Filed under , by Prabhu on 8/23/2012 12:54:00 AM

0


Filed under , by Prabhu on 8/18/2012 06:34:00 PM

0

Thor (2011) - No Spoilers

Filed under , by Prabhu on 5/03/2011 02:56:00 PM

4

So, I am Back with Bang. No, Not just a bang, But a BIG BANG.

தோர் - மார்வெல் காமிக் கதையிலிருந்து மார்வெல் ஸ்டூடியோஸ் எடுத்த இன்னுமொரு சூப்பர் ஹீரோ அவதாரம். அவதாரம்னா நிஜமாலுமே அவதாரம் போலே. கடவுள் பூமிக்கு வந்து இறங்குறத அவதாரம்னு கம்பர் சொல்றது உண்மைன்னா Thor : The God of Thunder அவதாரம் தான்.




வைக்கிங் புராணத்தில காணப்படுகிற அஸ்கார்டியாவில் வாழும் கடவுள்களாக சொல்லப்படுபவர்கள் இன்னொரு realmல் இருக்கும் ஒரு முன்னேறிய நாகரிகம். அதில் ராஜா/கடவுள் Odinக்கு ரெண்டு பசங்க, Thor, loki. தோர் பட்டாபிஷேகத்தின் போது சரியாக பரம்பரை எதிரிகள் Frost Giants உள்ளே புகுந்து குட்டையை குழப்பிவிட, நிகழ்ச்சி நின்றுவிடுகிறது. அதன் பின் நடக்கும் பிரச்சனைகளில் கோபமாகி நீ என் புள்ளயும் இல்ல இந்த வீட்டில உனக்கு இடமும் இல்ல உன் சக்தியான சுத்தி(Mjolhnir)யும் உனக்கு இல்லை. பிடி சாபம், பூமிக்கு போ’ என அனுப்பிடுறார். ஆனாலும் பையன் திரிசங்கு போல அங்க இங்க நிக்காம நல்ல பையனா உஸ்ஸ்ஸ்னு வந்து பாம்னு விழுகிறான் பூமில இல்ல, கதாநாயகி கார்ல. ஊட்ல சொல்லிட்டு வந்திட்டயான்னு கதாநாயகி கேட்காவிட்டாலும் வூட்ல சொன்னதால தான் அவர் வந்திருக்கார்னு நமக்கு தெரிகிறது.

இதுக்கு பின்ன தோர் தன் தவறை உணர்ந்தா’ரா’(கடவுள் பாஸ்!),அவருக்கு சுத்தியல் கிடைத்ததா? அந்தப் பொண்ணுக்கு எல்லா கதாநாயகி போலயும் அவர் மேல காதல் வந்ததா? கரெக்டா கடைசி சண்டைக் காட்சியின் முந்தைய காட்சியில் அழுந்த முத்தம் கொடுக்கிறாரா? உனக்காக மீண்டும் வருவேன்னு சொல்லிட்டு கிளம்பிப் போகும் கதாநாயகன் முதுகை நாயகி வாயைப் பிளந்து பார்ப்பாளா என்ற கேள்விகளுக்கு விடைத் தெரிந்தாலும் போய் தியேட்டரில் காசு கொடுத்து பார்க்கலாம்.

ராஜாவின் இரண்டு பையன்கள், அரசுரிமைத் தகராறை, ஷேக்ஸ்பியர் காலக் கதையை அகண்ட பிரபஞ்சத்தில் வைத்து எடுத்திருக்கிறார் Kenneth Branagh.

Chris Hemsworth - He is the Man! உருவம். அட்டகாசமான உடல். ஆண்மையான தோற்றம். லேடீஸ், செக் அவுட்!

Natalie Portman - பசங்களுக்காக!


என்னதான் சொன்னலும் என் தமிழ் மசாலா ரத்தம் சும்மா இருப்பதில்லை. சுத்தியல் கையில் வந்து டுமீல் இடி இடிக்கும் போது I'm Thor. The God of Thunder என பல்லைக் கடித்துக் கூவுவார்னு புத்தி நகத்தைக் கடித்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருந்தது. நடக்கவில்லை!


தோர் பூமிக்கு வந்த பிறகு நடக்கும் காட்சிகள் லேசாக நகைக்க வைக்கிற காட்சிகளை தெளித்திருக்கிறார்கள். கிராபிக்ஸ் - எப்பா! அட்டகாசம். எப்படி இவ்வளவு அருமையான கிராபிக்ஸ் செய்ய முடிகிறது? இப்படியெல்லாம் கிராபிக்ஸ் எடுக்கத்தான் எவ்வளவு செலவாகிருக்கும் டாலரில்!


பிரமாதமான படமல்ல. ஆனால் பிரம்மாண்டமான படம். Enjoyable movie.

இந்த படம், அடுத்து வருகிற Green Lantern, Captain America, எல்லாம் பார்த்து வைத்துக்கொள்ளுங்க. அடுத்த வருஷம் Avengers என்ற எல்லாரும் ஒண்ணு கூடுற படம் பார்க்க வசதியாய் இருக்கும்.

அஷ்டே!

பெங்களூரூ வாழ்வின் கொலாஜ்

Filed under , by Prabhu on 3/10/2011 11:29:00 PM

2




இந்த சமயத்தில் நான் பெங்களூர் வீட்டில் ஐந்து பரீட்சைகளுக்கும் இரண்டு பரீட்சைகளுக்கும் நடுவிலான் இடைப்பட்ட திரிசங்கில் இருக்கிறேன். இந்த திரிசங்கு தெரியுமா? சொர்கமும் இல்லாமல் பூமியுமில்லாமல் நடுவில் தொங்கி கொண்டிருக்கிறானாம். நான் லீவு என்ற சொர்கத்துக்கும் ப்ரீட்சை என்ற ரியாலிட்டிக்கும் நடுவில்  MI Tom Cruise போல தலைகீழாக தொங்கி டைப்பிக் கொண்டிருக்கிறேன். (டைப்பி பல காலமாகிவிட்டது)

பெங்களூர் வாழ்க்கை ஒரு வகையா செட்டில் ஆச்சு. பெங்களூரென சொல்வதே ஒரு மாதிரியா இருக்கு. ஒரு மாதிரி கடை கோடியில இருக்கேன். சிட்டிக்கு வாரத்துக்கு ஒரு தடவை போகும் வகையில் இருக்கேன். என்ன செய்ய? கைப்பிடி மணல எண்ணுற அளவு வேலை இருக்கு. கேட்டா காலேஜில் மனோ பாலா மாதிரி ‘MBA MBA’ ங்கிறாங்க. ட்ரைமஸ்டர் சிஸ்டம் வேணாமென சொன்னா கேட்டாதான? இதோ ஒரு ட்ரைமஸ்டர் முடிந்தது.(இப்ப 2ம் ஆச்சு. 3வது ரன்னிங்) அதனால் பெங்களூர் லைஃப் என சொல்றத விட காலேஜ் லைஃப் என சொல்வதே பொருத்தமாக இருக்கும். இருந்தாலும் முதல் ஒரு மாசம்கோரமங்களா’……… இருந்த்தால பேசவே நிறையா இருக்கு. இல்லைன்னாலுமே நான் நிறையவே பேசுவேன்னு மதுரைக்கே தெரியும்.

கோரமங்களா கிட்ட ஒரு கேப் விட்டிருக்கேன் பாத்தீங்களா? அந்த பேரு சிங்க் இன் ஆகத்தான். நல்ல ஏரியா. என்ன குட்டியூண்டு வீட்டுக்கு 6000 ரூபாய் கேட்கிறார்கள். 20 வருஷம் முன் கிராமம். பூனைக்கும் காலம் வருது. இப்ப Forum, PVR எல்லாம் இங்கேதான். Hot and Happening. என் அண்ணன் வீட்டு பக்கம் எல்லோருக்கும் தமிழ் தெரியுது. ‘பேண்ட்’ , ‘alter’ , ’எஷ்டு’?’ என பிளறி.. சாரி.. உளறிக் கொண்டிருக்கும் போது, ‘பேண்ட் alter பண்ண 40 ரூபா ஆகும் சார்என பல்பு கொடுத்து விட்டார் டெய்லர்.

ஓவ், இப்படி ஒரு ப்ளாக் எழுத ஆரம்பித்த்து எனக்கே நினைவில்லை. மடிக்கண்ணியை நோண்டும் போது கிடைத்த்து. அப்பொழுது என்ன மாதிரியான எண்ண அலைகள் ஓடிக் கொண்டிருந்த்து என நினைவில்லை. இப்பவும் கூட விட்ட இட்த்தில் இருந்து பெங்களூரைப் பற்றிப் பேச நிறைய சரக்கு இருக்கிறது. ரெண்டு நாள் முன் தான் ஊரிலிருந்து வந்த நண்பர்களுடன் ஊர் சுற்றினேன். ஆனால் நான் சுற்றிய இடங்களைப் பற்றி பேச மூட் இல்லை. போரடிக்கிறது. வேறு ஏதாவது பேசலாம். ஏன் முதல் பத்தியில் பேச ஆரம்பித்தகுவாட்டர் கட்டிங்கிலேயே தொடரலாம்.

பாட்டு ரிலீசின் பொழுது எழுத ஆரம்பித்த பதிவு படம் வெளியாகி ஒரு மாதம் ஆன பின்னும் முடியவில்லை. எங்கயோ தப்பு நடக்குதுங்க! சிவா கோவை பாஷையில் பேசியது அவ்வளவா சுவாரசியமா இல்லைன்னாலும், படத்தோட கன்செப்சுவலைசேஷன் பிடித்திருந்தது. நல்ல ப்ளாட் தான் என்றாலும் டைமிங் காமெடி இல்லாமல் தடுமாறியது. படம் முழுக்க அங்கங்கே ஆணியில் கட்டிய வெடித்த பலூன் போல தொய்ந்து தொங்கினாலும், மொத்த்தில் சுவாரசியமான படமாகத் தான் பட்ட்து. முழுவதும் த்ராபையென ஒதுக்க இயலாது. ஒவ்வொருவரும் வைத்திருக்கும் குட்டி கதைகள் தான் படத்தில் நன்றாக இருந்தது. அதுவும் அந்த தீக்குச்சியின் கதை அந்நியன் போன்ற படங்களைன் சரியான வாரல். ஒவ்வொருத்தனுக்கும் ஒவ்வொரு ஃபீலிங்.

அதில் பாஸ்போர்ட் ஏற்பாடு செய்து தரும் நாயரைப் பார்த்ததும் பல மல்லு ஜோக்குகள் தான் நினைவுக்கு வருகிறது. இங்கு என்னைச் சுற்றி பல மலையாளிகள். இந்த ஊரில் பேக்கரி என்றாலே மலையாளிகள் தான். எந்த ஏரியா பேக்கரி என்றாலும் பழைய பெங்களூரில் முன்னிருந்தே அய்யங்கார் பேக்கரிகள் தான். இப்பொழுது எங்கு புது பேக்கரி திறந்தாலும் உள்ள போய், ‘யாவு பேக்கு?’ என்ற கேள்விக்கு, ‘ஒரு பிரட் பேக்கெட் மதிஎன்லாம். என்னைப் போல் மீசையை மழிக்கும் மாநிற தமிழர்கள், ‘மலையாளியானோ?’, ‘Are you malayali?’, ’மல்லு ஹை க்யா?’ போன்ற விஷமப் பேச்சுகளுக்கு ஆளாகலாம். மீசை வைத்தாலும் என்னை பார்த்துதெலுகு?’ என்கிறார்கள். அவர்களுக்கு தம் ஆட்களுடன் யாரைப் பார்த்தாலும், ‘மணவாடா?’ என்பதில் சம்பாஷணை தொடங்குகிறது. அருமையான மனிதர்கள்.

இதற்கு நடுவில் வடக்கர்கள். அவர்கள் எல்லாவற்றையும் ‘basically’ என தொடங்குகிறார்கள். ‘மகாபிரபு’ படத்தில் வெள்ளை குர்தா ஓட்டுகிட்டு வந்து பேட்டி கொடுப்பார், ‘basicalla நான் ஒரு naarth Indian’ என சொல்வார். அதுமாதிரி தான் இருக்கு. அந்த காமெடியே வேணுமென்றே ஒருவாக்குனாப்புல இருக்கு சரியான stereotyping.

ஒரு பேச்சுக்கு ஒரு புள்ளி விவரத்தை உருவுவோம். பெங்களூரில் 47% கன்னடர்கள், அதன் பின் மெஜாரிட்டி தமிழர்கள் 25%, ஆமா, இந்த ஒரு ஊரில ஒரு விதிவிலக்கு. தரவாதா மணவாடு 14%, பின்னேமல்லுக்கள்(இப்படி அவர்களே சொல்லிக் கொள்கிறார்கள். முன்னேஅந்தப் படங்களுக்கு தானே இந்தப் பெயர்?) – 10%. ஆச்சரியமா இங்கே மற்றவர்களைவிட அவர்கள் கம்மி. ஒரு தத்துவ கதையில் சொல்வது போல இந்த நிலையும் ஒரு நாள் மாறும். Beyond this, Foreigners – 8%. பக்காவான காஸ்மோபாலிடன். வெளியே வந்தால் அம்மா திருவாதிரைக்கு செய்யும் பொறியலில் எல்லா காய்களும் இருப்பது போல எல்லாவகையான ஆசாமிகளும் சகட்டு மேனிக்கு கண்ணில் படுகிறார்கள். கலர் கலராக இருக்கிறார்கள், மெய்யாகவே. சில சமயங்களில் நன்றாக இருக்கிறது.

இது எழுதியும் 3 மாசம் ஆச்சு. ஒண்ணுமில்லாத பதிவை வருசமாக எழுதுகிறேன். இதெல்லாம் பின்னவீனத்திற்கே அடுக்காது. மூணு மாதத்திற்கு ஒரு முறை  இந்தப் பதிவை எழுதுகிறேன். கஷ்டம். அரை வேக்காடா இதை பப்ளிஷ் பண்ணிரலாமான்னு யோசிக்க்க்க்…

ஹூம்.... புது வருடம்

Filed under , by Prabhu on 1/05/2011 06:15:00 PM

3

புது வருஷக் கொண்டாட்டம்ங்கிறதே ஒரு மொக்கையான விஷயமா படுது. ஆங், நான் RSSதனமா எதுவும் சொல்லல.புது வருடம்னா என்ன பெருசா நடந்திடப் போகுது. என்ன 2010ல் கடைசியில் இருக்கும் முட்டைக்கு பதிலா 1. இதுல போதாக்குறைக்கு வயசு வேறக் கூடித் தொலைஞ்சிரும். புது வருஷத்தை பொறுத்த வரை கிக்கான விஷயமே பல நாள் கழித்து நினைவிற்கு வரும், அந்த ‘சகலகலாவல்லவன்’ படப் பாடல் தான். இன்னும் அதற்கு ஒரு ரீப்ளேஸ்மெண்ட் இல்லை, பார்த்தீங்களா?

அடுத்த மொக்கை இடத்தில் இருப்பது, புது வருட பிரமாணங்கள். அது என்ன இன்னைக்கு மட்டும் புது முடிவுகள், மாற்றாங்கள். மாறணும் என முடிவு பண்ணிட்டா ஒண்ணாந் தேதி வரையுமா காத்திருக்கிறது. இது சுத்த பேத்தலா இருக்கே! ஒண்ணாந் தேதி வரை வெயிட் பண்ணி தொடங்கற ஆசாமிகள் தொடருவதாய் தெரியவில்லை.

இப்படி ஒரு நெகடிவ் நோட்டிலா நான் இந்த வருடத்தை ஸ்டார்ட் செய்ய வேண்டும்? எனக்கு செண்டிமெண்டுகள் அற்றுப் போய்கொண்டிருகின்றன. இதோ இந்த வருடத்தில் பார்த்த முதல் படம் 'Paranormal Activity'. பின் ‘விருத்தகிரி’ பார்க்கவிருக்கிறேன். வருட ஆரம்பத்திலேயே இரண்டு horror படத்தோட ஆரம்பிச்சிருக்கிறேன்.

ம்ஹூம்... சரியில்லை. இப்படியெல்லாம் வருடத்தின் முதல் பதிவுலேயே உருப்படாத விஷயமா எழுத நான் ஒன்றும் ராகு காலம் பார்த்து தொடங்குவதில்லை. வருட ஆரம்பம் ஒண்ணும்  எல்லாம் ஒரு தினசரி வாழ்க்கைதான். இப்படியே மெல்ல பின்னால் திரும்பி பார்த்தால் தெருக் கோடியில் தெரியும் நாய் போல சிறிதாக நினைவிலிருக்கிறது போன வருட தொடக்கம்.

போன இந்த சமயத்தை ஒட்டியே ட்விட்டர், ஃபேஸ் புக்கை கட்டி அழ ஆரம்பித்தேன். பின் ஆறு மாதம் போனதே தெரியவில்லை. அந்த சமயம் போன வருடத்தின் உருப்படியான விஷயம்  Christ Universityல் எம்பிஏ சேர்ந்தது தான். அதன் பின்? அவ்வளவுதான்!

ஒரு மாதிரியாக போகுதில்ல? MBA MBA. After two months MBA stops being fun.  இன்னும் சில மாதங்களில் முகத்தில் சுருக்கங்கள் விழுந்துவிடும் போல. இப்படியெல்லாம் சொல்வதால் ரொம்ப கஷ்டப் படுவதாக் நினைக்க வேண்டாம். கொஞ்சம் வேலை ஜாஸ்தி. லூஸ்ல விடலாம்.  இதற்கு மேல் எழுதினால் சொந்த கதை சோக கதை எல்லாம் கொட்டிவிட நேரிடும் அபாயம் இருப்பதால் இப்படியே முடித்து விடுகிறேன். இந்தப் பதிவும் ஏன் எழுதின எனக் கேட்டால், இனிமேல் தொடர்ந்து எழுதவும், இன்னும் கொஞ்சம் எழுத்தை  சுவாரஸ்யமானதாக்கவும் முயற்சிக்க இருப்பதை நமக்காகவவாவது நம்பிக்கை ஏற்பட Tangibleஆன ஒரு செயல் வேண்டாமா, மலை உச்சியில் இருந்து விழும் நாயகனுக்கு கையில் ஏதோ வேர் சிக்குவதைப் போலான ஒரு சடங்குதான். Symbolic.

Vigilante Movies

Filed under , , by Prabhu on 12/02/2010 07:48:00 AM

5

கொஞ்ச காலம் கழிச்சு வந்து எழுதும் போது, ஏதோ புதுசா யாரு வீட்டுக்குள்ளயோ போய் சீட்டு நுனியில் உட்காருவது போலான ஃபீலாக இருக்கிறது. பதிவு ஏத்திட்டு செக் செய்கிறப்போ முன்ன அளவு மக்கள் வந்து பாக்குறதுமில்லங்கிறப்போ, ‘சரி, நியாயம் தான்’ எனத் தோன்றுகிறது. திரும்பவும் இங்க வந்து நிலைநிறுத்திக்க கொஞ்ச நாளாகும். நமக்கே இப்படி இருக்கே, குப்ரிக் மாதிரி ஆசாமிகள் எப்படி 50 வருஷத்துக்கு 12ஏ படம் எடுத்துட்டு இப்படி நிலைத்து இருக்கிறார்கள்?

இது ஒரு சின்ன பதிவுதான். ஒரு அப்சர்வேஷன் அல்லது ‘ஒ’ப்சர்வேஷன் ;).
 தமிழில் சூப்பர் ஹீரோ படங்களே எடுப்பது இல்லையே என்ற நினைப்பு உண்டு. ஆனால், அந்த மாதிரி படங்களுக்கு முக்கிய தேவையான தாவுவதற்கு உயரமான கட்டடங்களும் ஆக்சிடண்ட் ஆகி வில்லனாவதற்கு தேவையான அதிநவீன ஆராய்ச்சிக் கூடங்களும் இல்லாமல் போனதாலோ என்னவோ படங்கள் வரவில்லை. முக்கியமாக காமிக் படிக்கும் வழக்கம் வேறு இல்லை. அங்கோ ஒரு 60 வருட பாரம்பரியம் இருக்கிறது. இன்னும் ஓவ்வொரு கதையும் revamp ச்செய்தால் வாங்கிப் படிக்கிறார்கள். மாதாமாதம் இழுவையாய் செல்லும் கதைகளையும் படிக்கிறார்கள்.


இதிலும் ஒவ்வொரு காலக்கட்டக்களிலும் ஒவ்வொருவிதமான மனநிலை மக்களின் இடையில் நிலவும் போது காமிக்குகளிலும் அதே நிலை இருக்கும். 50களிலும் 60களிலும் உலகப் போரின் தாக்கம் அதிகம் இருந்தது. உதாரணம் - Marvelன் Captain America. அதன்பின் எல்லா கதைகளிலும் குளிர் போரின் தாக்கம் இருந்தது. கதைகளில் சோவியத் சூப்பர் வில்லன்கள் இருந்தார்கள். இதே போல DC comicsம் Golden Age, SIlver Age, Modern என கதையை புதுப்பித்துக் கொண்டே இருப்பார்கள். மார்க்கெட்டும் அவ்வப்பொழுது விழுந்து எழுந்திருத்துக் கொண்டே இருக்கும்.

இதே போல போன decade ல் காமிக் மற்றும் அதன் சார்ந்த படங்களும் விழுந்தபின் மறுமலர்ர்ச்சியை SpiderMan மூலம் கண்ட பொழுதுதான் நம் மக்களுக்கும் டப்பிங்கில் அவற்றை பார்க்க ஆரம்பிக்க, அந்த படம் ஓடிய தைரியத்தில் இன்ன பிற காமிக்களும் திரைக்கு வர ஆரம்பித்தன.

இப்படியே அங்க வெட்டிவிட்டு நம்ம ஊருக்கும் வருவோம். நம்ம ஊரிலும் காமிக் தீவிர ஃபாலோயிங் இருந்தது. அதுவும் இப்பொழுது டப்பிங் படம் போல டப்பிங் காமிக்குள் பட்டையை கிளப்பிக் கொண்டிருந்தன. எனக்கு இவைப் பற்றி நேரடி அனுபவம் அதிகம் இல்லை. தமிழ் காமிக்குகளின் இறுதிகாலத்தை ஒட்டியே என் சிறுவயது இருந்தது. அதனால் என்னதான் காமிக்குகள் படித்திருந்தாலும் பின்புலன் தெரிய வாய்ப்பில்லை. ’கருந்தேள்’ க்கு அதிகம் தெரிய வாய்ப்புண்டு. இங்கே ப்ளாக்குகளிலேயே இதற்கு அதிக மக்கள் உலவுகிறார்கள். நிறைய பழைய வரலாற்றை எழுதுகிறார்கள்.

தமிழ் காமிக்குகளின் முன்னோடி அம்புலிமாமாவாகத் தான் இருக்க வேண்டும் என்பது என் கணிப்பு. சின்ன வயதில் வெளியூர் போகும் முன் பழைய புத்தகக் கடையில் இருந்து அம்புலிமாமா வாங்கிக் கொடுப்பார் அப்பா. திடீர் பயணமென்றால் பேருந்து நிலைய தமிழ் காமிக்குகள். அதிலும் இரண்டு பதிப்பகங்கள்தான் எனக்கு தெரியும். ராணி காமிக்ஸ், லயன் காமிக்ஸ். நான் படித்தது பெரும்பாலும் லயன் தான். கொஞ்சம் கவ்பாய், மாயாவி மற்றும் கருஞ்சிறுத்தை டைப் சரக்குகளைப் படித்திருக்கிறேன். இதில் சூப்பர் ஹீரோக்கள் இல்லை. மாயாவி The Phantomல் இருந்து வந்த விஜிலாண்டி ரகம்.

டைட்டிலுக்கு வந்தாச்சு. எழுத ஆரம்பிச்சதே ஏன் தமிழில் அல்லது இந்தியாவில் சூப்பர் ஹீரோ அல்லது விஜிலாண்டி டைப் படங்கள் இல்லை என்பதுதான். சூப்பர் ஹீரோ உங்களுக்குத் தெரிந்தது தான். பூச்சி கடித்ததில் இருந்து பிற கிரகங்களில் வந்தவன் என்கிற வகையில் பல காரணங்களால் ஆகிறவன். இந்த வகையில் நம் ஊரில் வந்த ஒரே சரக்கு ‘சக்திமான்’ - சூப்பர்மேனின் rip-offஆக இருந்தாலும் இந்தியாவின் ஆகமவிதிகளின் படி அமைந்த கதை. நல்ல ரெஸ்பான்ஸ் பார்வையாளர்கள் இருந்தாலும், ரொம்பவும் நீளுவதாக மக்கள் கருதியதால் தொடர் முடிந்தது. நம் மக்கள் வில்லனை முடித்து சுபம் போட்டுவிட எண்ணுகிறார்கள். அறுபது வருஷமாக ஆனானப்பட்ட சூப்பர்மேன் கண்களிலேயே கண் விட்டு ஆட்டும் Lex Luthor இன்னும் இருப்பதை யாரும் அங்கே கேட்பதில்லை. மக்களின் மனநிலை வித்தியாசம் அந்த ஊருக்கும் இந்த ஊருக்கும் இருப்பதே இதற்கு காரணம்.


அடுத்து விஜிலாண்டி(Vigilante). விஜிலாண்டி படங்களும் ஒரு வகையில் நம் ஊரில் இல்லை. விஜிலாண்டி என்பது முகமுடி மாட்டிக் கொண்டு எந்த சூப்பர் பவரும் இல்லாமல் சாதாரண பலத்தாலோ இல்லை உபகரணங்கள் கொண்டோ அநியாயத்து எதிராக சண்ண்டையிடுபவன். சோ, நியாயப்படி பார்த்தால் Batman சூப்பர் ஹீரோ இல்ல. ஒரு vigilante. இதே போல Punisher, Dare Devil என ஒரு லிஸ்ட் இருக்கு.


அங்க one-shot காமிக் எல்லாம் கூட வரும். ஒரே சீரிஸ் போட்டு தனி கதையை சொல்லி முடித்து விடுவார்கள். 'Watchmen' பார்த்தவர்களுக்கு தெரியும் அது. அது ஒரு one-shot. அது ஒரு குழுவாக அமைந்த விஜிலாண்டிகளைப் பற்றிய படம். அதை படமாக எடுத்திருந்தார் ‘300’ பட இயக்குனர்.


இப்போ ஒரு சந்தேகம் வருது. தமிழில் vigilante படங்கள் வந்ததே இல்லையா? ஏன் இல்லை? ராபின் ஹூட் ரகப் படங்களான் பல ஷங்கர் படங்களும் ஒரு வகையில் விஜிலாண்டி படங்கள் தான். ஜெண்டில்மேன் ஒரு உதாரணம். இவை எல்லாம் விஜிலாண்டி பொதுவான குற்றங்களை எதிர்ப்பதாக இல்லாமல் லஞ்சம், ஊழல், அலட்சியம் என ஒவ்வொரு விதமான Red Tapeன்னால் வரும் தீமைகளை தீம்களாகக் கையாண்டாலும் இவைகளை விஜிலாண்டி படங்களாக ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். அது கெட்டப் போட்டுக் கொண்டு கொள்ளையடிப்பதில் இல்லையென்றாலும் unplanned ஆக போகும் வழியில் எல்லாம் லஞ்சம் வாங்கும் நபர்களை கொல்லும் இந்தியனில் அப்பட்டமாக ஒரு விஜிலாண்டியில் ஸ்டைல் தெரிகிறது. என்னதான் ஜெண்டில் மேன் முதல் இந்தியன் வரை காண்பித்தாலும் அவை எல்லாம் ஒரு முழுமையான vigilante படங்கள் கிடையாது.  ஒரு சில வகைகளில் சில விதிமுறைகள் ஒத்து வரவில்லை. ஒரு பக்கவான விஜிலாண்டி படம் என்றால் நீங்கள் எதிர்பாராத வகையில் ஷங்கருக்கு பதிலாக அவரது குரு எஸ்.ஏ.சி யை தான் குறிப்பிடவேண்டும்.
படம்- நான் சிகப்பு மனிதன்

என்னதான் தங்கச்சி அம்மா செண்டிமெண்ட் வைத்து கதையை ஆரம்பித்தாலும் அவன்  குடும்பம் உருக்குலைந்த பின் பழிவாங்க துப்பாக்கி எடுப்பது, பின் இது மாதிரியாக எத்தனை பேர் கஷ்டப் படுவார்கள் என மற்றவங்களுக்கும் உதவப் போவது என கிளம்பும் அவர், சிகப்பு டீ-ஷர்ட் லெதர் ஜாக்கெட் என ஒரே உடை, ராபின் ஹூட் என்ற ஒரு புனைப் பெயர், இரவில் வீதிகளில் உலா வருவது, வரும் வழியில் தவறுகள் நடந்தால் சுடுவது, அவை எல்லால் அஃபென்ஸிவ் க்ரைமாக இருப்பது, அவர் பெயரில் பத்திரிக்கையில் விவாதங்கள் வருவது, போலீஸ் துரத்துவது, எல்லா கிரிமினல்களும் ஒன்றுகூடி இவரை அழிக்க முயலுவது என பல வகையில் இது விஜிலாண்டி படங்களின் விதிகளை ஒத்து வருவதால் இன்னபிற இந்திய செண்டிமெண்ட்களையும் எஸ்.ஏ சியின் ட்ரேட்மார்க் விஷயங்களையும் புறந்தள்ளிவிட்டு இதை ஒரு முழுமையான தமிழ் விஜிலாண்டி படம் எனலாம் என்கிறேன். கொஞ்சம் பெருசாகிடுச்சுல்ல? ஏதோ யோசிக்க ஆரம்பிச்சு, எந்த ஒரு ஒருங்கிணைப்பும் இல்லாமல். போகிறபோக்கில் நினைவிற்கு வந்த எல்லாம் சேர்த்து எழுதிக் கொண்டு வந்தாகிவிட்டது. அதனால் இந்த நிலை. சோ, தமிழில் சூப்பர் ஹீரோ படங்கள் இல்லை. விஜிலாண்டி படங்கள் உண்டு. சோ...? சும்மாதான், ஒரு ‘ஒப்சர்வேஷன்’.

இரு அவளுக்கு ஒரு நான் - மறு பதிப்பு

Filed under , , by Prabhu on 11/26/2010 06:51:00 PM

5

பக்கத்து ஆராய்ச்சி கூடத்தில் வேலை செய்யும் நண்பனும் அறைத் தோழனுமான் அஜயுடன் ரொட்டி சாப்பிடும் நேரத்தில் விவாதம் தொடங்கியது. பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டாவென ஒரு நூற்றாண்டாக தேய்ந்த பதிப்பில் முத்துராமன் கேட்டது பற்றி அல்ல. அவள் அழகா என்பதில். அவனுக்கு நான் அவளைப் பின்தொடரும் இந்த நேர விரய பழக்கங்கள் ஆகவில்லை. ஆனால், நானோ அந்த தருணங்களைச் சேமித்து அசைபோட்டு செரிக்கும் ரகம். அவனிற்கு ஆராய்ச்சியைத் தவிர எதிலும் பொறுமை கிடையாது. கழிக்கும் நேரத்திலேயே பல் விளக்கும் ஜாதி அவன். நானோ கழிப்பறையில் உலகை சிருஷ்டிப்பவன்.

பேச்சை மாற்றும் நோக்கோடு ஆராய்ச்சியைப் பற்றி பேசினால் அவனது கூடத் தலைவரின் ‘ஐன்ஸ்டைன்’ கனவுகளைப் பற்றிய பினாத்தல் தொடர்ந்தது. லைப்ரரியின் வாசலில் சிகரட் பதிலாக வெற்றுப் புகை கக்கும்  எலெக்ட்ரானிக் சிகரட் உதட்டுடன் பேசிக் கொண்டிருக்கும் எனக்கு, அவள் வந்தால் சிகரட்டை மறைத்து நல்லவனாக முயற்சிக்காகவா? அப்படிநல்லவனாக பிம்பம் ஏற்படுத்துவதும் கெட்ட எண்ணமோ? நீரில் விழுந்த நாய் போல மிகைப்படுத்தப்பட்ட எண்ணங்களை சிலுப்பி உதறுகிறேன். அவள் வருகிறாள்.

அருகிலிருக்கும் அஜய் முதுகில் இடிக்க, வருபவளிடம் சென்று என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன்,
'என் பெயர் அன்ஷு. ச்சீ... அன்ஷூ, என் பெயர் ராஜ்’,

ம்ஹூம்.. இப்படி இல்லை, அவளிடம் கேட்டேன், "நீ அன்ஷூ தான? கவிதா சொன்னாங்க”.
அவள்,”யாரு கவிதா?”.
“அதானே? யாரு? தூக்கத்தில் உன்னிடம் பேசச் சொன்னவள்.”
அவள் புருவம் உயர்த்தும் பொழுது,”இது ஜோக், ஹா.. ஹ.. என் பெயர் ராஜ்.” என்ற பொழுது அவள் புருவம் உதடு மேல் நோக்கி வளைந்தது..

ம்ம்ம்.. இல்லை...  இப்படியும் வேண்டாம் என ஆயிரத்தெட்டு சிமுலேஷன்களுக்கு மத்தியில் schizophreniaவின் அறிகுறிகளைப் பற்றி யோசிக்க ஆரம்பிதேன்.காதல் ஒரு மிகைப்படுத்தபட்ட உணர்ச்சியாக படுகிறது. 21ம் நூற்றாண்டின் இறுதியில் காதலிற்கு புனித பட்டம் குடுப்பதையோ அது நம்மைக் கட்டுப்படுத்தும் ஒப்பந்தமாக இருப்பதையோ நான் விரும்பவில்லை.

அஜயிடம் இருந்து நான் பிரிந்து எனது ஆராய்ச்சிக் கூடத்துக்கு சென்ற பொழுது பே.ரா. ராமசாமி உணவை உண்டு கொண்டிருந்தார். இப்பொழுது போனால அதை விட்டுவிட்டு மனுஷன் ஆராய்ச்சி பற்றி பேச ஆரம்பித்து விடுவார். நேரம் கொடுப்போம்.

இவரின் ஆராய்ச்சிக்கு எனக்கு மூன்றாவது கண் தேவைப்படுகிறது. கால எந்திரம் செய்கிறார். உங்களுக்கு கால-வெளி தொடர்புகளைப் (Time-Space continuum) பற்றித் தெரியுமா? தெரியாமல் எப்படிப் போகும். நூற்றாண்டு காலமாக கதைகளிலும் திரைப்படங்களிலும் பார்த்திருப்பீர்கள். அதைக் கொஞ்சம் திரித்தால் இவர் தியரி வந்து விடும். காலம்-வெளி இரண்டையும் கலந்த ஒரு 4 பரிமாண உலகை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். Graphல் குறிக்க முடியுமா எனக் கேட்டால் கொஞ்சம் கடினமானாலும் இப்பொழுது இருக்கும் நேரத்தை ரெஃபரன்ஸாக வைத்து பின்னோக்கி அல்லது முன்னோக்கி கணக்கிடலாம். சிறு அவகாச நேரங்களுக்குள் செய்வது இதனால் கடினமாகிறது. இந்த தேவையில்லாத சரக்கு எதற்கு. காரில் போவது போல காலவெளியிலும் ஸ்ட்ரெயிட்டா போய் லெஃப்டுக்கா கட் பண்ணி நேரா போய் யு-டர்ன் போடமுடியும். அதுதான் விஷயம்.

இதற்கு மேல் அறிவியல் வேண்டாம். சில நாட்களாக ஒரு மாதிரியாக இருக்கிறது. அதிகபட்சமான சந்தோஷத்தில் ஏதோ தொண்டைக்குள் எழுவது போல. அஜயிடம் கேட்டால், ’மசக்கையாய் இருக்கிறாய், மாங்காய் வாங்கி சாப்பிடு’ என்பான். அவள் மேலான ஈர்ப்புதான் காரணம் என நினைக்கிறேன். இது 20ஆம் நூற்றாண்டின் எச்சமான சில உணர்வுகள். மனம் வழக்கத்திற்கும் மாற்றத்திற்கும் நடுவில் சிக்கித் தவிக்கிறது. கட்டமைப்பிற்குள் வாழும் மனது, அந்தக் கட்டமைப்பில் வாழுகின்றதன் செக்குமாட்டுத்தன்மையின் வெறுப்பில் உழல்கிறது. இதற்கு இதுதான் செய்தல் வேண்டுமென்ற கட்டாயங்கள் பிடிக்கவில்லை. எல்லாரும் இது போல்பேசுவதால் நானும் அவளிடம் போய் ஏதாவது பேச வேண்டுமா? இல்லை, என் அவசியத்திற்க்காக, எனக்கு அவளைப் பிடிப்பதனால் நான் பேசித் தான ஆக வேண்டுமா என மண்டையடிக்கிறது. சமூகத்தில் பின்தொடருவதால் சில பழக்க வழக்கங்களை நமக்குத் தேவையில்லாமலே கடைபிடிக்கிறோம். அதில் ஒன்று இதுவோ என தோணுகின்றது.

ராமசாமி வர, ‘ஏன் சார், சாப்பிடவில்லையா?’ என்றேன்

‘சாப்பிட்டேனே’.

‘நான் பார்த்துக் கொண்டிருந்தேனே’

‘டைம்லைன் இருக்கே’

‘சாப்பிடக் கூட டைம் ட்ராவல் அதிகமாப் படலை?’

‘இல்லை. இது காலப் பயணம் இல்லை. நாம் அவ்வளவு தூரம் போகவில்லை’

’என்ன? பின் நாம் செய்த வேலை அனைத்தும்? சோதனைக்கு தயாரென சொன்னது?’

’‘ரியாலிட்டி வார்ப்பிங்’ தான் நிஜமாக நாம் கண்டுபிடித்திருப்பது’

என் பார்வையை கண்ட அவர், ’ நீ இருப்பது ஒரு ரியாலிட்டி. ஒவ்வொரு விநாடியும் ஒவ்வொரு செயலும் அதற்கேற்ற பின்விளைவுகளைத் தீர்மானிக்கின்றன. உன்னுடைய தேர்வுகளே உன் எதிர்காலத்தை தீர்மானிக்கின்றன. இது போல பல்லாயிரக்கணக்கான கட்டமைப்புகளின் (சிஸ்டம்ஸ்) ஒன்றுடன் ஒன்று இயைந்த தேர்வுகளும் வேறுபாடுகளுமே வெவ்வேறு உலகம் அல்லது ரியாலிட்டியை உருவாக்குகின்றன. உதாரணத்திற்கு கிளம்பும் முன் ஒரு காபி குடிக்கலாமென்ற் ஆசையில் கடைக்கு சென்று, வண்டியை தவற விடுகிறாய் அல்லது காபியை தியாகம் செய்து விட்டு வண்டியை பிடித்து விடுகிறாய். இப்பொழுது உன் வாழ்க்கையில் இரண்டு ரியாலிட்டிகளாக பிரிகிறது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் பயணிக்கிறது. இதன் மூலம் ஒரு ரியாலிட்டியில் கூலித் தொழிலாளியாகவும் இன்னொரு ரியாலிட்டியில் ராஜாவாகவும் இருக்கலாம். வாழ்வு தேர்வுகளினால் ஆனது. கால-வெளி இழைகளின் இயற்கையான பிழைகளின் மூலம் நீ பயணம் செய்து வேறு ரியாலிட்டியின் வேறு காலத்திற்குக் கூட செல்ல முடியும். நான் மதுரையில் யாருடன் உணவு உட்கொண்டேன் என்றால் நீ நம்ப மாட்டாய்.’ என்க...

’இது நம்பும் படியாகவா இருக்கிறது. அவர் 12ம் நூற்றாண்டு. அழிவதற்கு முன்பான சில வெற்றிகளின் விளிம்பில் இருந்த சமயம். நீயும் நம்புகிறாயா’ என்றான் அஜய்.

நானே பயணம் செய்தேன் என்ற பொழுது அவனுக்கு நேற்று தின்ற கோழி வயிற்றில் இருந்து கூவுவது போல உணரவே கழிவறை சென்று அது வெளியேறிவிட்டதை உறுதி செய்து கொண்டான்.

எனக்கு மௌரிய காலத்து விஷயம் ஏதாவது  கிடைக்குமா எனக் கேட்ட அஜயிடம், ‘நான்  அடுத்து போன காலத்தில் அரசரே கிடையாது. நூற்றுக்கணக்கானவர் சேர்ந்து தான் ஒரு நாட்டுக்கு ராஜா ’ என்றேன்.

‘நம்ம ஊர்ல இருக்கிற மாதிரி அரசர்?”
“ம்ஹூம்.  மக்கள் தான் தேர்ந்து எடுக்கிறார்கள், ஒரு குழுவை”
’ஏதோ விஞ்ஞானப் புனைவில் படிப்பது போல கேவலமான ஒரு utopia  வாக படுகிறதே? ஏதாவது ஆதாரம்?’ எனக் கேட்ட அஜயிடம் எதோ பொருளை எடுத்துக் காண்பித்தான்.
’என்ன இது?’
’இது புத்தகம்.  மரத்தால் செய்த இதை காகிதம் என்கிறார்கள். அந்த உலகத்தில் எல்லாவற்றையும் இதில் பதித்து தான் படிக்கிறார்கள்’
அதை வாங்கி பிரித்தான், “இரு அவளுக்கு ஒரு நான் - மறுபதிப்பு”

’தீராக் காதலுடன்’ யாரோ எழுதி அதன் கீழ் பவுண்டன் பென் குழிகளில் வழிந்த மை, ‘Anshu D' எனப் பரவியிருந்தது.