கந்தசாமி - வந்த கதை, போன கதை

Filed under , by Prabhu on 8/21/2009 11:53:00 PM

12

ஒரு கம்ஃபோர்ட் ஜீன்ஸ், டீ-ஷர்ட் எடுத்து போட்டுக்கிட்டு, கூலிங் கிலாஸ போட்டுக்கிட்டு காலேஜ்க்கு மத்தியானம் போல போயும் கண்ணுல ஒரு அழகான பொண்ணும் அகப்படாத போதே சகுனம் புரிஞ்சு முயற்சிய கை விட்டுருக்கனும்.விதி யாரவிட்டது? இல்ல ரிசர்வ் பண்ண கொடுத்த பணமாவது விடுமா? கொஞ்சமா மழை பெய்யும் போது பைக்க எடுத்துக்கிட்டு கோரிப்பாளையம், சினிப் பிரியா தியேட்டர் வழியாக அண்ணாநகர்(மதுரையிலயும் ஒண்ணு இருக்கு!) போய் ஃபிரண்டு வீட்டுல 'Quickgun Murugun'டிரைலரையும் அதோட க்ளாசிக் எபிசோட்ஸையும் பாத்தவன், அதையே மூணு மணிநேரம் பாத்துக்கிட்டே உக்காந்திருக்கனும். அப்பயும் புத்தி வரலை.

அங்க தியேட்டருக்கு போனா அவனோட நண்பர்கள் பத்து பேரு காத்துக்கிட்டு இருந்தானுங்க. மதுரையில முதல் நாள் படத்துக்கு போனா குட்டி பையனா நம்மளோட ஜட்டிகூட போடாம விளையாண்ட நண்பனக்கூட கண்டுபிடிச்சிடலாம் போல! என்கூட 10வரைக்கும் படிச்சவன், 12ம்வகுப்ப்கு படிச்சவன், காலேஜ்ல 1 மாசம் வந்துட்டு இன்ஜினியரிங் காலேஜ் போனவன்னு ஒரு கூட்டத்தையே பாத்தேன். அப்ப கூட ஒருத்தன் எழுபது ரூபா டிக்கட்ட நூறுக்கு கேட்டான். இந்த வருஷம் நான் பாக்குற இரண்டாவது தமிழ் படம் இதுதான்னு முடியவே முடியாது்ன்னுட்டேன். இது எல்லாம் படம் சுமார் என விமர்சனம் கேள்வியுற்றபின்! விதி.... வலியது!

பிக் சினிமாஸ் ஜாஸ் தியேட்டரின் சில்லென்ற அரங்கில் நுழைந்த பிறகுதான் படம் எப்படி இருக்குமோ என்ற எண்ணமே வந்தது. படம் ஆரம்பிக்கும்போது என் பக்கத்தில் என் பெயரையே உடைய இரு நண்பன் உட்கார்ந்தான். என் பேரு வச்சவனுங்களுக்கெல்லாம் ஸ்பீக்கர் குரலும், காது வரைக்கும் வாயும் இருக்கும் போல. இதற்கு அவனும் விதி விலக்கல்ல. 'இளைய திலகம்'பிரபு பேருக்கு விசில் அடிக்கும் போதே அவன் ஆட்டம் ஆரம்பிச்சிருச்சு. வசூல்ராஜாவில இருந்து இப்பவரைக்கும் ஹீரோவ விட்டுட்டு வம்புக்குன்னே பிரபுவுக்கு விசில் அடிக்கிறதுல அவனுக்கு அலாதி பிரியம். கோழி வேஷ விக்ரம் அவுட்லைனா கிராஃபிக்ஸ்ல ட்ட்ர்ர்ரும்ம்ம்ம்னு சத்தம் வரும்போதே வித்தியாசமா இருந்ததுன்னு சொன்னா அத படத்தோட சேத்து புரிஞ்சிக்க கூடாது.

எடுத்த உடனே திருப்போரூர் கந்தசாமி கோவில்ல ஒரு ஏழை வேண்டிக்கும் போது அய்யர் மரத்துல எழுதி கட்டிவச்சு வேண்டிக்க சொல்ல, அவங்க கட்டி வைக்க, அவங்க வீட்டு வாசல்ல திடீரென பணமிருக்க, அத இன்ஸ்பெக்டர் மன்சூர் அலிகான் கிட்ட கொடுக்க, அவன் ஆட்டயப் போட, ராத்திரி தண்ணி போட, அப்புறம் குறட்டை போட(ரைமிங்குக்காக போடன்னு மாத்திருக்கேன், டைமிங்க டிஸ்டர்ப் பண்ணாதீங்க!) போட, அப்போதான் கால்ல தேள் கொட்டுன மாதிரி ஹைபிட்சுல தேவிஸ்ரீபிரசாத்(DSP) கத்த .... உர்ர்ர்ட்ட்ர்ர்ரூம்(டிரம்ஸ் உருமல்!) கந்தசாமீஈஈஈஈஈ..என்ற சத்ததோட அப்படியே கைய விரிச்சுக்கிட்டே குதிக்கும்போது, தப்பா சொல்லிட்டாங்களா? படம் நல்லாருக்குமோன்னு நினைக்கும் போதே சொதப்பிட்டாங்க! தேவையில்லாம ஸ்லோ மோஷன ஃபைட்டுல காட்டுறது. உண்மையிலயே ஃபாஸ்ட்டா காட்டுனா செம ஃபைட்டா வர வேண்டியது. தேவையில்லாம இழுக்குது. அதுக்கப்புறம் கந்தசாமி(you know, tamil god)தான் எல்லாம் செய்யுறாருன்னு பணத்த திருப்பி கொடுத்துறாரு மன்சூர். இப்படி கடவுள் தான் நிறைய செய்யுறாருன்னு நம்ப வச்சுடறாரு விக்ரம். இந்த பாராவ குறிச்சுக்கோங்க. சொல்லும் போதெல்லாம் திரும்ப படிச்சுக்கோங்க. ஏன்னா இதைதான் படம் முழுக்க செய்யுறாரு.

அப்புறம் சி.பி.ஐ. கந்தசாமி விக்ரம். இவரு ரெய்டுல ஆசிஷ் வித்யார்த்திய பிடிச்சிடுறாரு. அவரு வலிப்பு வந்த மாதிரியா பெத்த பொண்ணு ஸ்ரேயா முதற்கொண்டு எல்லாரிடமும் நாடகம் ஆட, ஸ்ரேயா காதல் வழியாக பழிவாங்க துடிக்கிறார். இதுக்கு நடுவுல இன்னொரு வில்லன் வேற. அப்புறம் திரும்பவும் மேற்சொன்ன பாராவில இருந்து சில சாகச பிட்டுகள திரும்ப சேத்துக்கோங்க. அது மூலமாக வழக்கமான ராபின்ஹூட் வேலைய கந்தசாமி(கடவுள்) பேரில கந்தசாமி(சி.பி.ஐ) பண்ணிக்கிட்டு இருக்காரு. மெக்சிகோ போயும் செய்யுறாரு(அங்கயுமா?). கடைசில மக்கள முன்னாடி வில்லன தோலுரிக்கிறார்.
சரி... ராபின் ஹூட் ஆவதற்கான காரணம் - may be lamest reason of the century. ஆனால் chaos தியரி வச்சு சரிகட்டிடலாம் என தோணுது.
ஏன்யா கடைசி காட்சியில மக்கள் திடீரென தெரியாத ஒருத்தருக்காக போராடுறது, அப்புறம் ஒவ்வொரு விஷயம் நடக்கும் போது இதுக்ல்லாம் ஒருத்தன் வருவான்டான்னு சொல்லுறது, அப்புறம் ஹீரோ மறைமுகமா என்னமாவது செய்யும் போது டிவி, பேப்பர் பாத்துட்டு வச்சுட்டாண்டா ஆப்பு, இனிமே அவ்வளவுதாம் லஞ்சம் பஞ்சம் எல்லாம் குடும்பத்தோட இந்தியாவ விட்டுப் போய் பசிபிக் கடல்ல விழுந்து தற்கொலை பண்ணிக்கும்ங்கிற ரேஞ்சுல பேசுறது, இதை எல்லாம் பாக்கும்போது கடுப்பா இருக்கு. சுசி நீங்களுமா?

முதல் கேள்வி எனக்கு தோன்றியது என்னவென்றால், இதையா ரெண்டு வருஷமா எடுத்தாங்க, இந்த கோமனத் துணி கதையத் தான் பெருசா இருக்குற மாதிரி சொல்லிருக்கேன். இண்டர்வெல்லில் படம் சுமார் என சொன்னதற்கு அப்படியெல்லாம் சொல்லி மனச ஆத்திக்க வேண்டியதான்னு சொல்லிட்டான் பக்கதுல இருந்தவன். சென்சார் போர்ட் சர்டிபிகேட்ல இருந்து கிளைமாக்ஸ் வரைக்கும் கதை நகரவே மாட்டேங்குது. குச்சி வச்சு குத்தினாலும் நுரை தள்ளின மாடு மாதிரி நிக்குது.கதையில லாஜிக் ஓட்டைங்கிறது உளுந்த வடையில ஓட்டை மாதிரி இருக்கனும். ஆனா, படமோ கண்ணாடி வளையல் அளவு ஓட்டைதான் பெருசா இருக்கு. சுத்தி கதை ஒண்ணும் இல்ல.

விக்ரம் - செம ஸ்மார்ட். நல்ல நடிப்பு. சின்சியாரிட்டி. சேவல் தோற்றத்தில் செய்யு மேனரிஸம் எல்லாம் வித்தியாசமாக இருக்கிறது. அசால்ட்டா ஸ்மைல் பண்ணும் போது அழகாக இருக்கிறார். என்ன செய்வது விக்ரம்? கதை இல்லயே? ஸ்ரேயா- அழகு. கட் செய்த முடி பொருந்துகிறது. கவர்ச்சியான ஆடை அணிந்து செதுக்கி வைத்த மாதிரியான உடலை காட்டுவதில நல்ல கவனத்தை செலுத்தியிருப்பது,பக்கத்து சீட்டிலிருப்பவன் ஸ்ரேயாவை பார்க்கும்போதெல்லாம் நெளிவதில் தெரிந்தது (இன்னைக்கு தூங்கின மாதிரிதான்னு அவன் சொன்னது வேற கதை). வடிவேலு வேஸ்ட். படத்துல கொஞ்ச நஞ்சம் இண்ட்ரெஸ்ட் இருந்தாலும் கெடுக்கிறார். இவ்வளவு மொக்கையை சமீபத்தில் நான் அனுபவிச்சதே இல்லை. சுசி கணேசனே தோன்றி நடிக்க முயற்சி செய்து உள்ளார். ரெண்டு வில்லனுங்களும் சுத்த வேஸ்ட். இவ்வளவு சப்பையான வில்லன்களா? விக்ரம் மேலதிகாரியா மட்டமான தமிழ் பேசுறவர் தான் எங்கள் டோலிவுட் சிங்கம், தன்மான தங்கம் 'பிரின்ஸ்' பாபு (அ) மகேஷ் பாபுவின் தந்தை என்பதாக கேள்வி. நல்லா பாத்துக்கோங்க!

ஒவ்வொருத்தனும் ஓடிவரும்போது கண்ணைக் கட்டி இருந்தாலும் சத்தத்தை வைத்து ஒண்ணு, ரெண்டு என எண்ணுவது, 'உங்கப்பனுக்கு நிஜ வலிப்பில்ல, வலது கை இழுத்தா வாய் இடது பக்கம் கோணும்" உங்கப்பனுக்கு வலது பக்கம் கோணுது' என சொல்லுவது என பல விஷயங்கள ஆங்கில பட அளவுக்கு நுணுக்கம் கொண்டுவர முயற்சி செய்திருக்காங்க.

டெக்னிக்கலா பெர்ஃபெக்ஷன் கொண்டு வர முயற்சி செய்ததன் அடையாளங்கள் தெரிகிறது. படத்தின் சுற்றுசூழல் ஒரு plush செட்டடிங்கில் இருக்கிறது.ஆர்ட் வொர்க் அபாரம். ஆனால் இந்தியா ஒளிர்கிறது மாதிரி இவ்வளவு அழகாகவா சி.பி.ஐ. ஆபிஸ் இருக்கு? சி.பி,ஐ ஐஸ்ல முகத்த முக்கி அடிக்கிறதுக்கு கூட க்ளாஸ் பவுல யூஸ் பண்ணுது. அத விடுங்க கரண்ட் ஷாக் குடுக்க கூட கம்ப்யூட்டர் பயன்படுத்துறாங்க! ஆங்கில படங்களின் சைட் எஃபெக்ட்! ஸ்டண்ட் நன்றாக் இருந்தது. ஆடை வடிவமைப்பு மிக அருமை. ஸ்ரேயாவின் டிசைனர் ஆடைகள் மறைப்பதை விட காட்டுவது அதிகம். கேமரா நல்ல ஸ்டைலிஷ் ஹேண்டிலிங். கேமரா வோட வெயிட்லதான் படமே நிக்குது. ஆனா, சேஸிங் காட்சியில் கேமரா வேகம் பத்தல. ஹெலி கேமரால எடுக்கும் போது ஏதோ சாதாரணமாக போவது போல உள்ளது. இயக்கம் ஓக்கே. ஆனால் எழுத்து ...ம்ஹூம்... தேறாது. இந்த வருடத்தின் பல முண்ணனி இயக்குனர்கள் போன்று இவரும் ஸ்கிரிப்டுல கவுந்துட்டார். நிறைய ஸ்கோப் இருந்தது விக்ரமோட சேவல் கேரக்டரில, ஆனா அதுக்கேத்த கதையில்ல!

பக்கத்திலிருந்த நண்பன் படம் முடிஞ்சு வெளி வந்ததும் ஒருவன் படம் எப்படியிருக்கு என கேட்க, நல்லாருக்கு போய் பாருங்கன்னு சொல்லிட்டான். நாம பாத்துட்டோம் அவன் எப்படி தியேட்டர் வாசல் வரைக்கும் வந்து தப்பிக்கிறது என கேக்குறான். ஆனா டிரைல பார்க்கும் போதே இந்த படமும் கருப்புப் பணம் அப்படி இப்படின்னு இருக்கும்னுதான் நான் நினைச்சேன். ஆனா, கொஞ்சம் வித்தியாசமா எடுப்பனுங்கன்னு தப்பு கணக்கு போட்டுட்டேன்.கதைய சொன்ன என் பிரண்டு bull shitனு ஃபோன வச்சுட்டான். அட, படமே பாக்காத எங்க அம்மாகூட வந்த உடனே என்ன, அந்நியன்' மாதிரியா? கந்தசாமின்னு உருமும் போதே தெரியும்டாங்கிறாங்க! பாருங்கய்யா, இவங்கள்ளாம் கூட கண்டுபிடிக்க ஆரம்பிச்சுட்டாங்க! கதைய மாத்துங்கய்யா!
Old wine in a new stylish goblet. My god! the wine stinks!
கந்தசாமி - நொந்தசாமி!
டிஸ்கி - படத்துலதான் கதை இல்லையேன்னு நான் படத்துக்கு போன கதைய இங்க சொன்னேன். ரெண்டு கிராமம் தத்தெடுத்துருக்காம் படக்குழு. அதுக்கு இந்த எழுபது ரூபாயை மொய் எழுதியதா நினைத்துக் கொண்டேன்.

Comments Posted (12)

அப்போ படம் அவுட்டா?

ஓவர் பில்டப்பு ஒடம்புக்காது.
கமலே அட்க்கி வாசிக்கிறார்.
அப்பறமெப்படி...?
:)

அவ்வ்வ் நீயுமா பப்பு....எனக்கும் சேம் ப்ளட் தான். இன்னைக்கு நானும் பதிவு போடலாம்னு இருக்கேன்.

//குச்சி வச்சு குத்தினாலும் நுரை தள்ளின மாடு மாதிரி நிக்குது.கதையில லாஜிக் ஓட்டைங்கிறது உளுந்த வடையில ஓட்டை மாதிரி இருக்கனும். ஆனா, படமோ கண்ணாடி வளையல் அளவு ஓட்டைதான் பெருசா இருக்கு. சுத்தி கதை ஒண்ணும் இல்ல.//

:)))))))))))))

@தமிழ்
ஒருத்தன் ஒரு பக்கத்துக்கு புலம்பின பிறகும் இவ்வளவு சந்தேகமா?

@டக்ளஸ்
அது சரிண்ணே! இந்த எழவையா இரண்டு வருஷமா எடுத்தானுவளா?

@நான் ஆதவன்
நீங்களுமா? வேற வேற இடத்துல வச்சு நம்மளுக்கு ஒரே ஆப்பு வச்சுருக்காங்க! இதுல பாகிஸ்தானுக்கு எதுவும் சம்பந்தம் இருக்குமோ?

pappu. படத்தை விட நீ அதை பத்தி எழுதினது நல்லாருக்கு..

கேபிள் சங்கர்

நிஜமாவே கலக்கல் விமர்சனம். :))))

//கதையில லாஜிக் ஓட்டைங்கிறது உளுந்த வடையில ஓட்டை மாதிரி இருக்கனும். ஆனா, படமோ கண்ணாடி வளையல் அளவு ஓட்டைதான் பெருசா இருக்கு. சுத்தி கதை ஒண்ணும் இல்ல.//

எங்கங்ணா பிடிக்கிறீங்க இப்படியெல்லாம்?? :)

அதை ஏன் கேக்கறீங்க.. நேத்து பாத்தவ இன்னும் அழுகை நிக்கல! :-(

//குச்சி வச்சு குத்தினாலும் நுரை தள்ளின மாடு மாதிரி நிக்குது.கதையில லாஜிக் ஓட்டைங்கிறது உளுந்த வடையில ஓட்டை மாதிரி இருக்கனும். ஆனா, படமோ கண்ணாடி வளையல் அளவு ஓட்டைதான் பெருசா இருக்கு. சுத்தி கதை ஒண்ணும் இல்ல.//

ரொம்ப நாளாச்சு இப்படி சிரிச்சு! :-))))))

enna vittutu poi padam paartha ipdithaan nadakum..

@கார்த்திக்
படம் பாத்ததுல அப்படியே தானா வருது!

@பொற்கொடி
நன்றி வருகைக்கு!

@கிஷோர்
யோவ்! நீங்க வேற வயித்தெரிச்சல கொட்டிக்காதீங்க!

ஒரு நல்ல ரசிகரின் விமர்சனம்..,

//ரெண்டு கிராமம் தத்தெடுத்துருக்காம் படக்குழு. அதுக்கு இந்த எழுபது ரூபாயை மொய் எழுதியதா நினைத்துக் கொண்டேன். //


என்ன பெருந்தன்மை உங்களுக்கு!

Camera work sema mokka pa.. Theava illada yellow effects

Kodutha kaasukku SHREYA bite pathala :(

JYOTHI la kANDASAAMY odudunaa paarthukko

Post a Comment

இவ்வளவு தூரம் வந்துட்டீங்க... பதிவப் பத்தி ஏதாவது சொல்லிட்டு போங்க! அட்லீஸ்ட் திட்டீட்டாவது போங்க. அப்புறம் எங்க வாக்களிப்பு பொத்தான் இருக்குன்னு தேடி அழுத்திட்டு போங்க. 18 வயசு ஆகலையா? ப்ளாக்கருக்குள்ளயே வரமுடியாதே! மரியாதையா ஓட்டு போடுங்க!