இரு அவளுக்கு ஒரு நான் - மறு பதிப்பு

Filed under , , by Prabhu on 11/26/2010 06:51:00 PM

5

பக்கத்து ஆராய்ச்சி கூடத்தில் வேலை செய்யும் நண்பனும் அறைத் தோழனுமான் அஜயுடன் ரொட்டி சாப்பிடும் நேரத்தில் விவாதம் தொடங்கியது. பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டாவென ஒரு நூற்றாண்டாக தேய்ந்த பதிப்பில் முத்துராமன் கேட்டது பற்றி அல்ல. அவள் அழகா என்பதில். அவனுக்கு நான் அவளைப் பின்தொடரும் இந்த நேர விரய பழக்கங்கள் ஆகவில்லை. ஆனால், நானோ அந்த தருணங்களைச் சேமித்து அசைபோட்டு செரிக்கும் ரகம். அவனிற்கு ஆராய்ச்சியைத் தவிர எதிலும் பொறுமை கிடையாது. கழிக்கும் நேரத்திலேயே பல் விளக்கும் ஜாதி அவன். நானோ கழிப்பறையில் உலகை சிருஷ்டிப்பவன்.

பேச்சை மாற்றும் நோக்கோடு ஆராய்ச்சியைப் பற்றி பேசினால் அவனது கூடத் தலைவரின் ‘ஐன்ஸ்டைன்’ கனவுகளைப் பற்றிய பினாத்தல் தொடர்ந்தது. லைப்ரரியின் வாசலில் சிகரட் பதிலாக வெற்றுப் புகை கக்கும்  எலெக்ட்ரானிக் சிகரட் உதட்டுடன் பேசிக் கொண்டிருக்கும் எனக்கு, அவள் வந்தால் சிகரட்டை மறைத்து நல்லவனாக முயற்சிக்காகவா? அப்படிநல்லவனாக பிம்பம் ஏற்படுத்துவதும் கெட்ட எண்ணமோ? நீரில் விழுந்த நாய் போல மிகைப்படுத்தப்பட்ட எண்ணங்களை சிலுப்பி உதறுகிறேன். அவள் வருகிறாள்.

அருகிலிருக்கும் அஜய் முதுகில் இடிக்க, வருபவளிடம் சென்று என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன்,
'என் பெயர் அன்ஷு. ச்சீ... அன்ஷூ, என் பெயர் ராஜ்’,

ம்ஹூம்.. இப்படி இல்லை, அவளிடம் கேட்டேன், "நீ அன்ஷூ தான? கவிதா சொன்னாங்க”.
அவள்,”யாரு கவிதா?”.
“அதானே? யாரு? தூக்கத்தில் உன்னிடம் பேசச் சொன்னவள்.”
அவள் புருவம் உயர்த்தும் பொழுது,”இது ஜோக், ஹா.. ஹ.. என் பெயர் ராஜ்.” என்ற பொழுது அவள் புருவம் உதடு மேல் நோக்கி வளைந்தது..

ம்ம்ம்.. இல்லை...  இப்படியும் வேண்டாம் என ஆயிரத்தெட்டு சிமுலேஷன்களுக்கு மத்தியில் schizophreniaவின் அறிகுறிகளைப் பற்றி யோசிக்க ஆரம்பிதேன்.காதல் ஒரு மிகைப்படுத்தபட்ட உணர்ச்சியாக படுகிறது. 21ம் நூற்றாண்டின் இறுதியில் காதலிற்கு புனித பட்டம் குடுப்பதையோ அது நம்மைக் கட்டுப்படுத்தும் ஒப்பந்தமாக இருப்பதையோ நான் விரும்பவில்லை.

அஜயிடம் இருந்து நான் பிரிந்து எனது ஆராய்ச்சிக் கூடத்துக்கு சென்ற பொழுது பே.ரா. ராமசாமி உணவை உண்டு கொண்டிருந்தார். இப்பொழுது போனால அதை விட்டுவிட்டு மனுஷன் ஆராய்ச்சி பற்றி பேச ஆரம்பித்து விடுவார். நேரம் கொடுப்போம்.

இவரின் ஆராய்ச்சிக்கு எனக்கு மூன்றாவது கண் தேவைப்படுகிறது. கால எந்திரம் செய்கிறார். உங்களுக்கு கால-வெளி தொடர்புகளைப் (Time-Space continuum) பற்றித் தெரியுமா? தெரியாமல் எப்படிப் போகும். நூற்றாண்டு காலமாக கதைகளிலும் திரைப்படங்களிலும் பார்த்திருப்பீர்கள். அதைக் கொஞ்சம் திரித்தால் இவர் தியரி வந்து விடும். காலம்-வெளி இரண்டையும் கலந்த ஒரு 4 பரிமாண உலகை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். Graphல் குறிக்க முடியுமா எனக் கேட்டால் கொஞ்சம் கடினமானாலும் இப்பொழுது இருக்கும் நேரத்தை ரெஃபரன்ஸாக வைத்து பின்னோக்கி அல்லது முன்னோக்கி கணக்கிடலாம். சிறு அவகாச நேரங்களுக்குள் செய்வது இதனால் கடினமாகிறது. இந்த தேவையில்லாத சரக்கு எதற்கு. காரில் போவது போல காலவெளியிலும் ஸ்ட்ரெயிட்டா போய் லெஃப்டுக்கா கட் பண்ணி நேரா போய் யு-டர்ன் போடமுடியும். அதுதான் விஷயம்.

இதற்கு மேல் அறிவியல் வேண்டாம். சில நாட்களாக ஒரு மாதிரியாக இருக்கிறது. அதிகபட்சமான சந்தோஷத்தில் ஏதோ தொண்டைக்குள் எழுவது போல. அஜயிடம் கேட்டால், ’மசக்கையாய் இருக்கிறாய், மாங்காய் வாங்கி சாப்பிடு’ என்பான். அவள் மேலான ஈர்ப்புதான் காரணம் என நினைக்கிறேன். இது 20ஆம் நூற்றாண்டின் எச்சமான சில உணர்வுகள். மனம் வழக்கத்திற்கும் மாற்றத்திற்கும் நடுவில் சிக்கித் தவிக்கிறது. கட்டமைப்பிற்குள் வாழும் மனது, அந்தக் கட்டமைப்பில் வாழுகின்றதன் செக்குமாட்டுத்தன்மையின் வெறுப்பில் உழல்கிறது. இதற்கு இதுதான் செய்தல் வேண்டுமென்ற கட்டாயங்கள் பிடிக்கவில்லை. எல்லாரும் இது போல்பேசுவதால் நானும் அவளிடம் போய் ஏதாவது பேச வேண்டுமா? இல்லை, என் அவசியத்திற்க்காக, எனக்கு அவளைப் பிடிப்பதனால் நான் பேசித் தான ஆக வேண்டுமா என மண்டையடிக்கிறது. சமூகத்தில் பின்தொடருவதால் சில பழக்க வழக்கங்களை நமக்குத் தேவையில்லாமலே கடைபிடிக்கிறோம். அதில் ஒன்று இதுவோ என தோணுகின்றது.

ராமசாமி வர, ‘ஏன் சார், சாப்பிடவில்லையா?’ என்றேன்

‘சாப்பிட்டேனே’.

‘நான் பார்த்துக் கொண்டிருந்தேனே’

‘டைம்லைன் இருக்கே’

‘சாப்பிடக் கூட டைம் ட்ராவல் அதிகமாப் படலை?’

‘இல்லை. இது காலப் பயணம் இல்லை. நாம் அவ்வளவு தூரம் போகவில்லை’

’என்ன? பின் நாம் செய்த வேலை அனைத்தும்? சோதனைக்கு தயாரென சொன்னது?’

’‘ரியாலிட்டி வார்ப்பிங்’ தான் நிஜமாக நாம் கண்டுபிடித்திருப்பது’

என் பார்வையை கண்ட அவர், ’ நீ இருப்பது ஒரு ரியாலிட்டி. ஒவ்வொரு விநாடியும் ஒவ்வொரு செயலும் அதற்கேற்ற பின்விளைவுகளைத் தீர்மானிக்கின்றன. உன்னுடைய தேர்வுகளே உன் எதிர்காலத்தை தீர்மானிக்கின்றன. இது போல பல்லாயிரக்கணக்கான கட்டமைப்புகளின் (சிஸ்டம்ஸ்) ஒன்றுடன் ஒன்று இயைந்த தேர்வுகளும் வேறுபாடுகளுமே வெவ்வேறு உலகம் அல்லது ரியாலிட்டியை உருவாக்குகின்றன. உதாரணத்திற்கு கிளம்பும் முன் ஒரு காபி குடிக்கலாமென்ற் ஆசையில் கடைக்கு சென்று, வண்டியை தவற விடுகிறாய் அல்லது காபியை தியாகம் செய்து விட்டு வண்டியை பிடித்து விடுகிறாய். இப்பொழுது உன் வாழ்க்கையில் இரண்டு ரியாலிட்டிகளாக பிரிகிறது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் பயணிக்கிறது. இதன் மூலம் ஒரு ரியாலிட்டியில் கூலித் தொழிலாளியாகவும் இன்னொரு ரியாலிட்டியில் ராஜாவாகவும் இருக்கலாம். வாழ்வு தேர்வுகளினால் ஆனது. கால-வெளி இழைகளின் இயற்கையான பிழைகளின் மூலம் நீ பயணம் செய்து வேறு ரியாலிட்டியின் வேறு காலத்திற்குக் கூட செல்ல முடியும். நான் மதுரையில் யாருடன் உணவு உட்கொண்டேன் என்றால் நீ நம்ப மாட்டாய்.’ என்க...

’இது நம்பும் படியாகவா இருக்கிறது. அவர் 12ம் நூற்றாண்டு. அழிவதற்கு முன்பான சில வெற்றிகளின் விளிம்பில் இருந்த சமயம். நீயும் நம்புகிறாயா’ என்றான் அஜய்.

நானே பயணம் செய்தேன் என்ற பொழுது அவனுக்கு நேற்று தின்ற கோழி வயிற்றில் இருந்து கூவுவது போல உணரவே கழிவறை சென்று அது வெளியேறிவிட்டதை உறுதி செய்து கொண்டான்.

எனக்கு மௌரிய காலத்து விஷயம் ஏதாவது  கிடைக்குமா எனக் கேட்ட அஜயிடம், ‘நான்  அடுத்து போன காலத்தில் அரசரே கிடையாது. நூற்றுக்கணக்கானவர் சேர்ந்து தான் ஒரு நாட்டுக்கு ராஜா ’ என்றேன்.

‘நம்ம ஊர்ல இருக்கிற மாதிரி அரசர்?”
“ம்ஹூம்.  மக்கள் தான் தேர்ந்து எடுக்கிறார்கள், ஒரு குழுவை”
’ஏதோ விஞ்ஞானப் புனைவில் படிப்பது போல கேவலமான ஒரு utopia  வாக படுகிறதே? ஏதாவது ஆதாரம்?’ எனக் கேட்ட அஜயிடம் எதோ பொருளை எடுத்துக் காண்பித்தான்.
’என்ன இது?’
’இது புத்தகம்.  மரத்தால் செய்த இதை காகிதம் என்கிறார்கள். அந்த உலகத்தில் எல்லாவற்றையும் இதில் பதித்து தான் படிக்கிறார்கள்’
அதை வாங்கி பிரித்தான், “இரு அவளுக்கு ஒரு நான் - மறுபதிப்பு”

’தீராக் காதலுடன்’ யாரோ எழுதி அதன் கீழ் பவுண்டன் பென் குழிகளில் வழிந்த மை, ‘Anshu D' எனப் பரவியிருந்தது.

கழிப்பறை இலக்கியம்

Filed under , , , by Prabhu on 11/21/2010 07:58:00 AM

8

முந்தா நேத்து ‘உலக கழிப்பறை நாளாமே?” பதிவு எழுதவோ படிக்கவோ நேரமே கிடைக்கல.அதான் இது ஒரு பழைய ரிப்பீட்டு.முன்ன இதுக்கு ஒரு ரெண்டாம் பாகம் வச்சிருந்தேன். மறந்து போச்சு :(

இலக்கியம், கதை, கவிதை, உரைநடை, கல்வெட்டு, நாடகம், சினிமா, ப்ளாக் என பல வகையில நம்மல சுத்தி இருக்கு. இதுபோல இன்னும் பல வகையான இலக்கியங்கள், பல வகையான ஊடகங்களில் நம்மல சுத்தி இருக்கு. ஆனா இதுவரைக்கும் கவனம் பெறாத சில இலக்கியங்கள் இருக்கு. அதுல ஒண்ணுதான் கழிவறை இலக்கியம். அங்கே காணப்படும் கருத்துக்கள் ஒவ்வொன்றும், 'இவன் பின்னாளில் பெரிய ஆளாக வருவான்'(இதெல்லாம் எங்க உருப்படப் போகுது?), எனத் தோன்ற வைக்கும். சில உதாரணங்கள்,

"இளைஞர்களே, இந்தியாவின் எதிர்காலம் உங்கள் கையில்...."

"WIFE- wonderful Instrument For Enjoyment"

"மாணவர்களே, மேன்மேலும் தேர்ச்சி ஆகி காலேஜை விட்டுச் சென்றுவிட உங்களைப் போன்ற நன்றி கெட்டவன் இல்லை. நாங்கள் ரிப்பீட் வைத்துள்ளோம். மீண்டும் அடுத்த வருடமும் வந்து காலேஜை பத்திரமாக பாத்துக்குவோம்- இப்படிக்கு கல்லூரியின் செல்லப் பிள்ளைகள்"

"ஏண்டா இப்படி கிறுக்குறீங்க, அதுவும் பெண்களைப் பற்றி? உன் தங்கச்சின்னா இப்படி செய்வியா?", என பெண்களைப் பத்தி எழுதியத தட்டிக் கேட்க(எழுத), அதற்கு இன்னொருத்தன், "தைரியம் இருந்தா இத___ டிபார்ட்மெண்டுக்கு வந்து சொல்லிப் பாருடா, %&டு^^&*(#@%@!". இப்படியே பதிவுக்கு எதிர் பதிவு போடுற மாதிரி பேசிக்கிட்டே போவானுங்க!.

Urinal மேல் எழுதப்பட்டிருக்கும் வாசகம்.
"உங்கள் எதிர்காலம் இப்பொழுது உங்கள் கையில்(?!)(கையில அப்போ எதிர்காலம்(ஒருவேளை....) எதுவும் இருக்கறதா தெரியலயே?!)"


காலேஜ் டாய்லெட்ல ஒருத்தன் கவிதை எழுதிருந்தான் பாருங்க.... அட,அட அத கீழ கொடுத்திருக்கேன். அது என்ன, யாருடையதுன்னு யூகிச்சுப் பாருங்க.

"மண்காட்டி பொன்காட்டி மாயஇருள் காட்டி
செங்காட்டில் ஆடுகின்ற தேசிகனை போற்றாமல்
கண்காட்டும் வேசியர்தம் கண்வலையில் சிக்கிமிக
அங்காடி நாய் போல அலைந்தனையே நெஞ்சமே"


அது யாருன்னு தெரியுதா? பட்டினத்தார் பாட்டுங்க. என்ன இலக்கிய உணர்ச்சி! என்னே கருத்துச் செறிவு! இதுக்கு கீழ niceனு ஒரு கமெண்ட் வேற.எனக்கும் பிடிச்சாலும் அது என்ன pappuவோட ப்ளாக்கா, கமெண்ட் போட? கரெக்டா சொல்லனும்னா, சிவன விட்டுட்டு பெண், செல்வம் பின்னாடி நாய் மாதிரி சுத்துறியே, நாயேன்னு தன் மனசப் பாத்து கேட்டுகிறாரு.செலவத்தையோ, பொண்ணயோ தேடாம சிவனத் தேடுன்னு சொல்றாங்க. (இந்த வெண்ணைய அன்னைக்கு ப்ரியா பின்னாடி பாத்தேனே! டேய் கொய்யா...). ஒரு சரக்கு இருக்கு, அதையும் பாத்துருங்க.

"பெண்ணை நம்பிப் பிறக்கும் போதே தொப்புள் கொடிகள் அறுபடுமே, கேளடா... மானிடா... "

இது மாதிரியா போகுது அந்த கவிதை.இது நம்ம உலகநாயகனோடது. ஆளவந்தான்ல மொட்ட கமல் ஜெயில்குள்ள இருந்து சொல்லுவார்.

இன்னொரு கவிஞர் 'நான் கடவுள்'ன்ற புனைப் பெயர்ல எழுதினதயும் பாத்துருங்க! (இவனுங்கள எல்லாம் அகோரிய விட்டுத்தான் போட்டுத் தள்ளனும்)

"கண்ணென்றும் மூக்கென்றும் காதென்றும் - உன்
கண்ணெதிரே மாதென்று சொல்லிவரும் மாயைதன்னை
எமன்விட்ட தூது என்று எண்ணாமல் சுகம் என்று
நாடும் துர்புத்தியை ஏதென்று எடுத்துரைப்பேன்"

(கண்டிப்பா இது அவனோடது இல்ல, பட்டினத்தாராத்தான்ன் இருக்கனும்)
இதுவும் பொண்ணுங்களப் பாத்து ஏன் பயப்படுற மாதிரியே எழுதறானுங்க? ஹோமோசெக்ஷுவல்சோ, கேர்ள் பிரண்டு கிடைக்காதவனோ தான் இந்த மாதிரி கழிப்பறை இலக்கியத்தின் சிறந்த எழுத்தாளர்களா ஆவாங்களோ? ஆனா இந்த மாதிரி நாயிங்கதான் பொண்னுங்கள டீஸ் பண்ணுற மட்டமான வேலைகளில் ஈடுபடுவானுங்க!என்ன கருமமோ!


பேட்மேனுக்கு அவர் symbol எல்லாத்துலயும் போடுவாங்க. இதுல போடுவாளோ, போட்டுடாளே!

இதே போல ரயிலிலும் உண்டு. அங்கேயும் கழிப்பறையில் தனது கட்சிக் கொள்கையை பிரசங்கிப்பவனும், தேர்தல் அறிக்கையை பிரகடனப்படுத்துபவனும், ஆண்,பெண் குறிகளை அளவில்லாத ஆர்வத்துடன் ஆராய்ச்சி செய்பவனும், அதை அங்கே செதுக்க முற்படுபவனையும் நல்லாவே பாக்க முடியும். மனசுல மைக்கலேஞ்சலோனு நினைப்பு, செதுக்குறானாம். இவனுங்களுக்கெல்லாம் 'விக்ரம்' படத்தில கமல் சொன்ன மாதிரி(விக்ரம் படத்தில கமல் எப்டி வருவாருன்னு கேக்காம கவனிங்க!) ஒரு ட்ரீட்மெண்டை செய்ய வேண்டியதுதான். அது என்னன்னு சொல்லமுடியாது. ஏற்கனவே ஆபாசம்னு சொல்லிருவாங்கனு பயப்படுறேன், அதச் சொன்னா எல்லாரும் ஒதுக்கி வச்சிரப்போறாங்க. நா இப்போதாங்க வளரும் ப்ளாக்கர்.

அப்புறம் இன்னொரு வகை லூசுங்க இருக்கானுங்க. ரயிலில அவனுங்க காதலுக்கு சாசனத்தைப் பொறிச்சுக்கிட்டு இருப்பானுங்க. இந்த மன்மதன் அந்த ரதியோட பேர சாவியால செதுக்கி நடுவுல ஹார்ட் போட்டு உள்ள அம்பு உடுவானுங்க. இந்த மாதிரி கேசுகளில் பல கண்டிப்பாக ரிடர்ன் வரும்போது 'சரோஜா' பிரேம்ஜி மாதிரி வேற ஒருத்திய சுத்தி தேவதைகள சுத்த விட்டுட்டு இருப்பானுங்க. அவளுக்கு ஒரு கல்வெட்டு வரும்போது (திரும்பவுமாஆஆஆ!)(க்க்ர்ர்ர்ர்ர்....) .

பாத்தீங்களா, இந்த மாதிரி ஆசாமிகளுக்கெல்லாம் ஊரிலுள்ள எல்லா கழிப்பறைகளிலும் ஒரு சிலை வைத்து அங்கீகாரம் அளிக்க வேண்டும். கழிப்பறைகளுக்கு அவங்க பேர வச்சு, போர்டு பக்கத்தில அவங்க போட்டோ போட்டுட வேண்டியதான். அவங்களுக்காக சாகித்ய அகாதமில ஒரு புது பிரிவு துவங்க வேண்டிய கடமை நமக்கு இருக்கு.பின்ன, ஊர்ல எல்லா கலைஞர்களையும் மதிக்கிற நாம இவங்கள மட்டும் புறக்கணிச்சா காலம் நம்மை மன்னிக்காது. இதை நாம கவனிக்கலைனா இந்தக் கலை அழிந்துவிடக்கூடும். அதனால நலிவுற்றோர் சன்மானத்தொகைய பரிந்துரை செய்கிறேன்.


ஒரு கழிப்பறை இலக்கிய எழுத்தாளர்.
இதையெல்லாம் அனுமதிக்குது பாருங்க நம்ம நாடு ...... வாழ்க ஜனநாயகம்!!!!

இத இப்படியே விட்டரலாம்தான். ஆனா போதுமான சேம் ப்ளட் வரலயே. அதனால ஒரு ஜோக்(நீயெல்லாம் பதிவெழுதுறதே ஒரு ஜோக் தான்). ஒருத்தன் டாய்லெட்ல உக்காந்துருக்கான், வெஸ்டர்ன்ங்க. இப்பொ அவன் கஷ்டத்தை அவன் வாயாலயே கேப்போம் (அவன் அங்க முக்குறதையா?). நான் உக்காந்திருந்த போது பக்கத்து ஸ்டாலிலிருந்து குரல், "எப்படி இருக்கீங்க?". பொதுவா டாய்லட்ல வந்து நட்புறவு உரையாடல் ஆரம்பிக்கிறவன் இல்ல. ஆனாலும், நல்லாதான் இருக்கேன்னு சொல்லி சமாளிச்சேன்.
"எங்க போறீங்க?'
(டாய்லெட்லருந்து விண்வெளிக்கா போகபோறேன்.என்னமாவது சொல்லனுமே.)
"உங்கள மாதிரிதாங்க, சென்னைக்கு)"
"அங்க என்ன பண்ணலாம்னு இருக்கீங்க? நான் வேணா உங்களோட வரவா?"
(அவனா நீயு? be careful, என்னைய சொன்னேன்)
"இல்லீங்க. இன்னைக்கு எனக்கு வேற ஒருத்தர் வரேன்னு சொல்லிட்டாரு. அதனால் உங்களோட வர சான்ஸ் இல்ல."
உடனே அவன் பதறின குரலில், "இங்க பாரு, உன் கிட்ட பேசுறதுக்கெல்லாம் இங்க ஒரு நாதேரி பதில் சொல்லி கொல்லுறான். அவன் என்ன 'கேட்டகரி'ன்னு வேற தெரியல."

இதுக்கும் ப்ளட் வரலைனா கீழ இருக்குறதுதான் உங்களுக்கு ப்ளட் வர ஒரே வழி!