Inglourious Basterds (2009)
Filed under Movies , விமர்சனம் , by Prabhu on 5/17/2010 06:42:00 PM
17
16x24 அறையில் பன்னிரண்டே பேர் அமர்ந்து பேசிக் கொண்டே இருக்கிறார்கள், படம் முழுக்க. சுவாரஸ்யமாக இருக்க முடியமா எனக் கேட்டால், இருக்க முடியும் என்று கூறுகிறது இந்தப் படம். சில வழக்குகளில் அவன் தவறுதான் செய்தான் என்றாலும் அதற்கு மனிதாபிமானக் காரணங்களை நோக்காமல் சட்டப்படி தண்டனை குடுக்கப் படுகிறது. ஆனால் இது போன்ற மனிதாபமான் நோக்கில் சில வழக்குகளை சிந்திக்கவே ஜூரிக்கள்(Jury) நியமிக்கப் படுகிறார்கள் என நினைக்கிறேன். இப்படி நியமிக்கப்படுகிற 12 ஜூரிக்கள் ஒரு வழக்கின் தீர்ப்பைத் தீர்மானிக்க விவாதம் செய்ய முற்படுவதே இந்தப் படம். இது முதலில் டிவியில் வந்த மேடை நாடகம் போன்ற ஒன்றின் திரைவடிவம்.
நம்பகத்தன்மையை பற்றி திரும்புகிறது. 11-1 என்று குற்றவாளி என்று முடிவு செய்யப்பட்டிருந்தது, இவருடைய வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற வாதம் நியாயமாகப் பட ஒருவர் மாரல் சப்போர்டுக்காக மட்டுமே ஓட்டளிக்க 10-2 என மாற சூடுபிடிக்க ஆரம்பிக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக 10-2, 9-3, 8-4 என சரியத் தொடங்குகிறது. அவர்கள் ஒவ்வொருவரும் பேசப் பேச ஒரு குற்றச் சம்பவத்தையே நம் கண் முன்னே நிகழ்வது போல கொண்டு வந்து நிறுத்துகிறது. ஆரம்பத்தில் ஒன்றும் சொல்லாமல் ஆரம்பித்த அந்தக் கேஸ், படம் போக போக மெல்ல நம் கண் முன்னே consrtuct ஆகிறது. இறுதியில் Henry Fonda யாரென்றே தெரியாத அந்த சிறுவனுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்தாரா? அந்த சிறுவன் நிஜமாலுமே கொலைகாரனாக இருந்து விடுதலை கொடுத்துவிட்டால்? என்பது போன்ற விஷயங்களுக்கு rational ஆக பதில் சொல்லியிருக்கிறார்கள்.
இந்தப் பதிவு கண்டிப்பா 18+ தான். அதுவும் profanity தாங்காதவங்க ஓடிப் போயிருங்க. கலாச்சாராத்தை காலையில் கழிவறையில் கண்டதாக கூவும் கலாச்சாரக் காவலர்களுக்குத் தடை.
South Park - Bigger, Longer & Uncut (1999)
ஒரு கம்ஃபோர்ட் ஜீன்ஸ், டீ-ஷர்ட் எடுத்து போட்டுக்கிட்டு, கூலிங் கிலாஸ போட்டுக்கிட்டு காலேஜ்க்கு மத்தியானம் போல போயும் கண்ணுல ஒரு அழகான பொண்ணும் அகப்படாத போதே சகுனம் புரிஞ்சு முயற்சிய கை விட்டுருக்கனும்.விதி யாரவிட்டது? இல்ல ரிசர்வ் பண்ண கொடுத்த பணமாவது விடுமா? கொஞ்சமா மழை பெய்யும் போது பைக்க எடுத்துக்கிட்டு கோரிப்பாளையம், சினிப் பிரியா தியேட்டர் வழியாக அண்ணாநகர்(மதுரையிலயும் ஒண்ணு இருக்கு!) போய் ஃபிரண்டு வீட்டுல 'Quickgun Murugun'டிரைலரையும் அதோட க்ளாசிக் எபிசோட்ஸையும் பாத்தவன், அதையே மூணு மணிநேரம் பாத்துக்கிட்டே உக்காந்திருக்கனும். அப்பயும் புத்தி வரலை.
அங்க தியேட்டருக்கு போனா அவனோட நண்பர்கள் பத்து பேரு காத்துக்கிட்டு இருந்தானுங்க. மதுரையில முதல் நாள் படத்துக்கு போனா குட்டி பையனா நம்மளோட ஜட்டிகூட போடாம விளையாண்ட நண்பனக்கூட கண்டுபிடிச்சிடலாம் போல! என்கூட 10வரைக்கும் படிச்சவன், 12ம்வகுப்ப்கு படிச்சவன், காலேஜ்ல 1 மாசம் வந்துட்டு இன்ஜினியரிங் காலேஜ் போனவன்னு ஒரு கூட்டத்தையே பாத்தேன். அப்ப கூட ஒருத்தன் எழுபது ரூபா டிக்கட்ட நூறுக்கு கேட்டான். இந்த வருஷம் நான் பாக்குற இரண்டாவது தமிழ் படம் இதுதான்னு முடியவே முடியாது்ன்னுட்டேன். இது எல்லாம் படம் சுமார் என விமர்சனம் கேள்வியுற்றபின்! விதி.... வலியது!
பிக் சினிமாஸ் ஜாஸ் தியேட்டரின் சில்லென்ற அரங்கில் நுழைந்த பிறகுதான் படம் எப்படி இருக்குமோ என்ற எண்ணமே வந்தது. படம் ஆரம்பிக்கும்போது என் பக்கத்தில் என் பெயரையே உடைய இரு நண்பன் உட்கார்ந்தான். என் பேரு வச்சவனுங்களுக்கெல்லாம் ஸ்பீக்கர் குரலும், காது வரைக்கும் வாயும் இருக்கும் போல. இதற்கு அவனும் விதி விலக்கல்ல. 'இளைய திலகம்'பிரபு பேருக்கு விசில் அடிக்கும் போதே அவன் ஆட்டம் ஆரம்பிச்சிருச்சு. வசூல்ராஜாவில இருந்து இப்பவரைக்கும் ஹீரோவ விட்டுட்டு வம்புக்குன்னே பிரபுவுக்கு விசில் அடிக்கிறதுல அவனுக்கு அலாதி பிரியம். கோழி வேஷ விக்ரம் அவுட்லைனா கிராஃபிக்ஸ்ல ட்ட்ர்ர்ரும்ம்ம்ம்னு சத்தம் வரும்போதே வித்தியாசமா இருந்ததுன்னு சொன்னா அத படத்தோட சேத்து புரிஞ்சிக்க கூடாது.
எடுத்த உடனே திருப்போரூர் கந்தசாமி கோவில்ல ஒரு ஏழை வேண்டிக்கும் போது அய்யர் மரத்துல எழுதி கட்டிவச்சு வேண்டிக்க சொல்ல, அவங்க கட்டி வைக்க, அவங்க வீட்டு வாசல்ல திடீரென பணமிருக்க, அத இன்ஸ்பெக்டர் மன்சூர் அலிகான் கிட்ட கொடுக்க, அவன் ஆட்டயப் போட, ராத்திரி தண்ணி போட, அப்புறம் குறட்டை போட(ரைமிங்குக்காக போடன்னு மாத்திருக்கேன், டைமிங்க டிஸ்டர்ப் பண்ணாதீங்க!) போட, அப்போதான் கால்ல தேள் கொட்டுன மாதிரி ஹைபிட்சுல தேவிஸ்ரீபிரசாத்(DSP) கத்த .... உர்ர்ர்ட்ட்ர்ர்ரூம்(டிரம்ஸ் உருமல்!) கந்தசாமீஈஈஈஈஈ..என்ற சத்ததோட அப்படியே கைய விரிச்சுக்கிட்டே குதிக்கும்போது, தப்பா சொல்லிட்டாங்களா? படம் நல்லாருக்குமோன்னு நினைக்கும் போதே சொதப்பிட்டாங்க! தேவையில்லாம ஸ்லோ மோஷன ஃபைட்டுல காட்டுறது. உண்மையிலயே ஃபாஸ்ட்டா காட்டுனா செம ஃபைட்டா வர வேண்டியது. தேவையில்லாம இழுக்குது. அதுக்கப்புறம் கந்தசாமி(you know, tamil god)தான் எல்லாம் செய்யுறாருன்னு பணத்த திருப்பி கொடுத்துறாரு மன்சூர். இப்படி கடவுள் தான் நிறைய செய்யுறாருன்னு நம்ப வச்சுடறாரு விக்ரம். இந்த பாராவ குறிச்சுக்கோங்க. சொல்லும் போதெல்லாம் திரும்ப படிச்சுக்கோங்க. ஏன்னா இதைதான் படம் முழுக்க செய்யுறாரு.
அப்புறம் சி.பி.ஐ. கந்தசாமி விக்ரம். இவரு ரெய்டுல ஆசிஷ் வித்யார்த்திய பிடிச்சிடுறாரு. அவரு வலிப்பு வந்த மாதிரியா பெத்த பொண்ணு ஸ்ரேயா முதற்கொண்டு எல்லாரிடமும் நாடகம் ஆட, ஸ்ரேயா காதல் வழியாக பழிவாங்க துடிக்கிறார். இதுக்கு நடுவுல இன்னொரு வில்லன் வேற. அப்புறம் திரும்பவும் மேற்சொன்ன பாராவில இருந்து சில சாகச பிட்டுகள திரும்ப சேத்துக்கோங்க. அது மூலமாக வழக்கமான ராபின்ஹூட் வேலைய கந்தசாமி(கடவுள்) பேரில கந்தசாமி(சி.பி.ஐ) பண்ணிக்கிட்டு இருக்காரு. மெக்சிகோ போயும் செய்யுறாரு(அங்கயுமா?). கடைசில மக்கள முன்னாடி வில்லன தோலுரிக்கிறார்.
சரி... ராபின் ஹூட் ஆவதற்கான காரணம் - may be lamest reason of the century. ஆனால் chaos தியரி வச்சு சரிகட்டிடலாம் என தோணுது.
ஏன்யா கடைசி காட்சியில மக்கள் திடீரென தெரியாத ஒருத்தருக்காக போராடுறது, அப்புறம் ஒவ்வொரு விஷயம் நடக்கும் போது இதுக்ல்லாம் ஒருத்தன் வருவான்டான்னு சொல்லுறது, அப்புறம் ஹீரோ மறைமுகமா என்னமாவது செய்யும் போது டிவி, பேப்பர் பாத்துட்டு வச்சுட்டாண்டா ஆப்பு, இனிமே அவ்வளவுதாம் லஞ்சம் பஞ்சம் எல்லாம் குடும்பத்தோட இந்தியாவ விட்டுப் போய் பசிபிக் கடல்ல விழுந்து தற்கொலை பண்ணிக்கும்ங்கிற ரேஞ்சுல பேசுறது, இதை எல்லாம் பாக்கும்போது கடுப்பா இருக்கு. சுசி நீங்களுமா?
முதல் கேள்வி எனக்கு தோன்றியது என்னவென்றால், இதையா ரெண்டு வருஷமா எடுத்தாங்க, இந்த கோமனத் துணி கதையத் தான் பெருசா இருக்குற மாதிரி சொல்லிருக்கேன். இண்டர்வெல்லில் படம் சுமார் என சொன்னதற்கு அப்படியெல்லாம் சொல்லி மனச ஆத்திக்க வேண்டியதான்னு சொல்லிட்டான் பக்கதுல இருந்தவன். சென்சார் போர்ட் சர்டிபிகேட்ல இருந்து கிளைமாக்ஸ் வரைக்கும் கதை நகரவே மாட்டேங்குது. குச்சி வச்சு குத்தினாலும் நுரை தள்ளின மாடு மாதிரி நிக்குது.கதையில லாஜிக் ஓட்டைங்கிறது உளுந்த வடையில ஓட்டை மாதிரி இருக்கனும். ஆனா, படமோ கண்ணாடி வளையல் அளவு ஓட்டைதான் பெருசா இருக்கு. சுத்தி கதை ஒண்ணும் இல்ல.
விக்ரம் - செம ஸ்மார்ட். நல்ல நடிப்பு. சின்சியாரிட்டி. சேவல் தோற்றத்தில் செய்யு மேனரிஸம் எல்லாம் வித்தியாசமாக இருக்கிறது. அசால்ட்டா ஸ்மைல் பண்ணும் போது அழகாக இருக்கிறார். என்ன செய்வது விக்ரம்? கதை இல்லயே? ஸ்ரேயா- அழகு. கட் செய்த முடி பொருந்துகிறது. கவர்ச்சியான ஆடை அணிந்து செதுக்கி வைத்த மாதிரியான உடலை காட்டுவதில நல்ல கவனத்தை செலுத்தியிருப்பது,பக்கத்து சீட்டிலிருப்பவன் ஸ்ரேயாவை பார்க்கும்போதெல்லாம் நெளிவதில் தெரிந்தது (இன்னைக்கு தூங்கின மாதிரிதான்னு அவன் சொன்னது வேற கதை). வடிவேலு வேஸ்ட். படத்துல கொஞ்ச நஞ்சம் இண்ட்ரெஸ்ட் இருந்தாலும் கெடுக்கிறார். இவ்வளவு மொக்கையை சமீபத்தில் நான் அனுபவிச்சதே இல்லை. சுசி கணேசனே தோன்றி நடிக்க முயற்சி செய்து உள்ளார். ரெண்டு வில்லனுங்களும் சுத்த வேஸ்ட். இவ்வளவு சப்பையான வில்லன்களா? விக்ரம் மேலதிகாரியா மட்டமான தமிழ் பேசுறவர் தான் எங்கள் டோலிவுட் சிங்கம், தன்மான தங்கம் 'பிரின்ஸ்' பாபு (அ) மகேஷ் பாபுவின் தந்தை என்பதாக கேள்வி. நல்லா பாத்துக்கோங்க!
ஒவ்வொருத்தனும் ஓடிவரும்போது கண்ணைக் கட்டி இருந்தாலும் சத்தத்தை வைத்து ஒண்ணு, ரெண்டு என எண்ணுவது, 'உங்கப்பனுக்கு நிஜ வலிப்பில்ல, வலது கை இழுத்தா வாய் இடது பக்கம் கோணும்" உங்கப்பனுக்கு வலது பக்கம் கோணுது' என சொல்லுவது என பல விஷயங்கள ஆங்கில பட அளவுக்கு நுணுக்கம் கொண்டுவர முயற்சி செய்திருக்காங்க.
டெக்னிக்கலா பெர்ஃபெக்ஷன் கொண்டு வர முயற்சி செய்ததன் அடையாளங்கள் தெரிகிறது. படத்தின் சுற்றுசூழல் ஒரு plush செட்டடிங்கில் இருக்கிறது.ஆர்ட் வொர்க் அபாரம். ஆனால் இந்தியா ஒளிர்கிறது மாதிரி இவ்வளவு அழகாகவா சி.பி.ஐ. ஆபிஸ் இருக்கு? சி.பி,ஐ ஐஸ்ல முகத்த முக்கி அடிக்கிறதுக்கு கூட க்ளாஸ் பவுல யூஸ் பண்ணுது. அத விடுங்க கரண்ட் ஷாக் குடுக்க கூட கம்ப்யூட்டர் பயன்படுத்துறாங்க! ஆங்கில படங்களின் சைட் எஃபெக்ட்! ஸ்டண்ட் நன்றாக் இருந்தது. ஆடை வடிவமைப்பு மிக அருமை. ஸ்ரேயாவின் டிசைனர் ஆடைகள் மறைப்பதை விட காட்டுவது அதிகம். கேமரா நல்ல ஸ்டைலிஷ் ஹேண்டிலிங். கேமரா வோட வெயிட்லதான் படமே நிக்குது. ஆனா, சேஸிங் காட்சியில் கேமரா வேகம் பத்தல. ஹெலி கேமரால எடுக்கும் போது ஏதோ சாதாரணமாக போவது போல உள்ளது. இயக்கம் ஓக்கே. ஆனால் எழுத்து ...ம்ஹூம்... தேறாது. இந்த வருடத்தின் பல முண்ணனி இயக்குனர்கள் போன்று இவரும் ஸ்கிரிப்டுல கவுந்துட்டார். நிறைய ஸ்கோப் இருந்தது விக்ரமோட சேவல் கேரக்டரில, ஆனா அதுக்கேத்த கதையில்ல!
பக்கத்திலிருந்த நண்பன் படம் முடிஞ்சு வெளி வந்ததும் ஒருவன் படம் எப்படியிருக்கு என கேட்க, நல்லாருக்கு போய் பாருங்கன்னு சொல்லிட்டான். நாம பாத்துட்டோம் அவன் எப்படி தியேட்டர் வாசல் வரைக்கும் வந்து தப்பிக்கிறது என கேக்குறான். ஆனா டிரைல பார்க்கும் போதே இந்த படமும் கருப்புப் பணம் அப்படி இப்படின்னு இருக்கும்னுதான் நான் நினைச்சேன். ஆனா, கொஞ்சம் வித்தியாசமா எடுப்பனுங்கன்னு தப்பு கணக்கு போட்டுட்டேன்.கதைய சொன்ன என் பிரண்டு bull shitனு ஃபோன வச்சுட்டான். அட, படமே பாக்காத எங்க அம்மாகூட வந்த உடனே என்ன, அந்நியன்' மாதிரியா? கந்தசாமின்னு உருமும் போதே தெரியும்டாங்கிறாங்க! பாருங்கய்யா, இவங்கள்ளாம் கூட கண்டுபிடிக்க ஆரம்பிச்சுட்டாங்க! கதைய மாத்துங்கய்யா!
Old wine in a new stylish goblet. My god! the wine stinks!
கந்தசாமி - நொந்தசாமி!
டிஸ்கி - படத்துலதான் கதை இல்லையேன்னு நான் படத்துக்கு போன கதைய இங்க சொன்னேன். ரெண்டு கிராமம் தத்தெடுத்துருக்காம் படக்குழு. அதுக்கு இந்த எழுபது ரூபாயை மொய் எழுதியதா நினைத்துக் கொண்டேன்.
ஹாரி பாட்டர் கதைகள தீவிரமா படிச்ச என்ன மாதிரியான ரசிகர்களுக்குதான் இந்த படங்களுக்கான காத்திருப்புக்கான அர்த்தம் தெரியும். அதுவும் என்னைய மாதிரியான ஹாரி பாட்டர் fanatics களுக்கு இது ரஜினி படம். அத விட மோசம். கதைய படிச்சிட்டு எப்படி எடுத்துருப்பானோ, ஒழுங்கா எடுத்துருக்கனுமேன்னு ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அதுக்கு காரணம் Rowling ஓட எழுத்துக்கள். படிக்கும் போதே நமக்குள்ள mixed emotions தான். குறிப்பா என்னை போன்ற adolescents
(அட, படிக்கும் போது அடலசண்ட் தாம்பா).
இது ஹாரி பாட்டர் படத்தோட விமர்சனமான்னு கேட்டா அதுவும் தான். நான் விமர்சனம் எழுத ஏற்கனவே ட்ரை பண்ணி பெரிசா வரலன்னு எனக்கு தோணுது. இப்போதான் ஆதவன் என்னையும் படிச்சு ஏமாந்து சரக்கிருக்கிற பதிவுன்னு சொல்லிருக்காரு. அத நம்பி வர்றவங்கள ஓடவிட விருப்பமில்ல.அதனால அந்த படத்த பத்தி என்னவெல்லாம் தோணுதோ எழுதுறேன். ஆமா,....'ஹாரி பாட்டரும் மாயராஜகுமாரனும்' தான படத்தோட பேரு நீ என்ன 'muggle ராஜகுமாரனும்'னு போட்டிருக்கனு கேக்கலாம். சொல்றேன். விடை பதிவின் கடைசியில்னு போட்டா கடைசி போயிட்டு, சூப்பர்னு போட்டோ போடாமலோ போய்விட வாய்ப்பிருக்கிறதால, நடுவால எங்கயாவது சொறுகி விடுறேன். படிச்சிக்கோங்க!
முதல்ல விளக்க வேண்டியது படத்தோட தலைப்பு. 'Harry Potter and the Half-Blood Prince' ஓட தமிழாக்கம் தான் இந்த படம். படத்துக்கு 'ஹாரி பாட்டரும் அரை ரத்த அரசகுமாரனு'ம்னு பேர் வைப்பாங்களோன்னு நெனச்சோம். பரவாயில்ல கொஞ்சம் நல்லாருக்கனுங்கிற எண்ணத்துல வச்சிருக்காங்க. half-blood ங்கிறது மந்திரம் தெரிஞ்ச ஆண்/பெண் , சாதாரண ஆண்/பெண் (இவங்களத்தான் muggleனு சொல்வாங்க!) கலப்பில் பிறக்கிற கலப்பினத்த சொல்வாங்க.
போன பாகமான 'Harry Potter and the Order of the Phoenix' விட்ட இடத்துல இருந்து தொடங்குது படம். Harry காபி ஷாப்ல ஒரு பொண்ணோட கடலை போட ட்ரை பண்ணும் போது இடையில Dumbledore(Principal) வந்து ரிடையர் ஆன Horace Slughornன எதுக்காகவோ ப்ரொபசரா ஆக்குறதுக்கு இவன அழைச்சிட்டு முயற்சி பண்ணுறாரு. அப்புறம், Draco Malfoy கிட்ட ஒரு மூக்குடைப்போட ஹாரியின் பள்ளி வாழ்க்கை அந்த வருடம் 'இனிதே' துவங்குது.
அதன் பிறகு Malfoyஓட ரகசிய நடவடிக்கைகள், Ron-Hermione நடுவில நடக்கிற ஊடல்-கூடல், Harry-Ginny நடுவில புதுசா வொர்க் அவுட் ஆகுற long felt chemistry, Dumbledore கிட்ட ஸ்பெஷல் கிளாஸ் என ஓடிட்டிருக்குற கதையில ஒரு சின்ன நெருடல் தான் ஹாரியோட potions book. அந்த புத்தகத்தோட பழைய சொந்தகாரன் பல உபயோகமான குறிப்புகளையும், மந்திரங்களையும் நுணுக்கி வச்சிட்டு போயிருப்பான். அட்டையில 'இந்த புத்தகம் மாயராஜகுமாரனோடது'(Property of Half-blood Prince) என போட்டிருக்கும். இந்த புத்தகம் மேல Hermione, Ginnyக்கு சந்தேகம் இருந்தாலும் அந்த புத்தகத்தின் மேல அபார நம்பிக்கை வச்சிருப்பான். ஆனா, அவன் நம்பிக்கை தவறுது. அது அவனுக்கு ஆபத்தானதால Ginny அதை மறைச்சு வைக்கிறா.
Snape ஒரு மீறமுடியாத சத்தியத்த(Unbreakable Vow) Malfoy அம்மாக்கு செஞ்சு தந்திருக்கானு ஒட்டு கேக்கிறான் ஹாரி. Dumbledoreஅ கொல்ல ஒரு சபிக்கப்பட்ட நெக்லஸ் ஒரு பொண்ணு மூலமா வந்தது பாத்ததும், அதுவும் Malfoy வேலையா இருக்கும்னு ஹாரி நினைக்கிறான்.
Dumbledore அடிக்கடி வெளிய போறதுக்கான காரணங்களையும், வோல்டிமோர்ட் சம்பந்தப்பட்ட சில பழைய நினைவுகளையும் ஹாரிக்கு விளக்கும் போது வேல்டிமோர்ட் கிட்டத்தட்ட சாகாவரம் பெற்றவங்கிற விவரம் தெரிய வருது. Slughorn கிட்ட இருக்கிற அந்த முக்கியமான நினைவு என்ன? வோல்டிமோர்டோட அந்த கிட்டதட்ட சாகாவர ரகசியம் என்ன? Dumbledore ஹாரிகிட்ட ஒப்படைக்கிற பொறுப்பு என்ன? யாரு அந்த மாயராஜகுமாரன்? Malfoyஓட ரகசியம் என்ன? Snape எதுக்காக சத்தியம் பண்ணி கொடுத்தான்? இதுக்கெல்லாம் விடை தெரிய படம் பார்க்கனும். ஓசில கதை கேக்கலாம்னு நெனச்சீங்களா?
புத்தகத்தை த்ழுவி எடுத்திருந்தாலும், அப்படியே எடுக்காமல் ஒரு சில விஷயங்கள படத்துக்காக உருவாக்கியிருப்பது கதையின் விறுவிறுப்புக்கு கை கொடுப்பதோட, புத்தகத்த படிச்சவங்களுக்கு போனஸ்! உதாரணம் Weasley இல்லத்துக்கு Bellatrix வந்து , அதனால் உருவாகும் ஒரு சண்டை காட்சி. புத்தகக் கதையை போல அல்லாமல் படத்தில் ஆரம்பத்திலேயே Ginny மேல் Harryக்கு ஒரு 'இது' இருக்கு. தேவையில்லாத புத்தகத்தின் கொசுறு விஷயங்களில் கவனம் காட்டி புத்தக எழுத்தாளர், வாசகர்கள திருப்தி படுத்த நினைக்காம, படிக்காதவங்களும் பார்க்கும் படியா எடுத்துருக்காங்க. காட்சிகளுக்கு காட்சி நகர்ற வேகம் அற்புதம்.
இந்த கதை, புத்தகம் பற்றிய பொதுவான கருத்து, இது சின்னப் பசங்க கதை/ படம் என்பது. ஆனா, இது ஒரு சாதாரண fantasy வகையா இல்லாமல், ஒரு திரில்லராகவும் எடுத்திருக்காங்க. அப்புறம் நிறைய, ரொமான்ஸ் சம்பந்தப்பட்ட காட்சிகளை வச்சிருக்காங்க. முக்கால்வாசி Ron-Hermione-lavender முக்கோணக் காதல், Ginny-Harryக்கு இடையான ஒரு கெமிஸ்ட்ரி என ஹார்மோன்களின் வேலையாகவே இருக்கிறது. ஹாரியின் முக்கிய ரசிகர்களின் (இவர்களின் டீன் ஏஜில் தான் கதைகள் வெளியாயின) வயது 20ஐ நெருங்கி இருக்றதாலயும், அவங்க வாழ்க்கையில சந்திக்க கூடியதாவும் இருக்கிறதால இந்த மாதிரி எடுத்திருக்க வாய்ப்புகள் உண்டு (எனக்கு 20 உனக்கு 18ஆ?). அத விட முக்கியமான காரணம் ஏழாவது பாகத்த ரெண்டா வெட்டுறதால இதுலயும் சண்டைகள் நிறைய வச்சா ஓவர் டோஸ் ஆயிடும்னு பயப்படுறாரு.
படத்தோட CG பிச்சிருக்காங்க. ஆரம்பத்தில பாலத்த முறுக்கிறதில இருந்து கடைசியில அந்த குகைக் காட்சிகள் வரைக்கும் அருமையா இருந்துச்சு. Dumbledore கடைசியில உருவாக்கிற சீறிக்கிட்டு வரும்நெருப்பு வட்டம் செம சீனு. புத்தக அட்டையில வந்த காட்சி போலவே இருந்தது. Cinematographer தன்னோட பங்க சிறப்பா செஞ்சிருக்காரு. அதுவும் அந்த ஆரம்ப காட்சியில் காமரா கிளம்பி புயலோடு சென்று பாலத்தை அடையும் lengthy shot.... it was breathtaking. எடிட்டிங் செம க்ரிஸ்ப். ஆனால் சில இடங்களில் காட்சிகளை விட்டு தவ்வியது போன்று தோன்றுவது அதே எடிட்டிங்கின் குறைபாடு. கடைசியில் ஹாரி தண்ணீரில் கைவிடும் போது அவன் கைய தண்ணில இருந்து ஒரு கை பிடிக்கும்னு கதையில் படிச்சு தெரிஞ்ச என்னையவே மிரட்டுச்சுன்னா, தியேட்டர்ல பல பேர் அந்த சீன்ல ஜெர்க் ஆனாங்கன்னு சொல்ல தேவையில்ல. செம த்ரில் அந்த ஒரு காட்சி.
படம் மட்டும் பார்க்க வர்றவங்க ரொம்ப மாயாஜாலத்த எதிர்பார்த்தா, ஏமாற்றம்தான். ஏன்னா இன்னும் ரெண்டு பாகம் முழுக்க ஆக்ஷனா ரெடியாகும் போது, இதயும் அதிரடியா எடுத்தா அலுத்துப் போயிடலாம். அதான்.
மொத்தத்தில ஒரு த்ரில்லர் ஆனாலும், ஆங்காங்கே நகைச்சுவை பளிச்சிட கொடுத்திருக்காங்க.
இப்ப முக்கியமான பார்ட். முகமெல்லாம் பிரகாசமாகுதே! கரெக்ட்! நம்ம Emma Watson பத்தியும்தான். எப்பவும் போல பொண்ணு அழகுதான். அப்பப்ப ரகசியமா வெட்க்கப்பட்டு முகம் சிவக்கும்போது, அடடா.... ஹீரோவுக்கு இல்லாத சவுண்டு தலைவிக்குதான். வந்த உடனே என்னா சவுண்டு! Rupet Grint (Ron Weasley)- காமெடிக்கு யூஸ் பண்ணிருக்காங்க. Daniel Radcliffe (Harry Potter) - இவரும் ஓகே தான். Bonie Wright (Ginny Weasley) - பொண்ணு கடமைய சரியா செஞ்சுட்டு போயிருக்கு. எனக்கு இந்தப் பொண்ணயும் பிடிச்சது. எல்லாரும் எம்மா வாட்சனப் பாக்கும் போது நீ ஏன் இவளயும் பாக்குறன்னு கேட்டா அதுக்கு ஒரு extensive தியரியே வச்சிருக்கேன். அப்புறம்! Alan Rick (Severus Snape) - இவரோட நடிப்பு ரொம்ப அருமை. இவர் கேரக்டருக்கான ஆழம் இனி மேலும் கூடப்போகுதுங்கிறத உணர்ந்து நடிச்சிருக்காரு. Very defining. இது போக Professor Slughornஆ வர்ற Jim Broadbent நல்ல நகைச்சுவை கலந்த கதாபாத்திரமா வந்திருக்காரு.
திரைக்கதை எழுதிய Stephen Knovles ஐ பாராட்டியே ஆகனும். ஏன்னா இந்த புத்தகத்த திரைக்கதையாக்குறது கஷ்டம். அவ்ளோ பெரிய புத்தகத்த செல்லுலாய்டுக்கு ஏற்றாற் போல கொண்டு வந்திருக்கிறார். Director David Yates நல்லா எடுத்திருக்கார். அடுத்த பார்ட்ட்களின் நம்பிக்கையை உண்டாக்குகிறார். மொத்தத்தில் இது ஐந்தாம் பாகத்தை விட அருமையாக இருக்கிறது.
நெகடிவ் பாயிண்ட்ஸே இல்லையா? ஏன் இல்ல? மாயாஜாலத்த எதிர்பார்த்து போற நம்ம ஊரு மக்களையும், சின்ன் பசங்களையும் கொஞ்சம் ஏமாத்திருக்கு. எடிட்டிங் சில இடங்களில் கொடுத்த காசுக்கு ஓவராவே வேலை பாத்திருக்காங்க. யப்பா, சீக்கிரம் படத்த எடுத்து முடிங்கப்பா! முதல் பாகம் எடுக்கும் போது அவங்களுக்கும், ஹாரி பாட்டர் கதாபாத்திரங்களுக்கும் ஒரே வயசு. இப்போ மாடு மாதிரி வளர்ந்துட்டானுங்க. 20 வயசு ஆன பிறகு இன்னமும் 16 வயசுன்னு சொல்லிக்கிட்டு.... இந்த படத்த மற்ற இரண்டு பாகங்களுக்கு ஒரு முதல் படியாக பயன்படுத்திருக்காங்க. அதனால அடுத்த பாகங்களில் நீங்கள் சூட எதிர்பார்க்கலாம். இப்பொழுதைக்கு ஒரு நல்ல ப்டம் ரசிக்க. ஆறினாலும் அருமையான டீ.
ஹாரிபாட்டரும் மாயராஜகுமாரனும் - குறைவான மாயாஜாலங்களுடன்
தரம் - நல்ல படம். பார்க்கலாம், குறிப்பாக ஹாரியின் புத்தக ரசிகர்கள்.
டிஸ்கி- ஹாரி பாட்டரும் muggle ராஜகுமாரனும் -என் தலைப்ப யோசிச்சிங்களா?
அது நான் தான். எப்படின்னு யோசிங்க! என் பெயர் பிரபுகுமார்.
டிஸ்கி 2 : ஹாரி பாட்டர் கொட்டை வடிவில்( in a nutshell) தர முடிவு செய்துள்ளேன். ஆனால் அது பெரிய வேலை. உங்கள் ஆதரவு இருந்தால் தான் அதை செய்ய இயலும். சொல்லுங்க! ஆரம்பிச்சிருவோமா?
High definition trailer
படம் திடீரென புருவம் சுழிய வைக்கும் இரு புக்கிகளின் கொலையுடன் ஆரம்பிக்கிறது. காலியான ஏர்போர்ட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் ஒருவனிடம் கதை சொல்லிக் கொண்டே அவன் கதையை முடிக்கிறார், Good Kat (Bruce wllies). Kansas city shuffle என்கிறான். ஒரு காலத்தில ஒரு குதிரை ரேஸ் நடக்கும் போது ஒரு குதிரைக்கு மருந்து குடுத்து ஜெயிக்க வைக்கிற விஷயம், அந்த டாக்டர் வழியாக, ஒரு விலைமாது, ஒரு பணக்காரன், அவன் நண்பன், ஒரு பார் வெய்டர் என கேயாஸ் தியரி மாதிரியாக MaX கைக்கு வந்து சேருகிறது. அவன் அதில் பெட் கட்ட, மருந்துக்கு திட்டம் போட்ட கும்பல் அது லீக்கானது தெரிஞ்சதும் அது சம்பந்தப்பட்ட எல்லாத்தையும் கொன்னுடறாங்க குடும்பத்தோட. இதுதான் Kansas city shuffle ஆ என தூங்குமூஞ்சி கேட்ட பொழுது, இல்லை அது ஆரம்பம்தான், உன்ன கொல்லுறதுதான் Kansas city shuffle ன்னு சொல்லிக்கிட்டே அவன் கழுத்த கோழி மாதிரி திருகிடறான். ஒரு பிணம் இல்லாமல் Kansas city shuffle நடக்காதுன்னு சொல்லிக்கிட்டே அவன எடுத்திட்டு போறான்.
இதுக்கப்புறம் ஹீரோவோட அறிமுகம் Slevin kelevra (Josh Harnett ). பேசிப் பேசியே மூக்குல குத்து வாங்கிற கேரக்டர்ல நல்லா நடிச்சிருக்கார். அவரோட பாத்திரப் படைப்பே எந்நேரமும் பேசுறதுதான். அவன் ஃபிரண்டு வீட்டில தங்கியிருக்கும்போது அவன் ஃபிரண்டு நிக் என நினைத்து இவனத் தூக்கிட்டு போயிடறாங்க துண்டோட. அங்க The Boss (Morgan Freeman) என் கடன திருப்பிக் கொடுக்கறயா இல்ல அதுக்கு பதிலா என் மகனக் கொன்ன Rabbi(Ben Kingsley) யோட பையன போட்டுத் தள்ளினா விட்டுடறேன் என சொல்லுகிறான்.
இப்ப வில்லன்களோடபேக்ரவுண்ட். ரெண்டு எதிரெதிர் வானுயரக் கட்ட்டங்கள்ல கடைசி மாடி பெண்ட் ஹவுஸ்ல மூணு இன்ச் குண்டு துளைக்கா கண்ணாடியின் பின்னாடி கடந்த 20 வருடமா வாழ்க்கை நடத்திட்டு வர்ற எதிரிங்கதான், The Boss ம், Rabbi ம். ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் பயந்து அந்த ஒரு மாடிலயே இருபது வருஷமா வாழ்ந்திட்டு வர்றாங்க. இந்த சமயத்துலதான் பாஸோட மகன் செத்துப் போக, ராபியோட மகன கொல்லுறதுக்காக Good katஅ கூப்பிடுறார் பாஸ். இவனோட டீல் வச்சுக்கிற அதே நேரத்தில அதே நேரத்தில ராபிக்கிட்ட பாஸ கொல்லுறேன்னு ஒரு டீல் வச்சுக்கிறான் அவன்.
இப்ப ரெண்டு பேருக்கிட்டயும் ஹீரோவ மாட்டி விடறான் Good Kat, ஸ்லெவின் ஃப்ரண்டு Nick Fisherஒட பேர வச்சு. ஒரு பக்கம் பாஸ் ராபியோட ஹோமோ செக்ஷுவல் மகன, அவன் வீக்னஸ வச்சே முடிக்க சொல்ல, மறுபக்கம் என்னோட 33,000 டாலர கொண்டுவான்னு ராபி படுத்த ஸ்லெவின் நடுவில சிக்கி சீப்ப்டுறான்.
எதிர்வீட்டு லொட லொட பொண்ணா கதாநாயகி (Lucy Liu – சார்லீஸ் ஏஞ்சல்ஸ்ல பாத்திருப்பீங்களே!). இவன் ஏன் இந்த வட்ட்த்துக்குள்ள சிக்கினான் என துப்பறியறேன்னு லொட லொடத்துக்கிட்டேஏஏஏஏஏ... இருக்காங்க. இடையில Good kat அ படமெடுத்திடறாங்க, ஒரு சந்தேகத்தில. ஆனா, அது யாருன்னு ரெண்டு பேருக்கும் புரியல. இதற்கிடையில் ஒரு போலிஸ் அதிகாரி Marty இவன துரத்த ஆரம்பிச்சிடறான்.
கடைசியா, ராபியோட பையன் The fairy கிட்ட பழகி, ஹோமோ செக்ஷுவல் மாதிரி காட்டி, அவன் வீட்டுல வச்சுப் போட்ரலாம்னு ப்ளான் போட, அங்கயே வச்சு ஸெல்வின போட்டுட்டு கூட்டுத் தற்கொலையா ஆக்கிடலாம்னு Good kat திட்டம் போட, ராபியோட பையன இவன் கொன்னானா, குட் கேட் கிட்ட இருந்து ஸெல்வின் தப்பிச்சானா, ராபி கிட்ட ஒத்துகிட்ட மாதிரி பாஸ காலி பண்ணினா குட் கேட், போலீஸ்கிட்ட இருந்து ஸெல்வின் எப்படி தப்பிப்பான், குட் கேட்ட ஃபோட்டோ எடுத்த லிண்ட்சே பிழைச்சாளா, kansas city shuffle னா என்ன, அந்த முதல் கொலைகள் ஏன் நடந்தன, கடைசியில இதுக்கெல்லாம் அர்த்தம் என்ன, இந்தப் படத்தின் பெயருக்கு அர்த்தம் என்ன என விளக்குவதுதான் கதை.

படம் கடைசி 40 நிமிஷம் முழுக்க கிட்ட்தட்ட க்ளைமாக்ஸ் தான். The Fairyய கொன்ன பிறகு கதையோட போக்கே தடாலடியா மாறிடுது, படத்துல கதாநாயகி சில சமயங்களில் அதிகமாக பேசுவது போலத் தெரியலாம். வில்லன்கள் இருவரும் அருமை. பள்ளிக் கூடப் பையனைப் போல படிய வாரிய தலையுடன் புரூஸ் வில்லிஸ் இளமையாகத் தெரிகிறார். ஹீரோ தனது வேலையை திறமையாகத்தான் செய்திருக்கிறார்.
படத்தின் எடிட்டிங் இந்த மாதிரியான படங்களுக்கு ஏற்றவாறு நல்லா க்ரிஸ்பாதான் இருக்கு. படத்தில எடிட்டிங்ல அங்க அங்க பிசிறு விட்டு பின்னாடி காட்சிகளை கோர்த்து பார்க்கும் வகையில பண்ணிருக்காங்க. கடைசில என்ன தான் நடக்குது இங்கனு சீட் நுனிக்கு தள்ளிடுவாங்க.
ஆமா.... இந்தக் கதைய எங்கயோ படிச்ச மாதிரி இருக்கேன்னு யோசிச்சா, நம்ம கேபிள் சங்கர் ‘லாடம்’ங்கிற படத்துக்கு எழுதினது மாதிரியே இருக்கலாம்னு ஞாபகப்படுத்துகிறேன். வித விதமா சுடுறாய்ங்க!
--------------------------------------------------------------------------------------------------
சில வசனங்கள், இந்தப் படத்திலிருந்து
ஸ்லெவின் லிண்ட்சேவிடம், “ கெட்ட்து நடந்தா எப்பவும் மூணு மூணாவே நடக்கும்”
தனது காதலி இன்னொருத்தியிடம் செக்ஸ் வச்சுக்கிட்டிருக்கறத பாத்தப்போ அவ இது ஆக்ஸிடண்ட்னு சொல்லுவா.அதுக்கு. “அது எப்படி? அவன் தடுக்கி நீ விழுந்திட்டயா?”
லிண்ட்சே திடீரென வந்தப்ப அவன் துண்டில்லாம பாத்திருவா. போன பிறகு திரும்பவும் திடீரென எட்டிப் பார்த்து, “இன்னொரு ஷோ கிடைக்குமான்னு பார்த்தேன்?”
லிண்ட்சே - “ஒரு கப் சக்கரை (சக்கரை சுரேஷ் இல்லீங்க!)வாங்கிட்டு போகலாம்னு வந்தேன்”
ஸ்லெவின் – “கப் எங்கே?”
லிண்ட்சே - “கப் இருந்தா நான் சக்கரை மட்டும்தான வாங்க வந்திருப்பேன். நான் ஒரு கப் சக்கரை வாங்க வந்திருக்கேன்”
இவன் மூக்க உடைச்ச பிறகும் வாய் குறையாம பேசிட்டிருப்பான். அப்ப Morgan Freeman- “I’ll bet it was that mouth that got you that nose “
The Boss ஸ்லிம்மோட பிணத்தை வச்சு கேள்வி கேட்டுட்டு ஸெல்வினப் பார்த்து, “அவன யாரோ சுட்ட்துல இருந்து அவன் செவிடாயிட்டான்”.
--------------------------------------------------------------------------------------------------
Lucky Number Slevin – Luckily Good