சரக்குள்ள பதிவு (செம சரக்கு!)

Filed under , by Prabhu on 7/23/2009 07:33:00 AM

14

"சொல்லுங்க பப்பு, இப்போ எப்டி feel பண்றீங்க?"
"எனக்கு என்ன சொல்றதுன்னே தெர்ல. i feel excited. யுஷுவலா நான் அவார்ட் expect பண்ணி பதிவெழுறதில்ல. But if i got the award, எனக்கு சந்தோஷம் தான்."
இப்படியெல்லாம் தமிழக் கொல பண்ணி பேட்டி கொடுத்தாதான் நான் பெரிய பருப்புன்னு நம்புறானுங்க! என்ன செய்யுறது?

அதில்லாமலே நான் பெரிய பருப்பு தான். அதுக்கு என் வரலாறையும், என் பெயர் காரணத்தையும் எழுதனும். அதனால அந்த மேட்டர 50 வது பதிவுக்காக ஒதுக்கி வச்சிட்டேன். அப்புறம் என்னத்த எழுதுறதுக்காக இந்த பதிவ போட்டிருக்கன்னு நீங்க கேக்கலாம்.

அப்டி கேளு நைனா, நான் பாட்டுக்கு சும்மாக்காச்சு போகச்சொல்லா, நான் ஆதவன்ங்கிற பேர்ல குப்ப போடுற ஒரு பெர்ய மன்ஷன் ஏதோ அவார்ட் கொடுக்காராமே! என் பேரயும் அந்தாண்ட போட்டிருக்காராம். இன்னடா இது மெர்சலா கீதுன்னு போய் பாத்தா... அட, மெய்யாலுமே தான்! இன்னா விஷயம், காசு கீசு தர்வீங்களான்னு கேட்டு பாத்தா, அதெல்லாம் இல்ல, உனக்கு அவார்டே ஓவர்னு சொல்டாரு. சரிதான், இந்த வேர்ல்டுல சுளுவா கெடக்கிறது அட்வைசும், பதிவுலக அவார்டும்தான் போல.

அவராண்ட போய் கேட்டேன், அண்ணாத்த எனக்கிலாம் அவார்ட் கொடுக்கறயே எப்படின்னு? அதுக்கு அவரு, தம்பி உன் பதிவெல்லாம் படிச்சேன். செம தமாசுப்பா, நான் அப்படியே மெர்சலாய்டேன்னார். ஏம்பா, நம்மளா பாத்தா காமெடி பீஸாட்டமா இருக்கு? உளவுத் துறையெல்லாம் வச்சி விசாரிச்சாராம். நான் உளவுத் துறையளவெல்லாம் நான் வொர்த் இல்ல தல.

அப்பால நான் வாங்கசொல்ல அவார்ட் வாங்கின இளைய பல்லவன், ஆ!இதழ்கள் எல்லாத்துக்கும் வாழ்த்து சொல்லிக்கிறேன். அதில இளைய பல்லவன் படிச்சப்போ அவர் நான் படிச்ச கதையில இருந்து பேர் எடுத்து வச்சிருக்காருன்னு தெர்து. அதோட அவரே சரித்திர கதயெல்ல்ம் எழுதுறாராம். அங்கங்க எல்லாரும் சரித்தரக் கதை எழுதும்போது பப்பு, உன் கத மட்டும் ஏன் தரித்தரமா இருக்குன்னு கேட்டீங்கன்னா... பழமொழி சொன்னா அனுபவிக்கனும், ஆராயக் கூடாது.

இப்படிக்கா ஒரு சோக்கு சொல்லிட்டு அப்படிக்கா ஜகா வாங்கிக்குறேன்! எங்க எஸ்கேப்பு ஆவுற? நீ யாருக்கு கொடுக்குறன்னு சொல்லிட்டு போ. அய்யோ, அதெல்லாம் கேக்காதீங்க. நான் அவ்ளோ வொர்த் இல்ல. அப்புறம் இன்னொரு விஷயம்.
எல்லா புகழும் இறைவனுக்கே! அவார்ட் வாங்குறப்போ இப்படி சொல்லனுமாம். அப்ப தான் நம்மள பெரிய ஆளுன்னு சொல்வாங்க.


அது என்ன அவார்டுனே சசொல்ல மறந்துட்டேன் பாத்தீங்களா! அது 'Interesting Blog Award' (அ) சுவாரஸ்ய பதிவர் விருதாம். நல்ல சரக்கு இருக்குறவங்களுக்குதான் கொடுக்கனும், உனக்கேன்னு கேக்கலாம். அதான் இந்த பதிவோட சரக்க ஏத்த கீழ ஒரு சரக்கு சோக்கு. அதுவும் பாரின் சரக்கு!

எனக்கு இப்ப ஜோக் சொல்லியே ஆகணும்.

அமெரிக்கால ஒரு சிட்டி. அங்க ஒரு பார். டிடர்ஜண்ட் பாரான்னு கேக்குறவங்கள கஸாப் தம்பின்னு புடிச்சு குடுத்திருவோம். ஒரு குடிக்கிற பார். அங்க ஒரு பொண்ணு வர்றா. வந்த உடனே எவன்ட பேசலாம்னு பாக்குறா. அப்போ நம்ம ஆளு கண்ணுல படுறான்.
"நீ என்ன சரக்கு அடிக்கிற?"
"இதுக்கு பேரு மாய சரக்கு"
இவன பாத்தா சுண்ட கஞ்சி ரேஞ்சுக்கு இருக்கான். ஓவர் மப்புல இருக்கான் போல என அவன விட்டுட்டு பார்ல ஒரு ரவுண்டு வர்றா. எல்லாரும் முழு மப்புல இருக்கானுக, இல்ல ஆஃப் பாயில் போட்டுட்டு இருக்கானுக. இதுக்கு அவனே தேவலைன்னு வர்றா.
"ஆமா.... நீ மாய சரக்குன்னு சும்மாக்காச்சு தான சொன்ன?"
நம்மாளு, "இல்ல, நிஜம்தான்".
"நான் நம்ப மாட்டேன்"
இப்ப பாருங்கன்னு சொல்லிட்டு, ஒரு ரவுண்டு ஊத்திக்கிட்டு, ஒடிப் போயி ஜன்னலில குதிச்சிட்டான். அய்யோன்னு இவ எட்டிப் பாத்தா, அவன் பறந்துட்டே பில்டிங்க மூணு ரவுண்டு அடிச்சிட்டு வந்து உள்ள இறங்கினான். வாயப் பிளந்து ஆச்சரியப்பட்ட அவளுக்கு இன்னும் சந்தேகம் தீர்க்க இன்னொரு ரவுண்டு விட்டுக்கிட்டு நாலு ரவுண்டு அடிச்சான், அந்த பில்டிங்க. அந்த பொண்ணு எனக்கும் வேணும்னு சொல்ல, "யோவ் பார்டெண்டர், இதே சரக்க அந்த பொண்ணுக்கும் கொடுய்யா". அத குடிச்சிட்டு அந்த பொண்ணு நேரா போய் ஜன்னல் வழியா குதிச்ச........... சொய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ங்.... சப். கீழ இருக்குற அவ கார்ல போய் விழுந்து அவுட்.

இதப் பாத்த பார்டெண்டர், "யோவ், உன்னோட இதே வேலையா போச்சு. பக்கார்டி நாலு உள்ள போனா நீ பக்கா பாஸ்டர்டு டா, சூப்பர் மேன்".

ஹாரி பாட்டரும் muggle ராஜகுமாரனும்

Filed under , by Prabhu on 7/18/2009 09:32:00 PM

15

ஹாரி பாட்டர் கதைகள தீவிரமா படிச்ச என்ன மாதிரியான ரசிகர்களுக்குதான் இந்த படங்களுக்கான காத்திருப்புக்கான அர்த்தம் தெரியும். அதுவும் என்னைய மாதிரியான ஹாரி பாட்டர் fanatics களுக்கு இது ரஜினி படம். அத விட மோசம். கதைய படிச்சிட்டு எப்படி எடுத்துருப்பானோ, ஒழுங்கா எடுத்துருக்கனுமேன்னு ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அதுக்கு காரணம் Rowling ஓட எழுத்துக்கள். படிக்கும் போதே நமக்குள்ள mixed emotions தான். குறிப்பா என்னை போன்ற adolescents
(அட, படிக்கும் போது அடலசண்ட் தாம்பா).

இது ஹாரி பாட்டர் படத்தோட விமர்சனமான்னு கேட்டா அதுவும் தான். நான் விமர்சனம் எழுத ஏற்கனவே ட்ரை பண்ணி பெரிசா வரலன்னு எனக்கு தோணுது. இப்போதான் ஆதவன் என்னையும் படிச்சு ஏமாந்து சரக்கிருக்கிற பதிவுன்னு சொல்லிருக்காரு. அத நம்பி வர்றவங்கள ஓடவிட விருப்பமில்ல.அதனால அந்த படத்த பத்தி என்னவெல்லாம் தோணுதோ எழுதுறேன். ஆமா,....'ஹாரி பாட்டரும் மாயராஜகுமாரனும்' தான படத்தோட பேரு நீ என்ன 'muggle ராஜகுமாரனும்'னு போட்டிருக்கனு கேக்கலாம். சொல்றேன். விடை பதிவின் கடைசியில்னு போட்டா கடைசி போயிட்டு, சூப்பர்னு போட்டோ போடாமலோ போய்விட வாய்ப்பிருக்கிறதால, நடுவால எங்கயாவது சொறுகி விடுறேன். படிச்சிக்கோங்க!

முதல்ல விளக்க வேண்டியது படத்தோட தலைப்பு. 'Harry Potter and the Half-Blood Prince' ஓட தமிழாக்கம் தான் இந்த படம். படத்துக்கு 'ஹாரி பாட்டரும் அரை ரத்த அரசகுமாரனு'ம்னு பேர் வைப்பாங்களோன்னு நெனச்சோம். பரவாயில்ல கொஞ்சம் நல்லாருக்கனுங்கிற எண்ணத்துல வச்சிருக்காங்க. half-blood ங்கிறது மந்திரம் தெரிஞ்ச ஆண்/பெண் , சாதாரண ஆண்/பெண் (இவங்களத்தான் muggleனு சொல்வாங்க!) கலப்பில் பிறக்கிற கலப்பினத்த சொல்வாங்க.

போன பாகமான 'Harry Potter and the Order of the Phoenix' விட்ட இடத்துல இருந்து தொடங்குது படம். Harry காபி ஷாப்ல ஒரு பொண்ணோட கடலை போட ட்ரை பண்ணும் போது இடையில Dumbledore(Principal) வந்து ரிடையர் ஆன Horace Slughornன எதுக்காகவோ ப்ரொபசரா ஆக்குறதுக்கு இவன அழைச்சிட்டு முயற்சி பண்ணுறாரு. அப்புறம், Draco Malfoy கிட்ட ஒரு மூக்குடைப்போட ஹாரியின் பள்ளி வாழ்க்கை அந்த வருடம் 'இனிதே' துவங்குது.


அதன் பிறகு Malfoyஓட ரகசிய நடவடிக்கைகள், Ron-Hermione நடுவில நடக்கிற ஊடல்-கூடல், Harry-Ginny நடுவில புதுசா வொர்க் அவுட் ஆகுற long felt chemistry, Dumbledore கிட்ட ஸ்பெஷல் கிளாஸ் என ஓடிட்டிருக்குற கதையில ஒரு சின்ன நெருடல் தான் ஹாரியோட potions book. அந்த புத்தகத்தோட பழைய சொந்தகாரன் பல உபயோகமான குறிப்புகளையும், மந்திரங்களையும் நுணுக்கி வச்சிட்டு போயிருப்பான். அட்டையில 'இந்த புத்தகம் மாயராஜகுமாரனோடது'(Property of Half-blood Prince) என போட்டிருக்கும். இந்த புத்தகம் மேல Hermione, Ginnyக்கு சந்தேகம் இருந்தாலும் அந்த புத்தகத்தின் மேல அபார நம்பிக்கை வச்சிருப்பான். ஆனா, அவன் நம்பிக்கை தவறுது. அது அவனுக்கு ஆபத்தானதால Ginny அதை மறைச்சு வைக்கிறா.

Snape ஒரு மீறமுடியாத சத்தியத்த(Unbreakable Vow) Malfoy அம்மாக்கு செஞ்சு தந்திருக்கானு ஒட்டு கேக்கிறான் ஹாரி. Dumbledoreஅ கொல்ல ஒரு சபிக்கப்பட்ட நெக்லஸ் ஒரு பொண்ணு மூலமா வந்தது பாத்ததும், அதுவும் Malfoy வேலையா இருக்கும்னு ஹாரி நினைக்கிறான்.

Dumbledore அடிக்கடி வெளிய போறதுக்கான காரணங்களையும், வோல்டிமோர்ட் சம்பந்தப்பட்ட சில பழைய நினைவுகளையும் ஹாரிக்கு விளக்கும் போது வேல்டிமோர்ட் கிட்டத்தட்ட சாகாவரம் பெற்றவங்கிற விவரம் தெரிய வருது. Slughorn கிட்ட இருக்கிற அந்த முக்கியமான நினைவு என்ன? வோல்டிமோர்டோட அந்த கிட்டதட்ட சாகாவர ரகசியம் என்ன? Dumbledore ஹாரிகிட்ட ஒப்படைக்கிற பொறுப்பு என்ன? யாரு அந்த மாயராஜகுமாரன்? Malfoyஓட ரகசியம் என்ன? Snape எதுக்காக சத்தியம் பண்ணி கொடுத்தான்? இதுக்கெல்லாம் விடை தெரிய படம் பார்க்கனும். ஓசில கதை கேக்கலாம்னு நெனச்சீங்களா?

புத்தகத்தை த்ழுவி எடுத்திருந்தாலும், அப்படியே எடுக்காமல் ஒரு சில விஷயங்கள படத்துக்காக உருவாக்கியிருப்பது கதையின் விறுவிறுப்புக்கு கை கொடுப்பதோட, புத்தகத்த படிச்சவங்களுக்கு போனஸ்! உதாரணம் Weasley இல்லத்துக்கு Bellatrix வந்து , அதனால் உருவாகும் ஒரு சண்டை காட்சி. புத்தகக் கதையை போல அல்லாமல் படத்தில் ஆரம்பத்திலேயே Ginny மேல் Harryக்கு ஒரு 'இது' இருக்கு. தேவையில்லாத புத்தகத்தின் கொசுறு விஷயங்களில் கவனம் காட்டி புத்தக எழுத்தாளர், வாசகர்கள திருப்தி படுத்த நினைக்காம, படிக்காதவங்களும் பார்க்கும் படியா எடுத்துருக்காங்க. காட்சிகளுக்கு காட்சி நகர்ற வேகம் அற்புதம்.

இந்த கதை, புத்தகம் பற்றிய பொதுவான கருத்து, இது சின்னப் பசங்க கதை/ படம் என்பது. ஆனா, இது ஒரு சாதாரண fantasy வகையா இல்லாமல், ஒரு திரில்லராகவும் எடுத்திருக்காங்க. அப்புறம் நிறைய, ரொமான்ஸ் சம்பந்தப்பட்ட காட்சிகளை வச்சிருக்காங்க. முக்கால்வாசி Ron-Hermione-lavender முக்கோணக் காதல், Ginny-Harryக்கு இடையான ஒரு கெமிஸ்ட்ரி என ஹார்மோன்களின் வேலையாகவே இருக்கிறது. ஹாரியின் முக்கிய ரசிகர்களின் (இவர்களின் டீன் ஏஜில் தான் கதைகள் வெளியாயின) வயது 20ஐ நெருங்கி இருக்றதாலயும், அவங்க வாழ்க்கையில சந்திக்க கூடியதாவும் இருக்கிறதால இந்த மாதிரி எடுத்திருக்க வாய்ப்புகள் உண்டு (எனக்கு 20 உனக்கு 18ஆ?). அத விட முக்கியமான காரணம் ஏழாவது பாகத்த ரெண்டா வெட்டுறதால இதுலயும் சண்டைகள் நிறைய வச்சா ஓவர் டோஸ் ஆயிடும்னு பயப்படுறாரு.

படத்தோட CG பிச்சிருக்காங்க. ஆரம்பத்தில பாலத்த முறுக்கிறதில இருந்து கடைசியில அந்த குகைக் காட்சிகள் வரைக்கும் அருமையா இருந்துச்சு. Dumbledore கடைசியில உருவாக்கிற சீறிக்கிட்டு வரும்நெருப்பு வட்டம் செம சீனு. புத்தக அட்டையில வந்த காட்சி போலவே இருந்தது. Cinematographer தன்னோட பங்க சிறப்பா செஞ்சிருக்காரு. அதுவும் அந்த ஆரம்ப காட்சியில் காமரா கிளம்பி புயலோடு சென்று பாலத்தை அடையும் lengthy shot.... it was breathtaking. எடிட்டிங் செம க்ரிஸ்ப். ஆனால் சில இடங்களில் காட்சிகளை விட்டு தவ்வியது போன்று தோன்றுவது அதே எடிட்டிங்கின் குறைபாடு. கடைசியில் ஹாரி தண்ணீரில் கைவிடும் போது அவன் கைய தண்ணில இருந்து ஒரு கை பிடிக்கும்னு கதையில் படிச்சு தெரிஞ்ச என்னையவே மிரட்டுச்சுன்னா, தியேட்டர்ல பல பேர் அந்த சீன்ல ஜெர்க் ஆனாங்கன்னு சொல்ல தேவையில்ல. செம த்ரில் அந்த ஒரு காட்சி.

படம் மட்டும் பார்க்க வர்றவங்க ரொம்ப மாயாஜாலத்த எதிர்பார்த்தா, ஏமாற்றம்தான். ஏன்னா இன்னும் ரெண்டு பாகம் முழுக்க ஆக்ஷனா ரெடியாகும் போது, இதயும் அதிரடியா எடுத்தா அலுத்துப் போயிடலாம். அதான்.
மொத்தத்தில ஒரு த்ரில்லர் ஆனாலும், ஆங்காங்கே நகைச்சுவை பளிச்சிட கொடுத்திருக்காங்க.

இப்ப முக்கியமான பார்ட். முகமெல்லாம் பிரகாசமாகுதே! கரெக்ட்! நம்ம Emma Watson பத்தியும்தான். எப்பவும் போல பொண்ணு அழகுதான். அப்பப்ப ரகசியமா வெட்க்கப்பட்டு முகம் சிவக்கும்போது, அடடா.... ஹீரோவுக்கு இல்லாத சவுண்டு தலைவிக்குதான். வந்த உடனே என்னா சவுண்டு! Rupet Grint (Ron Weasley)- காமெடிக்கு யூஸ் பண்ணிருக்காங்க. Daniel Radcliffe (Harry Potter) - இவரும் ஓகே தான். Bonie Wright (Ginny Weasley) - பொண்ணு கடமைய சரியா செஞ்சுட்டு போயிருக்கு. எனக்கு இந்தப் பொண்ணயும் பிடிச்சது. எல்லாரும் எம்மா வாட்சனப் பாக்கும் போது நீ ஏன் இவளயும் பாக்குறன்னு கேட்டா அதுக்கு ஒரு extensive தியரியே வச்சிருக்கேன். அப்புறம்! Alan Rick (Severus Snape) - இவரோட நடிப்பு ரொம்ப அருமை. இவர் கேரக்டருக்கான ஆழம் இனி மேலும் கூடப்போகுதுங்கிறத உணர்ந்து நடிச்சிருக்காரு. Very defining. இது போக Professor Slughornஆ வர்ற Jim Broadbent நல்ல நகைச்சுவை கலந்த கதாபாத்திரமா வந்திருக்காரு.

திரைக்கதை எழுதிய Stephen Knovles ஐ பாராட்டியே ஆகனும். ஏன்னா இந்த புத்தகத்த திரைக்கதையாக்குறது கஷ்டம். அவ்ளோ பெரிய புத்தகத்த செல்லுலாய்டுக்கு ஏற்றாற் போல கொண்டு வந்திருக்கிறார். Director David Yates நல்லா எடுத்திருக்கார். அடுத்த பார்ட்ட்களின் நம்பிக்கையை உண்டாக்குகிறார். மொத்தத்தில் இது ஐந்தாம் பாகத்தை விட அருமையாக இருக்கிறது.

நெகடிவ் பாயிண்ட்ஸே இல்லையா? ஏன் இல்ல? மாயாஜாலத்த எதிர்பார்த்து போற நம்ம ஊரு மக்களையும், சின்ன் பசங்களையும் கொஞ்சம் ஏமாத்திருக்கு. எடிட்டிங் சில இடங்களில் கொடுத்த காசுக்கு ஓவராவே வேலை பாத்திருக்காங்க. யப்பா, சீக்கிரம் படத்த எடுத்து முடிங்கப்பா! முதல் பாகம் எடுக்கும் போது அவங்களுக்கும், ஹாரி பாட்டர் கதாபாத்திரங்களுக்கும் ஒரே வயசு. இப்போ மாடு மாதிரி வளர்ந்துட்டானுங்க. 20 வயசு ஆன பிறகு இன்னமும் 16 வயசுன்னு சொல்லிக்கிட்டு.... இந்த படத்த மற்ற இரண்டு பாகங்களுக்கு ஒரு முதல் படியாக பயன்படுத்திருக்காங்க. அதனால அடுத்த பாகங்களில் நீங்கள் சூட எதிர்பார்க்கலாம். இப்பொழுதைக்கு ஒரு நல்ல ப்டம் ரசிக்க. ஆறினாலும் அருமையான டீ.


ஹாரிபாட்டரும் மாயராஜகுமாரனும் - குறைவான மாயாஜாலங்களுடன்

தரம் - நல்ல படம். பார்க்கலாம், குறிப்பாக ஹாரியின் புத்தக ரசிகர்கள்.


டிஸ்கி- ஹாரி பாட்டரும் muggle ராஜகுமாரனும் -என் தலைப்ப யோசிச்சிங்களா?
அது நான் தான். எப்படின்னு யோசிங்க! என் பெயர் பிரபுகுமார்.

டிஸ்கி 2 : ஹாரி பாட்டர் கொட்டை வடிவில்( in a nutshell) தர முடிவு செய்துள்ளேன். ஆனால் அது பெரிய வேலை. உங்கள் ஆதரவு இருந்தால் தான் அதை செய்ய இயலும். சொல்லுங்க! ஆரம்பிச்சிருவோமா?

High definition trailer

டாப்பு அடிக்கலாம்

Filed under , by Prabhu on 7/05/2009 11:10:00 PM

19

டாப்படிக்கிறதுங்கிறது ஒருத்தர் ரெண்டு பேருன்னு இல்லாம பல பேரு கூடி ஒரே இடத்தில மொக்க போடுறது. அதுவும் பொது இடம் என்றால் மிகவும் நலம். அதுவும் தெரு முனைகளில் அடிப்பது அந்த ஏரியாவில் பெரும் புகழை பெற்றுத் தரும். ஆனா, இதெல்லாம் எங்கள மாதிரியான காலேஜ், ஸ்கூல் மாணவர்களுக்கு மட்டும்தான். பதிவுகல நடுத்தர வயது 'யூத்'களுக்கு அல்ல. இது பொதுவான வார்த்தைப் பிரயோகம்னு நினைத்துக் கொண்டிருந்த பொழுது, 'சுப்ரமணியபுரம்' படத்துல "தேநீரில் ஸ்நேகிதம்" பாடலில் சுவத்துல 'மாப்ள்' போன்ற வட்டார சொற்களோட எழுதிருப்பாங்க. (அய்யோ...விஷயத்துக்கு வாடா..) இதனால என்ன சொல்றேனா, டாப்பு அடிக்கிறது என்ற புதிய சொல்லாடலை(பிரபல பதிவர்னா இந்த வார்த்தைய அப்பப்ப சொல்லனுமாம்!) பதிவுலகத்துக்கு அறிமுகம் செய்யுறேன்.
--------------------------------------------------------------------------------------------------
எல்லாரும் குருமா, கொத்து புரோட்டா, கொத்துமல்லி சட்டினி என சரக்கில்லாதப்போ மொக்க போடுறதுக்கு ஒரு பேர் வச்சிருக்கா மாதிரி நம்மளும் ஏதாவது செய்யனுமேனு யோசிச்சப்போ, கண்ட சரக்க கலந்து கொடுக்கிறதால காக்டெயிலுன்னு வைக்கலாம்னா அது கார்க்கிட்ட, சரி நம்ம எழுதறது மேட்டரே இல்லாம சும்மா தான எழுதுறோம் சும்மானு பேர் வச்சா தமிழ்மாங்கனி காயத்ரி கோவிச்சுக்குவாங்க, புரோட்டா குருமானுனு கூட வைக்க முடியல. அதான் கொஞ்சம் regional and cultural டச்சா எங்க slangல டாப்பு அடிக்கலாம்னு வச்சேன். இதுல பல பரிமாணங்களில் மொக்க போட போறேன். Be careful!
--------------------------------------------------------------------------------------------------

சமீபத்துல ஒரு ஹை கோர்ட் குடுத்த ஒரு தீர்ப்பப் பத்தி பதிவுலகமே 'பத்தி' எரியும் நெனச்சேன். புஸ்வானமா போச்சு. கேஸே பத்தி எரியுறதப் பத்திதான். IPC377 ஒழிக்கச் சொல்லி சிபாரிசு பண்ணியிருக்காங்க. அந்த் செக்ஷன் sodomy பத்தினது. அதான் ஹோமோ செக்ஷுவாலிட்டி! ஓரினச் சேர்க்கைய குற்றமா அறிவிச்ச அந்த பிரிவத் தூக்குவதன் மூலமா ஓரினச் சேர்க்கை இந்தியாவில் சட்ட பூர்வமானதா ஆகுறதுக்கான அடையாளம் தெரிகிறது. அதுக்கு அமெரிக்காவின் புகழ் பெற்ற இந்திய ஆங்கில எழுத்தாளா(கவிஞ)ரான 'விக்ரம் சேத்' கூட மகிழ்ச்சி தெரிவிச்சிருக்காரு. அந்த ஆளே ஓரினச்(அல்லது ஈரினச்(bisexual) சேர்க்கையாளர்ங்கிறது கொசுறு செய்தி. அடுத்து அவங்க திருமணம் செஞ்சுக்கறதுக்கு கூட சட்டம் வரலாம்!
--------------------------------------------------------------------------------------------------

வெள்ளிக் கிழமை என் பிரண்டு அஜயோட அழகர் கோவில் போயிருந்தேன். அங்க மலை மேல பைக்க நிறுத்திட்டு ரெண்டு அடி எடுத்து வைக்கல, 'தம்பி, பைக்குல எதுவும் வச்சிருந்தா எடுத்துக்கோப்பா'னு ஒருத்தரு சொன்னாரு. என்னன்னு திரும்பி பாத்தா, குரங்கு என் பைக்குல ஏறிடுச்சு. திருட்டு குரங்குங்க.! பைக் டாங்க் மேல இருக்குற pouchல கூட கை விடுதுங்க. ஒருத்தர் பைக்குல வச்சிருந்த சாப்பாடெல்லாம் எடுத்துருச்சு. என் பைக்குல ஏறுன குரங்கு, pouchஅ திறந்து பாத்துட்டு அமைதியா இறங்கி போயிருச்சு. அனேகமா என்னோட பைக் துடைக்கிற அழுக்குத் துணிய மோந்து பாத்திருக்கும்! நானும் ரெண்டு நாளா மதுரை மாவட்டச் செய்திகள பாத்துக்கிட்டு இருக்கேன், 'அழகர் கோவிலில் ஒரு குரங்கு மர்மமான முறையில் சாவு'ன்னு நியூஸ் வருமானு.
என் பைக்க பைய திறக்குது பாருங்க, திருட்டு குரங்கு!


அங்கயும் பொரி, கடலை எல்லாம் விக்குறாங்க. அத வாங்கினாலும் குரங்கு பிடுங்கிட்டு போயிரும். இந்த பொரி கடை காரங்கதான் தங்களோட தொழில டெவலப் பண்ண இந்த குரங்குகள வளர்கிறாங்கன்னு ஒரு conspiracy theory கூட வச்சிருக்கேன்.

நாங்களும் ட்ரை பண்ணுவோம்ல! அதுங்கள ஒழிக்க கமாண்டோ ட்ரைனிங்!
-------------------------------------------------------------------------------------------------
எல்லாரும் பினிசிங் டச்சா கவிதை, நகைச்சுவைனு எழுதுவாங்க. நமக்கு கவிதைன்னு நாலு வாட்டி சொன்னாலே 'ஜல்ப்பு' பிடிச்சிக்கும். அதனால ஒரு ஜோக். அதுவும் 'ஏ' ஜோக்தான் சொல்லனும்னு ஆசை. ஆனா, வரிசையில் முதல் பதிவு என்பதால சைவம்!

விவசாயியும் புது மனைவியும்

ஒரு அமெரிக்க குடியானவன்(?!) சரி, உங்க பாஷையில விவசாயிக்கு கல்யாணம் நடந்தது. அவன் தன் புது மனைவியோட குதிரை வண்டியில போறான்.
அப்போ அந்த குதிரை மக்கர் பண்ணுது. அவனுக்கு சரியான கோபம். 'ஒண்ணு' அப்படின்னு சொன்னானாம். பொண்டாட்டிக்கு புரியல!
இன்னொரு தடவ மக்கர் பண்ணுச்சு அந்த குதிர. 'ரெண்டு' அப்படின்னு சொன்னான். என்னடா, வடிவேலு கணக்கா காமெடி பண்ணிக்கினு இருக்கான், என அவன் பொண்டாடி நெனச்சா.
அடுத்த தடவ மக்கர் பண்ணப்போ, 'மூணு' அப்படின்னு சொல்லிட்டு துப்பாக்கிய எடுத்து அந்த குதிரைய நோக்கி வச்சு......டுமீல்!
அதப் பாத்த அவன் மனைவி, "அடப் பாவி மனுஷா! அநியாயமா ஒரு குதிரைய கொன்னுட்டியே! வாயில்லா ஜீவன் அது! அந்த பாவம் நம்மல சும்மா விடுமா!" என அவன கரித்துக் கொட்ட, அவன் அவளை நோக்கி திரும்பி அமைதியாகச் சொன்னான்,
"ஒண்ணு"

நாட்குறிப்பில் ஒரு நாள்.......

Filed under , , by Prabhu on 6/23/2009 10:33:00 AM

10


“ச்சே.... வர வர தூக்கம் ரொம்பதான் அழுத்துது. தலவலிடா. அம்மாஆஆ... மணி என்ன?
“ஏழு மணியாச்சுடா.
“என்னம்மா, உன்ன அஞ்சு மணிக்கே எழுப்பிவிடச் சொன்னேன்ல? ஏழு மணி வரைக்கும் தூங்க விட்டிருக்க? (இன்னைக்கு பதிவ வேற பப்ளிஷ் பண்ணனுமே!)
“சனியனே, உன்ன அஞ்சு மணியில இருந்து எத்தன தடவ எழுப்புறது?
“ஓ, எழுப்பினயா? சரி விடும்மா. (ராத்திரி ப்ளாக் பக்கம் போறத நிறுத்தனும்)
பதிவ வெளியிட்டுட்டு, பழைய பதிவுக்கு வந்த கமெண்ட்டுகளுக்கு எதிர் மொக்கைகள போட்டுட்டு, நிமிர்ந்து பாத்தா மணி ஏழு. டிரஸ் எடுக்க ஓடினேன்.
“டேய், குளிடா!
“அம்மா, அதுக்கெல்லாம் நேரமில்லமா. காலேஜ்க்கு லேட் ஆயிடுச்சு.
“சாப்பிடலயா?
“ம்ம்ம்.... மூணு சப்பாத்தி எடுத்து வை.
“அதான பாத்தேன். லேட்டா போனாலும் கொட்டிக்காம போக மாட்டியே!
எடுத்து வச்சிருக்கேன். காலேஜ்க்கு ஆறு எடுத்து வச்சிருக்கேன்.
“ஃபிரண்ட்ஸ்க்கு ஒன்னு ரெண்டு சேத்து வை. நாய்ங்க கேக்காம டப்பாக்குள்ள கை விடுவானுக. “
“போய்டு வரேன்மா!
“நேரம் நல்லாதான் இருக்கு, போய்டுவா!
பைக்க எடுத்துக்கிட்டு விரட்டினா, மனசுக்குள்ள ஏ.ஆர்.ரஹ்மான் வந்து 1,2,3,4...என்றென்றும் புன்னகைனு பாட, பக்கத்தில ஒரு Lady Doak college பொண்ணு ஸ்கூட்டி போனா, ஸ்பீடோமீட்டர் தானாக அவ ஸ்கூட்டி ஸ்பீடுக்கு அட்ஜெஸ்ட் ஆகுது, என்ன செய்ய? இன்னைக்கும் லேட்தான்.

அங்க லேட்டா போய் பைக் ஸ்டாண்டில பைக்க போட்டுட்டு, ஹேர் ஸ்டைல சரி பார்த்துட்டு வேகமா க்ளாஸுக்கு ஓடினா, பாதி வழியில ஒருத்தன் ஆமை வேகத்தில போய்க்கிட்டிருப்பான். என்னடா இன்னைக்கும் லேட்டா, வாடா சீக்கிரம் போயிடுவோம்னு சொன்னா, லேட் ஆகிப் போச்சு இனிமே அவசரமாப் போனா டயத்துக்கு போனதா ஆகிடாது, லேட்டா போனா புதுசாத் தப்பாயிடாதுன்னு விசு மாதிரி குழப்பி மெதுவா கூட்டிட்டு போனா, அங்க சிரிச்சு சிரிச்சே கழுத்தறுக்குற white openஓட க்ளாஸ். யூ ஆஸ்க் மி வாட் இஸ் வொயிட் ஓபன். வொயிட் மீன்ஸ் வெள்ளை, அண்ட் ஓபன் மீன்ஸ் தொர, டோடலி இட்ஸ் வெள்ளைதுரை,எங்க Plant Biotech professor. Why late? குழந்தை எந்த நாடாயிருந்தாலும் முதல்ல ம்மா...ன்னு சொல்லுற மாதிரி ஸ்டூடண்ட்களுக்கான default பதில், “லேட்டாயிருச்சுன்னு சொன்னதும், மூஞ்சில்லாத துப்பாத குறையா, கேவலமாப் பார்த்துட்டு, Come inside”. உள்ள போனதும் (சுண்டு)சுந்தர பாத்து சிரிச்சுக்கிட்டே பக்கத்தில போய் உக்காந்தா, “மச்சான் மொக்க போடுறான் டா என அவன் கம்ப்ளைன் பண்றான். “விடுறா பாத்துக்கலாம்டாஆஆஆஆஆஅஹ்ஹ் என சொல்லி முடிக்கும் முன்னே கொட்டாவி வந்து விடுகிறது. அப்புறம் ஆபத்தில வந்த ஆபத்பாந்தவனாய் வைப்ரேட்டில் போட்ட மொபைலில் மெசேஜ் வந்து என் பேண்ட் பாக்கெட்டில் துடிக்க, திறந்து பாத்தா, ஒரு மொக்க! L? அப்புறம் அவன திட்டினேன். அவன் எதுக்குடா திட்டுனன்னு கேக்க, நான் பதிலுக்கு திட்டன்னு அந்த கேம் ரெண்டு பீரியட் தாங்குச்சு.

லன்ச் சாப்பிடற டயம் வந்த்தும் கேண்டீனுக்கு போய் அவன் கிட்ட சாப்பாடு வாங்காம, அவன் முன்னாடியே டிஃபன் பாக்ஸ திறந்திட்டு உக்கார்றது. அவன் பாத்தா ஒரு சிரிப்ப்ப் போட்டு, “அண்ணே, பிஸினஸ் எப்படி போகுதுன்னு கேட்டு கரெக்ட் பண்ணிக்குவோம். அங்க வேட்டையாடு விளையாடு க்ரூப்ஸ் வர்றதுக்குள்ள சாப்பிடறதுதான் முதல் வேலை. அதென்ன வேட்டையாடு விளையாடு க்ரூப்ஸ் எனக் கேட்டீங்கன்னா, as the name indicates, டிபன் பாக்ஸ் திறந்தா மானக் கண்ட சிங்கம் மாதிரி பாயுவானுங்க, அவனுங்க சாப்பிட்டுட்டு போனபின் அந்த டேபிள் சிங்கம் குதறின மான் மாதிரி இருக்கும், அன்னைக்கு அந்த மேஜையில எவனும் சாப்பிட முடியாது. அப்படி நாறடிப்பானுங்க.

உண்ட களைப்பு தீர ரெண்டு மணி நேரம் க்ளாஸில தூங்கினப் பிறகு, வெளிய டாப்பு. ஆனா, எங்க கேங்குக்கு ஒரு வித்தியாசமான ஒரு பழக்கம் உண்டு. க்ளாஸ் முடிந்தாலும், கட் அடிச்சாலும் வீட்டுக்கு போகிற வரை kaaleeகாலேஜ் விட்டு வெளியே போக மாட்டோம். அப்புறம் வழக்கம் போல ராஜாபார்லி பேக்கரி போய்டு உள்ள வரும் போது, “ஒரு ஊரில் அழகே உருவாய் ஒருத்தி இருந்தாளே....... எனப் பாடிட்டே வந்தா, பக்கத்திலிருந்த சுண்டு என்னப் பார்த்து சிரித்தான்., எதற்கு என நிமிர்ந்து பார்த்தா..........எதிரில அனு. குட்டியா, க்யூட்டா.......அழகான அனு.... ம்ம்ம்ம்.... அவளப் பாத்தா மூச்ச இழுத்து விடும் போது பல தடுப்புகளை சந்திக்குது. அந்த மூச்சுத் திணறல் அவஸ்தை இல்ல, இன்பம் தான் என நானும் சொன்னா அது monotonica இருக்காது? ரோலர் கோஸ்டர்ல விர்ர்ர்ர்னு போகும் போது ஒரு திகில் இருக்கும், அதே நேரத்தில் ஒரு போதையும், its intoxicating. இது கொஞ்சம் பின்நவீனத்துவ பாணியில இருக்குல்ல? வெரி குட்.(பதிவரானதோட சைட் எஃபெக்ட்!). அப்போதான் அவகிட்ட ஒரு வித்தியாசம் இருக்குறத கவனிச்சேன். அட, அவ முடி..... அதுக்குள்ள சுண்டு- “டேய், அவ ஹேர் ஸ்டைல் மாத்திட்டாடா. நல்லாதான் இருக்குஇதேதான் நானும் சொல்ல வந்தேன். அவ ஹேர் கொஞ்சம் கட் பண்ணி pony tail போட்டிருந்தா, சான்ஸே இல்ல... ஹைய்ய்ய்ய்யோ, தேவதையேதான்! “இப்படி சைட் அடிச்சே பொழப்பு ஓடுதே, என்னக்கிடா பேசப் போற?. “பேசுவோம் டா. “என்னக்கி........

வீட்டிலிருந்து “என்னடா காலேஜ் முடிஞ்சு இவ்ளோ நேரம் ஆச்சு, என ஃபோன் வர, வீட்டுக்கு கிளம்ப வேண்டியதாப் போச்சு. வந்த பிறகு கொஞ்ச நேரம் பதிவுலகத்த மேய்ஞ்சுகிட்டு இருந்தப்போ, ஜிங்குன்னு சவுண்டு கொடுத்திட்டு ஜிமெயிலில் எட்டிப் பார்த்தார், நம்ம கிஷோர்.
hi
hi
அப்புறம் ஆறாவது தடவையா நீங்க என்ன பண்றீங்கன்னு கேட்டு அவர காண்டாக்கினேன். இது பரவாயில்ல, ஒரே நாளில் ஒருத்தன பஸ்ல, க்ளாஸ்ரூம்ல, காரிடார்ல, டாய்லெட்லனு எல்லா இட்த்திலயும் பேரக் கேட்டு அவன் கடிக்க வந்த கதை அவருக்கு தெரியாது.

அப்புறம் அஜய் சிக்கினான், அவன்ட்ட mental masturbationஓட(ச்சீன்னு சொல்லாதீங்க......... அதப் பத்தி வேற ஒரு பதிவுல!) சைக்காலஜி பத்தி பேசும்போது, சரண்யா smsல வசமா மாட்டினா.
“சரண்யா, wat doing?
summa iruken.
i lov you, kuty
“டேய், ஆரம்பிச்சுட்டயா?
“நான் உன்ன காதலிக்க ஆரம்பிச்சு ஆறு மாசம் ஆச்சு.
“பப்பு, உனக்கு வேற யாரும் சிக்கலயா, என்கிட்ட ஆரம்பிசுட்ட.
“உன் ஒருத்திய பாத்தாதான் லவ்வெல்லாம் வருது
“டேய், உன் மொக்கய நிறுத்துடா
“அவன நிறுத்த சொல்லு நான் நிறுத்துறேன்.
“அய்யோ, நீ ஸ்டார்ட் பண்ணா நிறுத்த மாட்டியே
“நீ என்னய லவ் பண்றதா சொன்னா விட்டுடறேன்.
“டேய், போய் அனுகிட்ட மொக்க போடுடா, என்னய விடுடா!
“உன்னய அவ்ளோ ஈசியா விட முடியாதே
“திடீரென எதுக்குடா என்னய ஓட்ட ஆரம்பிச்சிட்ட? எப்ப இருந்து இப்படி?
“உன்ன பாத்திலிருந்தே இப்படிதான்.
“......
“ஹலோ
“....
ம்ஹூம்.... இன்னும் ரெண்டு நாளைக்கு மெசேஜ் ஓபென் பண்ணவே பயப்படுவா. சரி, அடுத்து யாரு? சுண்டு!
“டேய் சுண்டு, wat doing.....”
அப்படியே சாப்பிடுற நேரம் ஆயிட்டதால சூப்பர் சிங்கர்ல வர்ற ரேணுவ சைட் அடிச்சுக்கிட்டே சாப்பிட்டு முடிச்சா, நாளைக்கு இண்டர்னல்ஸ்னு மெசேஜ் வந்தது. நாளை என்பது கடவுளுக்கு, இன்று என்பது மனிதருக்குன்னு மொக்கத்துவம் சொல்லி அவன துரத்திவிட்டுட்டு, லேட்டாயிடுச்சு தூங்கடான்னு சொன்ன அம்மாவ சமாளிச்சிட்டு, கம்ப்யூட்டரில வந்து உக்காந்து வேர்ட் ப்ராச்சர திறந்து அடிக்க ஆரம்பிச்சேன், “நாட்குறிப்பில் ஒரு நாள்.......

கூகுளின் கூட்டு சதி

Filed under , , by Prabhu on 6/22/2009 06:29:00 AM

8

பதிவுலகத்துக்கு நான் வந்து இப்பொழுது கிட்டத்தட்ட 5 மாதங்கள் ஆயிருக்கும். இங்க வந்து நான் பெருசா சாதிச்சிட்டதா சொல்ல மாட்டேன். ஆனா, சில appreciable பதிவுகள வெளியிட்டிருக்கேன். கிஷோர், கேபிள் சங்கர், பொன்னியின் செல்வன், வினோத் கௌதம், வால் பையன், ஹாலிவுட் பாலா, 'எனது பயணங்கள்' பிரபு, 'my thoughts da machi' காயத்ரி, 'குப்பைத்தொட்டி' நான் ஆதவன் என பல நபர்கள சந்திச்சதும், அவங்கள்லாம் என்னோட பாலோயர்ஸா இருந்ததும் தான் எனது ஒரே achievement பதிவுலகத்தில. அதுக்கும் ஆப்பு வச்சிட்டாங்க. நான் வேற எங்க ஊரு அழகிரியப் பத்தி பதிவிட்டிருதேனா, அதனால தான் உன்னோட பளாக்க(Blog) ப்லாக்(block) பண்ணிட்டாங்க. அடுத்து அண்ணன் உங்க வீட்டுக்கு ஆட்டோ அனுப்புவாருன்னு வேற கெளப்பி விடுறானுங்க.

நான் இந்த பதிவுலகிற்கும், இந்த தமிழ் கூறும் நல்லுலகிற்கும் சேவை செய்து கொண்டிருப்பதைப் பார்த்த பொறுக்காத சில தமிழ் விரோத சக்திகள் தான் இதை செய்திருக்கனும். இது எனது வளர்ச்சியில் பொறாமை கொண்ட புல்லுருவிகள் தான் செய்திருக்கவேண்டும். இது எதிர் கட்சியினரின் திட்டமிட்ட சதி. இதற்கு ஆதாரங்கள் என்னிடம் இருக்கு. விரைவில அந்த சிடி ரிலீஸ் செய்யப்படும். இப்ப தான் தலைவர்களோட தில்லுமுல்லு எல்லாம் பிட்டு படம் மாதிரி சிடி ரிலீஸ் பண்ணி பரபரனு போகுதே. கலைஞர் கூட அவரு காமெடிக்கு சிடிதான் யூஸ் பண்றார். சிடிய பாத்து கண் கலங்குறாராம், இலங்கைதமிழர்களுக்கு. அட, இங்க எதுக்கு அரசியல்? வரவர மேட்டர விட்டு அடிக்கடி விலகி போயிட்டிருக்கேன். ப்ரொபசர் ஆகுறதுக்கான தகுதி எதுவும் வளருதோ?

சரி, மேட்டருக்கு வருவோம். ஒரு மாசத்துக்கு முன்னாடி ஒரு பதிவ போட்டுட்டு என் ப்ளாக்குக்கு போனா அங்க ஒரு மால்வேர் வார்னிங் வந்தது. அப்புறம் தெரியாத கோடிங்கெல்லாம் வச்சு மணிகணக்கா முட்டி, கூகுள கொஞ்சி மேடர கண்டு பிடிச்சா ntamilங்கிற social bookmarking siteதான் என்னோட பிரச்ச்னைக்கு காரணம். ntamilனு பேரு வச்சுக்கிட்டு என்னயவே போட்டுப் பாக்குறீங்களான்னு அத ரிமூவ் பண்ணிய பிறகும் கூகுள் என்னய போட்டுப் பாத்துட்டான்.

கடந்த ஒரு மாசமா பல நல்ல விஷயங்கள் தோன்றும் போதெல்லாம் ப்ளாக் இல்லாத வெறுமைய புரிஞ்சுக்க முடிந்தது. செமஸ்டர், கேரியர்னு வேற பல தடங்கல்கள். இதில சில சமயங்களில் வெறுப்பு ஏற்பட்டு பதிவுலக விட்டு வெளியேறிடலாம்னு கூட நினைச்சிருக்கேன். நான் போனா யாரும் மிஸ் பண்ண போறதில்லை. ஒரு மாதத்துக்கு முன்பு ரொம்ப ஆக்டிவிட்டியோட இருந்த நான், இந்த ஒரு மாத்ததில தடம் தெரியாமல் போய்விடவில்லையா? இதுதான் பதிவுலகம். Easy comes, easy goes. இப்பவும் பழைய அளவு ஆக்டிவிட்டியோட இருக்குறது முடியுமான்னு தெரியல. பார்க்கலாம்.

என்னுடைய பழைய ப்ளாக்கிலிருந்து பல பதிவுகள திரும்ப பதிவிட்டிருக்கேன். அந்த ப்ளாக் போனது கூட ஒரு indicationa இருக்கலாம். அத விட நல்ல பதிவுகள குடுக்க முயற்சி செய்வோம்.

18 வயசுல ப்ண்ண வேண்டியத 10 வயசுக்குள்ளயே முடிச்சவனுங்க..

Filed under , by Prabhu on 6/20/2009 06:07:00 PM

2




முதன்முதல்ல ஸ்கூல் போக அழுதது இன்னமும் நினைவிருக்கு. அழுக அழுக சமாதானப் படுத்தி எங்க அம்மா என்னய ஆயா கையில விட்டிருவாங்க. வீடு கொஞ்சம் கிட்டங்கிறதால அப்படி ஆயா கூட்டிட்டு போயிருவாங்க. என்னதான் அழுதாலும் க்ளாசுக்கு போய் அழுததில்ல. அங்க போய் ஏ,பி,சி,டி எழுதிட்டு, 'மிஸ் இங்க பாருங்க'(வயசான மிஸ்ஸுங்க, எனக்கும் 4 வயசுதான்), அப்புறம் அந்த பக்க ஸ்லேட்டு நிரம்பினதும் தண்ணி தொட்டு அழிக்கிறதும், ஒண்ணுக்கு போக மிஸ் கிட்ட ஆள்காட்டி விரல மடக்கி 'மிஸ், ஒன் பாத்துரூம்னு' கேக்குறதும், அதுக்கு ஆயாவுடைய தயவ நம்பி நிக்கிறதும் இப்ப நினைச்சு பாத்தா ஏதோ படத்துல நடந்த மாதிரியா நினைவில இருக்கு.

அப்புறம் ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் படிக்கும்போது வீடு கொஞ்சம் தள்ளிப் போச்சு; ரிக்ஷா அமர்த்தினாங்க. அந்த ஆளோட முகத்த பாத்தது அடி வயித்துல ஒரு கவ்வ்வ்...... உடனே அழ ஆரம்பிச்சிட்டேன்........அவ்வ்வ்வ்வ்வ்....நான் போகல, அந்த ஆள பாத்தா பயமாயிருக்கு. அம்மா, நீ சோறு ஊட்டும்போது சொல்ற பூச்சாண்டி மாதிரி இருக்கான்மா. விட்டிரும்மா, நீ போய் விடும்மா. கதற கதற அள்ளி போட்டு அனுப்பி விட்டாங்க. அது ப்ரைமரி ஸ்கூல், அஞ்சாப்பு தான் சீனியர். அங்க அஞ்சு படிக்கிற ஒரு அஞ்சுவும், அதுக்கு ஒரு நாலாப்பு குரங்கு அஸிஸ்டண்ட். ரெண்டு சீட் உண்டு; நார்மல் குஷன், சின்ன கட்டை சீட். குஷன்ல சீனியர், கட்டைல நான் (கட்டையில போறவன்னு சொல்லிடாதீங்கோ). சும்மா இருந்தவள இந்த நாலு கிளப்பிவிட (பயபுள்ள கோர்த்து விடுது பாரு). அஞ்சு என்னய ரேக் பண்ண ஆரம்பிச்சிருச்சு.

மொத கேள்வி சுற்று
உன் பேரு என்ன?
பிரபு... பிரபு குமார் (இண்டியன் ஜேம்ஸ் பாண்ட் மாதிரிதான் பேரு சொல்வேன்)
என்ன படிக்கிற?
ஃபர்ஸ்ட் ஸ்டாண்ட்
வயசு?
ஆறு (ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்டு வயசுன்னு தெரியாதவளெல்லாம் அஞ்சாப்பு படிச்சு என்ன பண்ண போறாளோ?)
சத்தமா பேசுடா?.
ம்ம்.....(மவளே சிக்குவேல)
நாங்க செய்றதெல்லாம் வெளிய சொல்லுவயா?
ம்ஹூம்.... (என்ன செய்வாய்ங்க... ஒரு வேள ரே...ரே.....ரே.... ரேக் பண்ணுவாங்களோன்னு சொன்னேன். கொஞ்சம் கேப் விட்டா புத்தி போறதப் பாரு.)

அப்புறம் அடுத்து தீவிர அடுத்தக் கட்ட நடவடிக்கை.
'சப்'
ம்ம்....
'சப்'....
ம்ம்/...
'சப்'
ம்ம்....
முத்தம் குடுக்குறான்னு நினைச்சா, அத ஆசிட் ஊத்தி அழிச்சிருங்க. அறை விட்டாங்க அவ. அப்ப கூட அழலயே நான். சின்ன வயசிலயே வீரம் இஸ் சீக்ரட் ஆஃப் மை எனெர்ஜி.

அப்புறம் கிள்ளினா. செம வலிப்பா. இப்ப நினைச்சா கூட வலிக்குது. சனியனுக்கு என்ன போட்டு வளத்தாங்களோ, மாடு மாதிரி வேற இருந்துச்சு. அப்புறம் தொடையில கிள்ளினா. ஏனோ அழ மாட்டேன்னு பிடிவாதம்.
வலிக்குதா? (அடிப்பாவி, ஏதோ கொஞ்சுற மாதிரி கேக்குறயே)
ம்ஹூம்....
இன்னும் அழுத்தி"இப்ப?"
முழிச்சேன் (லைட்டா....)
விரல்களிடையே சதைய வச்சு நசுக்க ஆரம்பிச்சா....அவ்வ்வ்வ்......
"இப்ப?"
வலிக்கலையே...
அடுத்து அந்த நாலு உள்ள வந்து "அக்கா நானு?"(டேய், இது என்ன ரோலர் கோஸ்டரா, சான்ஸ் கேக்க")
அந்தப் பக்கி இத்துனூண்டா இருந்துட்டு என்ன டார்ச்சர் பண்ணுது.
அப்பயும் நானொத்துக்களையே!
"இப்ப?"
இல்லக்கா.....(வேணாம் விட்டுரு, அப்புறம் அழுதுருவேன்)

கண்ல நீர் முட்டிட்டு வருது. இப்படியே தொடர்ந்தும் நான் ஒத்துக்கல. எப்படி எனக்கு அவ்ளோ தைரியம்னு தெரியல. இது பல நாள் தொடர்ந்தது. அப்படியும் நான் வலிக்குதுன்னு சொல்லாத்தால கேம் போரடிச்சு விட்டுட்டாளுக ரெண்டு பேரும்.

For a few, they get 'it' up just when somebody is screaming



இப்படியே மெல்ல மெல்ல எனது போராட்டங்கள் குறைந்து நெரிசல் மிகுந்த சாலையில் எனது பயணங்கள் ஆர்ப்பரிக்கும் அலைகடலின் நடுவே விவேகானந்தரின் தியான மண்டபம் போல ஆனது. எதுவும் கேட்கப் படுவதில்லை. எதுவும் கூறப்படுவதில்லை.

அப்படியே 2 வருஷம் ஓடிருச்சு. நான் இப்ப மூணாம் வகுப்பு. திரும்ப அதே மாதிரியான குரல். குஷன் சீட்டுல இருக்கற ஆள் ஜூனியர ஆள ரேக். ஏன் நடக்குது இந்த மாதிரி. இவ்ளோ நாளாச்சு. நீ சீனியர் ஆயிட்ட, இன்னமுமா பயப்படுற நீங்க கேப்பீங்க...

இஹ....ஹா.....ஹா(சூப்பர் ஸ்டார் மாதிரி)

இப்ப குஷன் சீட்டுல நான்.

டிஸ்கி:- என்னவோ இப்ப ரேக்கிங் பண்ணிட்டாங்கன்னு பஞ்சாயத்து பண்றாய்ங்க. நாங்களாம் பிரைமரி ஸ்கூல்லயே ரேக் ஆகி, நாலு பேத்த ரேக் பண்ணவனுங்க. பி கேர் ஃபுல்(நான் என்னய சொன்னேன்.). ஆனா ஒரு விஷயம் என்ன காலேஜ்ல கூட ரேக் பண்ணல, ஆனா ஸ்கூல்ல பண்ணிருக்கானுக.

பின்குறிப்பு- பி.எஸ்.ஜில படிக்கிற பையன ரேக் பண்ணிட்டாங்களாம். ஆனா, ரெடினாவுல ஒன்பது ஓட்டை விழற அளவு என்ன ரேக் பண்ணானுங்கன்னு புரியல. காதுல வேற குறைபாடு வந்திருச்சாம். இதுக்கப்புறம் நடவடிக்கையில ஈடுபடாம, காலேஜ் பேர் கெடக் கூடாதுன்னு சமரசம் பேச ட்ரை பண்ணிருக்காங்க பிரின்ஸ்பால். அந்தப் பையனின் அப்பா போலீஸ்ல போட்டு விட்டாரு. ரேக்கிங் பண்றது ஒரு நட்புறவுக்காக. அத தாக்கவும், கேலி பண்றதுக்கு மட்டும் பயன்படுத்தக் கூடாது.

பின் பின்குறிப்பு - இது ரொம்ப லேட் ரியாக்ஷன்னு சொல்லாதீங்க. ஏற்கனவே நான் இத பப்ளிஷ் பண்ணின ப்ளாக் சீனானது உங்களுக்கு தெரியும்.

கடைசில என்னையும் அரசியல்வாதி ஆக்கிட்டீங்களே! - என்ன கொடும சார்!

Filed under , by Prabhu on 6/20/2009 06:06:00 PM

1

நான் இன்னைக்கு காலேஜ் போறப்போ இன்னைக்கு தேர்தல் முடிவு வருதே, நம்மஓட்டு போட்டிருக்கோமே, என்னாகுதுன்னு பாக்கனுமே அப்படிங்கிறபரபரப்பெல்லாம் அடையல. எட்டு மணி காலேஜுக்கு ஏழரைக்கு எந்திருச்சு, எட்டுபத்துக்கு நிதானமா போய், க்ளாசுக்கு பக்கத்துல போனதும் ஒடுற மாதிரி சீன்குடுத்து, அங்க மூச்சிரைக்கறமாதிரி போய் நின்னுஎக்ஸ்க்யூஸ் மி சார்னுசொன்னா அந்த ஆளு நம்மல கேவலமா பார்க்க, அதையெல்லாம் கண்டுக்காமகண்ணுல இருக்கிற டெரர மறைச்சுக்கிட்டு மரியாதைய கொண்டு வரும் போது, “பக்கத்தில வந்த்தும் ஓடி வர்ற மாதிரி சீன் கொடுக்கறயா? ஏன் லேட்?”கேட்ககாரணம் தான் கேக்குறாருன்னு தெரிஞ்சும், “லேட் ஆயிருச்சு சார்என சொல்ல, “அது தெரியுது. காரணத்த கேட்டேன். சரி, உள்ள போய் தொலைஎன சொல்ல, ஒரு கேனச் சிரிப்பு சிரிச்சுக்கிட்டே நம்ம நண்பன் கிட்ட போய் உக்காந்தா 8.30க்குமெல்ல கண்ணு சொருகும் போது கை கைபேசியின் உதவியை நாடும் போதுதான்தேர்தல் முடிவு நினைவுக்கு வந்தது. வீட்டுல வெட்டியா இருக்கிற அஜய் கிட்டசப்ஸ்கிரிப்ஷன் போட்டு விட்டேன். 5 மணி வரைக்கு ஒரே after polling discussion தான்.

மொத்த்துல இந்த தேர்தல்ல காங்கிரஸுக்கு நல்ல ரெஸ்பான்ஸ். நான் இவ்ளோதூரம் எதிர்பார்க்கல. எதனாலன்னு தெரியல,ஆனா செமத்தியா ஜெயிச்சிருக்கு. பா...விட நல்ல மார்ஜின்ல செயிச்சிருக்கு. இதுல ஒரு நல்ல விஷயம்என்னவென்றால் பெரிய அளவிலான குதிரை பேரமும், என்னை மாதிரி முதல்முறை ஓட்டளித்த இளைய தலைமுறையினருக்கும் அரசியலிலநம்பிக்கையின்மை உண்டாகுறதும் தவிர்க்கப்படுகிறது. இந்த மக்களோட முடிவுபழைய ஆட்சி மேல இருந்த நம்பிக்கைய குறிக்குதா, இல்ல பா... மேல இருக்கவெறுப்பா, இல்ல குழப்பமான கூட்டணிகளின் பலனா என முடிவு செய்வதுஎனக்கு கடினமாகத்தான் இருக்கிறது. அவங்க தனியாவே 200 அடிச்சிட்டாங்க. இது போக கூட்டணியின் இதர கட்சிகள் சேர்த்தா 258 வருது. செம வலுவாஇருக்காங்க. பா...வோட தெசிய ஜனநாயக கூட்டணி 168 தான் தேறுது. கஷ்டம்தான்.

இந்த வலுவான கூட்டணிய விட்டு வெளிய வந்து தேவையில்லாம தனியாபோட்டியிட்டுட்டொமேன்னு லாலு வருத்தப்படுறாரு. அவருக்கு 5தான் வெற்றி. வெளிய வந்த்துதான் தப்புன்னு அவரோட நாலாவது அணி உருவாக்கினபஸ்வான், முலாயம் சிங் யாதவ் எல்லாரும் உணர்ந்திட்டாங்க. இதுல கொடுமஎன்ன்ன்னா இதுவரைக்கும் இந்தியாவுல் அதிகமான ஓட்டுவித்தியாசத்தில(5லட்சத்தி சொச்சம்) ஜெயிச்சவருங்கிற பெருமையகொண்டிருந்த பஸ்வானுக்கும் புட்டுக்கிச்சு. இப்ப திரும்ப தாய் கூட்டணிக்கேதிரும்பலாம் என முடிவு எடுக்கறதா தெரியுது. என்ன கொடும சார் இது!

ஆந்திராவுலயும் சொளையா 34 தொகுதிய அள்ளிருச்சு காங்கிரஸ். நம்மசீருவோட பிரஜா ராஜ்யம் ஒன்னு எடுத்திருக்காங்க. விஜயகாந்த் நிலைமைக்குஎவ்வளவோ தேவலை. சட்டசபை தேர்தல்ல அவரு திருப்பதில ஜெயிச்சாலும், தன்னோட சொந்த ஊரிலயும் போட்டி போட்டு அங்க தோத்துட்டாரு. சும்மாசொல்லக் கூடாது, சட்டசபை தேர்தல்ல 20 தொகுதி அவருக்கு வெற்றிகொடுத்திருக்காரு. இதுவும் விஜயகாந்த ஒப்பிடும் போது பெருசுதான். ஆனா, சீருஅங்க சூப்பர் ஸாருங்கோ! இங்க விஜயகாந்த்........?! என்ன கொடும் சார்!

வருண்காந்திய விட முடியுமா? அந்த பையனும் தேர்தல்ல நின்னு, பிரசாரத்திலவன்முறையத் தூண்டுற அளவுக்கு அதிகமா பேசி ஜெயிலுக்கும் போயிட்டுவந்துட்டாரு. ஆனாலும் அவர்தான் இப்போ இந்தியாவிலயே அதிக வோட்டுவித்தியாசத்தில வெற்றி அடைஞ்சிருக்கார். கிட்ட்தட்ட 2.5 லட்சம். அம்ம்மாடியோவ்..... நம்ம மாநிலத்துல ஜாதிப் பற்று மாதிரி வடமாநிலத்துல மதப்பற்று கொஞ்சம் அதிகமாத்தான் இருக்கு. மோடியவே ஜெயிக்க வச்சாங்களே. அதஇன்னொரு பதிவுல பேசுவோமே. என்ன கொடும சார்!

இதுக்கிடையில நம்ம மன்மோகன் சிங் ராகுல் காந்திய கேபினட்ல சேரனும்னுசொல்லி கேக்குறாரு. எனக்கு காங்., வந்தது கூட பிரச்சனையா தெரியல. ஆனா, இந்த மன்மோகன் சிங் தான் பிடிக்கவே இல்ல. பிரதமரானதுல இருந்து இவருசூச்சூ னாலுமே ஒரு அம்மா கிட்ட சொல்லிட்டுதான் போவாங்களாம்குழந்தைக்கு இருட்ட கண்டா பயம்). இதையும் யாரு சொல்லச்சொல்லிருப்பானுங்கன்னு நமக்கே தெரியும். அந்தப் பையனுக்கு மக்கள்மத்தியிலயும் கட்சியிலயும் வெயிட்டான மாஸ். அடுத்த தேர்தலுக்கு ஒருபிரதமரத் தயார்ப்ண்றாங்க. என்னதான் சொன்னாலும் இந்த தேர்தலுக்கு, SINGH IS KINNG.

கம்யூனிஸ்ட்ட விட்டுட்டோமே. அவங்க தங்களோட கோட்டைகளான கேரளா, மே.வங்கம் ஆகிய மாநிலங்களிலயே கவுத்துன பிறகு மற்ற ஊருகளிலசொல்லவா வேணும், டவுசர்தான். வர வர கம்யூனிஸ்டோட போக்கே சரியில்ல. அவங்க அரசாங்கத்துக்குள்ளயே இருந்துக்கிட்டு அவங்களுக்கே எதிர்ப்புதெரிவிக்குறாங்களாம். அஞ்சாவது வருஷம் வந்த்தும் ரோஷம் வந்து பதவி, கூட்டணி ரெண்டையும் விட்டு விலகுறாங்களாம். நல்ல கதையா இருக்கே. இதேமானங்கெட்ட வேலைய பார்த்த ராமதாஸுக்கும் பெரு ஆப்பு. ஒன்னு கூட தேறல.

தமிழக காங்., நிலைமை அந்தோ பரிதாபம்தான். பின்ன தேர்தல் நேரத்துல கூடஒண்ணும் பிரசாரம் பன்ணாம, ஒரு முயற்சியும் எடுக்காம இருந்த்துக்கு சிதம்பரம்முட்டிமோதி 3000சொச்சம் ஓட்டுல ஜெயிச்சதே பெருசு. அவரும் காசுகொடுத்தாராம். அதுக்கே இந்த நிலைமையா? இளங்கோவன், பாலு, மணிசங்கர்ஐயர் எல்லாத்துக்கும் சோலி முடிஞ்சிருச்சு. தி.மு..வும் இலங்கை பிரச்சனை தன்பக்கம் திரும்பக் கூடாதுன்னு காங்.,க்கு சரியா பிரசாரம் பண்ணல. பின்ன எப்படி? காங்கில ஒருத்தன் வேட்புமனு தாக்கல் செஞ்சா அவரு கட்சியிலயேஇன்னொருத்தன் அதிருப்தி காரணமா இன்னொரு வேட்பும்னு தாக்கல்செய்வான். இந்தக் கட்சி எப்படி முன்னேறப் போகுது.

திமுக 18 தொகுதில ஜெயிச்சிருக்கு. வெற்றிக்கு காரணம் ஹாஸ்பிடல்ல இருந்தஐயாவா இல்ல நோட்டுல இருக்குற ஐயாவான்னு ஒரு பட்டிமன்றம் நடத்தலாம். தான் ஒரு வலுவுள்ள எதிர்கட்சிதான்னு சொல்றவிதமா .திமுக 9 ஜெயிச்சிருச்சு. பரவாயில்ல. மதிமுக வைகோவிற்கே வெற்றி கிடைக்கலயே. அங்க பதிவானஓட்ட விட எண்ணிக்கையில வந்த ஓட்டுகள் அதிகமா இருக்குன்னு ஒருபிரச்சனைய கிளப்பிருக்காரு. என்ன்ன்னு பொறுத்திருந்து பார்போம்.

இங்க மதுரையில நான் சொன்னது நடந்திருச்சு பாத்தீங்களா? நான் சொன்னதுமாதிரியே அழகிரிக்குதான் வெற்றி, மாபெரும் வெற்றி. ஆனால், அவருசொன்னமாதிரி 3லட்சம் ஓட்டு வித்தியாசம் இல்லை. 1,43,945 ஓட்டுக்கள்வித்தியாசம். மொத்த ஓட்டுக்கள் மதுரை தொகுதியில 10லட்சம். அதுலபதிவானது 7லட்சத்து சொச்சம். ஆமாங்க, 75சதவித வாக்குப் பதிவாயிருக்கு. பின்ன, காந்தியே வீடு வீடா போயி வாக்கு கேட்டிருக்காரே, அழகிரிக்காக. அந்தபதிவான வாக்குகளில் 4லட்சத்து சொச்சம் அழகிரிக்கு. இப்ப சொல்லுங்க அவருசொன்ன அளவு வித்தியாசத்துல ஜெயிக்கறதுக்கு இடமில்ல, விஞ்ஞானப்படி. நாங்கதான் அப்பவே சொன்னமுல!

இதுலயும் ஒரு நல்ல மறுபக்கம் இருக்கத்தான் செய்யுது. இப்ப அமைச்சரானதாலகண்டிப்பா நல்லது செய்வாரு. பெரிய ஆளுங்க என்னைக்குமே தன்னோடதொகுதிய நல்ல வச்சுக்குவாங்க, அம்மாவோட ஆண்டிபட்டி, ஐயாவோடசேப்பாக்கம் இதற்கு உதாரணங்கள். அதனால ஊருக்கு ஏதாவது செய்வாங்க. பி.மோகன் நல்லவருன்னு ஊருக்குள்ள பேரு இருந்தாலும், அவருக்குபடிச்சவங்க வாக்குகள் விழுந்தாலும் அவரோட திட்டங்களுக்கு தடைகள் வரும். சிக்ஸுக்கு அப்புறம் செவன் டா, அண்ணனத் தாண்டி எவன் டா? அதனால்அஞ்சாநெஞ்சன் தவறாம தன் கடமைகளை செய்வாருன்னு நம்புறேன். இப்போமுதல் முறையா நேரடி அரசியல்ல இறக்குறதாலயும், அமைசாராகிறாதாலும்(ஆக்கிருவாங்க, பாருங்களேன்) கண்டிப்பா தன்னோடஇன்னபிற மர்ம நடவடிக்கைகள கொறச்சிருக்காரு. ரயில்வே அமைச்சர் லாலுஇதற்கு நல்ல உதாரணம். மதுரையோட தலையெழுத்தப் பார்போம்.

இனி இவங்க ஆட்டம் தாங்க முடியாது. அழகிரி பிறந்த நாள் எனதான் மதுரையிலபல பேருக்கு தெரியுதே தவிர, மற்றபடி அது காந்தி இறந்த நாள் (என்னபொருத்தம்!) என பல பேருக்கு மறந்திருச்சு. ஊரு முழுக்க தோரணம் கட்டி, ஒட்டிஒட்டியே கட்டக் கூடிய அளவுக்கு ஆயிரக்கணக்கான ஃப்ளக்ஸ் போர்டுகல வச்சு, ஊரு முழுக்க லைட்டு போட்டு, ஸ்பீக்கர் வச்சு அழகிரி புகழ் பாடல்கள் போட்டுஊரையே அசிங்கமாக்கி, கிராமத்து திருவிழா மாதிரி ஆக்குறத இனிமே தைரியமாபண்ணுவாங்க. எங்க காலெஜுக்கு பின்னாடிதான் ஓட்டு எண்ணிக்கை நடக்குறமருத்துவக் கல்லூரி. காலையில க்ளாஸ் நடக்கும் போதே வெடி வெடிச்சு தெரியவச்சுட்டாங்க. காலேஜ் முடிஞ்சு வரும் போது சிக்னல்ல வச்சு எல்லாருக்குசாக்லே குடுத்துருக்காங்க. என்னைய கேக்குறீங்களா? நான் வாங்கலீங்க... கொள்கையெல்லாம் இல்ல, எதிர்பக்கத்தில கொடுத்தாங்க, மிஸ் ஆகிடுச்சு. அதத்தாண்டி பாலத்துல இறங்குற இட்த்துல அந்தரத்துல டிராபிக் ஜாம். என்னடான்னுபாத்தா கீழக்கூட்டம். மெல்ல நழுவி வலதுப் பக்கம் திரும்பி வந்தேன். சுத்திஇருக்கறங்க எல்லாம் பைக்க உருட்டிட்டிருக்கானுங்க. உத்துப் பாத்தாஅவய்ங்கெல்லாம் கட்சிக்காரனுங்க. டிராபிக்க இட்து பக்கம் திருப்பிவிட்டிருந்துருக்காங்க. கட்சிக் கார்னுங்களுக்கு நடுவில கட்சிக்காரன் மாதிரிஇருந்த்து எனக்கு ஒரு மாதிரி இருந்த்து. எல்லாம் ரவுடி மாதிரி மாடுமாடாஇருந்தானுங்க ஐய்யோ சிக்கிட்டோமேன்னு நைசா நழுவி வந்துட்டேன்.

கடைசில என்னையும் அரசியல்வாதி ஆக்கிட்டீங்களே!