கழிப்பறை இலக்கியம்

Filed under , , , by Prabhu on 11/21/2010 07:58:00 AM

8

முந்தா நேத்து ‘உலக கழிப்பறை நாளாமே?” பதிவு எழுதவோ படிக்கவோ நேரமே கிடைக்கல.அதான் இது ஒரு பழைய ரிப்பீட்டு.முன்ன இதுக்கு ஒரு ரெண்டாம் பாகம் வச்சிருந்தேன். மறந்து போச்சு :(

இலக்கியம், கதை, கவிதை, உரைநடை, கல்வெட்டு, நாடகம், சினிமா, ப்ளாக் என பல வகையில நம்மல சுத்தி இருக்கு. இதுபோல இன்னும் பல வகையான இலக்கியங்கள், பல வகையான ஊடகங்களில் நம்மல சுத்தி இருக்கு. ஆனா இதுவரைக்கும் கவனம் பெறாத சில இலக்கியங்கள் இருக்கு. அதுல ஒண்ணுதான் கழிவறை இலக்கியம். அங்கே காணப்படும் கருத்துக்கள் ஒவ்வொன்றும், 'இவன் பின்னாளில் பெரிய ஆளாக வருவான்'(இதெல்லாம் எங்க உருப்படப் போகுது?), எனத் தோன்ற வைக்கும். சில உதாரணங்கள்,

"இளைஞர்களே, இந்தியாவின் எதிர்காலம் உங்கள் கையில்...."

"WIFE- wonderful Instrument For Enjoyment"

"மாணவர்களே, மேன்மேலும் தேர்ச்சி ஆகி காலேஜை விட்டுச் சென்றுவிட உங்களைப் போன்ற நன்றி கெட்டவன் இல்லை. நாங்கள் ரிப்பீட் வைத்துள்ளோம். மீண்டும் அடுத்த வருடமும் வந்து காலேஜை பத்திரமாக பாத்துக்குவோம்- இப்படிக்கு கல்லூரியின் செல்லப் பிள்ளைகள்"

"ஏண்டா இப்படி கிறுக்குறீங்க, அதுவும் பெண்களைப் பற்றி? உன் தங்கச்சின்னா இப்படி செய்வியா?", என பெண்களைப் பத்தி எழுதியத தட்டிக் கேட்க(எழுத), அதற்கு இன்னொருத்தன், "தைரியம் இருந்தா இத___ டிபார்ட்மெண்டுக்கு வந்து சொல்லிப் பாருடா, %&டு^^&*(#@%@!". இப்படியே பதிவுக்கு எதிர் பதிவு போடுற மாதிரி பேசிக்கிட்டே போவானுங்க!.

Urinal மேல் எழுதப்பட்டிருக்கும் வாசகம்.
"உங்கள் எதிர்காலம் இப்பொழுது உங்கள் கையில்(?!)(கையில அப்போ எதிர்காலம்(ஒருவேளை....) எதுவும் இருக்கறதா தெரியலயே?!)"


காலேஜ் டாய்லெட்ல ஒருத்தன் கவிதை எழுதிருந்தான் பாருங்க.... அட,அட அத கீழ கொடுத்திருக்கேன். அது என்ன, யாருடையதுன்னு யூகிச்சுப் பாருங்க.

"மண்காட்டி பொன்காட்டி மாயஇருள் காட்டி
செங்காட்டில் ஆடுகின்ற தேசிகனை போற்றாமல்
கண்காட்டும் வேசியர்தம் கண்வலையில் சிக்கிமிக
அங்காடி நாய் போல அலைந்தனையே நெஞ்சமே"


அது யாருன்னு தெரியுதா? பட்டினத்தார் பாட்டுங்க. என்ன இலக்கிய உணர்ச்சி! என்னே கருத்துச் செறிவு! இதுக்கு கீழ niceனு ஒரு கமெண்ட் வேற.எனக்கும் பிடிச்சாலும் அது என்ன pappuவோட ப்ளாக்கா, கமெண்ட் போட? கரெக்டா சொல்லனும்னா, சிவன விட்டுட்டு பெண், செல்வம் பின்னாடி நாய் மாதிரி சுத்துறியே, நாயேன்னு தன் மனசப் பாத்து கேட்டுகிறாரு.செலவத்தையோ, பொண்ணயோ தேடாம சிவனத் தேடுன்னு சொல்றாங்க. (இந்த வெண்ணைய அன்னைக்கு ப்ரியா பின்னாடி பாத்தேனே! டேய் கொய்யா...). ஒரு சரக்கு இருக்கு, அதையும் பாத்துருங்க.

"பெண்ணை நம்பிப் பிறக்கும் போதே தொப்புள் கொடிகள் அறுபடுமே, கேளடா... மானிடா... "

இது மாதிரியா போகுது அந்த கவிதை.இது நம்ம உலகநாயகனோடது. ஆளவந்தான்ல மொட்ட கமல் ஜெயில்குள்ள இருந்து சொல்லுவார்.

இன்னொரு கவிஞர் 'நான் கடவுள்'ன்ற புனைப் பெயர்ல எழுதினதயும் பாத்துருங்க! (இவனுங்கள எல்லாம் அகோரிய விட்டுத்தான் போட்டுத் தள்ளனும்)

"கண்ணென்றும் மூக்கென்றும் காதென்றும் - உன்
கண்ணெதிரே மாதென்று சொல்லிவரும் மாயைதன்னை
எமன்விட்ட தூது என்று எண்ணாமல் சுகம் என்று
நாடும் துர்புத்தியை ஏதென்று எடுத்துரைப்பேன்"

(கண்டிப்பா இது அவனோடது இல்ல, பட்டினத்தாராத்தான்ன் இருக்கனும்)
இதுவும் பொண்ணுங்களப் பாத்து ஏன் பயப்படுற மாதிரியே எழுதறானுங்க? ஹோமோசெக்ஷுவல்சோ, கேர்ள் பிரண்டு கிடைக்காதவனோ தான் இந்த மாதிரி கழிப்பறை இலக்கியத்தின் சிறந்த எழுத்தாளர்களா ஆவாங்களோ? ஆனா இந்த மாதிரி நாயிங்கதான் பொண்னுங்கள டீஸ் பண்ணுற மட்டமான வேலைகளில் ஈடுபடுவானுங்க!என்ன கருமமோ!


பேட்மேனுக்கு அவர் symbol எல்லாத்துலயும் போடுவாங்க. இதுல போடுவாளோ, போட்டுடாளே!

இதே போல ரயிலிலும் உண்டு. அங்கேயும் கழிப்பறையில் தனது கட்சிக் கொள்கையை பிரசங்கிப்பவனும், தேர்தல் அறிக்கையை பிரகடனப்படுத்துபவனும், ஆண்,பெண் குறிகளை அளவில்லாத ஆர்வத்துடன் ஆராய்ச்சி செய்பவனும், அதை அங்கே செதுக்க முற்படுபவனையும் நல்லாவே பாக்க முடியும். மனசுல மைக்கலேஞ்சலோனு நினைப்பு, செதுக்குறானாம். இவனுங்களுக்கெல்லாம் 'விக்ரம்' படத்தில கமல் சொன்ன மாதிரி(விக்ரம் படத்தில கமல் எப்டி வருவாருன்னு கேக்காம கவனிங்க!) ஒரு ட்ரீட்மெண்டை செய்ய வேண்டியதுதான். அது என்னன்னு சொல்லமுடியாது. ஏற்கனவே ஆபாசம்னு சொல்லிருவாங்கனு பயப்படுறேன், அதச் சொன்னா எல்லாரும் ஒதுக்கி வச்சிரப்போறாங்க. நா இப்போதாங்க வளரும் ப்ளாக்கர்.

அப்புறம் இன்னொரு வகை லூசுங்க இருக்கானுங்க. ரயிலில அவனுங்க காதலுக்கு சாசனத்தைப் பொறிச்சுக்கிட்டு இருப்பானுங்க. இந்த மன்மதன் அந்த ரதியோட பேர சாவியால செதுக்கி நடுவுல ஹார்ட் போட்டு உள்ள அம்பு உடுவானுங்க. இந்த மாதிரி கேசுகளில் பல கண்டிப்பாக ரிடர்ன் வரும்போது 'சரோஜா' பிரேம்ஜி மாதிரி வேற ஒருத்திய சுத்தி தேவதைகள சுத்த விட்டுட்டு இருப்பானுங்க. அவளுக்கு ஒரு கல்வெட்டு வரும்போது (திரும்பவுமாஆஆஆ!)(க்க்ர்ர்ர்ர்ர்....) .

பாத்தீங்களா, இந்த மாதிரி ஆசாமிகளுக்கெல்லாம் ஊரிலுள்ள எல்லா கழிப்பறைகளிலும் ஒரு சிலை வைத்து அங்கீகாரம் அளிக்க வேண்டும். கழிப்பறைகளுக்கு அவங்க பேர வச்சு, போர்டு பக்கத்தில அவங்க போட்டோ போட்டுட வேண்டியதான். அவங்களுக்காக சாகித்ய அகாதமில ஒரு புது பிரிவு துவங்க வேண்டிய கடமை நமக்கு இருக்கு.பின்ன, ஊர்ல எல்லா கலைஞர்களையும் மதிக்கிற நாம இவங்கள மட்டும் புறக்கணிச்சா காலம் நம்மை மன்னிக்காது. இதை நாம கவனிக்கலைனா இந்தக் கலை அழிந்துவிடக்கூடும். அதனால நலிவுற்றோர் சன்மானத்தொகைய பரிந்துரை செய்கிறேன்.


ஒரு கழிப்பறை இலக்கிய எழுத்தாளர்.
இதையெல்லாம் அனுமதிக்குது பாருங்க நம்ம நாடு ...... வாழ்க ஜனநாயகம்!!!!

இத இப்படியே விட்டரலாம்தான். ஆனா போதுமான சேம் ப்ளட் வரலயே. அதனால ஒரு ஜோக்(நீயெல்லாம் பதிவெழுதுறதே ஒரு ஜோக் தான்). ஒருத்தன் டாய்லெட்ல உக்காந்துருக்கான், வெஸ்டர்ன்ங்க. இப்பொ அவன் கஷ்டத்தை அவன் வாயாலயே கேப்போம் (அவன் அங்க முக்குறதையா?). நான் உக்காந்திருந்த போது பக்கத்து ஸ்டாலிலிருந்து குரல், "எப்படி இருக்கீங்க?". பொதுவா டாய்லட்ல வந்து நட்புறவு உரையாடல் ஆரம்பிக்கிறவன் இல்ல. ஆனாலும், நல்லாதான் இருக்கேன்னு சொல்லி சமாளிச்சேன்.
"எங்க போறீங்க?'
(டாய்லெட்லருந்து விண்வெளிக்கா போகபோறேன்.என்னமாவது சொல்லனுமே.)
"உங்கள மாதிரிதாங்க, சென்னைக்கு)"
"அங்க என்ன பண்ணலாம்னு இருக்கீங்க? நான் வேணா உங்களோட வரவா?"
(அவனா நீயு? be careful, என்னைய சொன்னேன்)
"இல்லீங்க. இன்னைக்கு எனக்கு வேற ஒருத்தர் வரேன்னு சொல்லிட்டாரு. அதனால் உங்களோட வர சான்ஸ் இல்ல."
உடனே அவன் பதறின குரலில், "இங்க பாரு, உன் கிட்ட பேசுறதுக்கெல்லாம் இங்க ஒரு நாதேரி பதில் சொல்லி கொல்லுறான். அவன் என்ன 'கேட்டகரி'ன்னு வேற தெரியல."

இதுக்கும் ப்ளட் வரலைனா கீழ இருக்குறதுதான் உங்களுக்கு ப்ளட் வர ஒரே வழி!


Comments Posted (8)

தமிழிஷ் இண்ட்லி ஆயிருச்சா? என்ன கொடும சரவணன்! என்னது? காந்தி செத்துட்டாராங்கற மாதிரி ஆயிடுச்சே நம்ம நிலைமை!

பப்பு ரிட்டர்ன்ஸ் :)

//தமிழிஷ் இண்ட்லி ஆயிருச்சா? //

என்னது காந்தி செத்துட்டாரா? :))

வித்தியாசமா எழுதியிருக்கீங்க! ரசிச்சு படிச்சேன்! வாழ்த்துக்கள்!

kalivariyil nanga athigam pathathu call girl appidinu potta phone number thaan...

welcome back பப்பு..

வஞ்சப்புகழ்ச்சி மாதிரி தெரியுதே....

நானெல்லாம் எப்பவுமே ஓப்பன் டாய்லெட் யூஸ் பண்றவனுங்க....
அங்க கூட கள்ளிச்செடில ஒரு கள்ளிக்காட்டு இதிகாசம் மாதிரி நீங்க சொன்ன இலக்கியாவாதிங்க எழுதிருப்பாங்க....

நல்ல எழுதியிருக்கீங்க...

ரசிக்கவும் , சிந்திக்கவும் வைக்கும் எழுத்து நடை அருமை . தொடர்ந்து எழுதுங்கள் மீண்டும் வருவேன் .

ஐயோ ஐயோ...

Post a Comment

இவ்வளவு தூரம் வந்துட்டீங்க... பதிவப் பத்தி ஏதாவது சொல்லிட்டு போங்க! அட்லீஸ்ட் திட்டீட்டாவது போங்க. அப்புறம் எங்க வாக்களிப்பு பொத்தான் இருக்குன்னு தேடி அழுத்திட்டு போங்க. 18 வயசு ஆகலையா? ப்ளாக்கருக்குள்ளயே வரமுடியாதே! மரியாதையா ஓட்டு போடுங்க!