Vigilante Movies

Filed under , , by Prabhu on 12/02/2010 07:48:00 AM

5

கொஞ்ச காலம் கழிச்சு வந்து எழுதும் போது, ஏதோ புதுசா யாரு வீட்டுக்குள்ளயோ போய் சீட்டு நுனியில் உட்காருவது போலான ஃபீலாக இருக்கிறது. பதிவு ஏத்திட்டு செக் செய்கிறப்போ முன்ன அளவு மக்கள் வந்து பாக்குறதுமில்லங்கிறப்போ, ‘சரி, நியாயம் தான்’ எனத் தோன்றுகிறது. திரும்பவும் இங்க வந்து நிலைநிறுத்திக்க கொஞ்ச நாளாகும். நமக்கே இப்படி இருக்கே, குப்ரிக் மாதிரி ஆசாமிகள் எப்படி 50 வருஷத்துக்கு 12ஏ படம் எடுத்துட்டு இப்படி நிலைத்து இருக்கிறார்கள்?

இது ஒரு சின்ன பதிவுதான். ஒரு அப்சர்வேஷன் அல்லது ‘ஒ’ப்சர்வேஷன் ;).
 தமிழில் சூப்பர் ஹீரோ படங்களே எடுப்பது இல்லையே என்ற நினைப்பு உண்டு. ஆனால், அந்த மாதிரி படங்களுக்கு முக்கிய தேவையான தாவுவதற்கு உயரமான கட்டடங்களும் ஆக்சிடண்ட் ஆகி வில்லனாவதற்கு தேவையான அதிநவீன ஆராய்ச்சிக் கூடங்களும் இல்லாமல் போனதாலோ என்னவோ படங்கள் வரவில்லை. முக்கியமாக காமிக் படிக்கும் வழக்கம் வேறு இல்லை. அங்கோ ஒரு 60 வருட பாரம்பரியம் இருக்கிறது. இன்னும் ஓவ்வொரு கதையும் revamp ச்செய்தால் வாங்கிப் படிக்கிறார்கள். மாதாமாதம் இழுவையாய் செல்லும் கதைகளையும் படிக்கிறார்கள்.


இதிலும் ஒவ்வொரு காலக்கட்டக்களிலும் ஒவ்வொருவிதமான மனநிலை மக்களின் இடையில் நிலவும் போது காமிக்குகளிலும் அதே நிலை இருக்கும். 50களிலும் 60களிலும் உலகப் போரின் தாக்கம் அதிகம் இருந்தது. உதாரணம் - Marvelன் Captain America. அதன்பின் எல்லா கதைகளிலும் குளிர் போரின் தாக்கம் இருந்தது. கதைகளில் சோவியத் சூப்பர் வில்லன்கள் இருந்தார்கள். இதே போல DC comicsம் Golden Age, SIlver Age, Modern என கதையை புதுப்பித்துக் கொண்டே இருப்பார்கள். மார்க்கெட்டும் அவ்வப்பொழுது விழுந்து எழுந்திருத்துக் கொண்டே இருக்கும்.

இதே போல போன decade ல் காமிக் மற்றும் அதன் சார்ந்த படங்களும் விழுந்தபின் மறுமலர்ர்ச்சியை SpiderMan மூலம் கண்ட பொழுதுதான் நம் மக்களுக்கும் டப்பிங்கில் அவற்றை பார்க்க ஆரம்பிக்க, அந்த படம் ஓடிய தைரியத்தில் இன்ன பிற காமிக்களும் திரைக்கு வர ஆரம்பித்தன.

இப்படியே அங்க வெட்டிவிட்டு நம்ம ஊருக்கும் வருவோம். நம்ம ஊரிலும் காமிக் தீவிர ஃபாலோயிங் இருந்தது. அதுவும் இப்பொழுது டப்பிங் படம் போல டப்பிங் காமிக்குள் பட்டையை கிளப்பிக் கொண்டிருந்தன. எனக்கு இவைப் பற்றி நேரடி அனுபவம் அதிகம் இல்லை. தமிழ் காமிக்குகளின் இறுதிகாலத்தை ஒட்டியே என் சிறுவயது இருந்தது. அதனால் என்னதான் காமிக்குகள் படித்திருந்தாலும் பின்புலன் தெரிய வாய்ப்பில்லை. ’கருந்தேள்’ க்கு அதிகம் தெரிய வாய்ப்புண்டு. இங்கே ப்ளாக்குகளிலேயே இதற்கு அதிக மக்கள் உலவுகிறார்கள். நிறைய பழைய வரலாற்றை எழுதுகிறார்கள்.

தமிழ் காமிக்குகளின் முன்னோடி அம்புலிமாமாவாகத் தான் இருக்க வேண்டும் என்பது என் கணிப்பு. சின்ன வயதில் வெளியூர் போகும் முன் பழைய புத்தகக் கடையில் இருந்து அம்புலிமாமா வாங்கிக் கொடுப்பார் அப்பா. திடீர் பயணமென்றால் பேருந்து நிலைய தமிழ் காமிக்குகள். அதிலும் இரண்டு பதிப்பகங்கள்தான் எனக்கு தெரியும். ராணி காமிக்ஸ், லயன் காமிக்ஸ். நான் படித்தது பெரும்பாலும் லயன் தான். கொஞ்சம் கவ்பாய், மாயாவி மற்றும் கருஞ்சிறுத்தை டைப் சரக்குகளைப் படித்திருக்கிறேன். இதில் சூப்பர் ஹீரோக்கள் இல்லை. மாயாவி The Phantomல் இருந்து வந்த விஜிலாண்டி ரகம்.

டைட்டிலுக்கு வந்தாச்சு. எழுத ஆரம்பிச்சதே ஏன் தமிழில் அல்லது இந்தியாவில் சூப்பர் ஹீரோ அல்லது விஜிலாண்டி டைப் படங்கள் இல்லை என்பதுதான். சூப்பர் ஹீரோ உங்களுக்குத் தெரிந்தது தான். பூச்சி கடித்ததில் இருந்து பிற கிரகங்களில் வந்தவன் என்கிற வகையில் பல காரணங்களால் ஆகிறவன். இந்த வகையில் நம் ஊரில் வந்த ஒரே சரக்கு ‘சக்திமான்’ - சூப்பர்மேனின் rip-offஆக இருந்தாலும் இந்தியாவின் ஆகமவிதிகளின் படி அமைந்த கதை. நல்ல ரெஸ்பான்ஸ் பார்வையாளர்கள் இருந்தாலும், ரொம்பவும் நீளுவதாக மக்கள் கருதியதால் தொடர் முடிந்தது. நம் மக்கள் வில்லனை முடித்து சுபம் போட்டுவிட எண்ணுகிறார்கள். அறுபது வருஷமாக ஆனானப்பட்ட சூப்பர்மேன் கண்களிலேயே கண் விட்டு ஆட்டும் Lex Luthor இன்னும் இருப்பதை யாரும் அங்கே கேட்பதில்லை. மக்களின் மனநிலை வித்தியாசம் அந்த ஊருக்கும் இந்த ஊருக்கும் இருப்பதே இதற்கு காரணம்.


அடுத்து விஜிலாண்டி(Vigilante). விஜிலாண்டி படங்களும் ஒரு வகையில் நம் ஊரில் இல்லை. விஜிலாண்டி என்பது முகமுடி மாட்டிக் கொண்டு எந்த சூப்பர் பவரும் இல்லாமல் சாதாரண பலத்தாலோ இல்லை உபகரணங்கள் கொண்டோ அநியாயத்து எதிராக சண்ண்டையிடுபவன். சோ, நியாயப்படி பார்த்தால் Batman சூப்பர் ஹீரோ இல்ல. ஒரு vigilante. இதே போல Punisher, Dare Devil என ஒரு லிஸ்ட் இருக்கு.


அங்க one-shot காமிக் எல்லாம் கூட வரும். ஒரே சீரிஸ் போட்டு தனி கதையை சொல்லி முடித்து விடுவார்கள். 'Watchmen' பார்த்தவர்களுக்கு தெரியும் அது. அது ஒரு one-shot. அது ஒரு குழுவாக அமைந்த விஜிலாண்டிகளைப் பற்றிய படம். அதை படமாக எடுத்திருந்தார் ‘300’ பட இயக்குனர்.


இப்போ ஒரு சந்தேகம் வருது. தமிழில் vigilante படங்கள் வந்ததே இல்லையா? ஏன் இல்லை? ராபின் ஹூட் ரகப் படங்களான் பல ஷங்கர் படங்களும் ஒரு வகையில் விஜிலாண்டி படங்கள் தான். ஜெண்டில்மேன் ஒரு உதாரணம். இவை எல்லாம் விஜிலாண்டி பொதுவான குற்றங்களை எதிர்ப்பதாக இல்லாமல் லஞ்சம், ஊழல், அலட்சியம் என ஒவ்வொரு விதமான Red Tapeன்னால் வரும் தீமைகளை தீம்களாகக் கையாண்டாலும் இவைகளை விஜிலாண்டி படங்களாக ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். அது கெட்டப் போட்டுக் கொண்டு கொள்ளையடிப்பதில் இல்லையென்றாலும் unplanned ஆக போகும் வழியில் எல்லாம் லஞ்சம் வாங்கும் நபர்களை கொல்லும் இந்தியனில் அப்பட்டமாக ஒரு விஜிலாண்டியில் ஸ்டைல் தெரிகிறது. என்னதான் ஜெண்டில் மேன் முதல் இந்தியன் வரை காண்பித்தாலும் அவை எல்லாம் ஒரு முழுமையான vigilante படங்கள் கிடையாது.  ஒரு சில வகைகளில் சில விதிமுறைகள் ஒத்து வரவில்லை. ஒரு பக்கவான விஜிலாண்டி படம் என்றால் நீங்கள் எதிர்பாராத வகையில் ஷங்கருக்கு பதிலாக அவரது குரு எஸ்.ஏ.சி யை தான் குறிப்பிடவேண்டும்.
படம்- நான் சிகப்பு மனிதன்

என்னதான் தங்கச்சி அம்மா செண்டிமெண்ட் வைத்து கதையை ஆரம்பித்தாலும் அவன்  குடும்பம் உருக்குலைந்த பின் பழிவாங்க துப்பாக்கி எடுப்பது, பின் இது மாதிரியாக எத்தனை பேர் கஷ்டப் படுவார்கள் என மற்றவங்களுக்கும் உதவப் போவது என கிளம்பும் அவர், சிகப்பு டீ-ஷர்ட் லெதர் ஜாக்கெட் என ஒரே உடை, ராபின் ஹூட் என்ற ஒரு புனைப் பெயர், இரவில் வீதிகளில் உலா வருவது, வரும் வழியில் தவறுகள் நடந்தால் சுடுவது, அவை எல்லால் அஃபென்ஸிவ் க்ரைமாக இருப்பது, அவர் பெயரில் பத்திரிக்கையில் விவாதங்கள் வருவது, போலீஸ் துரத்துவது, எல்லா கிரிமினல்களும் ஒன்றுகூடி இவரை அழிக்க முயலுவது என பல வகையில் இது விஜிலாண்டி படங்களின் விதிகளை ஒத்து வருவதால் இன்னபிற இந்திய செண்டிமெண்ட்களையும் எஸ்.ஏ சியின் ட்ரேட்மார்க் விஷயங்களையும் புறந்தள்ளிவிட்டு இதை ஒரு முழுமையான தமிழ் விஜிலாண்டி படம் எனலாம் என்கிறேன். கொஞ்சம் பெருசாகிடுச்சுல்ல? ஏதோ யோசிக்க ஆரம்பிச்சு, எந்த ஒரு ஒருங்கிணைப்பும் இல்லாமல். போகிறபோக்கில் நினைவிற்கு வந்த எல்லாம் சேர்த்து எழுதிக் கொண்டு வந்தாகிவிட்டது. அதனால் இந்த நிலை. சோ, தமிழில் சூப்பர் ஹீரோ படங்கள் இல்லை. விஜிலாண்டி படங்கள் உண்டு. சோ...? சும்மாதான், ஒரு ‘ஒப்சர்வேஷன்’.

இரு அவளுக்கு ஒரு நான் - மறு பதிப்பு

Filed under , , by Prabhu on 11/26/2010 06:51:00 PM

5

பக்கத்து ஆராய்ச்சி கூடத்தில் வேலை செய்யும் நண்பனும் அறைத் தோழனுமான் அஜயுடன் ரொட்டி சாப்பிடும் நேரத்தில் விவாதம் தொடங்கியது. பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டாவென ஒரு நூற்றாண்டாக தேய்ந்த பதிப்பில் முத்துராமன் கேட்டது பற்றி அல்ல. அவள் அழகா என்பதில். அவனுக்கு நான் அவளைப் பின்தொடரும் இந்த நேர விரய பழக்கங்கள் ஆகவில்லை. ஆனால், நானோ அந்த தருணங்களைச் சேமித்து அசைபோட்டு செரிக்கும் ரகம். அவனிற்கு ஆராய்ச்சியைத் தவிர எதிலும் பொறுமை கிடையாது. கழிக்கும் நேரத்திலேயே பல் விளக்கும் ஜாதி அவன். நானோ கழிப்பறையில் உலகை சிருஷ்டிப்பவன்.

பேச்சை மாற்றும் நோக்கோடு ஆராய்ச்சியைப் பற்றி பேசினால் அவனது கூடத் தலைவரின் ‘ஐன்ஸ்டைன்’ கனவுகளைப் பற்றிய பினாத்தல் தொடர்ந்தது. லைப்ரரியின் வாசலில் சிகரட் பதிலாக வெற்றுப் புகை கக்கும்  எலெக்ட்ரானிக் சிகரட் உதட்டுடன் பேசிக் கொண்டிருக்கும் எனக்கு, அவள் வந்தால் சிகரட்டை மறைத்து நல்லவனாக முயற்சிக்காகவா? அப்படிநல்லவனாக பிம்பம் ஏற்படுத்துவதும் கெட்ட எண்ணமோ? நீரில் விழுந்த நாய் போல மிகைப்படுத்தப்பட்ட எண்ணங்களை சிலுப்பி உதறுகிறேன். அவள் வருகிறாள்.

அருகிலிருக்கும் அஜய் முதுகில் இடிக்க, வருபவளிடம் சென்று என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன்,
'என் பெயர் அன்ஷு. ச்சீ... அன்ஷூ, என் பெயர் ராஜ்’,

ம்ஹூம்.. இப்படி இல்லை, அவளிடம் கேட்டேன், "நீ அன்ஷூ தான? கவிதா சொன்னாங்க”.
அவள்,”யாரு கவிதா?”.
“அதானே? யாரு? தூக்கத்தில் உன்னிடம் பேசச் சொன்னவள்.”
அவள் புருவம் உயர்த்தும் பொழுது,”இது ஜோக், ஹா.. ஹ.. என் பெயர் ராஜ்.” என்ற பொழுது அவள் புருவம் உதடு மேல் நோக்கி வளைந்தது..

ம்ம்ம்.. இல்லை...  இப்படியும் வேண்டாம் என ஆயிரத்தெட்டு சிமுலேஷன்களுக்கு மத்தியில் schizophreniaவின் அறிகுறிகளைப் பற்றி யோசிக்க ஆரம்பிதேன்.காதல் ஒரு மிகைப்படுத்தபட்ட உணர்ச்சியாக படுகிறது. 21ம் நூற்றாண்டின் இறுதியில் காதலிற்கு புனித பட்டம் குடுப்பதையோ அது நம்மைக் கட்டுப்படுத்தும் ஒப்பந்தமாக இருப்பதையோ நான் விரும்பவில்லை.

அஜயிடம் இருந்து நான் பிரிந்து எனது ஆராய்ச்சிக் கூடத்துக்கு சென்ற பொழுது பே.ரா. ராமசாமி உணவை உண்டு கொண்டிருந்தார். இப்பொழுது போனால அதை விட்டுவிட்டு மனுஷன் ஆராய்ச்சி பற்றி பேச ஆரம்பித்து விடுவார். நேரம் கொடுப்போம்.

இவரின் ஆராய்ச்சிக்கு எனக்கு மூன்றாவது கண் தேவைப்படுகிறது. கால எந்திரம் செய்கிறார். உங்களுக்கு கால-வெளி தொடர்புகளைப் (Time-Space continuum) பற்றித் தெரியுமா? தெரியாமல் எப்படிப் போகும். நூற்றாண்டு காலமாக கதைகளிலும் திரைப்படங்களிலும் பார்த்திருப்பீர்கள். அதைக் கொஞ்சம் திரித்தால் இவர் தியரி வந்து விடும். காலம்-வெளி இரண்டையும் கலந்த ஒரு 4 பரிமாண உலகை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். Graphல் குறிக்க முடியுமா எனக் கேட்டால் கொஞ்சம் கடினமானாலும் இப்பொழுது இருக்கும் நேரத்தை ரெஃபரன்ஸாக வைத்து பின்னோக்கி அல்லது முன்னோக்கி கணக்கிடலாம். சிறு அவகாச நேரங்களுக்குள் செய்வது இதனால் கடினமாகிறது. இந்த தேவையில்லாத சரக்கு எதற்கு. காரில் போவது போல காலவெளியிலும் ஸ்ட்ரெயிட்டா போய் லெஃப்டுக்கா கட் பண்ணி நேரா போய் யு-டர்ன் போடமுடியும். அதுதான் விஷயம்.

இதற்கு மேல் அறிவியல் வேண்டாம். சில நாட்களாக ஒரு மாதிரியாக இருக்கிறது. அதிகபட்சமான சந்தோஷத்தில் ஏதோ தொண்டைக்குள் எழுவது போல. அஜயிடம் கேட்டால், ’மசக்கையாய் இருக்கிறாய், மாங்காய் வாங்கி சாப்பிடு’ என்பான். அவள் மேலான ஈர்ப்புதான் காரணம் என நினைக்கிறேன். இது 20ஆம் நூற்றாண்டின் எச்சமான சில உணர்வுகள். மனம் வழக்கத்திற்கும் மாற்றத்திற்கும் நடுவில் சிக்கித் தவிக்கிறது. கட்டமைப்பிற்குள் வாழும் மனது, அந்தக் கட்டமைப்பில் வாழுகின்றதன் செக்குமாட்டுத்தன்மையின் வெறுப்பில் உழல்கிறது. இதற்கு இதுதான் செய்தல் வேண்டுமென்ற கட்டாயங்கள் பிடிக்கவில்லை. எல்லாரும் இது போல்பேசுவதால் நானும் அவளிடம் போய் ஏதாவது பேச வேண்டுமா? இல்லை, என் அவசியத்திற்க்காக, எனக்கு அவளைப் பிடிப்பதனால் நான் பேசித் தான ஆக வேண்டுமா என மண்டையடிக்கிறது. சமூகத்தில் பின்தொடருவதால் சில பழக்க வழக்கங்களை நமக்குத் தேவையில்லாமலே கடைபிடிக்கிறோம். அதில் ஒன்று இதுவோ என தோணுகின்றது.

ராமசாமி வர, ‘ஏன் சார், சாப்பிடவில்லையா?’ என்றேன்

‘சாப்பிட்டேனே’.

‘நான் பார்த்துக் கொண்டிருந்தேனே’

‘டைம்லைன் இருக்கே’

‘சாப்பிடக் கூட டைம் ட்ராவல் அதிகமாப் படலை?’

‘இல்லை. இது காலப் பயணம் இல்லை. நாம் அவ்வளவு தூரம் போகவில்லை’

’என்ன? பின் நாம் செய்த வேலை அனைத்தும்? சோதனைக்கு தயாரென சொன்னது?’

’‘ரியாலிட்டி வார்ப்பிங்’ தான் நிஜமாக நாம் கண்டுபிடித்திருப்பது’

என் பார்வையை கண்ட அவர், ’ நீ இருப்பது ஒரு ரியாலிட்டி. ஒவ்வொரு விநாடியும் ஒவ்வொரு செயலும் அதற்கேற்ற பின்விளைவுகளைத் தீர்மானிக்கின்றன. உன்னுடைய தேர்வுகளே உன் எதிர்காலத்தை தீர்மானிக்கின்றன. இது போல பல்லாயிரக்கணக்கான கட்டமைப்புகளின் (சிஸ்டம்ஸ்) ஒன்றுடன் ஒன்று இயைந்த தேர்வுகளும் வேறுபாடுகளுமே வெவ்வேறு உலகம் அல்லது ரியாலிட்டியை உருவாக்குகின்றன. உதாரணத்திற்கு கிளம்பும் முன் ஒரு காபி குடிக்கலாமென்ற் ஆசையில் கடைக்கு சென்று, வண்டியை தவற விடுகிறாய் அல்லது காபியை தியாகம் செய்து விட்டு வண்டியை பிடித்து விடுகிறாய். இப்பொழுது உன் வாழ்க்கையில் இரண்டு ரியாலிட்டிகளாக பிரிகிறது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் பயணிக்கிறது. இதன் மூலம் ஒரு ரியாலிட்டியில் கூலித் தொழிலாளியாகவும் இன்னொரு ரியாலிட்டியில் ராஜாவாகவும் இருக்கலாம். வாழ்வு தேர்வுகளினால் ஆனது. கால-வெளி இழைகளின் இயற்கையான பிழைகளின் மூலம் நீ பயணம் செய்து வேறு ரியாலிட்டியின் வேறு காலத்திற்குக் கூட செல்ல முடியும். நான் மதுரையில் யாருடன் உணவு உட்கொண்டேன் என்றால் நீ நம்ப மாட்டாய்.’ என்க...

’இது நம்பும் படியாகவா இருக்கிறது. அவர் 12ம் நூற்றாண்டு. அழிவதற்கு முன்பான சில வெற்றிகளின் விளிம்பில் இருந்த சமயம். நீயும் நம்புகிறாயா’ என்றான் அஜய்.

நானே பயணம் செய்தேன் என்ற பொழுது அவனுக்கு நேற்று தின்ற கோழி வயிற்றில் இருந்து கூவுவது போல உணரவே கழிவறை சென்று அது வெளியேறிவிட்டதை உறுதி செய்து கொண்டான்.

எனக்கு மௌரிய காலத்து விஷயம் ஏதாவது  கிடைக்குமா எனக் கேட்ட அஜயிடம், ‘நான்  அடுத்து போன காலத்தில் அரசரே கிடையாது. நூற்றுக்கணக்கானவர் சேர்ந்து தான் ஒரு நாட்டுக்கு ராஜா ’ என்றேன்.

‘நம்ம ஊர்ல இருக்கிற மாதிரி அரசர்?”
“ம்ஹூம்.  மக்கள் தான் தேர்ந்து எடுக்கிறார்கள், ஒரு குழுவை”
’ஏதோ விஞ்ஞானப் புனைவில் படிப்பது போல கேவலமான ஒரு utopia  வாக படுகிறதே? ஏதாவது ஆதாரம்?’ எனக் கேட்ட அஜயிடம் எதோ பொருளை எடுத்துக் காண்பித்தான்.
’என்ன இது?’
’இது புத்தகம்.  மரத்தால் செய்த இதை காகிதம் என்கிறார்கள். அந்த உலகத்தில் எல்லாவற்றையும் இதில் பதித்து தான் படிக்கிறார்கள்’
அதை வாங்கி பிரித்தான், “இரு அவளுக்கு ஒரு நான் - மறுபதிப்பு”

’தீராக் காதலுடன்’ யாரோ எழுதி அதன் கீழ் பவுண்டன் பென் குழிகளில் வழிந்த மை, ‘Anshu D' எனப் பரவியிருந்தது.

கழிப்பறை இலக்கியம்

Filed under , , , by Prabhu on 11/21/2010 07:58:00 AM

8

முந்தா நேத்து ‘உலக கழிப்பறை நாளாமே?” பதிவு எழுதவோ படிக்கவோ நேரமே கிடைக்கல.அதான் இது ஒரு பழைய ரிப்பீட்டு.முன்ன இதுக்கு ஒரு ரெண்டாம் பாகம் வச்சிருந்தேன். மறந்து போச்சு :(

இலக்கியம், கதை, கவிதை, உரைநடை, கல்வெட்டு, நாடகம், சினிமா, ப்ளாக் என பல வகையில நம்மல சுத்தி இருக்கு. இதுபோல இன்னும் பல வகையான இலக்கியங்கள், பல வகையான ஊடகங்களில் நம்மல சுத்தி இருக்கு. ஆனா இதுவரைக்கும் கவனம் பெறாத சில இலக்கியங்கள் இருக்கு. அதுல ஒண்ணுதான் கழிவறை இலக்கியம். அங்கே காணப்படும் கருத்துக்கள் ஒவ்வொன்றும், 'இவன் பின்னாளில் பெரிய ஆளாக வருவான்'(இதெல்லாம் எங்க உருப்படப் போகுது?), எனத் தோன்ற வைக்கும். சில உதாரணங்கள்,

"இளைஞர்களே, இந்தியாவின் எதிர்காலம் உங்கள் கையில்...."

"WIFE- wonderful Instrument For Enjoyment"

"மாணவர்களே, மேன்மேலும் தேர்ச்சி ஆகி காலேஜை விட்டுச் சென்றுவிட உங்களைப் போன்ற நன்றி கெட்டவன் இல்லை. நாங்கள் ரிப்பீட் வைத்துள்ளோம். மீண்டும் அடுத்த வருடமும் வந்து காலேஜை பத்திரமாக பாத்துக்குவோம்- இப்படிக்கு கல்லூரியின் செல்லப் பிள்ளைகள்"

"ஏண்டா இப்படி கிறுக்குறீங்க, அதுவும் பெண்களைப் பற்றி? உன் தங்கச்சின்னா இப்படி செய்வியா?", என பெண்களைப் பத்தி எழுதியத தட்டிக் கேட்க(எழுத), அதற்கு இன்னொருத்தன், "தைரியம் இருந்தா இத___ டிபார்ட்மெண்டுக்கு வந்து சொல்லிப் பாருடா, %&டு^^&*(#@%@!". இப்படியே பதிவுக்கு எதிர் பதிவு போடுற மாதிரி பேசிக்கிட்டே போவானுங்க!.

Urinal மேல் எழுதப்பட்டிருக்கும் வாசகம்.
"உங்கள் எதிர்காலம் இப்பொழுது உங்கள் கையில்(?!)(கையில அப்போ எதிர்காலம்(ஒருவேளை....) எதுவும் இருக்கறதா தெரியலயே?!)"


காலேஜ் டாய்லெட்ல ஒருத்தன் கவிதை எழுதிருந்தான் பாருங்க.... அட,அட அத கீழ கொடுத்திருக்கேன். அது என்ன, யாருடையதுன்னு யூகிச்சுப் பாருங்க.

"மண்காட்டி பொன்காட்டி மாயஇருள் காட்டி
செங்காட்டில் ஆடுகின்ற தேசிகனை போற்றாமல்
கண்காட்டும் வேசியர்தம் கண்வலையில் சிக்கிமிக
அங்காடி நாய் போல அலைந்தனையே நெஞ்சமே"


அது யாருன்னு தெரியுதா? பட்டினத்தார் பாட்டுங்க. என்ன இலக்கிய உணர்ச்சி! என்னே கருத்துச் செறிவு! இதுக்கு கீழ niceனு ஒரு கமெண்ட் வேற.எனக்கும் பிடிச்சாலும் அது என்ன pappuவோட ப்ளாக்கா, கமெண்ட் போட? கரெக்டா சொல்லனும்னா, சிவன விட்டுட்டு பெண், செல்வம் பின்னாடி நாய் மாதிரி சுத்துறியே, நாயேன்னு தன் மனசப் பாத்து கேட்டுகிறாரு.செலவத்தையோ, பொண்ணயோ தேடாம சிவனத் தேடுன்னு சொல்றாங்க. (இந்த வெண்ணைய அன்னைக்கு ப்ரியா பின்னாடி பாத்தேனே! டேய் கொய்யா...). ஒரு சரக்கு இருக்கு, அதையும் பாத்துருங்க.

"பெண்ணை நம்பிப் பிறக்கும் போதே தொப்புள் கொடிகள் அறுபடுமே, கேளடா... மானிடா... "

இது மாதிரியா போகுது அந்த கவிதை.இது நம்ம உலகநாயகனோடது. ஆளவந்தான்ல மொட்ட கமல் ஜெயில்குள்ள இருந்து சொல்லுவார்.

இன்னொரு கவிஞர் 'நான் கடவுள்'ன்ற புனைப் பெயர்ல எழுதினதயும் பாத்துருங்க! (இவனுங்கள எல்லாம் அகோரிய விட்டுத்தான் போட்டுத் தள்ளனும்)

"கண்ணென்றும் மூக்கென்றும் காதென்றும் - உன்
கண்ணெதிரே மாதென்று சொல்லிவரும் மாயைதன்னை
எமன்விட்ட தூது என்று எண்ணாமல் சுகம் என்று
நாடும் துர்புத்தியை ஏதென்று எடுத்துரைப்பேன்"

(கண்டிப்பா இது அவனோடது இல்ல, பட்டினத்தாராத்தான்ன் இருக்கனும்)
இதுவும் பொண்ணுங்களப் பாத்து ஏன் பயப்படுற மாதிரியே எழுதறானுங்க? ஹோமோசெக்ஷுவல்சோ, கேர்ள் பிரண்டு கிடைக்காதவனோ தான் இந்த மாதிரி கழிப்பறை இலக்கியத்தின் சிறந்த எழுத்தாளர்களா ஆவாங்களோ? ஆனா இந்த மாதிரி நாயிங்கதான் பொண்னுங்கள டீஸ் பண்ணுற மட்டமான வேலைகளில் ஈடுபடுவானுங்க!என்ன கருமமோ!


பேட்மேனுக்கு அவர் symbol எல்லாத்துலயும் போடுவாங்க. இதுல போடுவாளோ, போட்டுடாளே!

இதே போல ரயிலிலும் உண்டு. அங்கேயும் கழிப்பறையில் தனது கட்சிக் கொள்கையை பிரசங்கிப்பவனும், தேர்தல் அறிக்கையை பிரகடனப்படுத்துபவனும், ஆண்,பெண் குறிகளை அளவில்லாத ஆர்வத்துடன் ஆராய்ச்சி செய்பவனும், அதை அங்கே செதுக்க முற்படுபவனையும் நல்லாவே பாக்க முடியும். மனசுல மைக்கலேஞ்சலோனு நினைப்பு, செதுக்குறானாம். இவனுங்களுக்கெல்லாம் 'விக்ரம்' படத்தில கமல் சொன்ன மாதிரி(விக்ரம் படத்தில கமல் எப்டி வருவாருன்னு கேக்காம கவனிங்க!) ஒரு ட்ரீட்மெண்டை செய்ய வேண்டியதுதான். அது என்னன்னு சொல்லமுடியாது. ஏற்கனவே ஆபாசம்னு சொல்லிருவாங்கனு பயப்படுறேன், அதச் சொன்னா எல்லாரும் ஒதுக்கி வச்சிரப்போறாங்க. நா இப்போதாங்க வளரும் ப்ளாக்கர்.

அப்புறம் இன்னொரு வகை லூசுங்க இருக்கானுங்க. ரயிலில அவனுங்க காதலுக்கு சாசனத்தைப் பொறிச்சுக்கிட்டு இருப்பானுங்க. இந்த மன்மதன் அந்த ரதியோட பேர சாவியால செதுக்கி நடுவுல ஹார்ட் போட்டு உள்ள அம்பு உடுவானுங்க. இந்த மாதிரி கேசுகளில் பல கண்டிப்பாக ரிடர்ன் வரும்போது 'சரோஜா' பிரேம்ஜி மாதிரி வேற ஒருத்திய சுத்தி தேவதைகள சுத்த விட்டுட்டு இருப்பானுங்க. அவளுக்கு ஒரு கல்வெட்டு வரும்போது (திரும்பவுமாஆஆஆ!)(க்க்ர்ர்ர்ர்ர்....) .

பாத்தீங்களா, இந்த மாதிரி ஆசாமிகளுக்கெல்லாம் ஊரிலுள்ள எல்லா கழிப்பறைகளிலும் ஒரு சிலை வைத்து அங்கீகாரம் அளிக்க வேண்டும். கழிப்பறைகளுக்கு அவங்க பேர வச்சு, போர்டு பக்கத்தில அவங்க போட்டோ போட்டுட வேண்டியதான். அவங்களுக்காக சாகித்ய அகாதமில ஒரு புது பிரிவு துவங்க வேண்டிய கடமை நமக்கு இருக்கு.பின்ன, ஊர்ல எல்லா கலைஞர்களையும் மதிக்கிற நாம இவங்கள மட்டும் புறக்கணிச்சா காலம் நம்மை மன்னிக்காது. இதை நாம கவனிக்கலைனா இந்தக் கலை அழிந்துவிடக்கூடும். அதனால நலிவுற்றோர் சன்மானத்தொகைய பரிந்துரை செய்கிறேன்.


ஒரு கழிப்பறை இலக்கிய எழுத்தாளர்.
இதையெல்லாம் அனுமதிக்குது பாருங்க நம்ம நாடு ...... வாழ்க ஜனநாயகம்!!!!

இத இப்படியே விட்டரலாம்தான். ஆனா போதுமான சேம் ப்ளட் வரலயே. அதனால ஒரு ஜோக்(நீயெல்லாம் பதிவெழுதுறதே ஒரு ஜோக் தான்). ஒருத்தன் டாய்லெட்ல உக்காந்துருக்கான், வெஸ்டர்ன்ங்க. இப்பொ அவன் கஷ்டத்தை அவன் வாயாலயே கேப்போம் (அவன் அங்க முக்குறதையா?). நான் உக்காந்திருந்த போது பக்கத்து ஸ்டாலிலிருந்து குரல், "எப்படி இருக்கீங்க?". பொதுவா டாய்லட்ல வந்து நட்புறவு உரையாடல் ஆரம்பிக்கிறவன் இல்ல. ஆனாலும், நல்லாதான் இருக்கேன்னு சொல்லி சமாளிச்சேன்.
"எங்க போறீங்க?'
(டாய்லெட்லருந்து விண்வெளிக்கா போகபோறேன்.என்னமாவது சொல்லனுமே.)
"உங்கள மாதிரிதாங்க, சென்னைக்கு)"
"அங்க என்ன பண்ணலாம்னு இருக்கீங்க? நான் வேணா உங்களோட வரவா?"
(அவனா நீயு? be careful, என்னைய சொன்னேன்)
"இல்லீங்க. இன்னைக்கு எனக்கு வேற ஒருத்தர் வரேன்னு சொல்லிட்டாரு. அதனால் உங்களோட வர சான்ஸ் இல்ல."
உடனே அவன் பதறின குரலில், "இங்க பாரு, உன் கிட்ட பேசுறதுக்கெல்லாம் இங்க ஒரு நாதேரி பதில் சொல்லி கொல்லுறான். அவன் என்ன 'கேட்டகரி'ன்னு வேற தெரியல."

இதுக்கும் ப்ளட் வரலைனா கீழ இருக்குறதுதான் உங்களுக்கு ப்ளட் வர ஒரே வழி!


பல் பிடுங்கி கூட்டம்

Filed under , , by Prabhu on 6/18/2010 06:29:00 AM

8

’பல் போனா சொல் போச்சு’ இல்ல? பொண்டாட்டி வந்தாலும் போச்சுன்னு சில பேர் வாதிடலாம். ஆனால், நான் உடல்கூறு ரீதியா பேசுறேன், Post trauma எல்லாம் நம்ம டிபார்ட்மெண்ட் இல்ல. பல்லு போனா சொல்லோட போச்சுன்னா பரவாயில்ல, பல ருசியான உணவுகளையும் எடுத்துட்டு போயிடும். அப்புறம் முறுக்கை மிக்ஸியில் அடித்து சக்கரை கலந்து ஸ்பூனில் சப்பி சாப்பிட வேண்டியதான். எனக்கு 'பல்’வேறு உபாதைகள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் இதுவரை பல்வலி என்ற ஒன்றை மட்டும் அனுபவித்ததில்லை.

பலகாலமாக என் ஆஸ்தான பல் டாக்டர், ‘பிரபு, எப்ப வந்து பண்ணிக்கிற?’ எனக் கேட்டுக்கிட்டே இருந்தாரு.
”டாக்டர், இது என்ன கல்யாணமா?” என கேட்டேன்.
“ஒரு வகையில அப்படித்தான். பயப்படுறியே?”
”பண்ணனும்னு ஆச்சு. பண்ணிருவோம்”
”என்னைக்கு வர்ற?”
“திங்கள்?”
“டன்.” “டாக்டர், வலிக்குமோ?”
சிரிச்சுகிட்டே, “கட்டெறும்ப விட கம்மியா தான் வலிக்கும்.”
மையமாய் ஆட்டிவிட்டு வந்தேன்.

அடுத்த நாள் 5 மணி குறிச்சிட்டாங்க. வந்தப்போ அவர் ஜன்னலைத் தாண்டிதான் வரவேற்பு அறைக்கு போகனும். அவர் ஆனந்த விகடன் படிச்சுகிட்டு இருந்தார். அவருக்கென்ன, பல்லு என்னது. ஒருத்தனும் இல்லை என்றாலும் கொஞ்சம் சீனுக்காகவோ என்னவோ உட்கார வைத்திருந்தார். கொஞ்சம் வார்ம் அப் எக்ஸர்சைஸ் செய்து கல்லில் கத்தியைத் தீட்டி, இடுக்கியை விரித்து விரித்து மடக்கி லெதர் ஜாக்கெட்டின் ஜிப்பை கழுத்து வரை இழுத்து விடுவது எல்லாம் என் மனக் கண்ணில் ஓடியது. அதுவரை செம இண்டரஸ்டிங்கான 2007 குட்டி விகடன் ஒண்ணுல, ‘கற்றதும் பெற்றதும்’, ‘ஹாய் மதனெ’ல்லாம் படிச்சிட்டிருந்தேன். அவசர அவசரமாக ஒரு சுடிதார் அணிந்த பெண் உள்ளே ஓடினார். பிறகு என்னை உள்ளே அழைக்க, அங்கே போனால் அந்த சுடிதார் பெண் முகமுடி அணிந்து இருந்தார். திடீரென பார்த்ததும் ‘பக்’கென இருந்தது.
”என் செயின கழட்டி கொடுத்துடறேங்க”
“வாட்?” என்றார்.
“ஒண்ணுமில்ல டாக்டர்”
“பிரபு, நான் ஒரு கன்ஸல்டிங் டாக்டர் கூப்பிடிருந்தேன்ல, இவங்கதான், அது”
இத்தோட என்னை பேச்சில இருந்து கழட்டி விட்டுட்டாங்க.
"வாய நல்லா திற. ஆங்.. அப்படியே வச்சிரு”
“மகேஷ், முந்தா நாள் நல்ல மழை இல்ல?”
“ஆமா டாக்டர், நேத்தும் பெஞ்சிருந்தா கொஞ்சம் வெப்பம் குறைஞ்சிருக்கும்”
ஒரு திருகு ஊசியை அந்த முகமுடி ஒரு மிஷினில் மாட்டி, வாயினுள் விட்டு அந்த பல்லில் கடைய ஆரம்பித்தார். Bore போடும் முறைதான். சைடில் நர்ஸ் வைத்த் குழாய் தண்ணீரை வெளியேத்திக் கொண்டிருந்தது.

”மகேஷ் டாக்டர்,  மழை பெஞ்சப்போ ஒரு பேஷண்ட் விட்டுப்போச்சே?”
“இவருதான் அது”
“ஓ. அன்னிக்கு ஒரே ட்ராஃபிக் சார். ஒரு சின்ன மழை பெஞ்சதுக்கு பெரியார் பஸ் ஸ்டாண்டில பைக் சீட்டு வரை தண்ணி.”
“ஆமா, மழை நீர் வடிகாலே சரியில்ல”
”வாய மூடிறாத” என்றார் என்னைப் பார்த்து.
வாயில் இருந்து நுனி வளைத்த சிரிஞ்ச் எடுத்து பல்லிலிட்ட துளையில் என்ன பீச்சினார். கொஞ்சம் பெரிய திருகு ஊசியை மாட்டினார். பிறகு விட்ட இடத்தில் இருந்து நீண்ட நேரமாக உரையாடல் தொடர்ந்து கொண்டிருந்தது. இன்னொரு முறை ஊசி பீச்சல், இன்னும் பெரிய ஊசி போட்டு குடாய்தல் எனத் தொடர்ந்தது. பேச்சும் தான். ’ஏன்யா,  ‘Pulp Fiction' மாதிரி பேசிட்டே இருக்கீங்க’. கடைசியில அளவு செக் செய்ய ஒரு விரல்கட்டை குச்சி நாலை வாயில் சொருகும் போதுதான், ‘அட, இவ்வளவு பெரிய ஓட்டை நாலு எப்ப போட்டாங்க’ன்னு இருந்தது. 
“நர்ஸ், அதை சுட வைங்க”
நர்ஸ் ஒரு சின்ன கம்பியை சூடு பண்ணினார், சுத்தம் செய்த இடத்தை ஸ்டெரிலைஸ் செய்ய.
“எதுக்கு ரெண்ட சூடு பண்ற?”
“நீங்க ரெண்டு கேப்பீங்க.”
“ஆங்?”
“நீங்க ரெண்டு கேப்பீங்க”
“நான் தான் டாக்டர்?”
“நான் தான மேடம் நர்ஸு?”
”ஏய், முதல்ல நீ படிச்சு முடிச்சுட்டயா?”
பக்கத்தில் இன்னொரு டாக்டர், “போன மாசம் தான்”
நான், ”டாக்டர், அப்ப போன மாசம் வரைக்கும் எனக்கு போலி நர்ஸா?” என்றேன்.
”ஏய், நீ வாய மூடாத!”
”போன மாசம் வரைக்கும் எனக்கே போலி நர்ஸ் தாம்பா!”, என்றார் மகேஷ்
”அப்படிதான், திரும்ப மூடக் கூடாது”, என்றது முகமுடி.
என் கலவரத்தைப் பார்த்த நர்ஸ், “சும்மா இருங்க டாக்டர். ஏற்கனவே நர்ஸ் தான். இது மேல் படிப்பு.”
மகேஷே வந்து ஓட்டையை அடைத்தார்.

”அவ்வளவுதான். வந்து சேர்ல உக்காரு”
“இவ்வளவுதானா?”
“ஏன் வருத்தமா இருக்கா? கடவாப் பல்லு ரெண்டு சும்மாத் தான் இருக்கு புடுங்கிருவோமா?”
“இல்ல டாக்டர்...”
“இருக்குன்னு சொல்றேன்ல”
“அய்யோ, நான் Root canal Treatmentன்னதும் ஒரு வகை சைனீஸ் டார்ச்சர் எதிர்பார்த்தேன்”
“இந்த காலத்துலயா? இன்னும் ஏதோ நாங்க பல்ல குரடு வச்சு புடுங்கறதாவே கற்பனை பண்ணிகிட்டு இருக்கீங்க.”
"டாக்டர், உங்களுக்கு என்ன கைமாறு செய்யப் போறேன்னு...”
 ”உங்கப்பா கோவிலுக்கு போகும் போது ஃபீஸ் வாங்கிக்குறேன். நீ போய்டு வா”

இதை எழுதி இரண்டு வாரத்துக்கும் மேலேயே ஆகிறது. இதே டைட்டில அப்ப வச்சு எழுதிருந்தா என்ன நினைச்சிருப்பீங்க? அப்ப ஏதோ சண்டையாமே? என்ன பிரச்சனைன்னே எனக்குத் தெரியாது. என்னவோ போங்க! இன்னும் நிறைய எழுத வேற வேற விஷயங்களை எழுத பிளான் இருந்தது. பட், அந்த விஷயங்கள் எல்லாம் பின்னால் போயிடுச்சு. இப்ப, நான் பெங்களூரில் காலேஜ் சேர்ந்துட்டேன். அதுக்கே நேரம் சரியாப் போகுது. பெங்களூர்வாசிகளே, ரோட்டில என்னய மாதிரியே யாரையாவது காதில் எம்பி3 பிளேயருடன் பாத்தீங்கன்னா, அது நான் தான். தைரியமா வந்து பேசலாம். ஆனால், சில விஷமிகளின் வயித்தெரிச்சல் காரணமாக நான் பெங்களூர்வாசிகளுக்கே தெரியாத பெங்களூரைத் தாண்டி ஒரு இடத்தில் இருக்கும் கேம்பஸில் தான் படிக்கிறேன் என்பதால் அடிக்கடி சிட்டி குள்ள வரமுடியப் போவதில்லை. காலேஜ் பேரைப் பற்றி கேக்காதீங்க. அப்பதான், அப்பப்ப rip செய்ய வசதியாக இருக்கும்.

கடைசில கருத்து சொல்லனுமே. அசிங்கமான படம் எடுத்தாக்கூட நம்ம ஊரில சொல்வாங்களே! தயவுசெய்து பல்லுல ஏதாவதுன்னு உடனே காட்டிடுங்க. பல் பிடுங்கறதோ, Root canal treatment ஓ ரொம்ப வலிக்கவே இல்லை. பல்ல ரெண்டு தரம் விளக்குறத விட முக்கியமான விஷயம், எந்த சமயத்திலயும் பல்லுல எந்த உணவுப் பொருளையும் தங்க விடாதீங்க. அதுதான் சிம்பிளான விஷயம். அப்புறம் தப்பித் தவறி பல்லில் குழி இருந்திட்டால், அடைச்சிடுங்க. அப்படியே, ஸ்கிரீன் மேல கங்கை அமரன் படம் போல ஒரு மஞ்சக் கலரில் கூப்பிய கை வந்து வணக்கம் சொல்லுறதா கற்பனை பண்ணிக்கோங்க.

Lock, Stock and Two barrels (1998)

Filed under , , by Prabhu on 5/19/2010 06:42:00 PM

17

Tom என்ற சூப்பர் மார்கெட்/ப்ளாக் மார்கெட் ஆசாமி, Soap என்று தன் கைய  சுத்தமாகவே இருக்கனும்ங்கிற  ஒரு சமையல்காரன், Bacon என ஒரு திருடன், அப்புறம் Ed - இவன் சீட்டுல கில்லாடி. இப்படி சம்பந்தமில்லாத நாலு பேரும் நீண்ட நாள் நண்பர்கள். இவங்க எல்லாரும் காசு சம்பாதிக்க முடிவு செஞ்சு  Ed ஓட சீட்டு விளையாடுற திறமை மேல முதலீட்டைப் போட நினைக்கிறார்கள். இல்லீகலா சீட்டு விளையாட, அதற்கு குறைந்தபட்ச தேவையான 100,000 பவுண்ட்ஸை எடுத்துக்கிட்டு Hatchet Harrey க்கு ஃபோன் போடுறாங்க.

Hatchet Harry. இவனைப் பற்றியும் சொல்லியாகனும். இவன் ஒரு Porn King. பார் கூட வச்சிருக்கான். அதே தான், Pole dance ஓட தான். Spank batல் இருந்து செக்ஸ் டாய் வரை விற்பதும் கூட. இது எல்லாம் போக இந்த இல்லீகல் சூதாட்டமும் நடத்துறான். இவனுக்கு ஒரு பில்டப் வேண்டாம்? இவனுக்கு வேலை செய்யுறவன் ஒருத்தன் சரியில்லை என சந்தேகம் வந்து விசாரிக்கும் போது அவன் கொடுத்த விளக்கம் போதலை எனத் தோணியதால், கையில் கிடைச்ச பொருளைத் தூக்கி அடிச்சே கொன்னுட்டான். அவன் கையில் கிடைத்த பொருள் - 15இன்ச் டில்டோ. ஊருக்குள்ள இவன் பேரக் கேட்டா பயப்படுவாங்க. இவனுக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் இவனோட இருக்கும் Barry the Baptist தான் டீல் செய்வான். தண்ணியில் முக்கி முக்கி அடிப்பதால் இந்தப் பெயர். உபதொழில் - பணம் கொடுக்காதவங்க விரலை வெட்டுவேன் என மிரட்டுவது. Harryயின் வராக்கடன் கணக்குகளை வட்டியும் முதலுமாக வசூலிப்பது Big chris. இவனுக்கு தன் பையன்னா உயிரு. அந்த பயலும் அப்பாவோட தொழிலுக்கு போவான். சமீபத்தில ஏலத்துக்கு போக இருக்கும் antique துப்பாக்கிகள் மேல Harryக்கு ஒரு கண். அதைத் திருட Dean, Gary என ரெண்டு தேங்காய் மூடி திருடர்களைத் துப்பாக்கி கேபினட்குள்ள இருக்கிறது தவிர மத்ததெல்லாம் உனக்கு என்ற டீலில் அனுப்புகிறான் Barry.

இதற்கு நடுவில் Edன் பக்கத்துவீட்டுல ஒரு கேங் இருக்கு. போதைப் பொருள் ஆசாமிகளை தாக்கி சரக்கைக் கடத்திக் கொண்டு வந்து பங்கு பிரித்துக் கொள்ளும் ஒரு அபாரமான கூட்டம். அவர்கள் வீட்டில் சாவதானமாக பேசினால் கூட Ed வீட்டு Closet ல் எதிரொலிக்கும். அந்தக் கூட்டத்தில் ஒருவனான Plank தான் ஒவ்வொரு போது கும்பலையும் கண்டுபிடித்துக் போட்டுக் கொடுப்பது. அந்தக் கூட்டத்தின் திட்டக்குழுத் தலைவன் Dog கொஞ்சம் வயலண்டான ஆசாமி.  Plank பலகாலமாக தனக்கு கஞ்சா கொடுக்கும் ஆசாமிகளை மார்க் செய்கிறான்.

இதற்கிடையில் Ed பணத்தை எல்லாம் Hatchet Harryன் தந்திரத்துக்கு தோற்றது மட்டுமல்லாமல் 500,000 அவனிடமே கடன் வேறு வாங்கி ஆடித் தொலைகிறான், மகாபாரதம் டப்பிங்கில் பார்க்காதவன். ஒரு வாரத்தில் காசு வரலைன்னா ஒவ்வொரு நாளும் ஒரு விரல். நாலு பேரு சேத்தா நாப்பது நாளு தாங்குதேன்னு நினைச்சா, தினமும் எல்லார் கையிலும் ஒரு விரல் எடுப்பானாம் Barry.  அப்புறம் Ed அப்பாவோட பாரை எடுத்துப்பாங்களாம். அவங்கப்பா அது கேள்விபட்டதும் Ed மூக்கில குத்து உடுறாரு. இதற்கடுத்து மொக்க பிளான் நிறைய போடுறாங்க. அப்ப பக்கத்து வீட்டு ஆசாமிகள் பெரிய கொள்ளை ஒன்றை, Plank கஞ்சா வாங்கும் ஆட்களை கொள்ளை அடிப்பதை முடிவு செய்கின்றனர். அதை இவர்களிடம் இருந்து நாம் கொள்ளை அடிக்கலாம் என நம்ம ஹீரோ கேங்க் முடிவு செய்ய, Nick the Greek என்ற இடைத்தரகன் மூலம் அந்த சரக்கை Rory Breaker  என்ற Afro தலையனிடம் விற்க முடிவு செய்கிறார்கள். இவனும் டெரரான ஆசாமிதான். இந்தக் கொள்ளைக்கும் துப்பாக்கி வாங்கி தர்றவன் Nick தான், அது கேபினட்டுக்கு வெளிய இருந்ததால தங்களது என நினைத்து Gary,  Dean 700 பவுண்டுகளுக்கு விற்ற 250 மில்லியன் பெறுமானமுள்ள antique துப்பாக்கிகள்.

இப்ப கஞ்சா விக்கிறவங்களையும் அறிமுகப்படுத்திருவோம், என்ன? கெமிஸ்ட்ரி படிக்கிற மூனு இஸ்கோல் பசங்கதான் கஞ்சா வளர்க்கிறாங்க, வீட்டுக்குள்ளையே. படிக்கிற பசங்கள் என்பதால் குவாலிட்டி ஏ1. பிஸினஸ் எதிர்பாராத வகையில் சூடுபிடிக்க ஏக பணம். ஆனா பசங்க சப்பையானவங்க. அதைப் பார்த்ததால்தான் Plank  இந்த திட்டமே போட்டிருக்கான். ஆனால் யாருக்குமே தெரியாத விஷயம் இந்த தொழிலயே அந்தப் பசங்க Rory Breakerக்காக தான் செய்யுறாங்க. ஆனா நம்ம பசங்களோ அதை கொள்ளை அடிச்சவங்களையே கொள்ளை அடிச்சு அதை முதலாளிகிட்டயே விக்க போற அறிவாளிகள்.

இதுவரைக்கும் தான் சொல்லமுடியும். இதற்கப்புறம் சொல்லனும்னா கார்த்திகேயன் மாதிரி ஆள் முழுக்கதை எழுதினால் தான் உண்டு. இதுக்கப்புறம் படம் முழுக்க, டமால், டுமீல், டப், பாம், படபடப்ட, என சைஸுக்கு ஏத்தாப்ல சவுண்டோட விதவிதமாக துப்பாக்கிகள் வெடித்துக் கொண்டே இருக்கு. படம் முழுக்க லோடு லோடா சர்ப்ரைஸ்கள் வச்சிருக்காங்க. காமெடியும் க்ரைமும் கலந்த மாதிரியான படம். Jason Statham, Jason Felamyng தவிர எனக்கு எந்த ’முகமும்’ தெரியவில்லை. Jason Statham காமெடில கெளப்புறாரு. கஷ்டமான accent. சப்டைட்டில்ஸ் புண்ணியம். பாலா மாதிரி ’மொழி பிரியல’ன்னு உதட்ட பிதுக்காமல், 700 MB டவுண்லோட் பண்ண நீங்க Kb கணக்கில் சப்டைட்டில்ஸ் டவுண்லோட் பண்ணிக்கோங்க. படம் முழுக்க ஒலிக்கும் இசை, பாடல்களும் ஏக பொருத்தம். Gary, Harryஐ என்கவுண்டர் செய்யும் இடத்தில் வித்தியாசமான இசை அந்த காட்சியின் பிரம்மாண்டத்தையும் அதே சமயம் absurdityஐயும் காட்டக் கூடிய இசை சம்பந்தமே இல்லாமல் எனக்கு ஒரு புல்லரிப்பாக இருந்தது.




Guy Ritchie - இயக்குனர். இவர் பிரிட்டிஷ் கேங்ஸ்டர் படங்களை எடுப்பதில் கில்லாடி. இவரும் Tarantino மாதிரி வித்தியாசமான ஆசாமி என்று சொன்னால் பாலா  கோவிச்சுக்குவாரான்னு தெரியலை. ஆனால் இது கம்பேரிசன் இல்ல. தோணுச்சு. Ritchieன் படங்களில் காமெடி கலந்த வசனங்கள் பிரமாதமாக இருக்கும். ஒவ்வொரு கதாப்பாத்திரத்தையும் 'Inglourious Basterd’ Hugo Stiglitz கதாபாத்திரத்துக்கு கதை சொல்லுவாரே Tarantino, அது போல கதை சொல்லி விளக்குறது இவரோட வழக்கம். இவர் கதை சொல்லுகிற முறை எனக்கு பிடித்து விட்டது. இந்த இயக்குனரின் 4 படங்கள் பார்த்துவிட்டேன், ஓகே, ஒரு ஷாட் பிலிமும் பாத்திருக்கேன். Sherlock Holmes தவிர மற்றவையெல்லாம் கிட்டதட்ட ஒரு கும்பல் குழப்பக் கதைதான் என்பது ஒன்றுதான் இவருடைய பின்னடைவு. இவர் ஒரே மாதிரியாக படங்கள் எடுக்கிறார். இதுதான் இவரிடம் எனக்கு ஒரே தயக்கமான விஷயம்.  வசனங்களை அடிச்சுக்க முடியாது. இந்த படத்தில் ’Fuck’ஐ ஃபுல் ஸ்டாப்பாக யூஸ் செய்கிறார். சின்ன மாதிரி -
Rory Breaker -  If you hold back anything, I'll kill ya. If you bend the truth or I think you're bending the truth, I'll kill ya. If you forget anything, I'll kill ya. In fact, you're gonna have to work very hard to stay alive, Nick. Now, do you understand everything I've said? 'Cause if you don't, I'll kill ya. :D
Lock, Stock and Two Smoking Barrels - படத்தில் Barry சொல்வான் - Lock, Stock and Fuckin' lot.

Inglourious Basterds (2009)

Filed under , , by Prabhu on 5/17/2010 06:42:00 PM

17

தொடர்ந்து பல காலமாக என்ன காரணமாகவோ நான் பார்த்த படங்கள் எதிலும் ஒட்டுதலே இல்லாமல் சலிப்பாக இருந்த நிலையில்..... ‘Inglourious Basterds' பார்த்த பொழுது தோன்றிய ஒரே வார்த்தை, marvelous. என்னை முழு ஈடுபாடுடன் பார்க்க வைத்தது இந்த படம்.

இந்த படம் எடுத்த Quentin Tarantino உம் சரி இவர் நண்பர் Rodriguez உம் சரி எப்பொழுதும் பழைய படங்களை நினைவு கூறும் விதமாக காட்சியமைப்பவர்கள் என்று பெயர் பெற்றவர்கள். இதிலும் அது போன்று இருக்கிறது. இது உலகப் போர் படங்கள் ரக படம் என்றாலும் கொஞ்சம் Spaghetti western ஸ்டைலிலும் கலந்து அடித்திருக்கிறார். எனக்கு அது தெரிந்தது 'Once upon a time in Nazi occupied France' என்ற முதல் அத்தியாயத்தின் பெயர் தான். பாஸ்டர்டுகளின் நாஜிக் கொலை அறிமுகத்தில் வரும் ஸ்பானிஷ் கிடார், பாரில் Mexivan Standoff பற்றி விவாதிப்பது, க்ளைமாக்ஸின் நிலை, ஹிட்லரை கொல்ல ஒரே நேரத்தில் பல வகையில் பலர் ஏற்பாடு செய்திருப்பது போன்றவற்றாலும் நாம் இதை உறுதி செய்து கொள்ள முடிகிறது. இன்ன பிற விஷயங்களும் கலந்திருப்பதாக சொல்கிறார்கள். கேமரா, இசை எல்லாம் அவர் ரகத்தில்.

வசனம், வசனம், வசனம்..... இது இல்லாமல் Tarantino படமா? தாராளமய கொள்கையில் வசனங்களை வாரியிறைக்கிறார். அத்தனையும் பிரஞ்சு, ஜெர்மானிய மொழிகளில். Brad Pittன் அறிமுகத்தின் பொழுது வரும் வசனங்கள் பட்டையை கிளப்பும் ரகம். அதுவும் Brad Pittன் மாடுலேஷன் பிச்சிருக்காரு. என்னதான் பிராட் பிட் நல்லா நடிச்சிருந்தாலும், எனக்கு Hans 'Jew hunter' Landa எனும் SS அதிகாரியா வரும் Christopher Waltz என்கிற ஆஸ்திரிய நடிகர் நடிப்பு தான் அபாரம் எனத் தோன்றியது. படம் பார்த்த பிறகு நோண்டினால் இவர் இந்தப் படத்தின் மூலம் சிறந்த துணை நடிகருக்கான அகாடமி அவார்டு வாங்கிருக்காருன்னு தெரிஞ்சது.(Prabhu, you got an eye for talent) தகுதியான ஆள் தான்! ஷோஷன்னாவாக வரும் பெண் ஓ.கே. இவர்களைத் தவிர மற்றவர்கள் அதிகம் வருவது இல்லை.

க்ளாசிக்(தமிழில் என்ன?) என்று சொல்லக்கூடிய விஷயங்கள் நிறைய உண்டு. Donny 'The Bear Jew' Donovitchஆக வரும் எலி ரோத் ‘டான்.. டான்..’ ரக இசையுடன் கொடுக்கும் எண்ட்ரி, Brad Pitt தான் பிழைக்க விட்டவர்களுக்கெல்லாம் நெற்றியில் சுவஸ்திகா போட்டு அனுப்புவது, Hugo Stiglitz என்பவனுக்கு மஞ்சள் எழுத்தில் பெயர் போட்டு அவன் கதையை சொல்வது எல்லாம் Tarantino ட்ரேட் மார்க். Eli Roth, Tarantino, Rodriguez எல்லாம் ‘Homage திரைப்பட நண்பர்கள் குழு - LA' வின் உறுப்பினர்கள் போல. ரோத் படங்களையும் பார்க்க ஆசை வந்துவிட்டது இந்த படத்தில் அவரைப் பார்த்ததும். பிறகு முதல் காட்சியில் 'Jew hunter' Landa வின் இண்டெரோகேஷன் காட்சி உலகப் போர் 2 படங்களில் வரக் கூடிய க்ளாசிக்கல் காட்சி. Landaவை நடிப்பிற்காக ரசிப்பதா இல்லை வில்லனாக வெறுப்பதா என புரியவில்லை.


கதை இது தான். 'Inglourious Basterds' என்பது அமெரிக்க யூதர்களால் ஆன நாஜிக்கு எதிரான ஒரு கொலை வெறி ராணுவ கும்பல். பல காலமாக நாஜி மக்களின் மனதில் ஒரு கிலியாக இருக்கிறார்கள். இவர்கள் ஒரு தியேட்டரில் வைத்து படம் பார்க்க வரும் நாஜியின் முக்கிய ஆசாமிகளைப் போட்டுத்தள்ள முடிவு செய்கிறார்கள். இந்நிலையில் திடீரென வேற தியேட்டரில் அதே நாஜி கொள்கை பரப்பு படம் வெளியிட மாற்று முடிவாகிறது. அந்த தியேட்டர் உரிமையாளரோ Landa விடமிருந்து தப்பிய ஒரு யூத பெண், படம் ஓட்டுபவர் கருப்பன் (வெளங்குச்சு!). இவள் தன் இன மக்களுக்காக அந்த நாஜித் தலைவர்களைக் கொன்று பழி வாங்க நினைக்கிறாள். இந்த நிலையில் ஹிட்லரே தியேட்டருக்கு வரப் போவது தெரியவர, இரண்டு குரூப்பும் போரையே முடித்து விடலாம் என்ற ஆசையில் தனித்தனியாக இம்முயற்சியில் இறங்குகிறார்கள். ஆனால் ஹிட்லரைக் கொல்வதற்கு திட்டமிடுதல் சாதாரணமா? அதனால் அந்த திட்டத்தை (கணிணி)திரையிலயே பாத்துக்கோங்க.

வழக்கம் போல வன்முறைக்கு எந்தக் குறையும் இல்லை. ஆ,ஊன்னா துப்பாக்கிய எடுத்து சத்தமாக சுட்டுக் கொள்கிறார்கள். பார் காட்சி ஆரம்பிக்கும் போதே, அண்ணன் இங்க ஒரு பைட்டு வைக்கப் போறாருன்னு கணிச்சத அவர் பொய்யாக்க வில்லை. அவருக்கு waitressகள் மேல என்ன கடுப்போ, எல்லா படங்களிலும் ஏதாவது பஞ்ச் வச்சிருப்பாராம். இந்தப் படத்தில் போட்டுத் தள்ளிவிடுகிறார். ஒவ்வொரு நாஜியைக் கொல்லும் போது ம்தலையின் தோலை மயிரோடு வெட்டி உரித்து எடுக்கிறார்கள். கடைசியில் ’சதக்’, ’சதக்’ கென கத்தியை சொருகி Landa தலையில் சுவஸ்திகா வரைந்து விட்டு, ‘I think this just might be my masterpiece’ என்பது செம டச்.

படத்தில் தவறுகளே இல்லையானு வழக்கம் போல கேப்பீங்க. ஹிட்லர் எவ்வளவு பெரிய சர்வாதிகாரி? அவரைக் கொல்வதற்கு இப்படி ’நாயக்கர் பாவா’ வைக் கொல்வது போல சப்பையாக திட்டம் போடுவது கொஞ்சம் அபத்தம். ப்டம் முழுக்க சப்டைட்டிலை நம்பி பார்ப்பது பாலாவுக்குக் கஷ்டமாக இருந்தாலும் நாங்கள் பொதுவாகவே அவ்வாறுதான் படம் பார்க்கிறோம் என்பதால் பிரச்சனை இல்லை. படம் லீனியர் திரைக்கதையாக இருக்கிறது என்று சொன்னால் சிரிப்பீர்களா? ஆனால், Nolan, Tarantino போன்றவர்கள் படங்களின் கதை நேராக ஓடும் போது ஏனோ விசித்திரமாக இருக்கிறது. சில பல குறைகள் இருந்தாலும், ஒரு ஸ்டைலிஷான ஆக்‌ஷன் படமாக உலகப் போர் படங்களைப் பார்க்க இதைவிட வேறு வழியில்லை.

பட டைட்டிலில் இருக்கும் எழுத்துப் பிழைக்கான காரணத்தை கேட்டால், 'சொல்லமாட்டேன். அதில்ல் இருக்கும் கலைத்துவம் போயிரும்’ என பின்நவீனத்துவவாதிகள் போல சொல்கிறார் Tarantino.

Inglourious Basterds - Bloody Good Bhaskers

டாப்பு அடிக்கலாம் - 10

Filed under , by Prabhu on 5/16/2010 12:35:00 PM

14

ராவணன் தமிழிலும் வெளியாகிவிட்டது. பொதுவாக ரஹ்மான் ஆல்பம் வெளியானால் எந்நேரமும் அதே பாடலே கணிணியில் ஓடிக் கொண்டிருக்கும். இந்த தடவை அப்படியில்லை. ராவணன் படம் கோபத் காண்டே என்ற நக்சல் தலைவன் சம்பந்தமான கதை என்று விகடனில் சொல்லுகிறார்கள். மணிரத்னம் இதை மறுக்கிறார் என்றும் சொல்கிறார்கள். அப்ப கண்டிப்பா இது நக்சலோட கதைதான். ஏற்கனவே இப்படித்தான் இருவர், குரு போன்ற படங்களுக்கு நிஜ கதை இல்லை என்றார். His refusal is as good as acceptance.
------------------------------------------------------------------------------------

பாணா காத்தாடி பட பாடல்கள் பரவாயில்லை. கேட்கலாம். வழக்கம் போல மூக்கில் பாட ஒரு பாட்டு வைத்திருக்கிறார் யுவன்சங்கர்ராஜா.

------------------------------------------------------------------------------------

வர வர நிலைமை பாடாதியாகிக் கொண்டிருக்கிறது. கடைசியாக சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் போது தொடங்கியது பிறகு அங்கிருந்து ,மதுரை திரும்பும் போதும் அதன் பிறகு மதுரையிலும் தொடர்கிறது. எங்கே திரும்பினாலும் நடக்கிறது. பைக்கில் செல்லும் போது முன் செல்லும் வண்டியின் பில்லியனில் ஒரு அழகான பெண். ஓவர் டேக் செய்கையில் பார்த்தால் அந்த ஓட்டுநரின் முன்னே பெட்ரோல் டாங்கில் 5 வயசு குழந்தை. இப்படி தான் எங்கே பார்த்தாலும். கல்யாணம் ஆனவர்களுக்கும் ஆகாத பெண்களுக்கும் இடையில் ஒரு சேலை, பத்து கிலோ எடை என்ற வித்தியாசத்தைக் கடைபிடிக்கும் தமிழ் கலாசாரம் எங்கே போனது? என்ன கொடுமை சரவணன் இது?!

------------------------------------------------------------------------------------

பிளஸ்2 ரிசல்ட் வெளி வந்திருச்சாம். யாருக்கு வேணும்? நான் எழுதிய வருடங்களுக்கு முன்னயோ பின்னயோ 10ம், 12 வகுப்பு அரசுத் தேர்வுகளைப் பற்றி யோசித்ததே இல்லை. எனக்கு இந்த பரிட்சை, அதுக்கு படிப்பு போன்ற விஷயங்கள் பிடிக்கவே இல்லை. மொக்கையா இருக்கு. நம்ம எஜுகேஷன் சிஸ்டமே ஒருவகையில் பெண்கள் ஆதரவாக தான் இருக்கு. இதை யாரோ சைக்காலஜிஸ்டே சொல்லியிருக்கிறார். இந்த மாதிரி தியரைஸ்ட் படிப்பு பசங்க மூளைக்கு வேலைக்கு ஆகாதாம். அப்புறம், எல்லா வருடமும் பெண்களே சாதிக்கிறார்கள் என்பது தில்லாலங்கடி வேலைதானே?

------------------------------------------------------------------------------------

இந்த நடிகர்கள் இளவரசு வையும், ‘மகாநதி’ சங்கரையும் தடை செய்ய வேண்டும். அவர்கள் ஒவ்வொரு படத்திலும் வந்து ஹீரோக்களுக்கு கொடுக்கும் பில்டப் தாங்க முடியவில்லை. அவர் இவரு அவரு, கிழிச்சிருவார், தைச்சிருவாரு என கொல்றாய்ங்கப்பா! அதுவும் கடைசி சில படங்களில் மகா மொக்கை! யாருய்யா அது, சுறா ந்க்கிறது? நான் விஜய பத்தி தப்பா பேசாத ஒரே பதிவர் என கார்க்கி கிட்ட சொல்லிருக்கேன். அதைக் காப்பாத்துறேன். ஒரே ஆள எல்லாரும் அடிககிறது வீரமில்ல. வாங்க, வேற யாரையாவது குத்தலாம். :)

------------------------------------------------------------------------------------

இந்த தடவை லிட்டில் ஜான் வேணாம். வேற ஒன்று.

ஒரு வட இந்தியன் வழிப்பறி கேசில் மாடிக் கொண்டான். மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது. அந்த வட இந்தியனின் வக்கீல், ‘என் தரப்பு ஆசாமி தமிழ்நாட்டிற்கு வந்து ஒரு வாரம் தான் ஆகிறது. இந்த ஊரைப் பத்தி ஒன்னும் தெரியாது. தமிழே சில வார்த்தைகள் தான் பேசத் தெரியும். ஆதலால் இந்த அப்பாவியை விடுதலை செய்ய வேண்டுகிறேன்.’

நீதிபதி வட இந்தியனைப் பார்த்து, ‘உனக்கு தமிழ் எவ்வளவு தூரம் தெரியும்?’ என்றார்.

அதற்கு அவன் உடைந்த தமிழில், ‘மரியாதையா உன்னோட பர்ஸை என்கிட்ட கொடுத்துரு’ என்றான்.