Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

பதின்மம்

Filed under , , by Prabhu on 2/24/2010 11:22:00 AM

17

பதின்ம வயதுகள் - டீன் ஏஜ்.

சொல்லும்போதே பெருமூச்சு தான் வருகிறது. அந்தப் பருவம் முடிந்து ஒன்பதாவது மாதம். எனக்கென்னவோ டீன் - ஏஜ் முடிந்ததும் ஒரு மாதிரி உடைந்துவிட்டேன். சின்னப் பையன் என்ற சாக்கில் அனுபவித்த சலுகைகள் கிடையாது. ஏன் என்னை நானே இன்னும் வயசு இருக்கு, என்ன அவசரம் என்று சமாதானப்படுத்திக் கொள்ள முடியாது. என்ன தான் என் அப்பா நான் செய்யும் விஷயங்களுக்கு, ‘சின்னப்பையன் தானே’ என்றாலும், உலகம் அவ்வாறு பார்க்கப் போவதில்லை. ம்ஹூம்.

டீன் - ஏஜின் அருமை புரியாதவர்கள் பல. இழந்தபிறகு வருத்தப்படுவர். நான் நிகழும் போதே அதன் அருமை புரிந்து கொண்டேன். ஆனால் சரியாக பயன்படுத்தவில்லை. நான் தெரிந்தே இழந்துவிட்ட சில விஷயங்கள் பல. இன்னும்  50-100 புத்தகங்கள் உபயோகமானவையாக படித்திருக்க வேண்டும் அந்த வயதிற்குள். இன்னும் அதிக அளவில் பலவிதமான இசை தொகுப்புகளைக் கேட்டிருக்க வேண்டும். விளையாண்டிருக்க வேண்டும். எட்டாம் வகுப்பில் அறைகுறையாக பயின்ற டேபிள் டென்னிஸைத் தொடர்ந்திருக்க வேண்டும். நன்றாக அடுத்தவரிடம் பேசும் கலையை கற்றிருக்க வேண்டும். இது போல இன்னும் பல எனக்கு வேண்டியிருக்க, நான் மட்டும் வருடங்களுக்கு வேண்டாதவனாகிப் போய் விட்டேன். அவை என்னை விட்டு உருண்டோடி விட்டன.

அட, இழந்ததை ஏன் பேசிக் கொண்டிருக்க வேண்டும். நான் பெற்றதும் பலவே. அனுபவித்த தருணங்களின் அருமையும் இனிப்பவையே. 

பதிமூன்றாம் வயதில் தவளையின் இனப்பெருக்க உத்தியைப் படித்த பொழுது ‘சைக்கிள் பம்ப்’ போன்ற அதன் முறையை கிண்டல் செய்து சிரித்தது நினைவில் இன்னும் இருப்பது என் ’அபார’ ஞாபக சக்திக்கு ஆச்சரியம்தான். 
முதன்முதலாக ஆங்கில புத்தகங்கள் படிக்க ஆரம்பித்து, Nancy Drew, Hardy Boys என ஓடிக் கொண்டிருந்த வருடம்.

ஒன்பதாம் வகுப்பில் எதேச்சையாக சொல்லிய வார்த்தையில் இருந்து ‘ப்ரீத்தி’ என்ற பெயரை வைத்து என்னை நண்பர்கள் ஓட்டியதும், நிஜமாலுமே அப்படி ஒருத்தி வேறொரு வகுப்பில் இருந்ததும் நினைவில் இருக்கிறது. அதன் பிறகு அந்த பெண் எந்த ஆசிரியரையாவது காண எங்கள் வகுப்பிற்கு வந்தால் என் பெயரைக் கூவி நாராசமாக்குவார்கள். என்னவோ, கடைசி வரை அந்தப் பெண்ணுக்கு நான் ஒருவன் இருந்ததே தெரியாது. நான் கவலைப்பட்டதில்லை. நான் அப்ப எல்லாம் சைட் அடிச்சதில்லைங்கிறது உண்மைன்னாலும் நம்பவா போறீங்க?

ஒன்பதாம் வகுப்பு சரித்திர வகுப்பின் போது கூரையில் இரண்டு அணில்களின் சில்மிஷம் கண்டு சிரித்து மாட்டிய பொழுது, எழுந்து பேந்த பேந்த முழித்தோம். அப்பொழுது என்னுடன் திவாகர் என்று ஒரு நண்பன் உண்டு. எங்கள் தீம் சாங் ஊமை விழிகளில் வரும் ஒப்பனிங் பாடலான ‘ராத்திரி நேரத்து பூஜையில்’ தான். இது இப்படியானதுக்கு ஒரு பெரும் காரணமொன்றுமில்லை. அந்தப் படத்தின் முன்பாதி கதை நான் அதுவரை பார்த்ததே இல்லாத காரணத்தால் அதைக் கூறுகையில் அந்த பாட்டுக்கு ’நங்கன நங்கன’ ஒரு வித்தியாசமான பிண்ணனி இசை கொடுத்துக் கொண்டே பாடுவான். அதனாலே பலமுறை வகுப்பில் அந்த சத்தத்தைக் குடுத்து சிரித்து மாட்டியிருக்கிறோம்.


பத்தாம் வகுப்பில் கவலையின்றி இருந்தது மார்க்கில் பளிச்சிட, அந்த மதிப்பெண்களை நான் கேரளா சுற்றுலாவை சுசீந்திரத்தில் துவக்கும் சமயத்தில் தொலைபேசியில் கேட்டுக் கொண்டேன். பிறகு சுற்றுலா முடிந்து வந்து நிதானமாக பள்ளி தேட முற்பட்டேன். கால தாமதம் காரணமாக பெரிய பள்ளிகளில் கிடைக்காத போதும் வருத்தப் படவில்லை. காலத்துடன் வந்திருந்தாலும் என் மதிப்பென்களுக்கு கிடைத்திருக்கப் போவதில்லை.

எனக்கு எட்டாம் முதல் பத்தாம் வகுப்பு வரை வகுப்பில், ‘பருப்பு’ என்பது பட்டப் பெயர். அப்பவே நான் பெரிய பருப்பு எனத் தெரிந்திருக்கிறது என்று பொய் சொல்லாமல் சொல்ல வேண்டுமென்றால், என் பெயரை வேகமாக சொன்னால் ‘பருப்பு’ என திரிகிறது என்று புது இலக்கண விதியை கண்டுபிடிக்க என் பெயர் பயன்பட்டிருக்கிறது. இதற்கு மேலும் அசிங்கமான பெயர்களை நான் இன்னும் யாருடன் பகிர்ந்ததில்லை. போவதில்லை.

பதினோராம் வகுப்பில் புதிதாக சேர்ந்த பள்ளியில் அப்போழுதே பிரசவித்திருந்த எலியைக் காணும் அரிய சந்தர்ப்பம். ரோமம் ஏதும் இன்றி அம்மா தேங்காய் கொழுக்கட்டை செய்யும் போது மீந்து போன மாவை குட்டியாக பிடித்து வைத்து வேக வைக்கும் கொழுக்கட்டையை போன்று இருந்தna மூன்று குட்டிகளும் . சிறிது ரத்தத்துடன் பிறந்து கிடந்த அவற்றில் ஒன்று இறந்தது, எப்படி என இப்பொழுது நினைவில் இல்லை.

பன்னிரண்டாம் வகுப்பில் முடிந்த பொழுது என் வீட்டிலேயே, அப்பொழுதுதான் தயாநிதி மாறன் அறிமுகப் படுத்திய அகலவரிசை(Broadband)யில் பார்த்து, குறைந்த மதிப்பெண்கள் தான்(76% - ரொம்ப மட்டமில்லை) என்று பார்த்ததும் காரணமின்றி எனக்கு சிரிப்பு. தொலைபேசியில் அதை என் அப்பாவிடம் கூற, அவரும் அதே போல சிரிக்க, நானும் சேர்ந்து சிரித்த விந்தையான தருணம் யாருக்கும் அமைந்திராது.

இதன் பிறகு என் வாழ்க்கையில் நான் எடுத்த முக்கிய, நல்ல முடிவு, அமெரிக்கன் கல்லூரியில் சேர்ந்தது. உயிரியலுக்கு விண்ணப்பம் போட்டு கிடைத்த பிறகு இயற்பியலுக்கும் விண்ணப்பம் போட்டு இயற்பியலில் சேர்ந்தேன். பிறகு 10 நாளுக்கு பிறகு உயிர்தொழில்நுட்பவியலின் ஆர்வம் காரணமாக உயிரியலுக்குத் தாவினேன். அது மட்டுமல்ல இயற்பியல் படித்தால் நமக்கு வெவ்வேறு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எம்.பி.ஏ தவிர பிற வாய்ப்புகள் எதுவும் இருந்து திசை மாறவிடக் கூடாது என்றும் உயிரியல் படித்தால் எம்.பி.ஏ படிக்க முடியாதா என்றும் தெனாவட்டுடன் உயிரியல் எடுத்தேன். அதன் பிறகு என்னைப் பார்தது இந்தியாவிற்கு ஒரு ஆறு, ஏழு விஞ்ஞானிகள்(அ) இழப்பாகிவிட்டது.

கல்லூரி வாழ்க்கையில் அனுபவித்தற்கே தனிப் பதிவு போடலாம். ஷான்சி க்ளப்(இப்பொழுது இல்லை), கல் பெஞ்சுகள் [இதற்கும் அதே கதி :( ] , மரத்தடி வட்ட சுவர், காண்டின், டி.பி.எம் நூலகம், நிறைய மரங்கள், மாணவர்-ஆசிரியர் நட்புறவில் ஒரு வித்தியாசமான துறை என அனுபவித்தது ஏராளம், தாராளம். நான் கல்லூரியில் சேர்ந்த பொழுது ஹாரி பாட்டரில் வரும் பள்ளி போல் புரியாத பாதைகளாக காடு போல இருக்கும். இதை சிறிது அழித்த கோபம் இன்னும் எங்களுக்கு அபரிமிதமாக உண்டு. இப்பொழுது இந்தக் கல்லூரியில், என் துறையில் தலைவராக இருந்தவரை இவ்வளவு சாதாரணமாக, பேசி, கிண்டல் செய்து சிரிக்கும் அளவுக்கு ப்ளாக்கர் ஆக்கியிருக்கிறது. அவர் தருமி(link).

அதன் பிறகு கல்லூரியில் ஸ்ட்ரைக் நடந்து அதிலும் நாங்கள் கவலைப் படாமல், கடலையும் கூத்துமாக நன்றாக பொழுது கடத்தினோம். வருடத்திற்கு ஒரு பெண்ணாக கடமையாக சைட் அடித்தோம். நாங்கள் எல்லோரும் ஏக பத்தினி விரதனோட முன்னோடிகள். ஒரு பெண்ணை குறித்துக் கொண்டு அவளை மட்டுமே சைட் அடிப்போம். கடைசி வரைக்கும் அவளிடம் சரியாக பேசவில்லை என்ற வருத்தத்தைத் தவிர ஹார்மோன் விளையாட்டுகள் ஒரு ஓட்ட வித்தியாசத்தில் நகக்கடிப்பு வெற்றியடையும் இந்திய கிரிக்கெட் போல சுவாரஸ்யமாகவே இருந்தது. 

இவ்வளவையும் சொல்லிவிட்டு அஜய்(link) பற்றி சொல்லவில்லை என்றால் சாமி கண்ணைக் குத்தாவிட்டாலும் அவன் குமட்டில் குத்துவான் என்பதால் சொல்லிவிடுகிறேன். மேற்கூறிய அனைத்து சமயங்களிலும் என் உற்ற தோழன். என் குடும்பத்திலொருவன் போல என்றெல்லாம் ஓவராக சொன்னால் அவனுக்கு அரிப்பு ஏற்படுமென்ற காரணத்தால் மேற்கொண்டு விளக்கம் வேண்டியதில்லை.

மூன்றாம் ஆண்டின் இறுதியில் அஜயால் ப்ளாக்கர் எனக்கு அறிமுகமாகிய ஒரே வாரத்தில் எழுத நுழைந்து விட, அந்த ப்ளாக்கை சரியாக எனது பிறந்த நாளுக்கு சில நாட்கள் முன்பு ப்ளாக்கர் பிடுங்கிவிட்டது. எனது டீன் - ஏஜ் முடிந்தது, ப்ளாக்கரின் மூடு விழாவுடன் தான். அது நடந்து இப்பொழுது ஒன்பது மாதமாகி இதை கிஷோரின்(link) அழைப்பிற்கிணங்கி எழுதிக் கொண்டிருக்கிறேன். பொதுவாக எனக்கு தொடர் பதிவுகளில் நம்பிக்கை இல்லை. இதை கிஷோருக்காகவே எழுதுகிறேன். அப்புறம், சூர்யாவுக்கு(link) ஒரு தொடர் பதிவு கடன்பட்டிருப்பதை மறக்கவில்லை என்பதை கூறிக் கொள்கிறேன். யாராவது இதற்கு முன்னர் என்னை தொடர் பதிவிற்கு கூப்பிட்டு நான் எழுதவில்லை என்றால் மன்னிக்கவும், ஒருவேளை அந்த தலைப்பில் நான் வறண்ட கருத்துக்களுடையவனாக இருந்திருக்கலாம்

ஐயா, யாரு இந்த மாதிரி தொடர் பதிவுகளைத் தொவக்குபவர்?நான் யாரையும் அழைக்கவில்லை. ஒரு அளவுக்கு மேல் இதே மாதிரி சரக்கை எல்லாரிடமும் படித்தால் சலிப்பு தட்டிவிடாது?

நாட்குறிப்பில் ஒரு நாள்.......

Filed under , , by Prabhu on 6/23/2009 10:33:00 AM

10


“ச்சே.... வர வர தூக்கம் ரொம்பதான் அழுத்துது. தலவலிடா. அம்மாஆஆ... மணி என்ன?
“ஏழு மணியாச்சுடா.
“என்னம்மா, உன்ன அஞ்சு மணிக்கே எழுப்பிவிடச் சொன்னேன்ல? ஏழு மணி வரைக்கும் தூங்க விட்டிருக்க? (இன்னைக்கு பதிவ வேற பப்ளிஷ் பண்ணனுமே!)
“சனியனே, உன்ன அஞ்சு மணியில இருந்து எத்தன தடவ எழுப்புறது?
“ஓ, எழுப்பினயா? சரி விடும்மா. (ராத்திரி ப்ளாக் பக்கம் போறத நிறுத்தனும்)
பதிவ வெளியிட்டுட்டு, பழைய பதிவுக்கு வந்த கமெண்ட்டுகளுக்கு எதிர் மொக்கைகள போட்டுட்டு, நிமிர்ந்து பாத்தா மணி ஏழு. டிரஸ் எடுக்க ஓடினேன்.
“டேய், குளிடா!
“அம்மா, அதுக்கெல்லாம் நேரமில்லமா. காலேஜ்க்கு லேட் ஆயிடுச்சு.
“சாப்பிடலயா?
“ம்ம்ம்.... மூணு சப்பாத்தி எடுத்து வை.
“அதான பாத்தேன். லேட்டா போனாலும் கொட்டிக்காம போக மாட்டியே!
எடுத்து வச்சிருக்கேன். காலேஜ்க்கு ஆறு எடுத்து வச்சிருக்கேன்.
“ஃபிரண்ட்ஸ்க்கு ஒன்னு ரெண்டு சேத்து வை. நாய்ங்க கேக்காம டப்பாக்குள்ள கை விடுவானுக. “
“போய்டு வரேன்மா!
“நேரம் நல்லாதான் இருக்கு, போய்டுவா!
பைக்க எடுத்துக்கிட்டு விரட்டினா, மனசுக்குள்ள ஏ.ஆர்.ரஹ்மான் வந்து 1,2,3,4...என்றென்றும் புன்னகைனு பாட, பக்கத்தில ஒரு Lady Doak college பொண்ணு ஸ்கூட்டி போனா, ஸ்பீடோமீட்டர் தானாக அவ ஸ்கூட்டி ஸ்பீடுக்கு அட்ஜெஸ்ட் ஆகுது, என்ன செய்ய? இன்னைக்கும் லேட்தான்.

அங்க லேட்டா போய் பைக் ஸ்டாண்டில பைக்க போட்டுட்டு, ஹேர் ஸ்டைல சரி பார்த்துட்டு வேகமா க்ளாஸுக்கு ஓடினா, பாதி வழியில ஒருத்தன் ஆமை வேகத்தில போய்க்கிட்டிருப்பான். என்னடா இன்னைக்கும் லேட்டா, வாடா சீக்கிரம் போயிடுவோம்னு சொன்னா, லேட் ஆகிப் போச்சு இனிமே அவசரமாப் போனா டயத்துக்கு போனதா ஆகிடாது, லேட்டா போனா புதுசாத் தப்பாயிடாதுன்னு விசு மாதிரி குழப்பி மெதுவா கூட்டிட்டு போனா, அங்க சிரிச்சு சிரிச்சே கழுத்தறுக்குற white openஓட க்ளாஸ். யூ ஆஸ்க் மி வாட் இஸ் வொயிட் ஓபன். வொயிட் மீன்ஸ் வெள்ளை, அண்ட் ஓபன் மீன்ஸ் தொர, டோடலி இட்ஸ் வெள்ளைதுரை,எங்க Plant Biotech professor. Why late? குழந்தை எந்த நாடாயிருந்தாலும் முதல்ல ம்மா...ன்னு சொல்லுற மாதிரி ஸ்டூடண்ட்களுக்கான default பதில், “லேட்டாயிருச்சுன்னு சொன்னதும், மூஞ்சில்லாத துப்பாத குறையா, கேவலமாப் பார்த்துட்டு, Come inside”. உள்ள போனதும் (சுண்டு)சுந்தர பாத்து சிரிச்சுக்கிட்டே பக்கத்தில போய் உக்காந்தா, “மச்சான் மொக்க போடுறான் டா என அவன் கம்ப்ளைன் பண்றான். “விடுறா பாத்துக்கலாம்டாஆஆஆஆஆஅஹ்ஹ் என சொல்லி முடிக்கும் முன்னே கொட்டாவி வந்து விடுகிறது. அப்புறம் ஆபத்தில வந்த ஆபத்பாந்தவனாய் வைப்ரேட்டில் போட்ட மொபைலில் மெசேஜ் வந்து என் பேண்ட் பாக்கெட்டில் துடிக்க, திறந்து பாத்தா, ஒரு மொக்க! L? அப்புறம் அவன திட்டினேன். அவன் எதுக்குடா திட்டுனன்னு கேக்க, நான் பதிலுக்கு திட்டன்னு அந்த கேம் ரெண்டு பீரியட் தாங்குச்சு.

லன்ச் சாப்பிடற டயம் வந்த்தும் கேண்டீனுக்கு போய் அவன் கிட்ட சாப்பாடு வாங்காம, அவன் முன்னாடியே டிஃபன் பாக்ஸ திறந்திட்டு உக்கார்றது. அவன் பாத்தா ஒரு சிரிப்ப்ப் போட்டு, “அண்ணே, பிஸினஸ் எப்படி போகுதுன்னு கேட்டு கரெக்ட் பண்ணிக்குவோம். அங்க வேட்டையாடு விளையாடு க்ரூப்ஸ் வர்றதுக்குள்ள சாப்பிடறதுதான் முதல் வேலை. அதென்ன வேட்டையாடு விளையாடு க்ரூப்ஸ் எனக் கேட்டீங்கன்னா, as the name indicates, டிபன் பாக்ஸ் திறந்தா மானக் கண்ட சிங்கம் மாதிரி பாயுவானுங்க, அவனுங்க சாப்பிட்டுட்டு போனபின் அந்த டேபிள் சிங்கம் குதறின மான் மாதிரி இருக்கும், அன்னைக்கு அந்த மேஜையில எவனும் சாப்பிட முடியாது. அப்படி நாறடிப்பானுங்க.

உண்ட களைப்பு தீர ரெண்டு மணி நேரம் க்ளாஸில தூங்கினப் பிறகு, வெளிய டாப்பு. ஆனா, எங்க கேங்குக்கு ஒரு வித்தியாசமான ஒரு பழக்கம் உண்டு. க்ளாஸ் முடிந்தாலும், கட் அடிச்சாலும் வீட்டுக்கு போகிற வரை kaaleeகாலேஜ் விட்டு வெளியே போக மாட்டோம். அப்புறம் வழக்கம் போல ராஜாபார்லி பேக்கரி போய்டு உள்ள வரும் போது, “ஒரு ஊரில் அழகே உருவாய் ஒருத்தி இருந்தாளே....... எனப் பாடிட்டே வந்தா, பக்கத்திலிருந்த சுண்டு என்னப் பார்த்து சிரித்தான்., எதற்கு என நிமிர்ந்து பார்த்தா..........எதிரில அனு. குட்டியா, க்யூட்டா.......அழகான அனு.... ம்ம்ம்ம்.... அவளப் பாத்தா மூச்ச இழுத்து விடும் போது பல தடுப்புகளை சந்திக்குது. அந்த மூச்சுத் திணறல் அவஸ்தை இல்ல, இன்பம் தான் என நானும் சொன்னா அது monotonica இருக்காது? ரோலர் கோஸ்டர்ல விர்ர்ர்ர்னு போகும் போது ஒரு திகில் இருக்கும், அதே நேரத்தில் ஒரு போதையும், its intoxicating. இது கொஞ்சம் பின்நவீனத்துவ பாணியில இருக்குல்ல? வெரி குட்.(பதிவரானதோட சைட் எஃபெக்ட்!). அப்போதான் அவகிட்ட ஒரு வித்தியாசம் இருக்குறத கவனிச்சேன். அட, அவ முடி..... அதுக்குள்ள சுண்டு- “டேய், அவ ஹேர் ஸ்டைல் மாத்திட்டாடா. நல்லாதான் இருக்குஇதேதான் நானும் சொல்ல வந்தேன். அவ ஹேர் கொஞ்சம் கட் பண்ணி pony tail போட்டிருந்தா, சான்ஸே இல்ல... ஹைய்ய்ய்ய்யோ, தேவதையேதான்! “இப்படி சைட் அடிச்சே பொழப்பு ஓடுதே, என்னக்கிடா பேசப் போற?. “பேசுவோம் டா. “என்னக்கி........

வீட்டிலிருந்து “என்னடா காலேஜ் முடிஞ்சு இவ்ளோ நேரம் ஆச்சு, என ஃபோன் வர, வீட்டுக்கு கிளம்ப வேண்டியதாப் போச்சு. வந்த பிறகு கொஞ்ச நேரம் பதிவுலகத்த மேய்ஞ்சுகிட்டு இருந்தப்போ, ஜிங்குன்னு சவுண்டு கொடுத்திட்டு ஜிமெயிலில் எட்டிப் பார்த்தார், நம்ம கிஷோர்.
hi
hi
அப்புறம் ஆறாவது தடவையா நீங்க என்ன பண்றீங்கன்னு கேட்டு அவர காண்டாக்கினேன். இது பரவாயில்ல, ஒரே நாளில் ஒருத்தன பஸ்ல, க்ளாஸ்ரூம்ல, காரிடார்ல, டாய்லெட்லனு எல்லா இட்த்திலயும் பேரக் கேட்டு அவன் கடிக்க வந்த கதை அவருக்கு தெரியாது.

அப்புறம் அஜய் சிக்கினான், அவன்ட்ட mental masturbationஓட(ச்சீன்னு சொல்லாதீங்க......... அதப் பத்தி வேற ஒரு பதிவுல!) சைக்காலஜி பத்தி பேசும்போது, சரண்யா smsல வசமா மாட்டினா.
“சரண்யா, wat doing?
summa iruken.
i lov you, kuty
“டேய், ஆரம்பிச்சுட்டயா?
“நான் உன்ன காதலிக்க ஆரம்பிச்சு ஆறு மாசம் ஆச்சு.
“பப்பு, உனக்கு வேற யாரும் சிக்கலயா, என்கிட்ட ஆரம்பிசுட்ட.
“உன் ஒருத்திய பாத்தாதான் லவ்வெல்லாம் வருது
“டேய், உன் மொக்கய நிறுத்துடா
“அவன நிறுத்த சொல்லு நான் நிறுத்துறேன்.
“அய்யோ, நீ ஸ்டார்ட் பண்ணா நிறுத்த மாட்டியே
“நீ என்னய லவ் பண்றதா சொன்னா விட்டுடறேன்.
“டேய், போய் அனுகிட்ட மொக்க போடுடா, என்னய விடுடா!
“உன்னய அவ்ளோ ஈசியா விட முடியாதே
“திடீரென எதுக்குடா என்னய ஓட்ட ஆரம்பிச்சிட்ட? எப்ப இருந்து இப்படி?
“உன்ன பாத்திலிருந்தே இப்படிதான்.
“......
“ஹலோ
“....
ம்ஹூம்.... இன்னும் ரெண்டு நாளைக்கு மெசேஜ் ஓபென் பண்ணவே பயப்படுவா. சரி, அடுத்து யாரு? சுண்டு!
“டேய் சுண்டு, wat doing.....”
அப்படியே சாப்பிடுற நேரம் ஆயிட்டதால சூப்பர் சிங்கர்ல வர்ற ரேணுவ சைட் அடிச்சுக்கிட்டே சாப்பிட்டு முடிச்சா, நாளைக்கு இண்டர்னல்ஸ்னு மெசேஜ் வந்தது. நாளை என்பது கடவுளுக்கு, இன்று என்பது மனிதருக்குன்னு மொக்கத்துவம் சொல்லி அவன துரத்திவிட்டுட்டு, லேட்டாயிடுச்சு தூங்கடான்னு சொன்ன அம்மாவ சமாளிச்சிட்டு, கம்ப்யூட்டரில வந்து உக்காந்து வேர்ட் ப்ராச்சர திறந்து அடிக்க ஆரம்பிச்சேன், “நாட்குறிப்பில் ஒரு நாள்.......

எதுக்குடா இந்த மானங்கெட்ட பொழப்பு!

Filed under , , by Prabhu on 6/16/2009 09:02:00 AM

3

காதல்......ம்ம்ம்ம்....அது ஒரு தனி ஃபீல் தான் (இவனும் ஆரம்பிச்சுட்டானா, டேய் நல்லாதானடா இருந்தீங்க?). ஆனா அது என்னன்னு தான் புரியல.(டேய், ஏற்கனவே மண்ட காஞ்சு போய்தான் இங்க வர்றோம். இங்க நீயுமா?). சரி இப்படி சொல்லலாம், காதல்னா ஒரு அரை நிமிஷம் என்னன்னு யோசிங்க? இப்போ சொல்லுங்க, அப்படின்னா என்ன? ஒண்ணும் தோணலயா? இததாங்க சொன்னேன். இதுக்கு விளக்கம் கொடுக்க முடியாது.(முடியல....)


நானும் பல பெண்களை லவ் பண்ணி பாத்துட்டேன். என்ன ஆச்சுன்னு கேக்குறீங்களா? லவ் பண்ணவள பாத்துக்கிடே இருந்தா நம்ம கண்ணு முன்னாடியே இன்னொருத்தன் அவள லவ் பண்ண ஆரம்பிச்சதுதான் நடந்தது. ஆனா நம்ம லவ் பண்றத விட அவனவன் லவ் பண்ற கதைய கேட்டுப் பாருங்க, ரொம்ப சுவாரசியமா இருக்கும். அவனவன் படுற கஷ்டத்தைக் கேட்டா காமெடியா இருக்கும்.(இந்த ரணகளத்திலயும் உனக்கு கிளுகிளுப்பு கேக்குது?)


சில பேரு பிறக்கும் போது கடவுள் அரைக் கிலோ மச்சத்த பார்சல் பண்ணி கூடவே வச்சு அனுப்புவாரு போல!(கிலோக் கணக்கில இருந்தா அது கேன்சர்டா!). எங்க போனாலும் அவனுங்கள பொண்ணுங்க துரத்துறாங்க. நம்ம ஒரு பொண்ண சைட்டே அடிச்சாலும் திரும்ப ஒரு லுக்க கூட விட மாட்டேங்றாங்க. மேலூர்ல இருந்து எங்க காலேஜ் வந்து படிக்கிற ஒருத்தன் முதல் வருஷமே எங்க மதுரை சிட்டில(நாங்களும் சிட்டிதான்பா! படத்துலதான் ஏதோ கிராம்ம் மாதிரி காட்டி கிண்டல் பண்றாய்ங்க!). ஒரு ஸ்கூல் பொண்ண காலையும் மாலையும் பின்தொடருவத ஒரு வேண்டுதலாவே பண்ணிக்கிடிருந்தான், அவ மதிக்கல. அவன் படிக்காம நாசமாப் போறத பாத்து ஒருத்தன்ஏண்டா இப்படின்னு மொக்கய போட்டு அவன திருத்தி வழிக்கு கொண்டுவந்தா, இப்போ அவ வந்து இவன லவ் பண்றேங்கறா!(இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான் பாஸ்!). இப்போ அவன் அவள ஏத்துக்கல; நான் படிக்கனும்னு சொல்லிட்டான்(டேய், நான் உன்ன காலேஜ்லயே பாத்த்தில்லயே!)


இதுக்கு அடுத்த வருஷம் கடைசியில இவன் ஒருத்தியப் பத்தி பேசிட்டிருக்கறதப் பார்த்து, “ரமணி, நீ இன்னும் அவள விடலயா?” எனக் கேட்ட்துக்கு, பக்கத்திலிருந்தவன்இது வேற ஒருத்திடா. அவங்க ஊர்க்காரி.” எனக் கூறிவிட்டு, “அவன் கிடக்குறான், நீ சொல்லுடா மாப்ளஎனக் கதையில் மூழ்கினான். என்ன்ன்னு கேட்டா அது எசகுபிசகான அவன் காதல் லீலைகள். ஏண்டா இப்படி அலையுறீங்கன்னு கேட்டுக்கிட்டே நானும் அவன் பக்கத்துல உக்காந்தேன் (ஹி.. ஹிக்க்ர்ர்ர்ர்த்தூஅப்படி துப்பிட்டு மேல படிங்க).


மூணாவது வருஷம் திரும்ப லேட்டா வர ஆரம்பிச்சான். ஏண்டானு கேட்டப்போ மொத்தக் கதையையும் சொன்னான். அந்த பொண்ணு இன்னொருத்தன் பொண்டாட்டியாம்(க்க்ர்ர்ர்ர்….). 18 வயசுலயே அவள கட்டிக்கிட்டு துபாய்க்கு போய்ட்டான் புருஷன்காரன். அந்த கேப்பில தான் இவனோட லவ்வு! ஒருநாள் அவளுக்கு ஃபோன் போட, அவ மாமனார் அத எடுக்க, இவன் ஜலதோஷமா, இப்படி இருக்கு குரலுண்டிருக்கான். அப்புறம் எல்லாத்துக்கும் தெரிஞ்சு போய் அவன அவங்கப்பா கொஞ்ச நாள் மாமா வீட்டில இருடான்னு அனுப்பி வைச்சுட்டார்..

, அதான் லேட்டா?”

அதனால இல்லடா

பின்ன?”

இல்ல, இப்ப நான் நத்தத்திலிருந்து பஸ்ல வரேன்….”, இழுக்கிறான், இது சரியில்லயே?

அதத்தான் சொன்னியே

அதுல வரும்போது தினமும் அர்ச்சனான்னு ஒரு பொண்ணும் வருது

நான் ஒருமாதிரி பாக்குறதப் பார்த்த அவன், “ சும்மா பேசிட்டிருப்போம்டா. பஸ்ல போர் அடிக்கும்ல

சரிஎன நான் அவன் பேச வாய்ப்பு கொடுத்தேன்.

அவ இத எழுதிக்குடுத்தாடா. இத என்ன்ன்னு படிச்சு சொல்லுடா?”

அது ஹிந்தியில் எழுதிருந்துச்சு, அதான் என்கிட்ட வந்திருக்கு. அதப் பாத்துட்டு நான் அவன கேவலமா பாத்ததும் அவனுக்கு புரிஞ்சிருச்சு. ஆர்வமாக் கேட்டான், “என்னடா போட்டிருக்கு?”

ஆங்…. அவளுக்கு எய்ட்ஸாம், மறுவாழ்வு குடுக்குறியான்னு கேட்டிருக்கா

டேய், விளையாடாதடா. என்ன போட்டிருக்கு

ஆமா, நீ சானியா மிர்சா, உன்னோட டென்னிஸ் விளையாடுறோம். போடாஆஅ…… வேற என்ன இழவ எழுதி இருக்கப் போறா? உன்னை காதல் செய்கிறேன்றத எழுதி காதலுக்கு பதிலா மட்டும் டாஷ் போட்டிருக்கா, ஃபில் பண்ணி அனுப்புங்க, அக்கா இதயத்த பொட்டலத்துல தந்தாலும் தந்திருவாங்க”(வயித்தெரிச்சல கிளப்புறானுங்க, சார்)

மாப்ள், நீயே பதில் எழுதிருடா

இந்த பொழப்புக்கு….”

கோவிச்சுக்காதடா!”

சரி, பழகின பாவத்துக்கு!”

தாங்கஸ்டா! இதோட அவள பத்தி முழுசா எழுதிக் கொடுத்திருக்காடாஅது பார்க்க அந்நியன்ல அம்பி எழுதுன மாதிரியே இருந்துச்சு.

டேய், இவ உன்ன லவ் பண்றாளா? , இல்ல உன்கிட்ட வேலை கேக்குறாளா? அவ ஸ்கூல் பொண்ணுதானான்னு பாத்துக்கோடா. ஜெராக்ஸ் கடையில வேலை பாக்குறவளா இருக்கப் போகுது!”

மச்சான், தங்கச்சியப் பத்தி தப்பா பேசாத

இப்போதான் லவ் லெட்டர் எழுதுன. தங்கச்சின்ற?”

உனக்கு சொன்னேன் டா

அடி செருப்பால! ஏண்டா மொன்ன நாயே, உன் சவுரியத்துக்கு என்னய உருட்டுறியா? ஓடி போயிரு

கோவிச்சுக்காத மாப்ள”, எனக் கட்டிப் பிடித்து கூல் டிரிங்க் வாங்கிக் குடுத்து கூலாக்கிவிட்டு போனான்.


கொஞ்ச நாள் கழித்து வேலண்டைனுக்கு சிறிது நாட்கள் முன்பு,

மச்சான், வேலண்டைன் டே வருதுடா

அதுக்கு நான் என்ன பண்றது. நான் என்ன லவ்வா பண்ணுறேன்”(அத வேற ஞாபகப் படுத்தி கடுப்பேத்துறானுங்க சார்)

அதுக்கு இல்லடா

வேற் என்ன ம்#%$&%#”

வேலண்டைன் வருதுல. உன் தங்கச்சிக்கு என்ன வாங்கிக் கொடுக்ற

டேய், தங்கச்சிக்கு வேலண்டைன்ல எதுவும் வாங்கிக் கொடுக்க்க் கூடாது. வாங்கிக் கொடுத்தா அது தங்கச்சியா இருக்காது. என்ன சொல்ற, வாங்கிக் கொடுக்கவா?”

உன்கிட்ட கேக்குறதுக்கு நான் கந்து வட்டிக்கு கடன் வாங்கி செலவு பண்ணிறலாம்”.

அதுக்கப்புறம் ஒரு நாள் அவனுக்கும் அவளுக்கும் சண்டைனு வந்தான்.

என்னடா ஆச்சுஎனக் கேட்டேன்.

அவ பண்ணுனது பிடிக்கலடா

என்ன பண்ணுனா

அவ தங்கச்சிக்கு பிறந்தநாள்னு சொல்லவே இல்ல

தங்கச்சிக்குதான, அதனால என்ன? அதுக்கு என்ன சொல்லு

எனக்கு கோவம் வந்திருச்சு. அவளப் பார்த்துஎனக்கு உன்ன பாத்த்தும் புடிச்சிருச்சு, உன் தங்கச்சிய ரொம்பப் பிடிச்சு போச்சு. அவ பிறந்த நாளை எப்படி சொல்லாம விட்டன்னு சொல்லிட்டு சண்டைய போட்டுட்டு வந்திட்டேண்டா. திரும்ப எப்படி பேசுறதுன்னு தெரியலன்னு சொன்னான்.


நான்மௌனம் பேசியதேசூர்யாவ மனசில வச்சுக்கிட்டு,”நிறுத்துடா விளக்கெண்ணெய். நல்லாத் தானடா இருந்தீங்க. அப்புறம் எங்கிருந்துடா வந்துச்சு இந்த கரும்ம். காலைல கொண்டுபோய் விடுறதும், சாயந்திரம் கூப்பிட போறதும், சண்டை போடுறதும், அதுக்காக நீங்க சேருற வரைக்கும் பக்கத்தில இருக்கறவன பிடிச்சு மொக்க போடுறதும், எதுக்குடா இந்த மானங்கெட்ட பொழப்பு”, என கிழிச்சுட்டேன்.


பின்ன, என்ன பாத்தா மைக் மாதிரியா இருக்கு? போறவன் வர்றவன் எல்லாம் மொக்க போடுறான். ஆனா ஒண்ணு (ஆனா ஒண்ணுதான், ஆவன்னாதான் ரெண்டுன்னு சொல்றவங்களுக்கு கேர்ள் பிரண்டே கிடைக்காமல் போக! கல்யாணமாயிடுச்சேன்னு கொக்கரிக்கரவங்களுக்கு புதுசா கிடைச்சு அது பொண்டாட்டிக்கும் தெரிஞ்சிரும்). கைகால் உடைஞ்சவன்டயும் காதல் பண்றவன்டயும் சிக்கவே கூடாது. சிக்கினா சவ சவன்னு அதப் பத்தியே பேசி சாவடிச்சுருவானுங்க.