஹ்மான் பாடுவாதாக கேள்வி. காட்டுப் பிண்ணனியில் படம் நகருகிறது போல. தமிழில் ஆல்பம் இன்னும் வரவில்லை. விரைவில் வர வேண்டும்.

-------------------------------------------------------------------------------------------------------------------

போன வருடத்தில் இருந்து காமிக் படிக்கிற வழக்கம் வைத்திருக்கேன். Batman, Supermanல் தொடங்கி Wanted, Sin city என கிராஃபிக் நாவல் வரை டவுண்லோட் செய்து படித்துக் கொண்டிருக்கிறேன். சமீபத்தில் ‘கருந்தேள் கண்ணாயிரம்’ கொடுத்த ப்ளூபெர்ரி சீரீஸ் படித்தேன். இப்பொழுது XIII ரெகமெண்ட் செய்கிறார்.  காமிக் ஆர்வம் இருக்கிறவர்கள் ட்ரை செய்யலாம். சின்ன வயதில் வெளியூர் பயணம் செய்கையில் மட்டும் லயன் காமிக்ஸ் வாங்கி கொடுப்பார்கள். அந்த பழக்கமும் இப்பொழுது எனக்கு காமிக்ஸ் மேல் இருக்கும் ஆர்வத்திற்கு காரணமாக இருக்கலாம். அப்பொழுது தமிழில் படித்தேன், இப்பொழுது ஆங்கிலத்தில் படிக்கிறேன். சிறிதே வித்தியாசம். இப்பொழுது தமிழில் காமிக்கே வருவதில்லையோ?

-----------------------------------------------------------------------------------------------------------------
எங்க ஊரில் இப்பொழுதுதான் சித்திரைத் திருவிழா. திருவிழா என்றால் இது திருவிழா. ஒவ்வொரு வருடமும் ஏதோ ஒரு வகையில் சிறப்பாகிக் கொண்டேயிருக்கிறது என்பதை யாரும் மறுக்க இயலாது. ஒட்டகம், ரோஸ் மிட்டாய், மக்கள், மாசி வீதிகள், பெண்கள், பெரிய தேர் என திருவிழா என்றதும் பல விஷயங்கள் ப்ளாக் லேபிள்கள் போல ஞாபகம் வருகிறது. இதைப் பற்றி ஒரு தனி பதிவே காத்திருக்கிறது. அப்போ கவனிச்சுக்கலாம்.

----------------------------------------------------------------------------------------------------------------

டச் விட்டுப் போனதால் லிட்டில் ஜானையே மறந்துவிட்டேன். அவனில்லாம் எப்படி டாப்பு?

லிட்டில் ஜான்
ஜான் வகுப்பில் டீச்சர் கேள்வி கேட்கிறார், ”ஒரு மரத்தில் 100 பறவைகள். வேடன் ஒண்ண சுட்டா மிச்சம் எத்தனை?”
ஜான், “ஒண்ணுமிருக்காது. சத்தம் கேட்ட மிச்சதெல்லாம் பறந்திருக்கும்.”
அதற்கு டீச்சர், “கணக்கின் விடை 99. இருந்தாலும் இந்த அப்ரோச் எனக்கு பிடிச்சிருக்கு”
பதிலுக்கு ஜான் ஒரு கேள்வி கேக்குறேன்னு சொன்னான். டீச்சர் ஒத்துக் கொண்டதால் கேட்டான். “மூணு பெண்கள் ஒரு கடையில் கோன் ஐஸ்  சாப்பிடுறாங்க. ஒரு பெண் கடிச்சு சாப்பிடுறாள். ஒருத்தி நக்கி சாப்பிடுறாள். ஒருத்தி சப்பி சாப்பிடுறா. இதுல யாருக்கு கல்யாணம் ஆயிருக்கும்?”
டீச்சர் தயக்கமாக, “ம்ம்ம்.... சப்பி சாப்பிடுற பெண்? என்கிறார்.
அதற்கு ஜான் “இல்ல. கையில் கல்யாண மோதிரம் போட்டிருக்கும் பெண். பட், உங்களோட அப்ரோச் எனக்கு பிடிச்சிருக்கு”

டாப்பு அடிக்கலாம் - 8

Filed under , , by Prabhu on 3/12/2010 01:41:00 PM

10

ரொம்ப நாள் ஆயிடுச்சுல, டாப்பு அடிச்சு. அதனால் இதோ வந்துட்டேன்.

ட்விட்டர் என் நேரத்தை அதிகமாக சாப்பிடுகிறது. பல சமயங்களில் சுவையான விஷயங்களை அளிக்கிறது.நிறைய மனிதர்களின் நட்பையும். இங்கே பேசியத விட @iamkarki, @ikarthik_, @athisha, @nchokkan, @orupakkam, @venkiraja, @antonianbu  என நீளும் லிஸ்டில் பல பேருடன் குலாவ சமயம் கிடைத்தது. இது போக ட்விட்டரிலேயே பல புது நட்புகள் ஓடுகிறது. 140 எழுத்துக்களில் என்னவெல்லாம் செய்யலாம் என்று சொல்லிக் கொடுக்கிறது. எடுத்துக்காட்டு கீழிருக்கும் விஞ்ஞானப் புனைவு.

காலம் அர்த்தமற்ற நாளில் தூவானம் கண்டு ஒதுங்கினான் - கையில் நீர் தெறித்த கொப்பளம். வானத்தில் காப்பி நிற மேகம். #கதை #விபு

கால வெளியின் இழைகளில் பிழைகளை தேடிக் கொண்டிருக்கிறேன். அதனூடே செல்லும் காலம் புரியாத புதிதாய் இருக்க விழைகிறேன் #sci-fi உளறல் 

அல்லது கீழிருப்ப்பது போல மொக்கைகளாகக் கூட இருக்கலாம். 

நம் ஊர் பெண்களுக்குத் தான் என்னருமை தெரியவில்லை. அங்கே என்னை பெண்கள் பார்க்கிறார்கள். மூடாத ஜிப் கூட காரணமாக இருக்கலாம்... #சிரிப்பு 

 இப்படியாக பொழுது ஒடுகிறது. யாராவது ட்விட்டரில் சேர விரும்பினால், க்ளிக் 
ட்விட்டரில் பலரின் கெட்ட பழக்கம், celebrity chasing. 'I'm your big fan' பப்பராசித் தலையனுங்களுக்குள்ள நான் வர விரும்பவில்லை

----------------------------------------------------------------------------------------------------------------
கொஞ்ச நாளைக்கு முன்ன ‘கொல்லிமலை சிங்கம்’ என்று சிரஞ்சீவி நடித்த டப்பிங் படமொன்று சிறிது நேரம்  பார்த்தேன், கலைஞரில். ஒரு வகையாக நல்ல ப்ளாட் தான். இந்திய இண்டியான ஜோன்ஸ் போல. கொல்லிமலை சிங்கம் - தி கிரேட் கொல்டி காவியம்... பாருங்கய்யா.. ஆனால் அநியாய மசாலா நெடி. அட, ஹீரோ வில்லனிடம் சிக்கிய பிறகு அவனைக் காரில் கூட்டிச் செல்கிறார்கள். ஒரு இடத்தில் நிறுத்தும் பொழுது ரீமா சென் தண்ணீர் கொடுக்க வர, ஒரு குத்து பாட்டு தொடங்குகிறது. எப்பேற்பட்ட படங்களிலும் வில்லனை சந்திக்கும் முன் அவசரகதியிலும் கவர்ச்சி நடனம் ஆடுவதை அவர்கள் விடவில்லையா? கிராஃபிக்ஸ் சுமார். பட், அடிப்படை கரு எந்த ஆங்கில சாகச படங்களுக்கும் குறை இல்லை. எடுத்தது தான் நம் பழைய தெலுகு இஸ்டெயிலு!

அவரது மகன் நடித்த ‘மகதீரா’ கூட பார்த்தேன். ’மகதீரா’ புறநானூற்று வீரத்தைக் கண் முன் நிறுத்துகிறது... புல்லரிப்பு தான்! 
------------------------------------------------------------------------------------------------------------------

எல்லோரும் நித்யானந்தாவைப் பற்றி பேசுகிறார்கள். எனவே, நான் பேசப் போவதில்லை. Pass!

------------------------------------------------------------------------------------------------------------------
 கல்யாணத்திற்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்வோர் சதவீதம் நகரத்தில் 10ஆகவும், கிராமங்களி 17ஆகவும் இருக்கிறது. இதற்கும் மத்தியில், சிட்டி ரொம்ப மோசம், பீச்சு அப்படி இருக்கு, பார்க் இப்படி இருக்கு என மக்கள் சலித்துக் கொள்கிறார்கள். இப்ப என்ன சொல்கிறீர்கள்? இங்கே நகரத்தில் நாம் social networking site களில் வீணாக்கும் நேரங்களை அவர்கள் வேறு விதமாக செலவு செய்கிறார்கள் போல!
------------------------------------------------------------------------------------------------------------------
லிட்டில் ஜான்
ஜானோட அம்மா மேக்கப் பண்ணிகிட்டிருந்தாங்க. அப்போ ஃபேஸ் பேக் போட்டுக் கொண்டிருந்த போது உள்ளே நுழைந்த ஜான்,


ஜான் - அம்மா என்ன பண்றே?
அம்மா - இருக்கும் அழகை கூட்டுறதுக்காக இந்த க்ரீம் பூசறேன் டா, கண்ணா.

பிறகு முகத்தில் அப்பியதை உரித்து எடுக்கத் தொடங்க.

ஜான் - என்னம்மா, முடியலையா?

------------------------------------------------------------------------------------------------------------------
காதலங்கிறது தலையில் விழுந்த காக்காபீ மாதிரி. வழித்துப் போடுவதும் எடுத்து நக்குவதும் அவரவர் கைகளில் இருக்கிறது.

டாப்பு அடிக்கலாம் - 7

Filed under , , by Prabhu on 1/06/2010 09:58:00 AM

30

இளையராஜா விஷயம் ஒன்றை கொஞ்ச பழைய சமீபத்தில் ட்விட்டரில் கண்டு ரீட்விட் செய்த விவரங்களை சொல்லுகிறேன். இந்தப் பாடல் ரஜினியின் 100வது படமான 'ஸ்ரீராகவேந்திரா' வில் இளையராஜாவின் இசையில் ஜானகியின் குரலில் இடம்பெற்றது 1985. ஆனால் இதே பாடல் 2003 ல் நமக்கே தெரியாமல் ரீமிக்ஸ் செய்யப்பட்டிருக்கிறது. இதை ட்விட்டரில் சொல்லியவர் nchokkan. 'உனக்கும் எனக்கும் ஆனந்தம்' என்ற பாடலின் இந்த ரீமிக்ஸை கேளுங்க. Black eyed Peas குழுவின் The elephunk ஆல்பத்தில் the elephunk theme என்ற பெயரில் bonus track ஆக ரிலீஸ் செய்யப் பட்டிருக்கிறது.


ஆனால் இந்தப் பொக்கிஷம் தொலைந்து விடக் கூடாதென்ற 'நல்ல எண்ணத்துடன்' இந்தப் இசையை இதே ராப் மிக்ஸுடன் 'திரு திரு துறு துறு' மூலம் தமிழுக்கு வேறு பாடலில் எடுத்து வந்திருக்கிறார் மணி சர்மா. காப்பி என்றெல்லாம் சொல்லாதீங்க. பின்ன, ஜெர்மனி சிடி ல மட்டும் இருக்கும் போனஸ் ட்ராக்கை சுட்டிருக்கிறாரே. அதுக்கு ஒரு தேடல் வேண்டாமா? நம் இசையை மீட்டு கொடுத்திருக்கிறார். நீங்களும் அந்த Black eyed peas சரக்கை தேடுங்கள். சரளமாகக் கிடைக்கும்.
-----------------------------------------------------------------------------------------------------------------
என்னடா, ப்ளாக்கரில் அடுத்த பிரச்சனை வரவில்லயே என நினைத்து முடிக்கல, வந்துடுச்சு. ஆனால், போன தடவை அளவு பெருசா இல்லையே? என்னவோ, நமக்கு எதுக்கு? இங்க எழுத வரும் பலர், சும்மா பொழுது போக்கா தான் எழுத வர்றோம். சில மொக்கைகள், சில் கதைகள், நண்பர்கள் என போய்கிட்டு இருக்கிறதல, ’எனக்குதான் நல்லது தெரியும். நான் உங்களுக்கு மோட்சத்துக்கு வழிகாட்டுறேன்’ ரக ‘alternative POV' கேசுகள் பண்ணும் தொல்லை தாங்கலப்பா! (இதை தட்டச்சி சிலபல நாட்கள் ஆகிவிட்டது.)
------------------------------------------------------------------------------------------------------------------
திவாரி- 85 வயசுல 3 பொண்ணுங்க! வயித்தெரிச்சலை கிளப்பாதீங்கய்யா! நமக்கு 20 வயசுதான் ஆகுது! அதை விடுங்க. இப்ப அந்த பையன்(!) 3 பொண்ணுகளோட இருந்தால் என்ன? 4 பொண்ணுங்களோட இருந்தால் என்ன? யாரையும் கட்டாயப்படுத்தியிருந்தா, அவங்க கேசு போட்டிருந்தால் பிரச்சனை. இல்லையே, அப்புறம் என்ன? அவங்களுள் ஒப்புதல் இருக்கும் பட்சத்தில் அவரோட சொந்த விஷயத்தில் மூக்க நுழைக்கிறதுக்கு அரசியல் தான் காரணம். யப்பா, 85 வயசுல இப்படி இளமையா இருக்கிறாரே ஆச்சரியப்படுவாங்களா, அதை விட்டுட்டு...
-----------------------------------------------------------------------------------------------------------------
’கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம்’ - தெலுகு படம் பார்த்தேன். ஃபீல் குட் ரகம். ரொம்ப புதுமையான கதையெல்லாம் இல்லையென்றாலும் நல்லா இருந்தது. என்னைப் போல ஸ்மார்ட் சித்தார்த்தின் ஃபேனாக இருந்தால் கண்டிப்பாக பார்க்கலாம். 30 வயசு ஆள் என்று சொன்னால் நம்பவா முடிகிறது. காலேஜ் பையன் தான். தம்ஸ் தான் கதாநாயகி. ரம்யா கிருஷ்ணன் சித்தார்த் அம்மாவாக(!). விமர்சனம் வேண்டுமென்றால் கேபிள் சங்கர் தளத்தில் தேடவும்.
----------------------------------------------------------------------------------------------------------------
லிட்டில் ஜான்
லிட்டில் ஜானின் அம்மாவை ஒரு சமயம் பள்ளிக்கு கூப்பிட்டு அனுப்பியிருந்தார்கள். அங்கே, ‘உங்க பையனால் வகுப்பில் பிரச்சனை. முதலில் அவனுக்கு ஆண் பெண் வித்தியாசமே தெரியலை. புரியவைங்க’ எனக் கூறி அனுப்புகிறார்கள். நேராக வீட்டிற்கு போனதும் அவனை படுக்கயறைக்கு அழைத்து சென்று, ‘முதலில் வந்து அம்மாவின் ப்ளவுஸை கழட்டு’ என்றாள். பையன் செய்தான். ‘இப்பொழுது இடுப்பிலிருக்கும் என் துணியை கழட்டு.’ அதையும் செய்தான். இப்படியாக தன் ப்ரா, பேண்டீஸையும் கழட்டச் சொன்னாள் அம்மா. பிறகு ஜானிடம், “கண்ணா, இனிமேல் இப்படி அம்மாவோட டிரஸ போட்டுகிட்டு ஸ்கூலுக்கு போகக் கூடாது, சரியா?”.
-----------------------------------------------------------------------------------------------------------------

’இணைய’க் காதல்

அது பெண்ணாவென்பதின் அறியாமை
ஆனாலும் அளவலாவும் ஆர்வம்
சிறு அரட்டைகளில் ஸ்மைலி இடைச்செறுகல்கள்
கல்லூரியின்  விட்டதும் கடமையுடன்
வீடு திரும்பி கணினியில் கடலையிடல்
கணங்களில் காதலித்து
தவிர்ப்பில் வெறுத்து
வெறுப்பில் இறைஞ்சி
இரவில் போர்வையடியில்
திருட்டு குறுஞ்செய்திகளின் குறுகுறுப்பு
தொலைபேசியில் காதலித்து
அடைகாத்திருந்த அந்த நாள்
முத்தமிட்டு பத்திரமாக பதிவு செய்தேன்

-----------------------------------------------------------------------------------------------------------------

டாப்பு அடிக்கலாம் - 6

Filed under , , by Prabhu on 12/15/2009 01:36:00 PM

20

இப்ப Copenhagen தான் ரொம்ப சூடா ஆயிருச்சு. என்ன முடிவு எடுத்தானுங்கன்னு தெரியலை. எல்லாத்துக்கு அப்புறமும் ஒண்ணும் மாறியிருக்காதுன்னு தான் நினைக்குறேன். இதுக்கு நடுவில் Climategate விவகாரம் வெளிய வந்து பிரச்சனை ஆயிடுச்சு. மெயில்களை திருடி வெளியிட்டவன் ஜிபி கணக்குல விட்டுருக்கான். இண்டர்நெட் கண்டுபிடிச்ச காலத்துல, ‘ஐ, நானும் மெயில் அக்கவுண்ட் ஓபன் பண்ணிட்டேன்’, என்ற மெயிலைக் கூட ரிலீஸ் பண்ணியிருப்பான் போல. இப்ப எதுக்கு இதப் பத்தி பேசுறோம்னு கேட்டீங்கன்னா, சந்தேகமே இல்லாம குத்தம் சொல்லத்தான்.  Copenhagen மீட்டிங்குக்கு வெளிநாட்டிலிருந்து வரும் உயரதிகாரிகளுக்காக 140 விமானங்கள், 2400 Limosine Cars(Air conditioned, of course) இயக்குறதா வெளியிட்டிருந்தாங்க அறிக்கையில். 

Eco-friendly, indeed. :)

---------------------------------------------------------------------------------------------------------------


Osloவில் ஒபாமா அமைதிக்கான நோபல் பரிசு வாங்கியிருக்கிறார். சமீபத்தில் ஒரு கேலிச் சித்திரம் பார்த்தேன- நோபல் கமிட்டி சொல்லுகிறது, "Obama, We give you the Nobel peace Prize just for not being Bush" என்று. Funny!  கொஞசம் நிஜமாக கூட இருக்கலாம். காந்தி, கிங் ஆகியோரின் வழி இப்ப உலகத்துக்கு உதவாது. போரின் மூலம் அதே அமைதி உலகத்துக்கு போராடுவேன்னு சொல்லியிருக்கிறார். இது தேர்தல் பிரச்சாரத்தப்ப தெரியலையா? சமீபத்தில் 30000 வீரர்களை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பிய இந்த அமைதியின் சொரூபத்திற்கு உலகின் எல்லா அமைதி விருதும் கொடுங்க. இவரு அமெரிக்க அதிபரா இருக்குற ஒரு தகுதி போதாதா அதுக்கு. ஆனா, I think Obama is an overhyped president. அவருக்கு கிடைச்ச அட்டகாசமான ஆதரவு, கவரேஜ் எல்லாத்துக்கும் காரணம், அவர் கருப்பு. ஒரு கருப்பனும் அமெரிக்காவில் அதிபராகிறான் எனக் கூறும் போது அந்தக் ‘கருப்பனும்’ உங்களுக்கு இடிக்கல? எப்ப சம  உரிமை பத்தி தனியா குறிப்பிடறோமோ அப்ப அங்க ஏற்றத்தாழ்வு ஊர்ஜிதமாகுது. இதுக்குமேல பேசுனா எசகு பிசகாயிடும் அப்பீட்டாயிக்கிறேன்.
---------------------------------------------------------------------------------------------------------------

பட அறிமுகம்

ஒரு படம் இன்று காலையில் கே டிவியில் பார்த்தேன். ‘மௌனம் சம்மதம்.  இப்படி ஒரு அருமையான துப்பறியும் ரகக் கதை பார்த்து எவ்வளவு காலம் ஆகிவிட்டது. நல்ல subtle ஆன நிதானமான வேகத்தில் போகக் கூடிய கதை. மம்மூட்டியின் நடிப்பில் உள்ள க்ளாஸ்... சான்ஸே இல்லை. மனுஷன் இன்னைக்கு வரைக்கும் நிக்குறதுக்கு அர்த்தம் இருக்கு. தமிழ், மலையாள நடிகர்கள் கலந்து இருப்பது போல தெரிந்தது. நாகேஷ் நகைச்சுவையோடு கெட்ட கதாபாத்திரமாகவும் பின்னுகிறார். சரத் குமாருக்கு சின்ன ரோல். ஆள் அழகாக ஆஜானுபாகுவாக இருக்கிறார். ஹீரோ(சீரோ என தவறாக டைப் செய்தேன், முதலில்) ஆன பின் ஏன் இப்படி மொக்கை கதைகளை பண்ணி கொல்லுகிறார். இப்ப  முக்கியமான விஷயம், அமலா. அடடா, என்ன அழகு! சின்ன வயசிலயெ நான் அமலாவின் ஏசி(ஃபேனவிட காஸ்ட்லி!). கடைசி காட்சியில் சிரிப்பாங்க பாருங்க... அய்யோ, வாய்ப்பே இல்ல. ஹ்ம்ம்..
நல்ல படம். கே டிவியில் பாருங்கள். மாதமொருமுறையாவது பரப்புகிறார்கள்.

--------------------------------------------------------------------------------------------------------------


ஓ, மறந்துட்டேன். லிட்டில் ஜான் பத்தி சொல்லாம டாப்பா?

லிட்டில் ஜான் : அம்மா, உன் வயசு என்ன?

அம்மா                :  பொம்பளைங்க கிட்ட இதெல்லாம் கேட்க கூடாதுடா.
லி.ஜான்             :  உன் எடை என்ன?
அம்மா                :   பொம்பளைங்க கிட்ட இதெல்லாம் கேட்க கூடாதுடா.
லி.ஜான்             :   உன்னை ஏம்மா அப்பா விட்டுட்டு போனாரு?
அம்மா                :   அம்மகிட்ட இப்படியெல்லாம் கேள்வி கேட்க கூடாது
அம்மா லைசன்ஸ எடுத்து பாத்துட்டு ஓடி வந்த ஜான், “அம்மா,  எனக்கு எல்லாம் தெரிஞ்சு போச்சு. உன் வயசு  36, எடை 65 கிலோ. அப்புறம் ஏன் அப்பா உன்ன விட்டுட்டு போனருன்னா, நீ Sex ல ‘F' வாங்கிருக்க.


---------------------------------------------------------------------------------------------------------------


ஆதி கவிதை எழுத சொல்லிக் குடுத்தாரா... நானும் ஒரே நிமிஷத்துக்குள்ள  ஒரு கவிதை எழுதினேன். யாரும் மதிக்க மாட்டேங்குறாங்க. நானே விளம்பரம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயம். இதோ....

டாவென அழைத்த அவள்
க்ளோரோஃபார்ம் குரலில்
மயங்கிய
என்னை,
எட்டிப் பார்க்கத் திமிரும்
லோகட் முலைகளைப்
போல சிறிதாக எட்டிச்
சிதறும் அவள் தோழியின்
சிரிப்பின் வெக்கம்
சிறிதாக கொல்ல...
இருவரின் ஒற்றுமை
திருமணத்திலும் தொடருமா எனக் கேட்க
சடுதியில் சென்றேன்.


:)

டாப்பு அடிக்கலாம் - 5

Filed under , by Prabhu on 11/19/2009 05:00:00 PM

23

சமீபத்தில் ( 16.11.09) செய்தி கேட்டுக் கொணடிருந்தேன். இந்திய மீனவர்களை இலங்கை வீரர்கள் தாக்கிய சம்பவம் பற்றி கூறிக் கொண்டிருந்தார்கள். வழக்கமா அவனுங்க பண்ணுற அநியாயம் தான என கேட்டா ஒரு விந்தையான விஷயம் சிக்கியது. அவர்களை அடித்ததவர்களில் சீனர்களும் இருந்திருக்கிறார்கள். சீனக்காரர்களுக்கு இங்கு என்ன வேலை என்று நீங்கள் கேட்கலாம். அதுதான் புரியவில்லை. ஏற்கனவே இலங்கையில் ரேடார் வைக்க முயற்சிகள் நடந்தன. இதைப் பற்றியெல்லாம் ஏற்கனவே இங்கு பேசியிருக்கிறேன். இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் விமானங்கள் கொடுத்ததுடன் பயிற்சியும் கொடுத்துள்ளது. மியான்மரில் விமானதளம் வைத்துள்ளது. 1982லபாக்.,கிற்கு  ந்யூக் கொடுத்ததா கேள்வி. என்ன பண்ணுறாய்ங்கன்னு தெரியல. விரைவில் உலக போலீஸ்-2 ஆகலாம். ஏன்னா நம்மளப் பற்றி பல வகையில புலம்ப ஆரம்பிச்சிருக்காங்க (அமெரிக்கா பிடிக்காதவங்களப் பத்தி புலம்புற மாதிரி).
---------------------------------------------------------------------------------------------------------------
விஜய் 'மதுர', அஜித் 'ரெட்', விஷால் 'திமிரு' என பல தேறாத படங்கள் மதுரையை மையமாக வைத்து எடுத்த போது கூட நான் கவலைப் படவில்லை. ஆனால் இப்போ 'மதுரை சம்பவம்' என ஒரு படம் வந்தது பாருங்க, அதுமாதிரி ஒரு அவமானம் கிடையவே கிடையாது இந்த ஊருக்கு. கொஞ்ச நாள் முன்ன வரை அப்பப்ப விளம்பரம் வேற டிவியில் போட்டு கொன்னுட்டாங்க. எல்லாருக்கும் ஒரு படம் பிடிக்க வில்லை என்றால் வெறுப்பு வரலாம். ஏன் கோபம் கூட வரலாம். உ.ம்.சன் திரைப்படங்கள். ஆனால் இந்த படத்தின் டிரைலர் பார்க்கும் போதெல்லாம் ஒரு மாதிரி கூசுது, அவமானம் எனக் கூட சொல்லலாம். எனக்குதான் என நினைத்தால் எனக்கு தெரிஞ்சு நண்பர்கள் பற்பல மக்கள் இதைத்தான் சொல்றாங்க. எங்கம்மாவுக்கே எரிச்சலா இருக்கு.  இந்த அவமானம் தேவையா? அதுவும் அந்த ஹீரோ பேசுற தமிழ் இருக்கே... யப்பா.... மதுரைத் தமிழாம். இந்த ஒத்த வார்த்தைக்கே தூக்கு போட்டுக்கலாம் போல. ஹாலில் தனியாக டிவி பார்க்கும் பொழுது இந்த டிரைலர் போட்டால் ஒரு முறை சுற்றிப் பார்த்துக் கொள்வேன், யாரும் நம்மள பாக்கலையே!

மதுரை சிட்டி. நான் சிட்டி யூத். எங்க ஊரில யாரும்  தாவணியில் கல்லூரிக்கு போவதில்லை(கார்த்திக் நோட் பண்ணிக்கோ!). எல்லோரும் ஜீன்ஸ் அணிகிறோம். காஃபி ஷாப் போகிறோம். பீஸா, பர்கர் போன்ற உடலுக்கு ஒவ்வாதவைகளை உள்ளே தள்ளுகிறோம். அதனால நாங்களும் சிட்டிதான்! இனிமே எவனாவது வந்து தாவணி, பட்டிகாடு, அரிவாள், ரவுடி, கிராமத்து காதல் கதைனு வந்தீங்க..... நடக்குறதே வேற.

 --------------------------------------------------------------------------------------------------------------
 அப்பா நல்லெண்ணெய் பாக்கெட்டை வெட்டி ஊற்ற வேண்டிய வேலை இருந்தது. நான் பாக்கெட்டை பிடித்துக் கொள்ள அப்ப வெட்ட தயாரானார். நான் சரியாக பிடிக்கவில்லை என நினைக்கிறேன். "ஏய், வெட்டுறதுக்கு எசவாப் பிடிடா", என்றார். பொதுவாக பயன்படுத்தும் வார்த்தை என்றாலும் அந்த 'எசவா' என்ற வார்த்தை பொறி தட்டியது. நல்ல தமிழில் 'இசைதல்' எனற வினைச்சொல் இருக்கிறது. ஆமோதித்தல், வளைந்து கொடுத்தல் போன்ற சமயங்களில் பயன்படுத்துவோம். 'இசைவாக' என்பதைத்தான் நாம் கொச்சையாகப் பயன்படுத்துகிறோம் என நினைக்கிறேன். இந்த வார்த்தைப் பிரயோகம் எல்லோர் வட்டார மொழியிலும் இருக்கிறதா? இங்க கொஞ்சம் தனித்துவமா இருக்குமோ என்ற நினைப்பில் எழுதினேன்.

இப்ப சொன்னேன் பாத்தீங்களா? இது மதுரைத் தமிழ். நல்ல தமிழ்.
---------------------------------------------------------------------------------------------------------------

லிட்டில் ஜான்
நம்ம ஜானுக்கு ஒரு  குட்டி சைக்கிள் வாங்கனும் என ரொம்ப நாள் ஆசை. அம்மாகிட்ட கேட்டான். அதற்கு அவன் அம்மா, ஜீசஸிற்கு கடிதம் எழுது, அவர் நிறைவேற்றி வைப்பார் என சொல்கிறாள். அவனும் எழுத அமர்கிறான். "அன்புள்ள ஏசுவே, நான் ரொம்ப நல்ல பையனா இருந்துகிட்டிருக்கேன். எனக்கு ஒரு சைக்கிள் வேணும். இப்படிக்கு ஜான்" என எழுதுகிறான். பிறகு யோசனையுடன் அதைக் கிழித்துவிட்டு, "அன்புள்ள ஏசுவிற்கு, நான் சில சமயங்களில் நல்ல பையனாக இருந்திருக்கிறேன். எனக்கு ஒரு சைக்கிள் வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு ஜான்", என எழுதி அதையும் கிழித்துவிட்டு புதிதாக எழுதத் தொடங்கினான். "அன்புள்ள ஏசுவே, நான் நல்ல பையனாக இருக்க வேண்டும் என முடிவு எடுத்துள்ளேன். எனக்கு நீங்கள் ஒரு குட்டி சைக்கிள் தர வேணும். இப்படிக்கு ஜான்", என எழுதினான். இதுவும் பிடிக்காம கிழித்துவிட்டு வெளியே சென்றான். செல்லும் வழியில் ஒரு வீட்டு வாசலில் மாதா சிலையை பார்த்ததும் அதை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு விடுவிடுவென ஓடி வந்தவன், அதை படுக்கையின் அடியில் வைத்து விட்டு கடிதம் எழுதினான். "அன்புள்ள ஏசுவிற்கு, நீங்க உங்க அம்மாவ மறுபடி பார்க்கனும்னு நினைச்சீங்கன்னா மரியாதையா எனக்கு ஒரு சைக்கிள் அனுப்பி வைங்க. இப்படிக்கு ஜான்".
---------------------------------------------------------------------------------------------------------------

நம்ம ஊருகாரன் அமெரிக்காவுல இருக்கான். அவன் ஒரு ஓரினச் சேர்க்கையாளன். ஒருநாள் சோகமாக 'Gay பாரில் மார்டினி(ஸ்ட்ராங். டயர்டா/சோகமா இருந்தா அடிப்பாங்க போல) ஆர்டர் செய்கிறான். ரெண்டு, மூணு ரவுண்டு கப் கப்புனு அடிக்கிறத பாத்த பார்மேன், "என்னப்பா ஏதாவது கஷடமா?" எனக் கேட்டான். அதற்கு அவன், "எங்க அண்ணனும் 'gay'யாம். எனக்கு இன்னைக்கு தெரிஞ்சப்போ எவ்வளவு அதிர்ச்சி தெரியுமா?" என்றான். பார்டெண்டர், இந்தாப்பா இன்னொன்னு போட்டுக்கோ எனக் கொடுக்கிறான். அடுத்த நாள் அவன் வருகிறான். மீண்டும் தாறுமாறாக தண்ணி அடிக்கிறான். என்னவென்று கேட்டதற்கு, "என்னோட ரெண்டாவது அண்ணனும் gayயாம் இன்னைக்கு தெரிஞ்சது. இவ்வளவு காலமாக இந்த உண்மை எனக்கு தெரியவே தெரியாது" என்றான். பரிதாபப்பட்ட பார்டெண்டர் இன்னும் கொஞ்சம் ஊத்திக் கொடுத்தான். மறு நாளும் அவன் வந்தான். இன்னைக்கு என்ன என்று பார்டெண்டர் கேட்டதற்கு, "என் தம்பியும்..." எனக் கூறக் கடுப்பான பார்டெண்டர், "ஏன்யா, உங்க குடும்பத்துல யாருமே பொம்பளைய லவ் பண்றவங்களே இல்லயா?" எனக் கேட்க அவன் அப்பாவியாய், "ஏன் இல்ல? என் தங்கச்சி இருக்காளே".
--------------------------------------------------------------------------------------------------------------
கவிதையெல்லாம் எழுதுவாங்க எல்லாரும். நான் ஒண்ணு இங்கிலிபீசுல எழுதினேன். பிரமாதமான வார்த்தைகள் எல்லாம். இல்லை; உரைநடை வார்த்தைகள் போன்று எளிமையாக எழுதினேன். ஆனால் ஒரு வலுவான மையக் கரு வைத்திருந்தேன். ஆனா அதெல்லாம் பப்ளிஷ் பண்ண முடியாது. சப்பயா நாலு டயலாக் சொல்லிட்டு கடைசி வரியில ஒரு இங்கிலீசு கெட்ட வார்த்தையோட முடிச்சிருக்கேன். யாராவது அதையும் மீறி ஆப்பு வேணும்கிறவங்க எ-கடிதம் மூலம் என்ன தொடர்புங்கோ!

டாப்பு அடிக்கலாம் - 4

Filed under , by Prabhu on 10/13/2009 01:02:00 PM

25

அலாதீன் நினைவிருக்கா? அந்த விளக்கு பிடிச்சுக்கிட்டு திரியுற பையன்தான். அந்த கதைய இப்போ இந்தியில மாடர்ன் வெர்ஷன்ல எடுக்குறாங்க! ரிதேஷ் தேஷ்முக்(பழைய மகாராஷ்டிர முதல்வர் மகன்) தான் அலாதீன். பூதம் யாராக இருக்கப் போகுது, நம்ம Big B தான். ரொம்ப் பொருத்தம் தான் நினைக்கிறேன். வேற யாரு இந்த பாத்திரத்துக்கு இன்ஸ்டண்டா கிடைக்க போறாங்க? ஒரு நல்ல contemperory, stylish, rocking genie வேணும் என தான் எல்லாரும் நினைப்பாங்க இல்லையா? Right choice.
-------------------------------------------------------------------------------------------------
கொரிய படங்கள் எல்லாம் ஒரு மாதிரியாக நன்றாக இருக்கும் என்று என் நண்பன் கூறுவான். சின்ன பசங்க டுர்ர்ர்ர்ன்னு வண்டி ஓட்டுற மாதிரி ஒரு பேரு இருக்குமே....ஆங்.... இயக்குனர், கிம் டு கிக், (பாம்பே டூ கோவா மாதிரி இருக்கு பேரு!), அவரோட படம். ஒரு ஓடையின் ஓட்டம் போல் சலனம் இல்லாமல் சன்னமாக ஓடும்னு சொல்லுவான். ஆனா, ஒரு படத்துல தவளைய நிதானமா கொன்னு உருளைக்கிழங்கு போல தோலை உரிச்சு சாப்பிடுறது மாதிரியான சீன் இருக்காம், கொஞ்சம் ரியலா, கொடூரமா, அமெரிக்காக்காரனே கட் செய்யுற அளவு. இது எல்லாம் ஏன் tabooவா இருக்கனும் என்கிற சென்ஸில எடுத்திருப்பதா சொல்லுவான் என் ஃபிரண்டு. ஏன் இந்தக் கொலவெறி?

-------------------------------------------------------------------------------------------------
அதை விடுங்க. நான் ரொம்ப காலமா பார்க்கனும் என்று நினைத்த 'My sassy girl' படத்தை பார்த்தே விட்டேன். சமீபத்தில் இப்படி நன்றாக சிரித்து பார்த்த ரொமாண்டிக் காமெடி இதுதான். அதுவும் CAT கலக்கத்தில் இருந்த என்னையே சிரிக்க வைத்துவிட்டதால் உங்களுக்கு செம ட்ரீட் தான். அந்த படத்தின் ஹீரோயின் தான் show stealer. அந்தப் பெண் கதாநாயகனை அடித்த அடி ஒவ்வொன்றும் இன்னும் என் கன்னங்களில் வலிக்கிறது. ஜூன் ஜி ஹ்யூன் ஏற்று நடித்திருக்கும் கதாநாயகி பாத்திரத்துக்கு பெயர் படத்தில் குறிப்பிடப்பட்டதாக நினைவில்லை. இன்னமும் கண்ணை மூடினால் நினைவுக்கும் வரும் கொரிய அழகி. முடிய கோதுகிற அழகுக்கே இன்னொரு தடவை படம் பார்க்கலாம்... ஹும்...

-------------------------------------------------------------------------------------------------
பதிவுலகில் பதிவுகளைப் படிக்கிறேன் என்ற பேரில் எனது ப்ளட் பிரஷரை 'பம்ப்' செய்து கொண்டிருக்கும் வேளையில் எனக்கு சட்டென்று தோன்றியது இந்த விஷயம். எங்க ஊர்க்காரரு விஜயகாந்த் பத்திதான். அவர பத்தி பேசுனா பெரிய ரீச் ஆகுமே. ஆனா அவர் படங்களுக்குள் இருக்குற குறியீட கண்டுபிடிச்ச முதல் ப்ளாக்கர் நான் தான். வாசிம் கான், அந்த கான், இந்த கான், பாப்கார்ன் எனவெல்லாம் வில்லன்களுக்கு பெயர் சூட்டி அவர்களை வானத்தில் பறந்து பறந்து சுழட்டி சுழட்டி அடிக்கும் அவரின் பின்னால் இருக்கும் அந்த மறைமுக எண்ணங்கள் என கட்டுடைத்த முதல் பதிவர் நான் தான். மி த ஃபர்ஸ்ட். Catக்கு படிக்கும் வேளையிலும் இந்த கேடுகெட்ட வேலை உனக்கு எதுக்கு என ஒரு நண்பன் கேட்கிறான். பாலாண்ணே கூல்! (இது ஹாலி பாலா காண்டில் இருந்தப்போ எழுதிய மேட்டர்)

-------------------------------------------------------------------------------------------------
குட்டி ஜான் பத்தி குட்டி ஜோக்
லிட்டில் ஜான் பத்தி ஏற்கனவே ஆங்கிலத்தில் போன டாப்பில் சொன்னேன், பயபுள்ள வெவகாரமான ஆள்னு. ஒரு நாள் கிளாஸில் கிருஸ்மஸ் பண்டிகை வருவதால் கடவுளைப் பத்தி சொல்லி  க்ளாஸ் எடுத்துக்கிட்டு இருந்தாங்க டீச்சர். அப்ப கடவுள் எங்க இருக்காங்க எனக் குழந்தைகள் கிட்டயே கேட்டு புரியவைக்க முயற்சி செய்துகிட்டிருந்தாங்க. ஒவ்வொரு குழந்தையும் எழுந்திருச்சு தனக்கு தோணினதை சொல்லிக்கிட்டு இருந்துச்சு. 'கடவுள் ஆகாயத்துல இருக்காரு', 'கடவுள் என் இதயத்தில இருக்காரு', 'கடவுள் சொர்கத்துல இருக்காரு' என பல பதில்கள்; ஏன், ஒரு குழந்தை 'அஹம் பிரம்மாஸ்மி'ன்னு கூட சொல்லுச்சு. நம்ம ஜானாண்ட வந்தப்போ எந்திரிச்ச ஜான் சொன்னான், "கடவுள் எங்க வீட்டு பாத்ரூமில தான் இருக்காரு!". டீச்சரும், க்ளாஸும் அப்படியே மெரண்டு போயிருச்சு. மெல்ல திடமாக்கிட்டு எப்படி கண்ணா எனக் கேட்டாங்க. அதுக்கு அவன் சொன்னான், "எங்கப்பாதான் தினமும் காலையில எந்திரிச்சதும் நேரா பாத்ரூம் போய் கதவை டம் டம்னு தட்டி, 'அய்யோ கடவுளே, நீ இன்னும் உள்ள தான் இருக்கயா'ன்னு கத்துறாறே!"

-------------------------------------------------------------------------------------------------
நரமாமிச உண்ணிகள் இருக்குற காட்டுக்கு சென்று மூன்று இளைஞர்கள் மாட்டிக் கொண்டார்கள். அங்கே அவர்களை வைத்து கபாப், சுக்கா, க்ரில் என ஒரு மெனுவே ரெடியாக, அவர்கள் மூவரும் தலைவன் காலில் விழுந்து கெஞ்சுகிறார்கள். சரி, நீங்கள் மூணு பேரும் காட்டுக்குள் போய் ஏதாவது ஒரு வகை பழத்தை 10 எண்ணிக்கையில் கொண்டு வாருங்கள் என்றான் தலைவன். முதலாமவன் கொய்யாப் பழம் கொண்டு வந்தான். இதை உன் 'பின்'னால் திணிக்க வேண்டும்; பத்தையும் முடிக்கும் வரையிலும் எந்த வகையான உணர்ச்சியும் காட்டக் கூடாது, காட்டினால் அவன் கழுத்தில் ஃபிஷ்க்! அவனும் மூன்றை திணித்துவிட்டான். நாலாவது செல்லும் போது சிறிது வலியில் கத்திவிட அவனைத் தூக்கிட்டாங்க! இரண்டாமவன் செர்ரி பழங்களை கொண்டு வர அவனுக்கு அதே கட்டளை. இவனும் சின்ன பழம்தானே என செய்து கொண்டிக்கும் எட்டாவது முடியும் வேளையில் சிரித்து விடுகிறான். அவனும் ஃபிஷ்க்! சொர்கத்தில் முதல் ஆள் இரண்டாமவனிடம் கேட்டான், "ஒழுங்காதானே பண்ணிகிட்டிருந்த. என்ன கேடு வந்துச்சுன்னு சிரிச்ச?". அதற்கு இரண்டாமவன், " என்ன செய்ய? மூணாவது ஆளு அன்னாசி பழத்தோட வந்ததப் பாத்ததும் என்னால அடக்க முடியல" என்றானாம்.

டாப்பு அடிக்கலாம் - 3

Filed under , by Prabhu on 9/24/2009 10:03:00 PM

11

ரேடியோவில் 'இன்று ஒரு தகவல்' கேட்ட அனைவருக்கும் தென்கச்சி சுவாமிநாதன தெரிஞ்சிருக்கும். அவர் பேச்சக் கேட்க அவ்வளவு ஆர்வம் இருக்கும். பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் பொழுது தினமும் ஆறேமுக்கால் செய்திக்கு பிறகு வரும் இன்று ஒரு தகவல் கேட்ட பின்னரே குளிக்க ஓடுவேன். நல்ல துணுக்குகளுடன் அருமையாக பேசுவார். அவர் இறந்து விட்டார் என எண்ணும் போது சிறிது வருத்தம் தான்.

-------------------------------------------------------------------------------------------------
சமீபத்துல இப்படி ஒரு அதிர்ச்சி கேள்விப் பட்டவனுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி. உங்களுக்கு தெரியுமா இலியானாவின் இப்போதைய நிலை? மிகவும் பரிதாபத்திற்குரியது. எப்படி உடுக்கு போன்ற இடையுடன் வலம் வந்தார். இப்பொழுது? ச்சே.... நல்லவங்களுக்கு காலமில்லை! கீழே பாருங்க எவ்வளவு குண்டாகிட்டாங்க!
முன்ன இருந்ததுக்கு குண்டுதாங்க! :)

-------------------------------------------------------------------------------------------------
போன வாரம் 'Immortel (ad vitam)' அப்படின்னு ஒரு படம் பார்த்தேன். ஃபிரஞ்சுகாரர்களால் எடுக்கப் பட்ட ஆங்கிலத் திரைப்படம். எகிப்து கடவுளுக்கு தண்டனை, பூமிக்கு வருகிறார், ஒரு பையனைத் தேடுகிறார், அவனை வைத்து ஒரு பெண்ணை தேடுகிறார், குவா குவா 'ஆக்சன்' காட்சிகள் அரங்கேறுகின்றன, அவர் காலம் பூமியில் முடிய மேலே செல்கிறார் தண்டனை அனுபவிக்க, கடைசியில் முன்ன செஞ்ச 'ஆக்சனால்' உயிர் பெறுகிறார் போல முடிகிறது. படத்தில் குறியீடுகள் எல்லாம் உள்ளது, முடிந்தால் அந்த காமிக் படித்து பாருங்கள்ன்னு idbmல சொல்றானுங்க. இப்ப உ.போ.ஒ ல குறியீடு படிச்சவங்க அதையும் விளக்கினா நல்லா இருக்கும். என்ன இழவோ எனக்கு ஒரு மண்ணும் புரியல. யாராவது பாத்திருந்தா சொல்லுங்கய்யா! படம் முடிந்ததும் என் நண்பன் கேட்டான்..... WTF?

-------------------------------------------------------------------------------------------------
உன்னைப் போல் ஒருவனில் ஒரு குறியீடு யாரும் கவனிக்கல. கணேஷ் வெங்கட்ராமனின் ஆரிஃப் கதாபாத்திரம் பைக்கில் வருவார் கான்ஸ்டபிளை அடிக்க. அந்த இடத்தில ஒரு முக்கியமான விஷயத்தை கவனிக்கல யாரும். அவரு உடம்ப முறுக்கிக்கிட்டே இறங்கி பைக் சாவிய எடுத்துப் போவார். அங்கதான் வச்சிருக்கம் ஒரு ட்விஸ்ட (அங்க கொண்டு போயா வச்சாங்க?). இதுக்கு தான் ஒரு முன்நவீனத்துவ நிபுணன் வேணும்ங்கிறது. அப்படி அவர் வண்டிய நிறுத்தி, ஸ்டாண்ட் போட்டு, சாவி எடுக்கும் போது வண்டி ஒரு குலுங்கு குலுங்கும். ஏன்னா அவரு கியர ந்யுட்ரலில் போட்டிருக்க மாட்டார். யோசிச்சு பாருங்க, ஒரு போலீஸ் அதிகாரிக்கு முதல் கியரில் இருந்து ந்யுட்ரல் கொண்டு வர தெரியாதா?. இது கமல் என்னவோ வேணும்னே வச்சிருக்காருன்னு தெரியுது. யாராவது இதை விலக்கினால் நன்றாக இருக்கும். அவங்களுக்கு உ.போ.ஒ. பட டிக்கட்(கள்) பரிசு! - இது ஆங்கிலத்தில் கூட Spoof movies மட்டுமே பார்ப்போர் சங்கத்து நோட்டீஸ்.

-------------------------------------------------------------------------------------------------
ஒரு chauvinistic joke (cliche)
பொதுவா நான் ஷாவனிஸ்டிக்கான ஆள் இல்லைன்னு தானே நினைச்சுக்கிட்டாலும் இந்த மாதிரியான ஜோக் ஆண்கள்க்கு நடுவில் இன்சைட் ஜோக்குகளா உலவும். பெண்கள் இந்த மாதிரியான ஜோக்கை எப்படி எடுத்துக்குறாங்கன்னு தெரியவில்லை.

"பெத்த மகளுக்கும், பரிட்சை பேப்பருக்குமான ஒத்துமை யாருக்காவது தெரியுமா?"

"ரெண்டையும் கட்டிக் குடுக்குற வரை வயித்துல நெருப்பக் கட்டிக்கிட்டுதான் இருக்கனும்."
-இது அவ்வளவா ஷாவனிஸ்டிக்கா இல்லைன்னு நினைக்குறேன். அய்யோ இது ஜோக்கே இல்லை! அடுத்த தடவை இன்னும் நல்லா டிரை பண்ணுறேன். :)

-------------------------------------------------------------------------------------------------
Little John is known in his surroundings for his advanced knowledge on sex even though he is a kid. Even teachers fear him, as he always stuns the class with his sex talks and counters. One day a sex education class was arranged for kids. then teachers thought it would be the only right time to let john speak freely. So when he was asked to tell a story with sex education, he started , " You see 'Lone Ranger' in TV, right? One day Lone Ranger was riding along the mountains of Native Americans(red indians), on his horse. Suddenly, there came a horde of Native Americans, which tried to make him go away from their land. This led to a battle between them. Finally, the Lone Ranger won!". Teacher asked, "So.... Where is the sex education , we asked for". Little John said, "This should have taught the Natives a lesson right?, 'Nobody, fucks with the Lone Ranger' ".

-------------------------------------------------------------------------------------------------
இதெல்லாம் பேசிட்டே போகும் போது தங்க ரீகல் தியேட்டர் வந்துட்டது. எதிரில பார்த்தா பிரேம விலாஸ் அல்வாக் கடை. எப்ப போனாலும் சுடச் சுட அல்வா தர்றாங்க. என்ன ரகசியமோ? 5 ரூபாய்க்கு 50 கிராம் தாமரை இலையில ரோல் பண்ணி, அது மேல பேப்பர் சுத்தி தருவாங்க. நெய் பரவ, சரியான இனிப்புடன்..ம்ம்ம்... எழுதும் போதே நாக்கு இனிக்குது. சாப்பிட்டு முடிச்ச பிறகு இலையை குப்பையில் போட்டவுடன் கைய நீட்டனும். என்னடா காசு குடுக்காம பிச்சை எடுக்க சொல்லுறானேன்னு நினைக்காதீங்க! சப்பிட்டவுடன் கை நீட்டினால் கை நிறைய மிக்ஸர் குடுப்பது இந்தக் கடை கலாச்சாரம்! காசு அதன்பிறகு குடுத்துக்கலாம். அந்த நம்பிக்கையே அலாதிதான். அப்புறம் காசக் குடுத்துட்டு வரும் போது ஒரு சந்தோஷம் இருக்கும். :)

டாப்பு அடிக்கலாம் - வீடியோ ஸ்பெஷல்

Filed under , , by Prabhu on 8/15/2009 03:15:00 PM

7

ரொம்ப நாளா பதிவு போடலயே, ஏன்னு கேக்கலாம் நீங்க(ஜுனூன்!). என்னங்க செய்யுறது! என்னுடைய அலுவல்கள் சூப்பர் மேன் ஜட்டி கணக்கா tight ஆயிடுச்சுங்க! அதுக்கென்ன இப்போ? அதை ஈடு செய்ய உங்களுக்கு ஒரு அனுகுண்டு அறிவிப்பு வச்சிருக்கேன். அது பதிவின் இறுதியில் சொன்ன உடனே இறுதிக்கு போய்டீங்கனா, பல வீடியோக்கள மிஸ் பண்ணிருவீங்க.

ஒரு வீடியோ ஸ்பெஷல் போடனும்னு ரொம்ப நாளா நெனச்சிட்டு இருந்தேன். இந்த டாப்ப நம்ம வீடியோஸ், அப்புறம் என்ன தோணுதோ பேசுவோம். வீடியோன்னு சொன்னதும் சில யூத்துகள் 'அப்படி'ன்னு நினைப்பாங்க. ஆனா, எல்லாமே இப்படிதான். சிலதுகள் அப்படி இப்படி இருந்தாலும் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க. சில பாட்டெல்லாம் கேட்ட மாதிரி இருக்கும். ஆனா எங்க கேட்டேனே தெரியல. கேட்டிருக்கேனா எனவே ஒரு சந்தேகம் தோன்றுவதுண்டு.
அதுதான் இந்த பதிவு. இதெல்லாம் மட்டும் பிடிச்ச பாடல்கள்னு சொல்லல, மூளையின் பதிவுகளில் அவுட் ஆஃப் போகஸான இடங்களில் இருந்து பளிச்சிடும் சில விஷயங்களின் தொகுப்பு.

முதல்ல சொல்ல வர்ற பாட்டுக்கு கண்டிப்பா நம்ம இயக்குனர் விஷ்ணு வர்த்தனுக்கு நன்றி சொல்லனும். 'மெல்ல மெல்ல என்னை தொட்டுங்கிற' பாட்ட எல்லாத்துக்கு நினைவு படுத்தினாரு. மலேசியா வாசுதேவனோ? சில்க் ஸ்மிதாவும் ரவிசந்திரனும் வர்ற பாட்டு. இது டிஸ்கோ பீரியட்ல வந்த சாங்கோ? அதுவா முக்கியம் இப்போ? இளையராஜா, சில்க் ரெண்டு பேரும் சேர்ந்ததால வந்த மேஜிக் நம்பர் 1. பாருங்க!



அடுத்து வர்ற வீடியோவும் சில்க் ஸ்மிதாவேதான்! 'பூவே இளைய பூவே' - இது கோழி கூவுதுன்னு ஒரு படமாமே! கங்கை அமரனோட பாட்டுன்னு நினைக்கிறேன். பிரபு பூதாகரமா தெரிகிறார். இளையராஜா இசையில் மலேசியா வாசுதேவன் பாடிருக்கார். கடந்த பல வருடங்களா அவர் பாடுவதேயில்லை. வயதானதால் பாடுவதை நிறுத்திவிட்டாரா? குரல் போயிடுச்சுன்னு பேசிக்கிறாங்க. என்னவோ இந்த பாடலையும் இதோ பாருங்க!



'பொன்மேனி உருகுதே' - இதுவும் போன தலைமுறையினருக்கு தெரிந்த பாடல்தான். இதுவும் சில்க்தான். இளையராஜா தான். கமல் கூட இருக்கார். 'மூன்றாம் பிறை'. எல்லாருக்கும் தெரிந்த படம். பாட்டுல சில்க் அவ்ளோ செக்ஸியா இருக்காங்க. ஒரு வித்தியாசமான டான்ஸ் கூட ஆடுறாங்க. Erotic! ஏதோ war dance மாதிரி இருக்கு! என்ன டான்ஸ்னு தெரிஞ்சா சொல்லுங்க!



'குழழூதும் கண்ணனுக்கு' - இந்த பாட்டு தெரியாத தமிழன் இருக்க முடியாது. ராதா கூ கூ ன்னு சவுண்டு விட்டுட்டு ஓடுவாங்க. 'மைக்' மோகன் புல்லாங்குழல் வச்சுக்கிட்டு வாசிக்க தெரிஞ்சவங்களவிட ஓவரா சீன் போட்டுக்கிட்டு அங்கிட்டும் இங்கிட்டும் ஓடுறதுக்கும் நடக்குறதுக்கும் நடுவில ஒரு வித்தைய செய்து கொண்டிருப்பார். பாட்டோட சுவாரசியமான விஷயமே ரெண்டு வேற தலைமுறையை சேர்ந்த ஜாம்பவான்கள் இசையமைத்துதான். அது இளையராஜா, எம்.எஸ்.வீ.



'It's my life' -இது Bon Jovi யின் பாடல். இந்த பாடல் காதலி 5 நிமிஷத்தில வந்து சேரனும்னு சொன்ன உடனே கடல் தாண்டி மலை தாண்டி வர்ற மாதிரி ஊரு முழுக்க பாய்ந்து விழுந்தடிச்சு வந்து சேரும் கதாநாயகனப் பத்தின பாட்டு. இது தான் வாழ்க்கை. போனா வராது, போன் போட்டா கிடைக்காது(It's my life. It's now or never)ன்னு சொல்லுறதுதான் ஹைலைட்டான லைன். கண்டிப்பா பிடிக்கும் பாருங்க. ஏற்கனவே அர்ஜுன் காப்பி அடிச்சிட்டாரேன்னு நீங்க கண்டுபிடிச்சா நான் பொறுப்பல்ல!




இப்ப ஒரு தீவிரமான (சீரியஸ்?) வீடியோ. வந்து கொண்டிருக்கும் ஒரு புது இந்தி திரைப்படம். 'Slumdog millionaire' விநியோகம் செய்த Fox Starஆல் விநியோகம் செய்யப்பட உலகமே காத்திருக்கும் ஒரு அதிரடி ஆக்ஷன் திருவிழா, 'Quickgun Murugan' -Mind it! இதில் ராஜேந்திர பிரசாத், நாசர், ரம்பா, சண்முகராஜன், ராஜு சுந்தரம், மேலும் பல இந்தி நட்சத்திரங்கள் மிரட்டியுள்ளார்கள். தமிழிலும் வர உள்ளது. கண்டிப்பா இந்த டிரைலர் பாக்காம வெளிய போகாதீங்க! பின்னால் வருத்தப்படுவீங்க! 'Quickgun Murugan - The Indian Cowboy.


இது ஆங்கில ட்ரைலர். ஹிந்தியிலயே செம டெரர்தான்:) having my fingers crossed for the release.

இன்னும் பாட்டு பட்டியல் பெருசா வச்சிருக்கேன், கருணாநிதி அவர் குடும்பத்துக்கு சேர்த்த சொத்து கணக்கா! ஆனால், இப்ப இது போது. இந்த பதிவுல நிறைய சில்க் பாட்டு வந்திருச்சுல! அப்போ அவங்களுக்கே டெடிகேட் பண்ணிடுவோம். எனக்கென்னவோ சில்க் பாக்கும்போது கழுதைப் பாலில் குளித்த கிளியோபாட்ராதான் நினைவுக்கு வர்றாங்க. ரெண்டு பேரும் கருப்பழகிகள் என்பதாலோ என்னவோ! ஜெய் சில்க் ஸ்மிதா!

அணுகுண்டு அறிவிப்பு - நான் பல காலமாக எழுததாலும், (எனக்கு நானே எழுதிக் கொண்ட) வாசகர் கடிதங்கள் காரணமாக அதை ஈடு செய்ய ஒரு சிறுகதை எழுதி கொண்டிருக்கிறேன். இது fantasy, futuristic, sci-fi இப்படி பல வகைல சேர்க்கலாம். நீ ஒரு வகைல எழுதினாலே படிக்கமுடியாதுன்னு யாருப்பா சொல்றது? வேணாம் விட்டுருங்க. (விடலைனா?) நான் விட்டுடறேன்! அடுத்த டாப்புல பாக்கலாம்.

டிஸ்கி : நிறைய வீடியோ வச்சிருக்கேன். அதனால லோட் ஆக லேட் ஆனதென்றால், "மன்னிக்க வேண்டுகிறேன்...." கவலைப்படாதிங்க! இதுக்கு வீடியோ சேர்க்கல.

டாப்பு அடிக்கலாம்

Filed under , by Prabhu on 7/05/2009 11:10:00 PM

19

டாப்படிக்கிறதுங்கிறது ஒருத்தர் ரெண்டு பேருன்னு இல்லாம பல பேரு கூடி ஒரே இடத்தில மொக்க போடுறது. அதுவும் பொது இடம் என்றால் மிகவும் நலம். அதுவும் தெரு முனைகளில் அடிப்பது அந்த ஏரியாவில் பெரும் புகழை பெற்றுத் தரும். ஆனா, இதெல்லாம் எங்கள மாதிரியான காலேஜ், ஸ்கூல் மாணவர்களுக்கு மட்டும்தான். பதிவுகல நடுத்தர வயது 'யூத்'களுக்கு அல்ல. இது பொதுவான வார்த்தைப் பிரயோகம்னு நினைத்துக் கொண்டிருந்த பொழுது, 'சுப்ரமணியபுரம்' படத்துல "தேநீரில் ஸ்நேகிதம்" பாடலில் சுவத்துல 'மாப்ள்' போன்ற வட்டார சொற்களோட எழுதிருப்பாங்க. (அய்யோ...விஷயத்துக்கு வாடா..) இதனால என்ன சொல்றேனா, டாப்பு அடிக்கிறது என்ற புதிய சொல்லாடலை(பிரபல பதிவர்னா இந்த வார்த்தைய அப்பப்ப சொல்லனுமாம்!) பதிவுலகத்துக்கு அறிமுகம் செய்யுறேன்.
--------------------------------------------------------------------------------------------------
எல்லாரும் குருமா, கொத்து புரோட்டா, கொத்துமல்லி சட்டினி என சரக்கில்லாதப்போ மொக்க போடுறதுக்கு ஒரு பேர் வச்சிருக்கா மாதிரி நம்மளும் ஏதாவது செய்யனுமேனு யோசிச்சப்போ, கண்ட சரக்க கலந்து கொடுக்கிறதால காக்டெயிலுன்னு வைக்கலாம்னா அது கார்க்கிட்ட, சரி நம்ம எழுதறது மேட்டரே இல்லாம சும்மா தான எழுதுறோம் சும்மானு பேர் வச்சா தமிழ்மாங்கனி காயத்ரி கோவிச்சுக்குவாங்க, புரோட்டா குருமானுனு கூட வைக்க முடியல. அதான் கொஞ்சம் regional and cultural டச்சா எங்க slangல டாப்பு அடிக்கலாம்னு வச்சேன். இதுல பல பரிமாணங்களில் மொக்க போட போறேன். Be careful!
--------------------------------------------------------------------------------------------------

சமீபத்துல ஒரு ஹை கோர்ட் குடுத்த ஒரு தீர்ப்பப் பத்தி பதிவுலகமே 'பத்தி' எரியும் நெனச்சேன். புஸ்வானமா போச்சு. கேஸே பத்தி எரியுறதப் பத்திதான். IPC377 ஒழிக்கச் சொல்லி சிபாரிசு பண்ணியிருக்காங்க. அந்த் செக்ஷன் sodomy பத்தினது. அதான் ஹோமோ செக்ஷுவாலிட்டி! ஓரினச் சேர்க்கைய குற்றமா அறிவிச்ச அந்த பிரிவத் தூக்குவதன் மூலமா ஓரினச் சேர்க்கை இந்தியாவில் சட்ட பூர்வமானதா ஆகுறதுக்கான அடையாளம் தெரிகிறது. அதுக்கு அமெரிக்காவின் புகழ் பெற்ற இந்திய ஆங்கில எழுத்தாளா(கவிஞ)ரான 'விக்ரம் சேத்' கூட மகிழ்ச்சி தெரிவிச்சிருக்காரு. அந்த ஆளே ஓரினச்(அல்லது ஈரினச்(bisexual) சேர்க்கையாளர்ங்கிறது கொசுறு செய்தி. அடுத்து அவங்க திருமணம் செஞ்சுக்கறதுக்கு கூட சட்டம் வரலாம்!
--------------------------------------------------------------------------------------------------

வெள்ளிக் கிழமை என் பிரண்டு அஜயோட அழகர் கோவில் போயிருந்தேன். அங்க மலை மேல பைக்க நிறுத்திட்டு ரெண்டு அடி எடுத்து வைக்கல, 'தம்பி, பைக்குல எதுவும் வச்சிருந்தா எடுத்துக்கோப்பா'னு ஒருத்தரு சொன்னாரு. என்னன்னு திரும்பி பாத்தா, குரங்கு என் பைக்குல ஏறிடுச்சு. திருட்டு குரங்குங்க.! பைக் டாங்க் மேல இருக்குற pouchல கூட கை விடுதுங்க. ஒருத்தர் பைக்குல வச்சிருந்த சாப்பாடெல்லாம் எடுத்துருச்சு. என் பைக்குல ஏறுன குரங்கு, pouchஅ திறந்து பாத்துட்டு அமைதியா இறங்கி போயிருச்சு. அனேகமா என்னோட பைக் துடைக்கிற அழுக்குத் துணிய மோந்து பாத்திருக்கும்! நானும் ரெண்டு நாளா மதுரை மாவட்டச் செய்திகள பாத்துக்கிட்டு இருக்கேன், 'அழகர் கோவிலில் ஒரு குரங்கு மர்மமான முறையில் சாவு'ன்னு நியூஸ் வருமானு.
என் பைக்க பைய திறக்குது பாருங்க, திருட்டு குரங்கு!


அங்கயும் பொரி, கடலை எல்லாம் விக்குறாங்க. அத வாங்கினாலும் குரங்கு பிடுங்கிட்டு போயிரும். இந்த பொரி கடை காரங்கதான் தங்களோட தொழில டெவலப் பண்ண இந்த குரங்குகள வளர்கிறாங்கன்னு ஒரு conspiracy theory கூட வச்சிருக்கேன்.

நாங்களும் ட்ரை பண்ணுவோம்ல! அதுங்கள ஒழிக்க கமாண்டோ ட்ரைனிங்!
-------------------------------------------------------------------------------------------------
எல்லாரும் பினிசிங் டச்சா கவிதை, நகைச்சுவைனு எழுதுவாங்க. நமக்கு கவிதைன்னு நாலு வாட்டி சொன்னாலே 'ஜல்ப்பு' பிடிச்சிக்கும். அதனால ஒரு ஜோக். அதுவும் 'ஏ' ஜோக்தான் சொல்லனும்னு ஆசை. ஆனா, வரிசையில் முதல் பதிவு என்பதால சைவம்!

விவசாயியும் புது மனைவியும்

ஒரு அமெரிக்க குடியானவன்(?!) சரி, உங்க பாஷையில விவசாயிக்கு கல்யாணம் நடந்தது. அவன் தன் புது மனைவியோட குதிரை வண்டியில போறான்.
அப்போ அந்த குதிரை மக்கர் பண்ணுது. அவனுக்கு சரியான கோபம். 'ஒண்ணு' அப்படின்னு சொன்னானாம். பொண்டாட்டிக்கு புரியல!
இன்னொரு தடவ மக்கர் பண்ணுச்சு அந்த குதிர. 'ரெண்டு' அப்படின்னு சொன்னான். என்னடா, வடிவேலு கணக்கா காமெடி பண்ணிக்கினு இருக்கான், என அவன் பொண்டாடி நெனச்சா.
அடுத்த தடவ மக்கர் பண்ணப்போ, 'மூணு' அப்படின்னு சொல்லிட்டு துப்பாக்கிய எடுத்து அந்த குதிரைய நோக்கி வச்சு......டுமீல்!
அதப் பாத்த அவன் மனைவி, "அடப் பாவி மனுஷா! அநியாயமா ஒரு குதிரைய கொன்னுட்டியே! வாயில்லா ஜீவன் அது! அந்த பாவம் நம்மல சும்மா விடுமா!" என அவன கரித்துக் கொட்ட, அவன் அவளை நோக்கி திரும்பி அமைதியாகச் சொன்னான்,
"ஒண்ணு"